Wednesday, December 1, 2021

திருக்குறள் - விருந்தோம்பல் - இல்லறத்தின் நோக்கம்

 திருக்குறள் - விருந்தோம்பல் - இல்லறத்தின் நோக்கம் 


நாம் படித்துக் கொண்டு இருப்பது இல்லறம். 


எதற்காக கல்யாணம், மனைவி, பிள்ளைகள், பொருள் சேர்ப்பது, அதற்காக துன்பப் படுவது என்று இப்படி அல்லாட வேண்டும்? 


பெண் இன்பம் எப்படியோ கிடைத்து விடலாம். 


குழந்தைகள் இல்லாவிட்டால் என்ன? குழந்தைகள் இருந்தாலும், அவர்கள் கொஞ்ச நாள் தான் குழந்தைகளாக இருப்பார்கள். பின் அவர்கள் வளர்ந்த பின், "சிறு கை அளாவிய கூழ்" என்று சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா? சிறிது காலத்தில் திருமணம் ஆகி போய் விடுவார்கள். 


பின் நாம் தனித்து விடப் படுவோம். 


எதற்கு இதனை பொறுப்புகள், சிக்கல்கள், துன்பங்கள். இவற்றின் பலன்தான் என்ன என்ற கேள்விக்கு வள்ளுவர் விடை தருகிறார். 


இல்வாழ்கை என்பது கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவன் தரும் சுகத்தை பெற்றுக் கொள்ளவோ, அல்லது குழந்தைகளை கொஞ்சி விளையாடவோ அல்ல. 


இல்வாழ்க்கையின் நோக்கம், விருந்தினர்களை போற்றி பேணுவது என்கிறார். 


பாடல் 


இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post.html


(please click the above link to continue reading)


இருந்தோம்பி = இருந்து பொருள்களைப் போற்றி 


இல்வாழ்வ தெல்லாம்  = இல்லத்தில் வாழ்வது எல்லாம் 


விருந்தோம்பி = விருந்தினர்களைப் போற்றி 


வேளாண்மை = அவர்களுக்கு உபசாரம் 


செய்தற் பொருட்டு = செய்வதற்காக 


பொருள் சேர்த்து, வீட்டில் மனைவி பிள்ளைகளோடு இருக்கிறாயா? நீ இருப்பதற்கு காரணமே விருந்தினர்களை உபசரிக்கதான். 


இதற்கு பரிமேலழகர் உரையில், 


"மனைவி, பிள்ளை, பொருள் இவ்வளவுதானே...இவற்றை வைத்துக் கொண்டு பேசாமல் காட்டில் போய் இருக்கலாமே? எதற்கு வீடு, ஊரு என்று இருக்க வேண்டும்?" 


இல்லறம் என்றால் அது விருந்தை உபசரிக்கத் தான். இல்லை என்றால் துறவியாகப் போய் விடலாம் என்கிறார். 


என் பொருள், என் மனைவி, என் பிள்ளை எல்லாம் எனக்கு என்று இருப்பதா இல்லறம்? 


மனைவி, பிள்ளைகள் இவர்களைத் தாண்டி, இல்லறம் விரிய வேண்டும். வீடென்றால் நாலு பேர் வந்து போக வேண்டும். சுற்றமும் நட்பும் சூழ இருக்க வேண்டும். 


இல்லறத்தில் இருந்து வீடு பேற்றை பிடிக்க பாலம் போடுகிறார் வள்ளுவர். 


அடுத்த கேள்வி வரும், எதற்காக விருந்தை உபசரிக்க வேண்டும் என்று. அதனால் என்ன பயன் என்று? 


பொறுமை. வள்ளுவர் எதையும் விட்டு வைக்கவில்லை. 


நம்மை கொண்டு போய் பத்திரமாய் கொண்டு போய் சேர்க்கும் வழி அமைத்துத் தருகிறார். 




No comments:

Post a Comment