Tuesday, October 11, 2022

திருக்குறள் - வெஃகுதல் செய்யார்

   

 திருக்குறள் - வெஃகுதல் செய்யார்



வெற்றி பெற்று விட்டால் எல்லாம் என் திறமை, என் சாமர்த்தியம், என் உழைப்பு என்று நினைப்பதும், தோல்வி வந்தால் மற்றவர்கள் செய்த சதி, விதி, நேரம் சரியில்லை என்று பழியை வேறு இடத்தில் போடுவதும் மனித இயல்பு. 



தோல்வி அடையும் போது, எல்லாம் என் முட்டாள்தனம், என் சோம்பேறித்தனம், என் கையாலாகத்தனம் என்று சொல்லக் கேட்டு இருக்கிறோமா? இல்லை. 


மனிதர்கள் நினைக்கிறார்கள் முயற்சி செய்தால் எந்த வெற்றியையும் பெற்று விடலாம் என்று. 


இரண்டாவது, வாழ்கையின் வெற்றி தோல்வி என்பது எவ்வளவு சொத்து சேர்த்தோம் என்பதில் அடங்கி இருக்கிறது என்றும் நினைகிறார்கள். எப்படியாவது நிறைய பொருள் சேர்த்து விட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். 


நேர் வழியில் முடியாவிட்டால், குறுக்கு வழியில். 


பாடல் 



இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


(Please click the above link to continue reading)



இலம்என்று = நம்மிடம் பொருள் இல்லை என்று 


வெஃகுதல் = பிறர் பொருளை தவறான வழியில் அடைய நினைக்கும் செயலை 


செய்யார் = செய்ய மாட்டார்கள் 


புலம்வென்ற = புலன்களை வென்று 


புன்மையில் =  குற்றமற்ற 


காட்சி யவர். = நோக்கு உடையவர்கள் 


பிறன் பொருளை அடைய ஏன் நினைக்கிறார்கள்?


முதலாவது, ஆசை. புலன் இன்பம். கார், வீடு, டிவி என்று மேலும் மேலும் ஆசைப் படுவதால், நேரான வழியில் அவற்றை எல்லாம் அடைய முடியாத போது, பிறன் பொருளை தவறான வழியில் அடைய மனம் நினைக்கிறது. 


இரண்டாவது, பொருள் இல்லாவிட்டால் இன்பம் இல்லை என்ற ஏக்கம், பயம். இருப்பது போதும் என்ற திருப்தி இல்லாமை. 


மூன்றாவது, நமக்கு கிடைத்தது, நம் விதிப் பயன் என்று நினைக்காமல், எப்படியாவது பொருள் ஈட்ட நினைப்பது.  மற்றவனுக்கு கிடைத்தது அவன் விதிப் பயன். நமக்கு கிடைத்தது நம் விதிப் பயன் என்ற எண்ணம் வந்து விட்டால் மனம் பறக்காது. இதைத் தான் "புன்மை இல் காட்சியவர்" என்றார். குற்றமற்ற பார்வை. பொறாமை, பேராசை போன்ற குற்றங்கள் இல்லாத பார்வை. 


ஐயோ, அவனுக்கு அது கிடைத்து விட்டதே, இவனுக்கு இது கிடைத்து விட்டதே என்று அலையாமல் எல்லாம் வினைப் பயன் என்ற இருப்பது. .



வெஃகாமையின் தீமை மட்டும் அல்ல, அதை எப்படி விலக்குவது என்றும் சொல்லித் தருகிறார். 






[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html

]


No comments:

Post a Comment