Thursday, August 27, 2020

தேவாரம் - சுருதி சிர உரையினால்

தேவாரம் - சுருதி சிர உரையினால் 


திரு ஞான சம்பந்தர் பாடிய தேவாரம். சீர்காழி என்ற தலத்தில் பாடியது.

சுரருலகு நரர்கள்பயி றரணிதல முரணழிய வரணமதின்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுய ரரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே.

(click the following link to continue reading) 

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_27.html

படிக்க கொஞ்ச கடினம் தான். சீர் பிரித்தால் எளிதில் விளங்கும்.

சீர் பிரித்த பின்

சுரர் உலகு  நரர்கள் பயில் தரணி தலம் முரண் அழிய  அரண் மதில்
முப்புரம் எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய  பரமன் இடமாம்
வரம் அருள  வரன் முறையில் நிறை கொள் வரு சுருதி சிர உரையினால்
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே.


பொருள்


சுரர் = தேவர்கள். தேவர்கள் அல்லாதவர்கள் அ -சுரர்

உலகு = (வாழும்) உலகு. தேவ லோகம்

நரர்கள் = மனிதர்கள்

பயில் = வாழும்

தரணி தலம் = உலகம் முழுவதும்

முரண் = வலிமை

அழிய = அழிய

அரண் = கோட்டை

மதில்  = சுவர்

முப்புரம் எரிய = மூன்று புரங்களும் எரிய

விரவு = விரைவாக

வகை = வழி செய்த

சர = அம்பு விட்ட

விசை கொள்= செய்யும்

கரம் உடைய = திருக்கரத்தை உடைய

பரமன் இடமாம்  = பரமன் இடத்தில்

வரம் அருள = வரம் வேண்டி

வரன் முறையில் = வரை முறையில்

நிறை கொள் = நிறைந்த

வரு சுருதி = வேதங்கள்

சிர = அதன் உச்சியில், வேதத்தின் அந்தம், வேதாந்தம்

உரையினால்  = உரையினால்

பிரமன் உயர் = உயர்ந்த பிரம்மன்

அரன்  = சிவன்

எழில் கொள் = அழகிய

சரண இணை = சரணம் அடையும் இரண்டு திருப் பாதங்கள்

பரவ = போற்ற

வளர் பிரமபுரமே. = எப்போதும் வளரும் பிரம புரமே (சீர்காழியே )

பிரம்மன் துதித்தால் அது ப்ரம்ம புரம் என்றும்   அழைக்கப்படும்.

சின்ன பாலகன். ஞான சம்பந்தர் பாடியது. நம்மால் வாசிக்கக் கூட முடியவில்லை.





1 comment:

  1. படிக்கக் கடினமான பாடலாக இருக்கிறது என்பதைத் தவிர, இந்தப் பாடலில் என்ன இருக்கிறது?

    படித்துவிட்டு சும்மா எரிச்சலாக வருகிறது.

    ReplyDelete