Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Sunday, January 14, 2024

திருக்குறள் - துறவறம் - விரதம்

 திருக்குறள் - துறவறம் - விரதம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_14.html



துறவறத்தை பரிமேலழகர் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறார். 


விரதம், ஞானம் என்று. 


ஞானம் என்பது பற்றி முந்திய பதிவில் சிந்தித்தோம். இனி விரதம் பற்றி கூறத் தொடங்குகிறார். 


விரதம் என்றால் என்ன என்று நம்மிடம் கேட்டால் என்ன சொல்லுவோம்?


விரதம் என்றால் பட்டினி கிடப்பது. சாப்பிடாமல் இருப்பது என்றுதான் நாம் சொல்லுவோம். சாப்பட்டுக்கே வழி இல்லாமல் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் விரதம் இருக்கிறார்கள் என்று அர்த்தமா? 


பரிமேலழகர் காட்டும் விரதம் வேற லெவல்.



"அவற்றுள், விரங்களாவன, இன்னஅறம் செய்வல் எனவும், இன்ன பாவம் ஒழிவல் எனவும், தம் ஆற்றலுக்கு ஏற்ப வரைந்து கொள்வன. அவைதாம் வரம்பில ஆகலின், பெருகும் என்று அஞ்சி, அவைதம்முளே பலவற்றையும் அகப்படுத்து நிற்கும் சிறப்புடையன சிலவற்றை ஈண்டுக் கூறுவான் தொடங்கி, முதற்கண் 'அருளுடைமை' கூறுகின்றார்"


 "இன்னஅறம் செய்வல் எனவும், இன்ன பாவம் ஒழிவல் எனவும்,"


ஒருவன் உலகில் உள்ள எல்லா அறத்தையும் செய்ய முடியாது. எனவே, எதை எதை செய்யப் போகிறான் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதை அப்படியே கடைபிடிக்க வேண்டும். அதே போல் எதை எதை விடுவது என்றும் முடிவு செய்து கொள்ள வேண்டும். அதை அப்படியே நடைமுறைப் படுத்த வேண்டும். 


உதாரணமாக, காலையில் குளித்துவிட்டு தான் சமையல் தொடங்குவேன் என்று வைத்துக் கொண்டால், அதுவும் ஒரு விரதம். தினமும் ஒரு மணி நேரம் நல்ல விடயங்களைப் படிப்பேன் என்று செய்து வந்தால், அதுவும் ஒரு விரதம். எல்லோரிடமும் அன்பாகப் பேசுவேன் என்று வைத்துக் கொண்டால், அது ஒரு விரதம். 


என்ன வந்தாலும், விரதத்தைக் கை விடக் கூடாது.எவ்வளவு துன்பம் வந்தபோதும், உண்மை பேசுவேன் என்ற விரதத்தை அரிச்சந்திரன் கைவிடவில்லை. அரிச்சந்திரன் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. அவனை ஏன் இன்றும் கொண்டாடுகிறோம்?  ஒரு விரதத்தை முழுமையாகக் கடைபிடித்தான். அவ்வளவுதான். 


அதே போல், சிலவற்றை செய்யமாட்டேன் என்று இருப்பதும் ஒரு விரதம்தான். மாமிசம் உண்பது இல்லை, புகை பிடிப்பது இல்லை, மது அருந்துவது இல்லை என்று பிடிவாதமாக இருப்பதும் விரதம் தான். 


சரி, இதை எந்த அளவுக்குச் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். 


"தம் ஆற்றலுக்கு ஏற்ப வரைந்து கொள்வன"


நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு. உதாரணாமாக மது அருந்துவதில்லை என்ற விரதம், சில இருமல் மருந்தை உட்கொள்ளும் போது கைவிடப்படும். பல இருமல் மருந்துகளில் கொஞ்சம் மது இருக்கும். தவிர்க்க முடியாது. நாம் உண்ணும் தயிரில் கோடிகணக்கான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. தயிர் விட்டு உண்ணும்போது நாம் அத்தனை உயிர்களையும் உண்ணுகிறோம். விரதம் பழுதுபடும். தவிர்க்க முடியாது. எனவே, "ஆற்றலுக்கு ஏற்றவாறு" என்று கூறினார். 


சரி இப்படி எத்தனை விரதங்கள் இருக்கின்றன? எதையெல்லாம் நாம் கடைபிடிக்க வேண்டும்? என்று கேட்டால்....



"அவைதாம் வரம்பில"


அந்த விரதங்கள் கணக்கில் அடங்காது. அவ்வளவு விரதங்கள் இருக்கின்றன. 



"ஆகலின்,"


எனவே. 



"பெருகும் என்று அஞ்சி"


அவை அனைத்தையும் சொல்லத் தொடங்கினால் மிகப் பெரியதாகி விடும் என்று பயந்து 



", அவைதம்முளே"  - அந்தப் பல விரதங்களில் 


"பலவற்றையும் அகப்படுத்து நிற்கும் சிறப்புடையன சிலவற்றை" பல விரதங்களை உள்ளடக்கிய ஒரு சில சிறப்பான விரதங்களை 


"ஈண்டுக் கூறுவான் தொடங்கி", - இன்று கூறத் தொடங்கி 


"முதற்கண் " - முதலி 


'அருளுடைமை' கூறுகின்றார் = அருளுடைமை என்ற விரதம் பற்றிக் கூறுகிறார். 


துறவுக்கு அருள்தான் முதல் படி. 


பொண்டாட்டியை பிடிக்கவில்லை, கடன்காரன் தொல்லை தாங்க முடியவில்லை, வாழ்க்கைச் சுமை பெரிதாக இருக்கிறது, பயமாக இருக்கிறது என்பதெல்லாம் துறவுக்கு அடிப்படை அல்ல. அருள்தான் அடிப்படை என்பதால் அதை முதலில் கூறத் தொடங்கினார். 


என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போமா ?



Thursday, January 11, 2024

திருக்குறள் - துறவறம் - தொடக்கம்

 திருக்குறள் - துறவறம் - தொடக்கம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_11.html


துறவறம் என்றால் என்ன, அதன் பயன் என்ன, அது எப்படி வரும் என்பதை எல்லாம் பரிமேலழகர் மிகத் தெளிவாக, மிகச் சுருக்கமாக விளக்குகிறார். 


"இனி, முறையானே துறவறம் கூறிய தொடங்கினார். துறவறமாவது, மேற்கூறிய இல்லறத்தின் வழுவாது ஒழுகி, அறவுடையராய்ப்  பிறப்பினை அஞ்சி, வீடுபேற்றின் பொருட்டுத் துறந்தார்க்கு உரிய அறம். அதுதான் வினைமாசு தீர்ந்து, அந்தக்கரணங்கள் தூயவாதற்பொருட்டு, அவராற் காக்கப்படும் விரதங்களும், அவற்றான் அவை தூயவாயவழி உதிப்பதாய ஞானமும் என இருவகைப்படும்."


ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் மிக நீண்ட பொருள் உண்டு. 


விரித்து சிந்திப்போம். 


முதலில் துறவறம் என்றால் என்ன என்று சொல்கிறார். 


"மேற்கூறிய இல்லறத்தின் வழுவாது ஒழுகி"

துறவறம் என்பது இல்லறத்தின் நீட்சி. இல்லறத்தை ஒரு தவறு இல்லாமல் நடத்த வேண்டும் என்பது முதல் நிபந்தனை. பல பேர் இல்லறத்தில் சிக்கல் அதிகமானால் அதை சமாளிக்க முடியாமல் சந்நியாசியாகப் போகிறேன் என்று கிளம்பி விடுகிறார்கள். அது அல்ல துறவு. இல்லறத்தை முழுமையாக, சிறப்பாக, ஒரு குற்றமும் இன்றி நடத்த வேண்டும். 


" அறவுடையராய்ப்"


அறத்தின் வழி நிற்க வேண்டும். ஊரை ஏமாற்ற காவி அணியக் கூடாது. அது துறவறம் அல்ல. அறத்தின் வழி நிற்பதுதான் துறவறம். 


"  பிறப்பினை அஞ்சி"

மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு அஞ்சி, அதில் இருந்து விடுபட எடுக்கும் நடவடிக்கைதான் துறவறம். இந்தப் பிறப்பு என்பது நல்லாத்தானே இருக்கிறது என்று நினைபாவர்களுக்கு துறவு வாய்க்காது. 


"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்று மணிவாசகர் கூறியது போல 


"எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனது இடர் பிறவி " என்பார் அருணகிரி. 


மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்

வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா

இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை

கருப்பையிலே வாராமற் கா’


என்னை மீண்டும் மீண்டும் பெற்று, தாய்மார்களும் உடல் சலித்து விட்டார்கள். நான் மீண்டும் மீண்டும் பிறப்பது எனக்கு மட்டும் துன்பம் அல்ல. என்னை ஈன்றெடுக்கும் அன்னைமார்களுகும் துன்பம்தான். ஓடி, ஆடி, விளையாடி, பொருள் சேர்க்க உழைத்து, என் கால் வலிக்கிறது. ஒவ்வொரு முறை நான் பிறக்கும் போதும் பிரமன் எனக்கு தலை எழுத்தை எழுத வேண்டும். எழுதி எழுதி பிரமனும் கை சலித்து விட்டான். இன்னும் ஒரு கருப்பையில் வாராமல் என்னை காத்தருள் என்று இருப்பையூர் வாழும் சிவனை உருகி வேண்டுகிறார் பட்டினத்தார். 


"வீடுபேற்றின் பொருட்டுத்"


பிறப்பினை அஞ்சி என்ன செய்ய? மீண்டும் பிறக்காமல் இருக்க வீடு பேறு அடைய வேண்டும். அதற்கு துறவு அவசியம். 


"துறந்தார்க்கு உரிய அறம்."


அப்படிப்பட்ட துறவை மேற் கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகளை இந்த துறவற இயலில் கூற இருக்கிறார். 



"அதுதான்"


அந்தத் துறவரமானது



"வினைமாசு தீர்ந்து"


வினையினால் வரும் குற்றங்கள் தீர்ந்து. அதாவது வினையினால் வரும் பாவ புண்ணியங்கள் தொடராமல். புண்ணியமும் பிறவிக்கு வழி வகுக்கும். 


"அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி"


என்பார் மணிவாசகர். 


அறமும், பாவமும் நம்மை பிறவியில் கட்டும் கயிறுகள். இரண்டும் தீர வேண்டும். 


"அந்தக்கரணங்கள் தூயவாதற்பொருட்டு"


அந்தக்கரணங்கள் என்றால் என்ன? 


கரணம் என்றால் செய்கை, செயல் என்று பொருள். தோப்புகரணம், குட்டிக் கரணம் என்று சொல்கிறோம் அல்லவா? அந்தக் கரணம் என்றால் உள்ளே நடக்கும் செயல்பாடுகள். 


கண் என்பது புற உறுப்பு. கண் காண்பது இல்லை. கண் காண்பதற்கு உதவி செய்கிறது. கண் சரியாகத் தெரியவில்லை என்றால் கண்ணாடி போட்டுக் கொள்கிறோம். அதன் பின் சரியாகத் தெரிகிறது. அப்படி என்றால் கண்ணாடி பார்கிறது என்று அர்த்தமா? இல்லை. கண்ணாடி நாம் காண உதவி செய்கிறது. அது போல கண் உதவி செய்கிறது. 


இப்படி அனைத்து புலங்களில் இருந்தும் வரும் செய்திகளை பகுத்து, பிரித்து, ஆராய்ந்து நமக்கு சொல்லும் கருவிகளுக்கு அந்தக்கரணங்கள் என்று பெயர். 


நான்கு வித அந்தக் கரணங்கள் இருக்கின்றன. 


மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்பன.


கண், காது, மூக்கு, தோல், நாக்கு இவற்றில் இருந்து வரும் செய்திகளை அலசி ஆராய்ந்து நமக்கு இது இன்னது என்று சொல்லுபவை இந்த நான்கும். இந்த நான்கிற்கும் உள்ள தொடர்பினை நமது வேதாந்தங்களும்,தர்க்க இயலும் பலவாறு ஆராய்ந்து சொல்கின்றன. 


இந்த நான்கு அந்தக்கரணங்களும் தூய்மையாக வேண்டும். நாம் அணியும் மூக்குக் கண்ணாடி எண்ணெய் பிசுக்கு ஏறி, அழுக்கு படித்து இருந்தால் நம்மால் சரிவர பார்க்க முடியாது அல்லவா? அது போல இந்த அந்தக்கரணங்கள் தூயவையாக இல்லாவிட்டால் உண்மை சரியாக நமக்கு புலப்படாது. எனவே, அவற்றை தூய்மையாக வேண்டும். 


"அவராற் காக்கப்படும்"


அப்படி தூய்மையாக்க வேண்டுபவர்கள் செய்யும் செயல்கள், கடமைகள் விரதங்கள் எனப்படும். விரதங்கள் மூலம் அந்தக்கரணங்களை தூய்மை படுத்த முடியும். 


உடனே, விரதம் என்றால் பட்டினி கிடப்பது, உண்ணாமல் இருப்பது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. விரதம் என்றால் என்ன என்பதை பின்னர் விளக்குகிறார். 



"விரதங்களும்"  


அவர்களால் கடைபிடிக்கப்படும் விரதங்களும் 


" அவற்றான் அவை தூயவாயவழி உதிப்பதாய ஞானமும்"


விரதம் இருந்தால் என்ன கிடைக்கும் என்றால், "ஞானம்".


விரதம் இல்லாமல் ஞானம் வராது. ஞானம் என்பது படித்து வருவது அல்ல. விரதங்களின் மூலம் வருவது.



" என இருவகைப்படும்."


துறவறம் என்பது விரதம், ஞானம் என்ற இரண்டு வகைப்படும்.


 - இல்லறத்தின் வழுவாது ஒழுகி, 

- அறவுடையராய்ப்  

- பிறப்பினை அஞ்சி, 

- வீடுபேற்றின் பொருட்டுத் 

- துறந்தார்க்கு உரிய அறம். 

-  வினைமாசு தீர்ந்து, \

- அந்தக்கரணங்கள் தூயவாதற்பொருட்டு, 

- அவராற் காக்கப்படும் விரதங்களும், 

- அவற்றான் அவை தூயவாயவழி உதிப்பதாய ஞானமும் 

- என இருவகைப்படும்."


இதைவிட தெளிவாக யாரால் கூற முடியும்.


அடுத்து விரதம் பற்றி கூற இருக்கிறார். 


அதை அடுத்த பதிவில் சிந்திக்க இருக்கிறோம். 



Monday, January 8, 2024

திருக்குறள் - துறவறம் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - துறவறம் - ஒரு முன்னோட்டம் 


நமக்கும் துறவறத்துக்கும் என்ன சம்பந்தம்?


நாம் என்ன துறவியாகப் போகிறோமா? அந்த எண்ணம் துளியும் நமக்கு இல்லை. பின் எதற்கு துறவறம் பற்றி நாம் படிக்க வேண்டும்?  துறவியாக போக விரும்புபவர்கள் படிக்கட்டுமே என்று நினைக்கத் தோன்றும். 


சற்று பொறுங்கள். 


ஏன் துறவறம் பற்றி படிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன். 


நாம் எல்லோருமே துறவிகள்தான். 


துறவு என்றால் என்ன? ஏதோ ஒன்றை துறப்பதுதானே ?


சிறு வயதில் பொம்மைகள் வைத்து விளையாடினோம். பின் அவற்றைத் துறந்தோம். 


பின் கோலி குண்டு, கிட்டிப் புள், பம்பரம், பட்டம் என்று விளையாடினோம். பின் அவற்றைத் துறந்தோம். 


பின் சைக்கிள், அதையும் துறந்தோம். 


இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒன்றை துறந்து கொண்டேதானே இருக்கிறோம். இல்லை, எதையுமே நான் துறக்க மாட்டேன் என்று இன்றும் சொப்பு சட்டி வைத்து விளையாடினால் எப்படி இருக்கும்?


ஏன் துறந்தோம்?  அறிவு வளர்ச்சி, மன வளர்ச்சி அடைவதால் துறந்தோம். எனவே துறவு என்பது மன, அறிவு வளர்ச்சியின் அடையாளம். 


இரண்டாவது, சில விடயங்களை நாம் நன்மை நோக்கி துறக்கிறோம். உதாரணமாக, வயதானால், இனிப்பை துறக்கிறோம். உடம்பு ஒத்துக் கொள்ளாது. சர்க்கரை வியாதி வரும். இனிப்பு கிட்ட கூட போகக் கூடாது என்று மருத்துவர் சொல்லி விடுகிறார். சரி, இனிமேல் காப்பியில் சர்கரை போடாமல் குடிப்போம் என்று சர்க்கரையை துறந்து விடுகிறோம் அல்லவா. அது நன்மை நோக்கி வந்த துறவு. 


துறவு ஆரோக்கியமான வாழ்வின் அடையாளம். 


சர்க்கரை என்பது ஒரு உதாரணம். பிள்ளைகள் மேல் உள்ள அதீத பாசம் மட்டுப் படும். இனி அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள் என்று விட்டு விலகத் தோன்றும். அதுவும் ஒரு துறவு தான். 


ஒரு துறையில் நாம் முன்னேற வேண்டும், சிறப்பாக வேண்டும் என்றால் என்ன செய்வோம். அந்தத் துறையில் பெயர் பெற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து, அதைப் போல் செய்ய முயற்சி செய்வோம் அல்லவா. வாழ்வை சிறப்பாக வாழ வேண்டும் என்றால் சிறப்பாக வாழ்பவர்கள், வாழ்ந்தவர்கள் யார் என்று பார்த்து அவர்களைப் போல வாழ முயற்சி செய்யலாம். அப்படி வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள் துறவிகள். அவர்கள் வழிகாட்டிகள். 


எப்படியும் நாம் கொஞ்ச கொஞ்சமாக துறவில் ஈடுபடுகிறோம். அதையே சிறப்பாகச் செய்து விட்டால் என்ன?  


துறவு என்பது தனி வாழ்க்கை முறை அல்ல. துறவு என்பது இல்லறத்தின் தொடர்ச்சி. அவ்வளவுதான். 


வயதாக வயதாக நாம் விரும்புகிறோமோ இல்லையோ, துறவு என்பது தானே நம் மீது திணிக்கப்படும்.  உறவுகள் நம்மைத் துறக்கும், ஆரோக்கியம் நம்மைத் துறக்கும், செல்வம் ஒரு பொருட்டாகத் தெரியாது...வலிந்து திணிக்கப்படும் துறவை விட நாமே விரும்பி ஏற்றுக் கொள்ளும் துறவு சிறந்தது அல்லவா?  


துறவு என்றால் ஏதோ வாழ்வை உதறிவிட்டு ஓடிவிடுவது அல்ல. வாழ்வின் நீட்சி. அவ்வளவுதான். 


நான் சொல்வதை ஏற்க வேண்டும் என்று அல்ல. வள்ளுவர் என்ன சொல்கிறார் சிந்திப்போம். நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம். திறந்த மனத்துடன் இதை அணுகுவோம். 




 
















Saturday, January 6, 2024

திருக்குறள் - இதுவரை - பாகம் 6

  

 திருக்குறள் - இதுவரை - பாகம் 6

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/6.html



1, அறன் வலியுறுத்தல்,

2.  இல்வாழ்க்கை, 

3. வாழ்க்கைத் துணைநலம், 

4. புதல்வர்களைப் பெறுதல், 

5. அன்புடைமை, மற்றும் 

6. விருந்தோம்பல் 

7. இனியவை கூறல்

8.செய்நன்றி அறிதல்

9. நடுவு நிலைமை

10. அடக்கமுடைமை 

11.     ஒழுக்கமுடைமை 

12.  பிறனில் விழையாமை 

13. பொறையுடைமை 

14. அழுக்காறாமை 

15. வெஃகாமை

16.  புறங்கூறாமை 

17. பயனில சொல்லாமை 

18. தீவினையச்சம் 


மேற்கண்ட 18 அதிகாரங்களின் தொகுப்புரை பற்றி சிந்தித்தோம். 


மேலும் தொடர்வோம். 


ஒப்புரவு அறிதல் - மன, மெய், மொழியால் வரும் குற்றங்களை நீக்கிய பின், ஒருவன் தான் பெற்ற செல்வத்தினை சமுதாய நலனுக்குக்காக செலவிடத் தலைப்படுவான். பொறாமை, பேராசை, குறுக்கு வழியில் செல்வம் சேர்க்க நினைப்பது, மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவது என்ற குற்றங்கள் எல்லாம் மறைந்த பின், ஒருவன் மகிழ்வான வாழ்வை நடத்துவான். அப்படி மகிழ்ந்து இருப்பவன், தான் மட்டும் மகிழ்ச்சி அடைந்தால் போதாது, தன்னைச் சார்ந்த சுமுதாயமும் மகிழ வேண்டும் என்று நினைத்து செய்வான். அது ஒப்புரவு எனப்பட்டது. அது தன் குற்றங்கள் மறைந்த பின்னால் தான் வரும் என்பதால், அவற்றின் பின்னே இந்த அதிகாரம் கூறினார். 


ஈகை - பொது நலம் குறித்து நல்லது செய்தாலும், அதில் கொஞ்சம் புகழ் வரும். நாலு பேர் புகழ்ந்து பேசுவார்கள். டிவி, செய்தித்தாள் இவற்றில் பேர் வரும். சுய இலாபம் இருக்கும். மாறாக, தனி ஒருவனுக்கு உதவி செய்தால், பெரிய விளம்பரம் இருக்காது. அதாவது, அதில் சுயநலம் கொஞ்சம் கூட இருக்காது. பொது நலத்துக்கு செய்வது போல், தனி மனிதனுக்கும் உதவி செய்வது ஈகை என்பது. கொஞ்சம் கூட விளம்பரம், சுய இலாபம் இல்லாமல் செய்யும் மனப் பக்குவம் வர வேண்டும் என்பதால், இதை ஒப்புரவின் பின் கூறினார். 


புகழ் - ஒருவன் இல்லறத்தை சிறந்த முறையில் நடத்தி, மன, மெய், மொழிக் குற்றங்களை நீக்கி, சமூகத்துக்கும், தனி மனிதர்களுக்கும் உதவி செய்து வாழ்ந்தால், அவனுக்கு நீடித்த புகழ் கிடைக்கும். புகழ் ஒன்றே ஒருவன் சிறப்பாக இல்லறம் நடத்தினான் என்பதற்கு சான்று.  


புகழ் என்ற அதிகாரத்தோடு இல்லறம் நிறைவு பெறுகிறது. 


இனி அடுத்து துறவறம் பற்றிப் பேசப் போகிறார். 


நாளை முதல் அது பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


இதுவரை நாம் சேர்ந்து பயணித்த அனுபவம் எப்படி இருந்தது ? உங்கள் கருத்துகளை அறிய ஆவல். 



Wednesday, January 3, 2024

திருக்குறள் - இதுவரை - பாகம் 5

 

 திருக்குறள் - இதுவரை - பாகம் 5

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/5.html



1, அறன் வலியுறுத்தல்,

2.  இல்வாழ்க்கை, 

3. வாழ்க்கைத் துணைநலம், 

4. புதல்வர்களைப் பெறுதல், 

5. அன்புடைமை, மற்றும் 

6. விருந்தோம்பல் 

7. இனியவை கூறல்

8.செய்நன்றி அறிதல்

9. நடுவு நிலைமை

10. அடக்கமுடைமை 

11.     ஒழுக்கமுடைமை 

12.  பிறனில் விழையாமை 

13. பொறையுடைமை 

14. அழுக்காறாமை 

15. வெஃகாமை


இதுவரை மேலே உள்ள 15 அதிகாரங்களை சிந்தித்தோம். 


புறங்கூறாமை 


அழுக்காறாமை,  வெஃகாமை என்ற இரண்டும் மனதின் கண் நிகழும் குற்றங்கள். அதை அடுத்து மொழியின் கண் குற்றங்கள் பற்றி கூற இருக்கிறார். அதில் முதலாவதாக, புறங்கூறாமை பற்றி கூறுகிறார். அதாவது, ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி தவறாக மற்றவர்களிடம் கூறுவது. இது தேவையில்லாத ஒன்று. ஒருவர் தவறு செய்தால், அது தவறு என்று தெரிந்தால், அதை அவரிடமே நேரிடையாகவே கூறலாமே. அவர் இல்லாத போது கூறுவது என்பது நடந்ததை திரித்துக் கூறவே உதவும். அதனால் ஒரு பயனும் விளையாது. 


பயனில சொல்லாமை 


சொல்லில் ஏற்படும் குற்றங்கள் நான்கு. அவை பொய், குறளை, கடும் சொல், பயனில சொல் என்பவை. இதில் இல்லறத்தில் உள்ளவன் பொய்யே சொல்லாமல் இருக்க முடியாது. ஒன்றும் இல்லாவிட்டால் கூட மனைவியை "நீ இரதி மாதிரி இருக்கிறாய்' என்று பொய் சொல்லத்தான் வேண்டும். இல்லை என்றால் இல்லறம் சிறக்காது. பொய்யை முற்றும் விலக்க துரவியால்தான் முடியும் என்பதால், அதை துறவறத்தில் வைத்தார். கடும் சொல்லை தவிர்க்க இனியவை கூறல் என்ற அதிகாரம் வைத்தார். மீதி இருக்கும் புறங்கூறாமை மேலே சொல்லிவிட்டபடியால், அடுத்து பயனில சொல்லாமை பற்றி கூறுகிறார். தனக்கும், பிறருக்கு, இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தராத சொற்களை கூறாமல் இருப்பது. 


தீவினையச்சம் 


மனதின் கண் நிகழும் குற்றங்களும், வாக்கின் கண் நிகழும் குற்றங்களும் சொல்லிய பின், உடலின் கண் நிகழும் ஏனைய குற்றங்கள் பற்றி தொகுத்து ஒரே அதிகாரத்தில் கூறினார். தீய வினைகள் செய்ய அஞ்ச வேண்டும். அச்சம் வந்தால் தானே அதில் இருந்து விலகி விடுவோம். தவறான காரியம் செய்தால் மானம் போய்விடுமே என்ற அச்சம், தண்டிக்கப் படுவோம் என்ற அச்சம் இருந்தால் தவறான காரியங்கள் செய்ய மாட்டோம். 


மேலும் சிந்திப்போம். 


 

Sunday, December 31, 2023

திருக்குறள் - இதுவரை - பாகம் 4

 திருக்குறள் - இதுவரை - பாகம் 4 

https://interestingtamilpoems.blogspot.com/2023/12/4.html



1, அறன் வலியுறுத்தல்,

2.  இல்வாழ்க்கை, 

3. வாழ்க்கைத் துணைநலம், 

4. புதல்வர்களைப் பெறுதல், 

5. அன்புடைமை, மற்றும் 

6. விருந்தோம்பல் 

7. இனியவை கூறல்

8.செய்நன்றி அறிதல்

9. நடுவு நிலைமை

10. அடக்கமுடைமை 

11.     ஒழுக்கமுடைமை 


வரை முந்தைய பதிவுகளில் சிந்தித்தோம் 


பிறனில் விழையாமை 


இல்லறம் என்ற அறம் சிறக்க வேண்டும் என்றால், மாற்றான் மனைவியை நினைக்கக் கூடாது. வலிமை உள்ளவன், பணம் உள்ளவன், அழகு உள்ளவன், அதிக்காரம் உள்ளவன் தன்னிடம் உள்ள அந்த சிறப்புத் தன்மையை பயன்படுத்தி மாற்றான் மனைவியை தீண்ட நினைப்பது இயல்பு. அது அறமன்று. அப்படி நிகழ்ந்தால், இல்லறம் சிதையும், குடும்பம் என்ற கட்டமைப்பு குலையும், சமுதயாம் சீரழியும். எனவே, பிறனில் விழையாமை என்பதை ஒரு அறமாகக் கூறுகிறார். ஒழுக்கம் உடையவர்களுக்கே இது முடியும் என்பதால், இதை ஒழுக்கம் உடைமை என்ற அறத்தின் பின் கூறினார். 


பொறையுடைமை 


அதாவது பொறுமையை கடைபிடித்தல். இல்லறத்துக்கு மிக இன்றியமையாத பண்புகளில் இதுவும் ஒன்று. இல்லறத்தில் உள்ள ஒருவனுக்கு பலரால் பலவிதங்களில் இன்னல்கள் வரக் கூடும். தான் செய்த ஒன்றின் விளைவாக, மற்றவர்களின் தவறான புரிதல்களால், விதி வசம் என்று பலவித இன்னல்கள் வர நேரும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் உறவுகள் சிதறிப் போகும். பொறுக்கவே முடியாத ஒரு குற்றம்என்றால்,தன் மனைவியை மாற்றான் கொள்ள நினைப்பது. அந்த சமயத்தில் கூட பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்பதால் இதை பிறனில் விழையாமையின் பின் கூறினார். மனைவியை கவர்ந்து சென்ற இராவணனுக்குக்   கூட இராமன் அருள் புரிந்தான்.


அழுக்காறாமை 


அதாவது பொறாமை கொள்ளாமல் இருத்தல். ஒவ்வொருத்தனுக்கும் ஒன்று வாய்க்கும், ஒன்று வாய்க்காது. வாய்த்ததைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழப் பழக வேண்டும். கிடைக்காததை நினைத்து, மற்றவனுக்கு கிடைத்ததே, எனக்கு கிடைக்கவில்லையே என்று பொறாமை கொள்ளக் கூடாது. பொறாமை, அது உள்ளவனை மட்டும் அல்ல, அவன் குடும்பத்தையே அழித்து விடும். இருப்பதைக் கொண்டு இன்பமாக வாழவேண்டும். பிறர் ஆக்கம் கண்டு துன்பம் கொள்ளக் கூடாது. 


வெஃகாமை


பிறர் பொருளை அறமற்ற முறையில் கொள்ளக் கருதுவது.பொறாமை வந்து விட்டால், நியாயம் அநியாயம் தெரியாது. எப்படியாவது மற்றவன் பெற்ற செல்வத்தை தானும் பெற வேண்டும் என்ற வெறி வரும். தவறான வழியில் செல்லத் தூண்டும். அப்படி அறமற்ற வழியில் பிறர் பொருளை அடைய நினையாமல் இருப்பது வெஃகாமை.


மேலும் சிந்திப்போம். 


Saturday, December 30, 2023

திருக்குறள் - இதுவரை - பாகம் 3

 திருக்குறள் - இதுவரை - பாகம் 3 

https://interestingtamilpoems.blogspot.com/2023/12/3.html


1, அறன் வலியுறுத்தல்,

2.  இல்வாழ்க்கை, 

3. வாழ்க்கைத் துணைநலம், 

4. புதல்வர்களைப் பெறுதல், 

5. அன்புடைமை, மற்றும் 

6. விருந்தோம்பல் 


வரை முந்தைய பதிவில் சிந்தித்தோம். 


மேலும் தொடர்வோம். 


இனியவை கூறல்: விருந்தினரை உபசரிக்க மிக முக்கியமான ஒன்று இனியவை கூறல். இனிமையாக பேசாதவன் வீட்டுக்கு யார் போவார்கள். இல்லறம் சிறக்க வேண்டும் என்றால் இனிமையாக பேசிப் பழக வேண்டும். இனிமையாக பேச பயிற்சி வேண்டும். உடனே வந்து விடாது. முயற்சி செய்ய வேண்டும். இனிமையாக பேசுவது என்றால் என்ன, அதை எப்படி பழக வேண்டும் என்று இந்த அதிகாரத்தில் சொல்லித் தருகிறார். 


செய்நன்றி அறிதல்:  இனியவை பேசி, விருந்தினர் வந்தால், அவர்களால் ஒருவனுக்கு சில நன்மைகள், உதவிகள் கிடைக்கும். அப்படி உதவி கிடைத்தால், அந்த உதவியை மறக்கக் கூடாது. பாவங்களில் பெரிய பாவமாக செய்த உதவியை மறக்கும் பாவத்தைக் கூறுகிறார் வள்ளுவர். செய்நன்றி மறந்த ஒருவனை யாரும் மதிக்க மாட்டார்கள். அவன் தனித்து விடப்படுவான். இல்லறம் சிறக்காது என்பதால், அதை பெரிய அறமாகக் கூறினார். 


நடுவு நிலைமை: 


விருந்தினர்கள், நண்பர்கள் வருவார்கள். அவர்கள் சில பல உதவிகளை செய்யக் கூடும். அதற்காக அவர் செய்யும் தீமைகளை கண்டும் காணமல் இருக்கக் கூடாது. எப்போதும் நீதியின் பால் நடுவு நிலையோடு இருக்க வேண்டும். அம்மா மற்றும் மனைவிக்கு இடையில் வரும் சிக்கல்கள், பிள்ளைகளுக்கு இடையில் வரும் சிக்கல்கள், உறவினர்களுக்கு இடையே வரும் மனத்தாபங்கள் இவற்றை நடுவு நிலையோடு அணுகவேண்டும். வேண்டப்பட்டவர் என்பதற்காக தவறான ஒன்றை சரி என்று சொல்லக் கூடாது. 


அடக்கமுடைமை 


நடுவு நிலைமை என்றால் மற்றவர் செய்யும் குறை நிறைகளை ஆராய்ந்து நேர்மையான ஒன்றைச் சொல்வது. அதே அளவு கோலை நமக்கும் வைக்க வேண்டும். நாம் செய்வது எல்லாம் சரியா? உண்பது, பேசுவது, இன்பம் அனுபவிப்பது, வரம்பு மீறி சிலவற்றை செய்ய நினைப்பது சரியா என்று சிந்தித்து மனம், மொழி, மெய் இவை தீய வழியில் செல்லாமல் அவற்றை அடக்கி வைத்தல். 


ஒழுக்கமுடைமை 


புலன்கள் அடங்கினால்தான் ஒழுக்கம் வரும். புலன்கள் போன போக்கில் போனால் ஒழுக்கம் கெடும். எனவே அடக்கமுடைக்கு அடுத்து ஒழுக்கம் பற்றி கூறினார். ஒழுக்கம் என்றால் செய்ய வேண்டிய கடமைளை முறையே செய்வது. தனி மனிதக் கடமைகள், சமுதாயக் கடமைகள் என்று இரண்டையும் சரிவரச் செய்வது. 



மேலும் சிந்திப்போம். 





Thursday, December 28, 2023

திருக்குறள் - இதுவரை - பாகம் 2

 திருக்குறள் - இதுவரை - பாகம் 2 



அறம், பொருள், இன்பம் என்பதில் முதலில் அறம் அதில் இல்லறம் பற்றி முதலில் விளக்குகிறார். 


அறம் என்றால் ஏதோ காவி கட்டி சன்யாசம் போவது இல்லை. மிக மிக மகிழ்ச்சியாக, இனிமையாக வாழும் இல்லறத்தை காட்டுகிறார் வள்ளுவர். அதை பின்பற்றுவதில் நமக்கு ஒரு சங்கடமும் இருக்காது. அப்படி ஒரு எளிய வழியைக் காட்டுகிறார். 


கை பிடித்து, ஒவ்வொரு படியாக நம்மை நடத்திச் செல்கிறார். 


அதில் முதல் அதிகாரம் - இல்வாழ்க்கை. 


கணவனும், மனைவியும் சேர்ந்து நடத்தும் இல்வாழ்க்கை பற்றி முதல் அதிகாரத்தில் பேசுகிறார். இல்வாழ்வின் நோக்கம் என்ன?  ஏதோ ஆணும் பெண்ணும் சேர்ந்து இன்பம் அனுபவிக்க சமுதாயம் தந்த ஒரு அனுமதி (license) என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. வள்ளுவர் காட்டும் இல்வாழ்க்கை சமுதாயம் நோக்கியது. இல்லறத்தில் ஈடுபட வேண்டும் என்றால் அதற்கு பதினொரு கடமைகளைச் சொல்கிறார். அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதாக இருந்தால் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையைத் தொடங்கு என்கிறார். நான் பெரியவனா, நீ பெரியவனா, விட்டுக் கொடுத்துப் போவது, சகித்துப் போவது, சம உரிமை, முழு உரிமை, முக்கால் உரிமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்யும் வேலைகள்தான் இருக்கிறது. வள்ளுவர் காட்டும் இல்லறத்தைக் கடைபிடித்தால் இல்லறத்தில் ஒரு சிக்கலும் இருக்காது. 


அடுத்தது - வாழ்க்கைத் துணைநலம் 


வள்ளுவர் காட்டும் இல்லறக் கடமைகள் அனைத்தும் ஆணின் மேல்தான். ஆனால், ஒரு ஆணால் அந்தக் கடமைகளை தனியே செய்யவே முடியாது. அவனுக்கு ஒரு பெண்ணின் துணை அவசியம் தேவை.   ஏன் பெண்ணுக்கு கடமை  கிடையாதா? ஏன் ஆண் அந்த கடமைகளுக்கு துணை போகக் கூடாதா என்று வாதம் செய்யலாம். அப்படி ஒரு இல்லறக் கோட்பாட்டை யாராவது வகுத்து, அது சரி என்று எல்லோரும் ஏற்றுக் கொண்டால் அது நடைமுறைக்கு வரும். வாதம் செய்பவர்கள் முயற்சி செய்யலாம். இல்லறக் கடமைகளை சரிவர ஆற்ற ஒரு பெண்ணின் துணை தேவை என்பதால் அவளை வாழ்க்கை துணை நலம் என்கிறார். வாழ்வில் நல்லது செய்ய ஒரு துணையாக வந்தவள். 


மூன்றாவது - புதல்வர்களைப் பெறுதல் 


இல்லறம் நடத்துவது என்பது ஏதோ உடல் இன்பத்துக்காக மட்டும் அல்ல. குழந்தைகள் அவசியம் என்கிறார். இன்று ஒரே பாலினத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் எவ்வாறு பிள்ளை பெறுவார்கள் ?  அதை எல்லாம் நம் கலாச்சாரம் அங்கீகரிக்கவில்லை என்பதைத்தான் இந்த அதிகாரம் காட்டுகிறது. அது மட்டும் அல்ல, பிள்ளகைள் வரும் போது கணவன், மனைவி இருவரின் அன்பு எல்லைகள் விரியும். தனக்கு என்று இருந்ததை எல்லாம் பிள்ளைக்கு என்று கொடுக்கத் தோன்றும். தனக்கு துன்பம் என்றாலும் பரவாயில்லை, பிள்ளை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இருவரும் நினைப்பார்கள். அது அன்பின் வெளிப்பாடு. 


நான்காவது - அன்புடைமை 


மனைவி, பிள்ளைகள் என்று வந்துவிட்டால் அங்கே அன்புக்கு எங்கே பஞ்சம்?  மனைவிக்கு பிடிக்கும், கணவனுக்கு பிடிக்கும், பிள்ளை விரும்புவான், மகள் இதை ஆசைப் படுவாள் என்று ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மகிழும் இடமாக இல்லறம் மலரும். குடும்பம் என்பது அன்புப்  பள்ளி. ஒவ்வொரு நாளும் அன்புப் பயிற்சி நிகழும் இடம். 


ஐந்தாவது - விருந்தோம்பல் 


குடும்பம் என்று வந்து விட்டால் விருந்தினர் வருவர். திருமணம் ஆகாத் ஒரு இளைஞனின் வீட்டுக்கு யார் விருந்துக்குப் போவார்கள். அவனே வெளியில் எங்காவது சாப்பிடுவான். மனைவி, பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு விருந்தினர் வருவர். அப்படி வரும் விருந்தினரை எப்படி உபசரிப்பது என்று அடுத்துக் கூறுகிறார். விருந்தோம்பலை ஒரு அறமாகக் கொண்டது நம் பண்பாடு. 


(தொடரும்)

 


 

Monday, December 18, 2023

திருக்குறள் - இதுவரை - பாகம் 1

 திருக்குறள் - இதுவரை - பாகம் 1 


இதுவரை 24 அதிகாரங்கள் படித்தோம். புகழ் என்ற அதிகாரத்தோடு இல்லறம் முற்றுப் பெறுகிறது. இதுவரை படித்ததை ஒருமுறை மீண்டும் சிந்தித்துப் பார்ப்போம். 


வாழ்க்கை என்பதை நான்கு கூறாக பிரித்துக் கொள்ளலாம். 


அறம், பொருள், இன்பம், வீடு என்று. 


வீடு என்றால் மோட்சம், இறைவனடி, தன்னை உணர்தல் என்று கொள்ளலாம். 


திருக்குறள் வீடு பற்றி பேசவில்லை. அறம், பொருள், இன்பம் பற்றி மட்டுமே பேசுகிறது. ஏன் என்றால் வீட் பற்றி சொல்லி விளக்க முடியாது. அறிவால் உணர முடியாத ஒன்று. அறம், பொருள், இன்பம் இவற்றைச் சரியாக செய்தால், வீடு தானே வரும் என்பது பொருள். 


ஒருவன் ஒரு இடத்துக்குப் போக வழி கேட்கிறான். போகும் வழி சொல்கிறோம். இப்படிச் சென்றால் நீங்கள் தேடும் இடத்தை அடைவீர்கள் என்கிறோம். அந்த இடத்தைப் பற்றி நாம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், போகும் வழி பற்றி கூறுகிறோம். அதே போல், வள்ளுவர், போகும் வழி கூறுகிறார். இந்த வழியில் போனால், "வீடு" வந்து சேரும். நீ செல், வரும், கட்டாயம் வரும் என்கிறார். 


எனவே, வீடு பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/1.html


(please click the above link to contiure reading)


மீதி உள்ள அறம், பொருள், இன்பம் என்ற மூன்றில் அறம் பற்றி முதலில் எடுத்துக் கொள்கிறார். 


அறம் என்றால் என்ன?


அதற்கு பரிமேலழகர் மிக எளிமையான, தெளிவான விளக்கம் செய்கிறார். 


அறம் என்பது "விதித்தன செய்தாலும், விலக்கியன ஒழித்தலும்" என்கிறார். 


அதாவது, உயர்ந்த நூல்களில் சொல்லப்பட்டவற்றை செய்வதும், அந்த நூல்கள் எதை செய்யக் கூடாது என்று சொல்கிறதோ அவற்றை செய்யாமல் இருப்பதும். 


இந்த அறம் என்பது ஒழுக்கம், வழக்கு, தண்டனை என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது. 


இதில் வழக்கு, தண்டனை என்பதை மன்னர்களிடம் விட்டு விட்டார்கள். ஒருவன் ஒழுக்கம் தவறினால் என்ன செய்வது என்ற கேள்வியை மன்னனுக்கு விட்டு விட்டார்கள். மன்னிப்பதும், தண்டிப்பதும், திருத்துவதும் அவன் கடமை. அது எல்லோருக்கும் உரிய செயல் அல்ல என்பதால் அதைத் தவிர்த்து, ஒழுக்கம் என்று சொல்லப் படும் அறம் பற்றி சொல்ல முதலில் ஆரம்பிக்கிறார். 


இந்த அறத்தை இரண்டாக பிரித்துக் கொள்கிறார் வள்ளுவர். 


இல்லறம்

துறவறம் 


இங்கே இல்லறமும், துறவறமும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டது அல்ல. இல்லறத்தின் முதிர்ச்சி துறவறம். ஒரு சிறப்பான இல்லறம், ஒருவனை, இயல்பாக துறவறத்துக்கு இட்டுச் செல்லும். பரந்துபட்ட இல்லறமே துறவறம். துறவறம் என்று தனித்து ஒன்றும் இல்லை. இல்லறம் விரிந்தால் துறவறம். சுருங்கி, ஒரு வட்டத்துக்குள் நின்றால் அது இல்லறம். 


ஆரம்பம் இல்லறம் என்பதால், அதை முதலில் எடுத்துக் கொண்டு அது பற்றி சொல்லத் தொடங்குகிறார். 


தொடரும் 


Friday, December 8, 2023

திருக்குறள் - வாழ்க்கை என்றால் என்ன ?

 திருக்குறள் -  வாழ்க்கை என்றால் என்ன ?


வாழ்க்கை என்றால் என்ன? 


எப்படி வாழ வேண்டும்?  


பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று போவது ஒரு வாழ்க்கையா?  ஒருவன் வாழ்ந்தான் என்று சொல்ல வைப்பது எது?  எத்தனையோ பேர் பிறந்து, உண்டு, உறங்கி, பின் வந்தது தெரியாமல் இறந்து போகிறார்கள். அது ஒரு வாழ்க்கையா?


வாழ்கின்ற காலத்தில் ஏதாவது செய்திருப்பானே? ஒன்றுமே செய்யாமல் ஒருவன் எப்படி இருக்க முடியும்?  அப்படி என்னதான் செய்தான் என்ற கேள்வி வரும் அல்லவா?


செய்யும் வேலையை சிறப்பாக செய்து இருந்தால் அவனுக்கு ஒரு பேர் கிடைத்திருக்கும். அதனால் ஒரு புகழ் உண்டாகி இருக்கும். அவனுக்குப் பின்னும், அவன் பேரை மக்கள் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். அப்படி வாழ்வது ஒரு நல்ல வாழ்க்கை. 


அவனா, அப்படி ஒருவன் இருந்தானா? என்று ஒரு அடையாளமே இல்லாமல் புழு பூச்சி போல் தோன்றி மறைவது ஒரு நல்ல வாழ்க்கையா?


வள்ளுவர் சொல்கிறார், 


"மற்றவர்கள் இகழாதபடி வாழ்பவர்களே வாழ்ந்தவர்கள் என்று  கருதப்படுவார்கள். புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் , வாழாதவர்களே"


என்று


பாடல் 



வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய

வாழ்வாரே வாழா தவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_8.html


(please click the above link to continue reading)



வசையொழிய = பிறர் இகழாதபடி 


வாழ்வாரே  = வாழ்பவரே 


வாழ்வார் = வாழ்கின்றவர் ஆவார் 


இசைஒழிய = புகழ் இல்லாமல் 


வாழ்வாரே = வாழ்பவர்கள் 


வாழா தவர் = வாழாதவர்களாகவே கொள்ளப்படுவர். 


அதாவது புகழ் இல்லாவிட்டால் இகழ்.


எனவே, புகழோடு வாழ்ந்தால், வாழ்ந்ததாகக் கருதப்படுவர்.


இகழோடு வாழ்ந்தால், அவர்கள் வாழாதவர்களாகவே கருதப்படுவர். 


புகழ் அடையும்படி வாழவேண்டும். இல்லை என்றால் நடைபிணம் தான். 


புகழ் அடைவது என்றால் சாதாரண காரியமா?


என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், இதில் யார் எவ்வளவு சிறப்பாக செய்து புகழ் அடைந்து இருக்கிறார்கள், அவர்களை விட நாம் எப்படி சிறப்பாக செய்வது என்று எண்ணி, திட்டம் போட்டு,  காரியம் செய்ய வேண்டும். 


ஒரு நாட்டில், ஒவ்வொரு குடிமகனும் இப்படி முயற்சி செய்தால், அந்த நாடு எந்த அளவுக்கு முன்னேறும்?


ஒவ்வொரு தனிமனிதனும், தான் எடுத்துக் கொண்ட முயற்சியில் புகழ் பெற முயல வேண்டும். 




Wednesday, December 6, 2023

திருக்குறள் - விளைச்சல் நன்றாக இருக்காது

திருக்குறள் - விளைச்சல் நன்றாக இருக்காது 


ஒரு நாட்டில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் துறையில் சிறப்பாக செயல்பட்டு புகழ் உடையவர்களாக இருந்தால் அந்த நாடு எப்படி இருக்கும்?


மாறாக

ஏதோ சொன்ன வேலையை செய்வோம், வர்றது வரட்டும் என்று எல்லோரும் ஏனோ தானோ என்று வேளை செய்தால் எப்படி இருக்கும்?


வள்ளுவர் சொல்கிறார், புகழ் இல்லாதவர்கள் வாழும் நாட்டில், நிலத்தில் நல்ல விளைச்சல் இருக்காது என்று. 


பாடல் 

 

வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_6.html


(pl click the above link to continue reading)


வசைஇலா = குற்றம் இல்லாத 


வண் = செழிப்பான, வளமையான 


பயன் = விளைச்சல் 


குன்றும் = குறையும், எப்போது என்றால் 


இசையிலா = புகழ் இல்லாத 


யாக்கை = உடம்பை 


பொறுத்த நிலம் = பொறுத்து தாங்கி கொண்டிருக்கும் நிலம் 


அது எப்படி, புகழ் இல்லாதவர்களை சுமந்த நிலம் குறைந்த விளைச்சல் தரும் ? புகழுக்கும், விளைச்சலுக்கும் என்ன சம்பந்தம் வள்ளுவர் சார் ?


"பயன்" என்ற சொல்லுக்கு விளைச்சல், உற்பத்தி, என்று கொள்ளலாம். புகழ் விரும்பி இருப்பவர்கள், புகழ் பெறவும், பெற்ற புகழை தக்க வைத்துக் கொள்ளவும் சிறப்பாக செயல்படுவார்கள்.  அப்படி அவர்கள் செயல்படும் போது, அந்த செயல்களின் விளைவு உற்பத்தியை மேலும் பெருக்கும் என்பது கருத்து. 


"இசை இல்லா யாக்கை" என்றார். புகழ் இல்லாமல் ஒருவன் வாழ்கிறான் என்றால்  அவனை உயிர் உள்ள மனிதனாகக் கூட வள்ளுவர் மதிக்கவில்லை. அது ஒரு உடம்பு என்கிறார். யாக்கை என்றால் உடம்பு. எலும்பு, நரம்பு, இரத்தம் என்றவற்றால் கட்டப்பட்டதால், இதற்கு யாக்கை என்று பெயர். யாக்குதல், கட்டுதல். 


நிலம் ஏன் குறைவாக விளையும் என்றால், புகழ் இல்லாத மனிதர்கள், பெரிய முயற்சி எடுக்க மாட்டார்கள். அதனால் பொருள் விரயம், சுற்றுப் புற சூழ்நிலை மாசு படுதல் போன்ற பல தவறுகள் நிகழலாம். 


ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு நெல் விளையும் என்றால், அதையே சிறப்பாகச் செய்தால் அதிக மகசூல் பெறலாம், குறைவான நீரை பயன்படுத்தாலாம், பூச்சிக் கொல்லி, இரசாயன உரம் போன்றவற்றை முடிந்தவரை தவிர்த்து உயர்தர விளைச்சலை, குறைந்த செலவில் பெற்றுத் தரலாம். அதற்கெல்லாம் முயற்சி வேண்டும், கடின உழைப்பு வேண்டும். 


அப்படி இல்லாதவர்கள் ஊரில், விளைச்சல், பயன் குறைவாகக் கிட்டும் என்கிறார். 


சிந்திக்க வேண்டிய விடயம். 


எதையும் சிறப்பாக செய்ய வேண்டும், அனைவரும் பாராட்டும்படி செய்ய வேண்டும். 


 




Saturday, December 2, 2023

திருக்குறள் - இது இல்லேனா அது

 திருக்குறள் - இது இல்லேனா அது 


புகழ் அடைவது நல்லதுதான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், எல்லோராலும் புகழ் அடைய முடிவது இல்லை. புகழ் இல்லாமல், ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், படித்தோம், வேலை பார்த்தோம், திருமணம் செய்தோம், பிள்ளைகளப் பெற்றோம், அவர்களை வளர்த்தோம் என்று இருந்து விட்டு போவதில் என்ன பிரச்சனை. 


புகழ் அடைந்தே ஆக வேண்டும் என்று கட்டாயமா? புகழ் இல்லாமல் எத்தனையோ பேர் வாழ்ந்து மறையவில்லையா? நானும் அப்படி இருந்துவிட்டுப் போகிறேன். எனக்கு புகழ் எல்லாம் வேண்டாம் என்று ஒருவர் சொல்லலாம்.


வள்ளுவர் கேட்கிறார்,


சரி. புகழ் இல்லாமல் வாழ்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். அந்த வாழ்க்கைக்கு என்ன பெயர்? "சாதாரண வாழ்க்கை" என்று கூறலாமா என்றால் கூடாது என்கிறார் பேராசான்.


புகழ் இல்லாத வாழ்க்கை சாதாரண வாழ்க்கை இல்லை, அது ஒரு இழிவான வாழ்க்கை என்கிறார். 


புகழ் இல்லை என்றால் உனக்கு இகழ்தான் கிடைக்கும் என்கிறார். 


இது என்ன புதுக் கதையாக இருக்கிறதே...நீ நீதிபதி ஆகாவிட்டால் திருடன் என்று சொல்லுவது போல இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். 


பாடல் 


வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_2.html

(please click the above link to continue reading)


வசைஎன்ப = இகழ்ச்சி என்று சொல்லுவார்கள் 


வையத்தார்க்கு = உலகில் வாழும் மக்களுக்கு 


எல்லாம் = அனைவருக்கும் 


இசையென்னும் = புகழ் என்ற 


எச்சம் = மிகுதியைப் 


பெறாஅ விடின் = பெறாவிட்டால் 


இசை என்றால் புகழ் என்று பொருள். 


இசை இல்லாவிட்டால் வசைதான் என்கிறார். 


ஏன் அப்படி? வள்ளுவர் சொல்லிவிட்டால் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? 


புகழ் அடைய ஆயிரம் வழிகள் இருக்கிறது. எதில் புகழ் அடைய முடியாது? எதை எடுத்தாலும் அதில் புகழ் பெற முடியும். இந்தத் துறையில் புகழ் பெற முடியாது என்று ஒன்றே கிடையாது. என்ன செய்தாலும் அதில் புகழ் பெறலாம்.


"என்ன அருமையா பிள்ளைகளை வளர்த்து இருக்கிறா"


அது கூட ஒரு புகழ்தான். 


இப்படி ஆயிரம் வழி இருக்க, ஒன்றும் செய்யாமல் இருந்தால் ஊர் என்ன சொல்லும் ?


"யாரு அவனா, ஏதோ இருக்கான்...ஒரு பைசாவுக்கு புண்ணியம் இல்லை" 


என்று சொல்லும். அது இகழ்ச்சிதானே?


ஒரு வேலைக்கு மனு போடுகிறோம். எவ்வளவு மதிப்பெண் என்று பார்த்தால் ஏதோ 50% /60% வாங்கி இருக்கிறோம். அந்த நிறுவனத்தில், விண்ணப்பங்களை சரி பார்க்கும் கடை நிலை ஊழியன், அந்த விண்ணப்பத்தை நேரே குப்பை தொட்டியில் தூக்கி போட்டு விடுவான். 


"அவனவன் 90%, 95% என்று வாங்கிட்டு வேலைக்கு அலையிரானுக, இவரு 50% வாங்கிட்டு வெக்கம் இல்லாம வேலைக்கு மனு வேறு போட வந்துட்டான்" நு மனதுக்குள்ளாவது திட்டுவானா இல்லையா?


சிறந்த மதிப்பெண் பெற்றால் புகழ். அது வாங்காவிட்டால், இகழ்தான். 50% சதவீதம் புகழ் கிடையாது. புகழ் இல்லாவிட்டால் இகழ்.


எனவே, புகழ் வேண்டாம் என்று இருந்தால், இகழ் கிடைக்கும். அது பரவாயில்லையா?





Thursday, November 30, 2023

திருக்குறள் - என்ன செய்தாலும் புகழ மாட்டேன் என்கிறார்களே..

 திருக்குறள் -  என்ன செய்தாலும் புகழ மாட்டேன் என்கிறார்களே..


என்ன செய்தாலும், பாராட்டி ஒரு வார்த்தை கிடையாது. என்ன செய்தாலும், அதில் ஏதாவது ஒரு குறை கண்டு பிடித்து, நம்மை குறை சொல்வதையே எல்லோரும் வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி இதுதான் வழக்கமாக இருக்கிறது. இதில் எங்கிருந்து புகழ் பெறுவது. 


ஒருவருக்கும் பாராட்டும் மனம் இல்லை. இவர்கள் மத்தியில் புகழ் பெறுவது என்பது நடவாத காரியம்....


இது எல்லோருக்கும் நடப்பதுதான். செஞ்சு செஞ்சு அலுத்துப் போய், புகழும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று விட்டு விடத் தோன்றும். 


வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 


பாடல் 


புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_30.html


(please click the above link to continue reading)


புகழ்பட = புகழ் கிடைக்கும்படி 


வாழாதார் = வாழ்க்கையை நடத்தாதவர்கள் 


தம்நோவார் தம்மை = தன்னைத் தான் நொந்து கொள்ளாமல் 


இகழ்வாரை  = தம்மை இகழ்பவர்களை 


நோவது எவன் = குறை சொல்வது எதனால் ?


நீ புகழ் அடையாமல் இருப்பதற்கு காரணம் நீ தான், இதற்கு எதற்கு மற்றவர்களை குறை சொல்கிறாய் என்று வள்ளுவர் கேட்கிறார். 


ஏன் மற்றவர்கள நம்மை குறை சொல்லப் போகிறார்கள்?  அவர்களுக்கு வேறு வேலை இல்லையா என்றால், அதற்கு பரிமேலழகர் பதில் தருகிறார். 


புகழ் அடைய ஆயிரம் வழிகள் இருக்கிறது. அப்படி இருக்க, ஒன்றையும் செய்யாமல், புகழ் இல்லாமல் வாழ்பவனை உலகம் ஏசத்தான் செய்யும். 


முயன்றால் எந்த வழியிலும் புகழ் அடையலாம். 


புகழ் என்றால் ஏதோ ஜனாதிபதி கையால் பரிசு வாங்க வேண்டும், மெடல் வாங்க வேண்டும் என்று இல்லை. 


வகுப்பில் முதலாவதாக வருவதும் புகழ்தான். 


அட, இன்னைக்கு காப்பி சூப்பர் என்று பாராட்டு பெறுவதும் புகழ்தான்.


அவங்க வீட்டுக்குப் போய் இருந்தேன். வீட்டை என்னமா அழகா வச்சிருக்கு அந்த பொண்ணு...என்று சொல்லப் படுவதும் புகழ்தான். 


குப்பை போல வீடு, எப்பவும் போல ஒரே மாதிரி சாப்பாடு, ஏதோ படித்தோம், தேர்ச்சி பெற்றோம் என்று படிப்பு என்று இருந்தால், உலகம் இகழத்தானே செய்யும். 


அதற்கு காரணம் யார்? அவர்கள் இல்லை, நாம் தான். 


எதையும், சிறப்பாகச் செய்ய வேண்டும், மற்றவர்கள் புகழும்படி செய்ய வேண்டும், நல்ல பேர் எடுக்க வேண்டும். 


ஆங்கிலத்தில் "your job is not done until you get the wow effect" என்று. 


சமையல் செய்வது ஒரு கலை என்றால் அதை பரிமாறுவதும் ஒரு கலைதான். பொரியல் நன்றாக இருக்கிறது என்று அதைச் செய்த இருப்புச் சட்டியோடு கொண்டு வந்து பரிமாறினால் எப்படி இருக்கும்?  அதை இன்னொரு அழக்கான பாத்திரத்தில், கொஞ்சமாக எடுத்து, அதற்கு என்று ஒரு தனிக் கரண்டி போட்டு, பரிமாறினால் அழகாக இருக்கும் அல்லவா. 


நல்ல துணி என்றாலும், அழுக்காக, சுருக்கம் சுருக்கமாக அதை அணிந்து கொண்டால் எப்படி இருக்கும்?  


எதையும், நேர்த்தியாக, அழுகுபட செய்தால், புகழ் கிடைக்கும். அது நம் கையில் தான் இருக்கிறது. 


வள்ளுவரும், பரிமேலழகரும் இவ்வளவு மெனக்கெட்டதை, ஔவை கிழவி  மூன்றே வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய் விட்டாள். 


"செய்வன திருந்தச் செய் "



அவ்வளவுதான். 


முயல்வோம்.


Sunday, November 26, 2023

திருக்குறள் - புகழோடு தோன்றுக

 திருக்குறள் - புகழோடு தோன்றுக 


இன்று நாம் காண இருக்கும் குறள் நாம் பலமுறை கேட்டு, குழம்பிய குறள். 



தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று


தோன்றினால் புகழோடு தோன்ற வேண்டும். இல்லை என்றால் தோன்றாமல் இருப்பது நல்லது என்பது நேரடியான பொருள். 


இதற்கு, பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும், இல்லை என்றால் பிறக்காமலே இருப்பது நல்லது என்று பொருள் எடுக்கலாம். 


பிறப்பது நம் கையில் இல்லை. பிறந்து, வளர்ந்து, புகழ் அடையலாம். அது சாத்தியம். பிறக்கும் போதே எப்படி புகழோடு பிறப்பது? குழப்பமாக இருக்கிறது. 


சிலர், தோன்றில் என்ற சொல்லுக்கு, ஒரு துறையில் நுழைதல் என்று பொருள் கொண்டு. எந்த ஒரு வேலையில் இறங்கினாலும், அதை சிறப்பாக செய்து, அதில் நல்ல பேரும் புகழும் பெற வேண்டும். இல்லை என்றால் ஏதோ நானும் செய்தேன் என்று ஒரு செயலை செய்வதை விட, செய்யாமல் விடுவதே நல்லது என்று பொருள் சொல்கிறார்கள். கேட்க சரியாகத்தான் இருக்கிறது. 


படிக்கப் போகிறாயா, அகில இந்திய அளவில் முதல் மாணவனாக வர வேண்டும்.  ஓடப் போகிறாயா, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்க வேண்டும். என்று உயர்ந்த புகழ் அடையும் நோக்கத்தில் எந்தத் துறையிலும் இறங்கு என்று சொல்லுவதாக பொருள் சொல்கிறார்கள். 


ஆனால், பரிமேலழகர் அப்படிச் சொல்லவில்லை. 


பரிமேலழகர் உரை தவறாக இருக்க வாய்ப்பு இல்லை. அவ்வளவு நுண்ணியமாக படித்தவர். அவர் என்ன சொல்கிறார் என்றால், 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_26.html


(pl click the above link to continue reading)


"மக்களாய் பிறப்பதாய் இருந்தால் புகழோடு பிறக்க வேண்டும். இல்லை என்றால் விலங்காகப் பிறப்பது நல்லது"


என்கிறார். 


சிக்கல்தான். 


எப்படி அவர் இந்த மாதிரி பொருள் சொல்ல முடியும் என்று அவரே விளக்குகிறார். 


"அஃதிலார்" - அப்படி இல்லாதவர்கள் என்பது உயர் திணை. எனவே, தோன்றுதல் என்பது மனிதர்களைக் குறிக்கும் என்கிறார். 


மக்களாக பிறக்காவிட்டால், விலங்காகப் பிறக்க வேண்டும் என்றும் பிரித்துக் கொள்கிறார். 


மக்களாக பிறக்காவிட்டால், பிறக்காமலேயே இருந்து விடலாம் என்று அல்ல. பிறப்பது என்பது வினைப் பயன்.  அதைத் தடுக்க முடியாது. மக்களாய் பிறக்காவிட்டால், விலங்காகப் பிறக்க வேண்டும். அது நல்லது என்கிறார். 


ஏன் நல்லது?


விலங்குகள் படிக்கவில்லை, தான தர்மம் செய்யவில்லை, அன்பு செலுத்தவில்லை, பொருள் தேடவில்லை என்று யாரும் குறை சொல்ல மாட்டார்கள். "அது ஒரு சரியான முட்டாள் மாடு" என்று யாரும் ஒரு மாட்டை இழித்துச் சொல்ல மாட்டார்கள். அது படிக்காவிட்டாலும், அதன் மேல் பழி விழாது. ஆனால், மக்கள், முட்டாளாக இருந்தால், "அதோ போகிறான் பார், சரியான மர மண்டை " என்று இகழ்வார்கள். 


அப்படி என்றால் என்ன சொல்ல வருகிறார்?


புகழ் இல்லையா, நீ விலங்கை விட கேவலம் என்கிறார். புகழ் இல்லாத விலங்கு ஒன்றும் பாதகம் இல்லை. புகழ் இல்லாத மனிதன், பழி சுமக்க வேண்டி வரும். 


மனிதர்களுக்கு என்று கடமைகள் இருக்கிறது. அவற்றைச் சிறப்பாக செய்ய வேண்டும். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


நாம் செய்யும் நல் வினை, தீ வினைகள் புண்ணிய, பாவங்களாக மாறி அடுத்த பிறவியில் நமக்கு அவற்றின் பலன்களைத் தரும். 


பரிமேலழகர் உரை செய்யும் போது, "புகழ்" என்பதற்கு "புகழ் அடைவதற்கான குணங்களோடு" என்று உரை செய்கிறார். 


பிறக்கும் போதே புகழ் அடையும் குணங்களோடு பிறக்க வேண்டும். 


அது எப்படி வரும்? முற்பிறவியில் செய்த நல்வினையால் வரும். 


எனவே, அடுத்த பிறவி மனிதப் பிறவியாக இருக்க வேண்டும் என்றால், இப்போது நல்லது செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், அடுத்த பிறவியில், புகழுக்கு உரிய நற் குணங்களோடு பிறப்போம். புகழும் அடைவோம்.


எனவே, இப்போது நல்லது செய்ய வேண்டும். 


புகழ் ஒரு பிறவியில் வருவது அல்ல. 


"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் , மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்"


என்பார் மணிவாசகப் பெருந்தகை. 


அவ்வளவு பிறவி வேண்டி இருக்கிறது.




Thursday, November 23, 2023

திருக்குறள் - வித்தகர்க்கு அல்லால் அரிது

 திருக்குறள் - வித்தகர்க்கு அல்லால் அரிது



புகழ் அடைவது என்பது எளிதான காரியம் அல்ல. மிகுந்த முயற்சி தேவை. பண விரயம், கால விரயம், உடல் உழைப்பு என்று நிறைய தியாகம் செய்ய வேண்டி இருக்கும். 


வள்ளுவர் கேட்கிறார், நிலையில்லாதனவற்றை கொடுத்து நிலையானதைப் பெற்றுக் கொள்வதில் என்ன சிக்கல் என்று. 


இந்த செல்வம், இளமை (உடல்), ஆயுள் எல்லாம் நாம் என்ன செய்தாலும், செய்யாவிட்டாலும் நம்மை விட்டு ஒரு நாள் போய் விடும். அப்படி போவதை, நல்ல காரியத்துக்காக செலவழித்து அதன் மூலம் புகழ் அடைவது அல்லவா சிறப்பு. 


வாழ்நாள் எல்லாம் வெட்டிப் பொழுதாக கழித்து, இருக்கின்ற பணத்தை ஏதோ கொஞ்சம் செலவழித்து, கொஞ்சம் சேமித்து வைத்து, இறுதியில் கண்டது என்ன?  


இதை அறிந்தவன் என்ன செய்வான்?  பணத்தையும், நேரத்தையும், உடல் உழைப்பையும் புகழ் அடைய செலவழிப்பான். முதலில் அதை அறிய வேண்டும். அந்த அறிவு பெரும்பாலானோருக்கு இருப்பது இல்லை. எனவே, அப்படி செய்வது அறிவுள்ளவர்களுக்கு மட்டும் தான் முடியும் என்கிறார். 


பாடல் 


நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_23.html

(please click the above link to continue reading)


நத்தம்போல் = ஆக்கம் தரும் 


கேடும் = கேடும் 


உளதாகும் = தக்கவைக்கும் 


சாக்காடும் = சாக்காடு (இறப்பு) 


வித்தகர்க்கு = அறிஞர்களுக்கு 


அல்லால் அரிது = தவிர மற்றவர்களால் முடியாது 


கொஞ்சம் சிக்கலான குறள்.


ஆக்கம் தரும் கேடும் 


உள்ளது ஆக்கும் சாக்காடு 


அது என்ன ஆக்கம் தரும் கேடு, உளது ஆக்கும் சாக்காடு?


எப்படி கேடும், சாக்காடும் நல்லது ஆகும்? அதுவும் அது அறிஞர்களால் மட்டுமே முடியும் என்கிறாரே. 


ஒரே குழப்பாக இருக்கிறது அல்லவா?


நத்தம் என்றால் ஆக்கம், சிறப்பு, உயர்வு. ஆக்கம் தரும் கேடு எது என்றால், பசித்தவனுக்கு நாம் பொருளுதவி செய்கிறோம். நம்மிடம் இருந்த பொருள் குறைந்து விட்டது. நிறைய பேருக்கு அப்படி செய்தால் செல்வம் மிகுவாக குறையும். செல்வம் குறைவது கேடுதான். ஆனால், அந்தக் கேடு ஆக்கத்தைத் தரும். புகழ் என்ற ஆக்கத்தைத் தரும். 


ஒரு தாய் தன் இளமை, அழகு எல்லாம் இழந்து பிள்ளையை வளர்க்கிறாள். அவளது இளமைக்கும், அழகுக்கும் அது கேடுதான். இருப்பினும், ஒரு தாய் அதை மகிழ்ந்து செய்கிறாள். காரணம், அந்த இழப்பு, அவளுக்கு ஒரு குழந்தையைத் தருகிறது. அந்த ஆக்கம் , அவளது இழப்பை விட உயர்ந்தது. 


அது போல, தானம் செய்வது, பிறருக்கு உழைப்பது எல்லாம் ஒரு விதத்தில் கேடுதான், ஆனால் அந்தக் கேடு மிகப் பெரிய புகழைத் தரும்.


எப்படி சாக்காடு சிறப்பு ஆகும்?


இந்த பூத உடல் இறந்து போகும். ஆனால், புகழுடம்பு என்றும் நிலைத்து நிற்கும். உடம்புக்கு அழிவு கட்டாயம் வரும். அந்த அழிவில் இருந்து என்ன கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும். 


நிலையில்லா இளமையையும், செல்வத்தையும் கொடுத்து நிலையான புகழைப் பெற வேண்டும் என்பது கருத்து. 




Monday, November 20, 2023

திருக்குறள் - புலவரைப் போற்றாது

 திருக்குறள் - புலவரைப் போற்றாது 


நமது வாழ்வில் இன்பமும் துன்பமும் விரவிக் கிடக்கிறது. நமக்கு மட்டும் அல்ல, பொதுவாகவே இந்த உலகில் இன்பமும் துன்பமும் கலந்தே நிற்கிறது. 


இந்த உலகில் இன்பமும் துன்பமும் கலந்து நிற்கிறது. இப்படி கலக்காமல் தனித் தனியே இருக்கும் உலகம் இருக்குமா? 


இருக்கிறது என்கிறார்கள். 


இன்ப அனுபவம் மட்டுமே உள்ள உலகம் சுவர்க்கம் எனப்படுகிறது. 


துன்ப அனுபவம் மட்டுமே உள்ள உலகம், நரகம் எனப்படுகிறது. 


சுவர்க்கம் என்பதை புத்தேள் உலகு இன்று குறித்தார்கள் அந்த நாட்களில். 


அது அப்படி இருக்கட்டும் ஒரு புறம். 


யார் இந்த புத்தேள் உலகுக்குப் போவார்கள்? அங்கே போனாலும் என்ன மரியாதை இருக்கும் ?  மகாத்மா காந்தியும் போகிறார், நானும் போகிறேன் என்றால் யாருக்கு மதிப்பு அதிகம் இருக்கும்?  


ஒரு ஞானியும், ஒரு இல்லறத்தானும் புத்தேள் உலகம் போனால், அங்குள்ள தேவர்கள் யாரை அதிகம் மதிப்பார்கள்?  ஞானியையா? அல்லது இல்லறத்தானையா?  


பாடல் 


நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு


பொருள் 



(pl click the above link to continue reading)


நிலவரை = நிலத்தின் எல்லை வரை. அதாவது, இந்த பூ உலகம் நிற்கும் வரை 


நீள்புகழ் = நீண்ட புகழை 


ஆற்றின் = ஒருவன் பெறுவானானால் 


புலவரைப் = ஞானியரை 


போற்றாது = சிறப்பாக நினைக்காது 


புத்தேள் உலகு = சொர்க்கம் 


ஞானியை விட இல்லறத்தில் இருந்து புகழ் பெற்றவனுக்குத் தான் மதிப்பு அதிகம். 


ஞானியாரைப் போற்றாது புத்தேள் உலகு.


ஏன் போற்றாது? இல்லறத்தில் இருப்பவன் எப்படி ஞானியை விட சிறந்தவனாக முடியும்?


இருவருமே புத்தேள் உலகம் போக வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.


ஞானி, ஒரு தனி மனிதனாக, தன் முன்னேற்றத்தை பார்த்துக் கொண்டு போகிறான். 


ஆனால், இல்லறத்தில் இருப்பவனோ, தான், பிள்ளை, மனைவி, மக்கள், சுற்றம், நட்பு, விருந்து என்று எல்லோரையும் அணைத்துக் கொண்டு சிறப்பாக இல்லறம் நடத்தி, இங்கும் புகழ் பெறுகிறான், மேலே சென்று அங்கும் புகழ் பெறுகிறான். 


ஒருவன் சிறப்பாக இல்லறத்தை நடத்தினான் என்றால், அவன் புகழ் இந்த வையம் இருக்கும் வரை நிற்கும்.  அவனுக்கு இங்கும் சிறப்பு, அங்கும் சிறப்பு. 


சொர்க்கம் போக வேண்டுமா, இல்லறத்தை சிறப்பாக நடந்த்துங்கள். அது போதும். 


அது என்ன சிறப்பான இல்லறம் என்றால், இதுவரை நாம் பார்த்த அனைத்து குறள் வழியும் நின்றால் போதும். அதுதான் சிறந்த இலல்றம். 


அறன் , வாழ்க்கைத் துணை நலம், புதல்வர்களைப் பெறுதல், அன்புடைமை, செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, விருந்தோம்பல்....என்று படித்ப் படியாக வளர்ந்து பின் ஒப்புரவு, ஈகை, அண்ட் ஆகி இறுதியில் புகழ் என்பதில் வந்து நிற்கும் இல்லறம். 


சொர்க்கம் போக short-cut ... 




Thursday, November 16, 2023

திருக்குறள் - பொன்றாது நிற்பது

 திருக்குறள் - பொன்றாது நிற்பது 


பெரிய பெரிய அரசர்கள் உலகை கட்டி ஆண்டார்கள். பெரிய அரசியல் தலைவர்கள் உலகே வியக்கும்படி சாதனைகள் செய்தார்கள். அவர்கள் வாழ்ந்த வீடு, அவர்கள் பரம்பரை, அவர்கள் சொத்து, என்று எது இருக்கிறது இப்போது?


இராஜராஜ சோழன் பரம்பரை எங்கே, அவன் கட்டிய அரண்மனைகள் எங்கே?  அசோக சக்ரவர்த்தியின் வாரிசுகள் யார்? 


ஒன்றும் தெரியாது. 


மிஞ்சி நிற்பது அவர்கள் பேரும் புகழும் மட்டும்தான். 


என்றோ வாழ்ந்த அதியமான், சிபிச் சக்கரவர்த்தி, கர்ணன் என்று அவர்கள் புகழ் இன்றும் நிற்கிறது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நிற்கும். 


முந்தைய பாடல்களில் வறியவர்க்கு ஒன்று ஈவதே ஈகை என்றும் பாடும் புலவர்கள் பாடுவது எல்லாம் அவர்கள் புகழைத்தான் என்றும் பார்த்தோம். 


வள்ளுவர் ஒரு படி மேலே போகிறார். 


ஒருவனுக்கு பசிக்கிறது. உணவு அளித்தோம். புகழ் வந்து விடுமா?  


படிப்பு செலவுக்கு, திருமண செலவுக்கு என்று ஒருவன் நம்மிடம் உதவி கேட்கிறான். ஒரு ஐந்து ஆயிரமோ, பத்து ஆயிரமோ கொடுக்கிறோம். புகழ் வந்து விடுமா?  காலகாலத்துக்கும் நம் புகழ் நிற்குமா?


நிற்காது. பின் என்ன செய்தால் நீண்ட புகழ் வரும்?


வள்ளுவர் கூறுகிறார் 


"இணையில்லாத உலகில் சிறந்த புகழ் அல்லது நிலைத்து நிற்பது வேறு எதுவும் இல்லை"


என்று.


பாடல் 


ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்

பொன்றாது நிற்பதொன்று இல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_16.html



(please click the above link to continue reading)


ஒன்றா = ஒப்பிட்டு கூற முடியாத, இணை இல்லாத, 


உலகத்து = உலகில் 


உயர்ந்த புகழ் = சிறந்த புகழ் 


அல்லால் = தவிர 


பொன்றாது = நிலைத்து 


நிற்பதொன்று இல் = நிற்பது வேறு எதுவும் இல்லை 


புகழ் போல நிலைத்து நிற்பது வேறு ஒன்றும் இல்லை என்கிறார். 


சரி, புரிகிறது. ஆனால் இதில் வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார். 


இது சாதாரண விடயம். எல்லோருக்கும் தெரிந்ததுதானே. இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா?


அப்படி அல்ல. 


பரிமேலழகர் இல்லை என்றால், இதில் ஒன்றும் இல்லை என்று மேலே சென்று விடுவோம். 


பரிமேலழகர் சொற்களை இடம் மாற்றிப் போடுகிறார். 


ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்  உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்


என்று. 


இணையில்லாத உலகம் அல்ல, இணையில்லாத புகழ் அல்லது இந்த உலகில் நிலைத்து நிற்பது வேறு ஒன்றும் இல்லை.


இணையில்லா என்ற அடைமொழியை புகழுக்குச் சேர்க்கிறார். உலகத்துக்கு அல்ல. 


சரி, அதனால் என்ன. இணையில்லாத உலகம், இணையில்லாத புகழ். புரிகிறது. 


அதனால் என்ன பெரிய அர்த்த மாற்றம் வந்து விடும்?


இணையில்லாத புகழ் எப்படி வரும்?


நான் ஒருவனுக்கு ஒரு வேளை உணவு அளிக்கிறேன் என்றால். அதே போல் இன்னொருவனும் செய்ய முடியும். அதை விட அதிகமாகக் கூட செய்ய முடியும். ஒரு வேளை என்ன ஒரு வேளை, இரு வேளை, மூன்று வேளை...ஒரு ஆள் என்ன ஒரு ஆள், பத்து பேர், நூறு பேருக்கு அன்னதானம் செய்கிறேன் என்று மற்றவர்கள் ஆரம்பிக்க முடியும். அப்போது, என் புகழ் மங்கிவிடும். 


இணையில்லாத புகழ் எப்போது வரும்? நான் செய்ததை மற்றவன் செய்ய முடியாத போது எனக்கு அந்த புகழ் வரும் அல்லவா?


அது என்ன செயல்?


ஒருவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். அவசரமாக இரத்தம் தேவைப் படுகிறது. நான் இரத்தம் கொடுத்து உயிரை காப்பாற்றுகிறேன். அதை எல்லோராலும் செய்ய முடியாது. 


அப்படி கூட சொல்ல முடியாது. இரத்த தானம் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். 


அப்படி என்றால் அதைவிட சிறந்தது எது?


இங்குதான் பரிமேலழகர் உச்சம் தொடுகிறார். 


யாராலும் கொடுக்க முடியாத ஒன்று உயிர், உடல் உறுப்புகள். 


உயிரைக் கொடுப்பது என்பது நடவாத காரியம். நாட்டுக்காக, குடும்பத்துக்காக ஒருவன் உயிரை தியாகம் செய்கிறான் என்றால், அதுதான் பொன்றாப் புகழ். யாரால் முடியும்?


உடல் உறுப்பு? முடியுமா?  புறாவுக்காக தொடையை அரிந்து கொடுத்தான் சிபிச் சக்ரவர்த்தி. அவனைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. அவன் புகழ் இன்றளவும் நிற்கிறது. 


கண்ணை எடுத்து கொடுத்தான் கண்ணப்பன். அந்த வேடனின் புகழ் இன்றும் நிற்கிறது. 


தன்னிடம் உள்ள மிகச் சிறந்த ஒன்றை ஒருவன் கொடுக்கும் போது, பொன்றா புகழ் பெறுகிறான் என்கிறார் வள்ளுவர். 


வேறு யாராலும் செய்ய முடியாத ஒன்றை செய்யும் போது, நிலைத்த புகழ் வரும்.


தன் உயிரை, உடல் உறுப்புகளை (organ donation ), நேரத்தை, இன்பத்தை தானம் செய்வது இருக்கிறதே, அதுவே நீண்ட புகழைத் தரும். 


ஒரு வார்த்தையை இடம் மாத்திப் போட்டால் எவ்வளவு பெரிய அர்த்தம் வருகிறது. 


எப்படியெல்லாம் எழுதி இருக்கிறார்கள். 


எப்படி எல்லாம் சிந்தித்து அதற்கு உரை எழுதி இருக்கிறார்கள்.


தலை தாழ்த்தி வணங்குவோம். 



Tuesday, November 14, 2023

திருக்குறள் - உரைப்பார் உரைப்பவை எல்லாம்

 திருக்குறள் - உரைப்பார் உரைப்பவை எல்லாம் 


பலர், பல விதங்களில் புகழ் அடைகிறார்கள். கல்வியில், கேள்வியில், விளையாட்டில், நிர்வாகத்தில், வீர தீர செயல்களில், இலக்கியம் படைப்பதில், கவிதை எழுதுவதில், என்று பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். 


அப்படி ஒரு துறையில் திறமையானவர்களை புகழ்ந்தாலும், எல்லா புகழும் ஒன்றையே குறித்து நிற்கிறது என்கிறார் வள்ளுவர். 


அது எது என்றால், வறியவர்க்கு ஒன்று தானமாக கொடுப்பதையே எல்லா புகழும் சுட்டி நிற்கிறது என்கிறார். 


ஒரு நடிகர் இருக்கிறார். அவர் மிக நன்றாக நடிக்கிறார். அவரை புகழ்ந்து பரிசுகள், பட்டங்கள் தருகிறார்கள். அது எப்படி வறியவர்க்கு கொடுப்பதை குறிக்கும் புகழாகும்?  குழப்பமாக இருக்கிறது அல்லவா?


எல்லா புகழும் வறியவர்க்கு கொடுப்பதை பாராட்டும் புகழ் என்றால் சரியாகப் படவில்லையே என்று தோன்றும். 


மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் தோன்றும். 


பாடல் 


உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_14.html


(pl click the above link to continue reading)

\

உரைப்பார் = சொல்லுபவர் 


உரைப்பவை = சொல்லியவை 


எல்லாம் = எல்லாம் 


இரப்பார்கொன்று = இரப்பார்க்கு + ஒன்று = யாசிப்பவர்களுக்கு ஒன்று 


ஈவார்மேல் = கொடுப்பவர்கள் பற்றி 


நிற்கும் புகழ் = நிற்கின்ற புகழ் பற்றியே ஆகும்.


நம் குழப்பம் தீரவில்லை. 


நீங்களும், நானும், சாகித்ய அகடமியும், ஒலிம்பிக் குழுவும் பாராட்டுவதை இங்கே அவர் குறிப்பிடவில்லை. 


"உரைப்பார்"...உலகத்துக்கு ஒன்று சொல்லுபவர்கள் என்று உரை எடுக்கிறார் பரிமேலழகர். நீங்களும், நானும் ஒருவரை பாராட்டுகிறோம் என்றால் அது நமக்கு பிடித்து இருக்கிறது, பாராட்டுகிறோம். நாம் உலகத்துக்கு அதன் மூலம் ஒரு செய்தியை சொல்ல வரவில்லை. மனைவி நன்றாக சமைத்து இருக்கிறாள். அதை பாராட்டினால் அதில் ஒன்றும் உலகத்துக்கு செய்தி இல்லை. 


உரைப்பார் என்றால் உலகத்துக்கு ஒரு நல்ல செய்தி சொல்லும் பெரியவர்கள் என்று கொள்ள வேண்டும். அறிஞர்கள், கவிஞர்கள் சொல்லுவது எல்லாம். 


"உரைப்பவை" அவர்கள் சொல்லுவது எல்லாம்.


உலகில் உள்ள பெரியவர்கள், சான்றோர்கள் சொல்லியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, இரப்பவர்க்கு ஒன்று ஈவார் பற்றிய புகழ் ஒன்றுதான். வேறு எதுவும் இல்லை. 


மற்ற எல்லா புகழும் ஒரு திறமையை, வீரத்தை, காட்டி பெறுவது. அதில் தனி மனிதனுக்கு நன்மை இருக்கிறது. 


வறியவர்க்கு ஒன்று கொடுப்பதில் தீரம், வீரம், எல்லாம் இல்லை. அன்பு, கருணை, மனிதாபிமானம் மட்டுமே இருக்கிறது. அந்த ஈகைக்கு பலம் தேவை இல்லை, பொருள் கூடத் தேவையில்லை, மனதில் அன்பும் கருணையும் இருந்தால் போதும். 


அந்தக் கருணைதான் உலகில் மிகச் சிறந்தது என்கிறார் வள்ளுவர். 


இல்லறத்தின் உச்சம் ஈகையும், அதனால் வரும் புகழும். 


மனைவி மேல் அளவு கடந்த காதலும், பிள்ளைகள் மேல் பேரன்பும், சுற்றமும், நட்பும் தழுவி இல்லறம் நடத்தும் ஒருவன், வறுமையில் வாடி தன்னை நாடி வருபவனுக்கு இல்லை என்று சொல்லாமல் ஏதாவது கொடுப்பான். அவன் அன்பில், முதிர்ச்சி பெற்று இருக்கிறான். இல்லறம் அவனுக்கு அன்பை போதித்து இருக்கிறது. 


அப்படி கொடுக்கவில்லை என்றால், அவன் இல்லறத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். சரியாக நடத்தவில்லை என்று அர்த்தம். 


இல்லறத்தை எப்படி நடத்த வேண்டும் என்று பாடம் சொல்லி தந்துவிட்டு, இப்போது பரீட்சை வைக்கிறார். 


வறியவர்க்கு ஈந்து புகழ் அடைகிறாயா, நீ பாஸ். இல்லை என்றால் பெயில் என்று. 


நமக்கு எவ்வளவு மதிப்பெண் வரும்?




Thursday, November 9, 2023

திருக்குறள் - புகழ் - உயிர்க்கு ஊதியம்

 திருக்குறள் - புகழ் - உயிர்க்கு ஊதியம் 


ஒருவன் நன்றாக படித்து, நான் படித்து விட்டேன் என்று சொன்னால், "அப்படியா, எங்க நாலு கேள்வி கேக்குறேன், பதில் சொல்லு பார்க்கலாம்" என்று தானே உலகம் சொல்லும். 


படித்து, அறிந்து இருந்தாலும், தேர்வு எழுதி, அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, பள்ளியோ, கல்லூரியோ சான்றிதழ் வழங்கினால்தான் உலகம் ஏற்றுக் கொள்ளும். 


இவர் முதல் வகுப்பில் தேர்வு பெற்றார், இவர் இரண்டாம் வகுப்பு என்று மற்றவர் சொல்ல வேண்டும். நமக்கு நாமே சொல்லிக் கொண்டால் உலகம் நம்பாது. 


வாழ்க்கை என்பதும் ஒரு தேர்வுதான். அதில் நாம் தேர்வு பெற்றோமா இல்லையா என்று உலகம் சொல்ல வேண்டும். அந்த உலகம் சொல்வதுதான் "புகழ்".


"அவர் நல்ல மனிதர், ஏழைகளுக்கு உதவி செய்வார், ஒருத்தரை ஒரு வார்த்தை கடிந்து பேச மாட்டார், நல்ல படித்த மனிதர், சிறந்த நடிகர், வள்ளல், " என்றெல்லாம் ஒருவரை உலகம் பாராட்ட வேண்டும். 


அந்த பாராட்டுதல்தான் புகழ் என்பது. 


ஒருவன் இல்லறத்தை செம்மையாக நடத்துகிறான் என்பதற்கு சான்று, அவன் பெறும் புகழ். 


நல்ல மனைவியைப் பெற்று, இல்லற கடமைகளை சரிவர செய்து, விருந்தோம்பி, நடுவுநிலை தவறாமல் இருந்து, செய்நன்றி மறவாமல் இருந்து, இனியவை பேசி, அடக்கமாய் இருந்து, பொறாமை போன்ற குணங்கள் இல்லாமல் இருந்து, ஊருக்கும், தனி மனிதர்களுக்கும் தன்னால் ஆன உதைவிகளை செய்து ஒருவன் சிறப்பான இல்லறம் நடத்தினால், அவனுக்கு நல்ல பேர் கிடைக்கும். 


எனவே, புகழ் என்ற இந்த அதிகாரத்தை இல்லறத்தின் முடிவில் வைத்தார். 


வள்ளுவர் சொன்ன ஒவ்வொன்றையும் சரியான படி செய்து வந்தால், புகழ் தானே வரும். 


வள்ளுவர் கூறுகிறார், 


"வாழ்வின் நோக்கம் என்ன? இந்த வாழ்க்கை வாழ்வதின் பலன் என்ன? எதுக்காக நாம் வாழ்கிறோம். எப்படி வாழ வேண்டும் என்று கேட்டால், மற்றவர்களுக்கு உதவி செய்வதும், புகழோடு வாழ்வதும், இந்த இரண்டைத் தவிர வாழும் உயிர்களுக்கு வேறு ஒரு பயனும் இல்லை"


பாடல் 


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_9.html


(please click the above link to continue reading)



ஈதல் =  வறியவர்களுக்கு உதவுதல் 


இசைபட = அதனால் வரும் புகழோடு 


வாழ்தல் = வாழ்தல் 


அதுவல்லது = அதைத் தவிர 


ஊதியம் = பயன் ஏதும் 


இல்லை உயிர்க்கு = இல்லை இந்த உயிர்களுக்கு 


ஈதல், இசைபட வாழ்தல் என்று இரண்டு விடயங்களைக் கூறி இருக்கிறாரே, உதவி செய்யாமல், வேறு விதத்தில் புகழ் வந்தால் பரவாயில்லையா?


ஒலிம்பிக்கில் மெடல் வாங்கி, நாட்டிலேயே முதல் மாணவனாக தேர்வு பெற்று, சிறந்த நடிகர்/எழுத்தாளர்/பாடகர் என்றெல்லாம் புகழ் அடைந்தால் போதாதா?  என்றால் போதாது. 


காரணம் இலக்கணம். 


ஈதல், இசைபட வாழ்தல் "அது" அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்றார். 


அது என்பது ஒருமை. 


மாறாக, 


ஈதல், இசைபட வாழ்தல் "அவை" அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்று சொல்லி இருந்தால், "அவை" என்பது பன்மை. எனவே ஈதல் அல்லது இசை பட வாழ்தல் என்று பொருள் சொல்லலாம்.


ஆனால் வள்ளுவர் அபப்டிச் சொல்லவில்லை,


அது என்றதால், இங்கே ஒரு செயல் தான். ஈதல் மூலம் வரும் புகழ் தான் வாழ்வின் பயன். வேறு விதத்தில் வரும் புகழ்கள் அல்ல என்று அறிந்து கொள்ள வேண்டும். 


ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம். 


பெரிய நடிகராக இருப்பார். கோடி கோடியாக பணம் சேர்த்து இருப்பார். அவர் நடித்து வெளிவரும் படம் என்றால் கோடிக்கணக்கில் விற்பனை ஆகும். ஊரில் ஒரு வெள்ளம், மக்கள் துன்பப்படுகிறார்கள் என்றால் ஒரு மிக மிக சொற்பமான தொகையை நன்கொடையாகத் தருவார். 


நடிகராக அவர் புகழ் பெற்று இருக்கலாம். 


அது அல்ல முக்கியம் என்பது வள்ளுவர் கருத்து. 


"உயிர்க்கு" என்று பொதுவாகச் சொன்னாலும், இது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். விலங்குகள், தன்னை விட வறுமையில் உள்ள மற்ற விலங்குகளுக்கு உதவி செய்வதில்லை. எனவே, உயிர் என்றது மனித உயிர்கள் என்று கொள்ள வேண்டும் என்கிறார் பரிமேலழகர். 






Tuesday, November 7, 2023

திருக்குறள் - சாவதை விட சிறந்தது

திருக்குறள் - சாவதை விட சிறந்தது 


ஒருவனுக்கு மிகவும் துன்பம் தரக் கூடியது எது என்றால் மரணம் தான். மரணத்தை விட கொடிய துன்பம் எது இருக்க முடியும்? இருக்கின்ற செல்வம், சுற்றம், உறவு, இந்த உலகம், அதி இருந்து கிடைக்கும் அனுபவங்கள் இதை எல்லாம் விடுவது என்றால் எளிதான காரியமா? 


எவ்வளவு வறுமையில் இருந்தாலும், எவ்வளாவு தோல்விகள் வந்தாலும், எவ்வளவு வலி இருந்தாலும், வாழ்க்கை இனிக்கத்தான் செய்கிறது. இவ்வளவு துன்பம் இருக்கிறதே, இருந்து என்ன பலன், உயிரை விடுவோம் என்று எவ்வளவு பேர் நினைப்பார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், அந்த மரணத்தை விட துன்பம் தரக்கூடியது ஒன்று இருக்கிறது. அது என்ன என்றால், நம்மிடம் ஒருவன் வந்து  ஒரு உதவி கேட்டு அதை நாம் கொடுக்க முடியாமல் இருப்பது. அதைப் போல பெரிய துன்பம் எதுவும் இல்லை. அது மரணத்தை விட கொடிய துன்பம் என்கிறார். 


பாடல் 


சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_7.html


(please click the above link to continue reading)


சாதலின் = இறப்பதைவிட 


இன்னாதது = துன்பம் தருவது 


இல்லை = வேறு எதுவும் இல்லை 


இனிததூஉம் = இனிது + அதுவும் = அது கூட இனியதுதான். எப்போது என்றால் 


ஈதல் = கொடுத்தல், உதவுதல் 


இயையாக் கடை = முடியாத போது 


இராமயணத்தில், கூனி எவ்வளவோ சொல்லி கைகேயின் மனதை மாற்றப் பார்க்கிறாள். கைகேயி மனம் மாறவில்லை. 


கடைசியில் ஒன்று சொல்கிறாள், கைகேயி தலைகீழாக மாறி விடுகிறாள். 


"ஏய் கைகேயி, நாளை இராமன் முடி சூடிக் கொள்ளப் போகிறான். அனைத்து செல்வமும் அவனிடம் போய் விடும். உன்னிடம் யாராவது வறியவர்கள் வந்து உதவி கேட்டால் நீ என்ன செய்வாய்? நீ போய் கோசலையிடம் போய் கையேந்தி நிற்பாயா?  அவளிடம் பொருள் பிச்சை வாங்கி வந்து நீ மற்றவர்களுக்கு உதவுவாயா? ஒருவேளை அவள் தரவில்லை என்றால் என்ன செய்வாய்? கோபிப்பாயா? துக்கத்தால் விம்மி உயிரை விடுவாயா? இல்லை உதவி என்று வந்தவர்களுக்கு உதவி செய்யமாட்டேன் என்று மறுத்து திருப்பி அனுப்பி விடுவாயா?"


என்று கேட்கிறாள். 


'தூண்டும் இன்னலும், வறுமையும், தொடர்தரத் துயரால்

ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு, இரு நிதி, அவளை

வேண்டி ஈதியோ? வெள்குதியோ? விம்மல் நோயால்

மாண்டு போதியோ? மறுத்தியோ? எங்ஙனம் வாழ்தி? 


கைகேயி திகைத்துப் போகிறாள். அவளால் அந்த நிலையை சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை. 


என்ன ஆனாலும் சரி, அப்படி ஒரு நிலை எனக்கும் என் மகன் பரதனுக்கும் வரக் கூடாது என்று முடிவு எடுக்கிறாள். பின் நடந்தது உங்களுக்குத் தெரியுமே. 


உதவி செய்ய முடியவில்லை என்றால் சாவது மேல். உயிரை விடுவது இனியது என்று நம்ம்பியது நம் பரம்பரை. 


எந்த நிலையில் இருந்து சிந்தித்து இருக்கிறார்கள் என்று பாருங்கள். 


ஏதோ வள்ளுவர் அறிவுரை சொல்லிவிட்டுப் போகவில்லை. இராமாயணமும் அதையே பேசுகிறது. கர்ணன் மூலம் பாரதமும் அதைப் பேசியது. 


துறவிகளை கொண்டாடியதைப் போல, வள்ளல்களையும் கொண்டாடியது நம் பாரம்பரியம். 


பருந்துக்காக தன் தொடையை அரிந்து கொடுத்தான் சிபிச் சக்கரவர்த்தி என்று இன்றும் கொண்டாடுகிறோம். ஒரு அரசன் நினைத்து இருந்தால் நொடியில் எவ்வளவோ மாமிசம் வாங்கித் தந்திருக்க முடியும். கேட்டவுடன் கொடுக்க வேண்டும். மயிலுக்கு போர்வை தந்தவன், கொடிக்கு தேரைத் தந்தவன் என்று அந்த வள்ளல்களை இன்றும் போற்றுகிறோம். 


ஈந்துவக்கும் இன்பம் அறிந்து வாழ்ந்தவர்கள் நாம். 


இந்தக் குறளோடு, ஈகை என்ற இந்த அதிகாரம் முற்றுப் பெறுகிறது.


அடுத்து....