Showing posts with label Kandar Anupoodhi. Show all posts
Showing posts with label Kandar Anupoodhi. Show all posts

Tuesday, September 20, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 4

   

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 4


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


அப்படி வெளிவர நினைத்து தவிக்கும் உயிர்களுக்கு இரங்கி இறைவன் தன் நிலையில் இருந்து கீழிறங்கி வரும் முதல் ஐந்து நிலைகளான சிவ தத்துவத்தைப் பார்த்தோம். அவையாவன 


நாதம் 

விந்து 

சதாக்கியம் 

ஈஸ்வரம் 

சுத்த வித்தை.


இந்த ஐந்து தத்துவங்களும் சுத்த தத்துவம் என்று அழைக்கப்படும்.  முப்பத்தாறு தத்துவங்களில் ஐந்து பார்த்து விட்டோம். 



மீதி உள்ள 31 தத்துவங்களையும் பற்றி சிந்திப்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


(pl click the above link to continue reading)


இனி உயிர்கள் செயல்படத் தொடங்க வேண்டும். உயிர்கள் செயல்பட என்ன வேண்டும் என்று அறிந்து, அவற்றை இறைவன் உருவாக்குகிறான். 


ஒரு பெரிய வீடு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வீட்டைப் பார்த்து இரசிக்கிரோம். அடடா எவ்வளவு அழகாக இருக்கிறது. எவ்வளவு பெரிய வீடு என்று.


வீட்டினுள் சென்று பார்க்கிறோம். பெரிய முன் அறை, மூன்று படுக்கை அறை, பெரிய சமையல் அறை, மூன்று குளிப்பறை என்று நன்றாக இருக்கிறது. 


சற்று சிந்திப்போம். வீடு என்பது ஒரு பொருள் அல்ல. பல பொருள்களின் தொகுதி. அவ்வளவே. ஒவ்வொன்றாகச் சொல்ல முடியாது என்பதால் எல்லாவற்றையும் சேர்த்து வீடு என்று ஒரு பெயர் வைத்து இருக்கிறோம். .


உண்மையில் அது சிமென்ட், இரும்பு கம்பிகள், மணல், கல், கண்ணாடி, மரம், துணி என்பவற்றின் தொகுதி. எல்லாவற்றையும் பிரித்துப் போட்டால், அவ்வளவு பெரிய வீடு, ஒரு மூலையில் குவிந்து கிடக்கும். 


அதில் இன்னும் உள்ளே போவோம். 


அங்கே உள்ள மேஜை, நாற்காலி எல்லாம் பிரித்துப் போட்டால் மரம் மிஞ்சும். 


படுக்கை, தலையணை, போர்வை, படுதா இவற்றை பிரித்தால் துணியும் நூலும் மிஞ்சும். 


அதை இன்னும் பிரித்தால் நூல், சாயம் மிஞ்சும். 


அதை இன்னும் பிரித்தால் பஞ்சு மிஞ்சும். 


இப்படி உள்ளே போய் கொண்டே இருக்கலாம். 


தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், எந்த பெரிய பொருளும் ஏதோ நுண்ணிய பொருள்களின் தொகுதி என்று. 


மனிதன் என்றால் உறுப்புகள், அதற்கு கீழே தோல், எலும்பு, இதயம் என்று அங்கங்கள், அவற்றிக்கு உள்ளே திசுக்கள், அவற்றிற்கு உள்ளே செல்கள் என்று போய்க் கொண்டே இருக்கும். 


ஏதோ ஒரு நுண்ணிய பொருளில் இருந்து பெரிய பொருள்கள் உருவாகின்றன என்று புரிகிறது அல்லவா?


அந்த நுண்ணிய பொருளை பிரித்தால் உள்ளே இன்னும் போகும். 


இப்படி போய்க் கொண்டே இருந்தால், இறுதியில் ஒரு மிக மிக நுண்ணிய பொருள் ஒன்று இருக்கும். அதை கண்ணால் காண முடியாது, காதால் கேட்க முடியாது. புலன்களுக்கு பிடிபடாது. அவ்வளவு நுண்மை வாய்ந்தது 


அந்த நுண்மையான ஒன்றை மாயை என்று சொல்கிறார்கள். மிக மிக நுண்மையானது. அதை விட நுண்மையான ஒன்று இல்லை என்றால் அது எவ்வளவு நுண்மையானது என்று சிந்திக்க முடியும்.  



அந்த மாயையில் இருந்து இறைவன் உலகைப் படைத்தான். 


இந்த மாயையை இரண்டாகப் பிரிக்கிறார்கள். 


சுத்த மாயை, அசுத்த மாயை என்று. 


அப்படியானால் இரண்டு மாயை உண்டா என்றால் இல்லை. 


என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதா?  


இது இரண்டு உதாரணங்கள் மூலம் விளக்கப்படுகிறது. 


குன்றிமணி என்று ஒரு விதை உண்டு. அது ஒரு புறம் கறுப்பாக இருக்கும், மறு புறம் சிவப்பாக இருக்கும். இந்தப் பக்கம் பார்பவர்கள் அதை கறுப்பு என்பார்கள். மறு புறம் பார்பவர்கள் அது சிவந்த நிறம் உடையது என்பார்கள். அது ஒன்றுதான், இரண்டும் தான். 


நம் காற்று மண்டலம் இருக்கிறதே, ,அது பூமிக்கு அருகில் மாசு உடையதாக இருக்கும். குப்பைகள், புகை, தூசி என்று. மேலே போகப் போக சுத்தமாக இருக்கும். ஒரே மண்டலம் தான் கீழே அசுத்தம், மேலே சுத்தம். அது போல 


ஒரே மாயை தான், இரண்டு பிரிவுகள். 


இந்த அசுத்த மாயையில் இருந்து இறைவன் ஏழு தத்துவங்களை தோற்றுவிக்கிறான். அவை இல்லாமல் இந்த உயிர்கள் செயல் பட முடியாது. உயிர் அசைய முதலில் அவை வேண்டும். 


அவை என்னென்ன என்று நாளை பார்ப்போமா?


[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3


]https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html





Friday, September 16, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 3

  

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 3


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


இனி மேலே செல்வோம், 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


(pl click the above link to continue reading)


இப்படித் தவிக்கும் உயிர்களுக்கு உதவி செய்ய இறைவன் அவற்றின் மேல் கருணை கொண்டு தன் நிலையில் இருந்து இறங்கி வருவான். 


ஏன் இறங்கி வர வேண்டும் ? அவன் நினைத்தால் அந்த உயிர்களை ஒரு நொடியில் பாசத்தில் இருந்து விடுவிக்க முடியாதா என்று என்னைப் போல ஒரு சிற்றறிவு உள்ளவன் கேட்கக் கூடும். .


செய்யலாம் செய்ய முடியும். ஆனால், ஏன் செய்ய வேண்டும்?  அப்படிச் செய்வதாக இருந்தால் இறைவனுக்கு ஒரு விருப்பு, வெறுப்பு இருக்க வேண்டும். ஒரு விருப்பும், வெறுப்பும் இல்லாதவன் எப்படிச் செய்வான். உயிர்கள் வெளிவருவதும், வெளி வரதாதும் அவற்றின் விருப்பம். ஆண்டவனுக்கு ஒரு விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை. 


எனவே, அவன் நேரடியாக செயலில் இறங்கி தனக்கு வேண்டியதை செய்து கொள்வது இல்லை.  மாறாக, உயிர்கள் செயல் படும் ஒரு சூழலை உருவாக்கித் தருவான். என்ன செய்வது என்பது உயிர்களின் பாடு.


ஒரு ஆசிரியர், பாடம் எடுப்பார், சந்தேகம் வந்தால் சொல்லிக் கொடுப்பார். அவரே பரிட்சையும் எழுதினால் என்ன என்று கேட்கக் கூடாது. அவருக்கு விடை தெரியும். அவர் பரீட்சை எழுதினால் மாணவனுக்கு அறிவு முதிர்ச்சி எப்படி வரும்?


எனவே, உயிர்களுக்கு உதவும் பொருட்டு இறைவன் இறங்கி வரும் படிகள் இருக்கின்றன. 


இந்த படிகளை மொத்தம் 36 படிகளாக பிரிக்கிறார்கள். இதை 90, 96 என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள். இப்போதைக்கு 36 என்ன என்பதைப் பார்ப்போம். 


இந்த 36 படிகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். 


சுத்த தத்துவம் 

அசுத்த தத்துவம் 

பிரகிருதி தத்துவம் 


என்று 


முதலில் சுத்த தத்துவத்தை எடுத்துக் கொள்வோம். 


இதில் மொத்தம் 5 படிகள். 


முதல் படி - நாதம். 


நாதம் என்றால் என்ன? இது அறிவின் பூர்ண வடிவம். அறிவே உருவானது. நம்மால் சிந்தித்து உணர முடியாதது. நனவிலி நிலை என்கிறார்கள். முயற்சி செய்யாதே. உன்னால் அதை அறிந்து கொள்ளவே முடியாது. இதை சைவ சித்தாந்தம் பரசிவம் என்பார்கள். நாம் பார்க்கும் வடிவங்கள் அல்ல. வடிவம் அற்ற ஒன்று அது. 


இரண்டாம் படி - விந்து 


விந்து என்றால் என்ன? இது அருள் சக்தி. ஏனைய தத்துவங்கள் பிறக்க வழி செய்யும் படி. இதை கிரியா சக்தி என்றும் சொல்லுவார்கள்.  இதுவும் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது. 


மூன்றாவது படி - சதாக்கியம் அல்லது சதாசிவம் - அறிவும் செயலும் சேரும் இடம். ஏனைய தத்துவங்களை தூண்டும் இடம். சிவ சக்தி இணையும் இடம். 


நான்காவது படி - ஈஸ்வரம் 


ஈஸ்வரம் என்றால் என்ன ?


இந்த நிலையில் இறைவன் உயிர்களில் கலந்து நிற்பான். ஆனால், உயிர்கள் அதை அறிய மாட்டா. இதைத்தான் மறைத்தர் தொழில் என்பார்கள். மறைத்தல் என்றால் பிள்ளைகள் பொருளை மறைத்து வைத்து கண்டுபிடிக்கும் விளையாட்டுப் போல அல்ல. தான் உயிர்களில் கலந்து நிற்பதை உயிர்கள் அறியாமல் மறைப்பது. 


ஐந்தாவது தத்துவம் - சுத்த வித்தை.


சுத்த வித்தை என்றால் என்ன?  படைத்தல், காத்தல், அழிதல் என்ற முத்தொழில் தொடங்கும் இடம். இறை சக்தி முழுமையாக வெளிப்படும் இடம். இந்த இடத்தில் தான் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்று இறை சக்தி வெளிப்படும். இதை அறிந்து கொள்ளாமல், உருத்திரன் உயர்ந்த கடவுள், திருமால் உயர்ந்த கடவுள் என்று சண்டை பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். 


இந்த ஐந்து தத்துவங்களும் சுத்த தத்துவம் என்று அழைக்கப்படும். 


மிக மிக மேலோட்டமாக சொல்லி இருக்கிறேன்.  ஆர்வம் இருப்பவர்கள் தேடிக் கண்டு கொள்க. 


புரிந்து சொல்லவில்லை. தெரிந்ததை சொல்லி இருக்கிறேன். மிக ஆழமான விடயம். 


மொத்தமாக இவை என்ன என்று புரிந்து கொள்வோம். பின் அதற்கு உள்ளே செல்லலாம். 


முப்பத்தாறு தத்துவங்களில் ஐந்து பார்த்து விட்டோம். 


மீதி உள்ள 31 தத்துவங்களையும் பற்றி சிந்திப்போம். 







[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html



]


Sunday, September 11, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 2

 

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 2 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



உலகில் நிரந்தரமானவை, தோற்றமும், அழிவும் இல்லாதவை மூன்று என்று பார்த்தோம்.  (https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html)


அவை பதி,பசு, பாசம் என்பன. 


பதி - இறைவன். 

பசு - உயிர்கள் 

பாசம் - கயிறு 


ஆச்சரியமான விடயம் என்ன என்றால், உயிர்களை இறைவன் படைக்கவில்லை என்பதுதான். இறைவன் என்று உண்டோ, உயிர்களும் அன்றே உண்டு. 


"என்று நீ அன்று நான்" என்பார் தாயுமானவர். 


உயிர்களை இறைவன் படைக்கவில்லை என்றால், பின் யார் படைத்தார்கள் என்றால், யாரும் படைக்கவில்லை என்பதுதான் பதில். அது என்றும் உள்ளது. சீரணிக்க சற்று கடினம்தான். இப்போதைக்கு அதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

(pl click the above link to continue reading)


இந்த மூன்றில் பதியும், பசுவும் அறிவு உள்ளவை. பாசம் அறிவு இல்லாதது. 


இறைவன் - பேரறிவாளன்

உயிர்கள் - சிற்றறிவு உள்ளவை 


இதுவரை விளங்கி விட்டது அல்லவா? 


இனி அடுத்த கட்டம் நோக்கி நகர்வோம். 


இந்த உயிர்கள், நியாமாகப் பார்த்தால், இறைவனை நோக்கித்தான் நகர வேண்டும். அறிவு, அறிவோடு சேர்வதுதானே இயற்கை. 


மாறாக, இந்த உயிர்கள் இறைவனை விடுத்து பாசத்தில் கட்டுண்டு விடுகின்றன. ஆணவம் என்ற பாசத்தில் கட்டுண்டு விடுகின்றன.நான், எனது என்ற ஆணவத்தில் உயிர்கள் சிக்கி விடுகின்றன. 


சிக்கிவிட்டால் அவற்றால் அதில் இருந்து வெளிவர முடிவதில்லை. அறியாமை என்ற இருளில் மூழ்கிப் போய், திக்கு திசை தெரியாமல் மாட்டிக் கொள்கின்றன. சுற்றிலும் இருட்டு. பாதை எது என்று தெரியவில்லை. எந்தப் பக்கம் அடுத்த அடியை எடுத்து வைப்பது என்று தெரியாமல் திகைத்து உறைந்து போய் நிற்கின்றன. 


இப்படி கொஞ்ச காலம் போன பின்னால், இந்த அறியாமை இருளில் இருந்து வெளிவர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. 


இந்த ஆசைதான் மூல கன்மம் (கர்மம்) என்கிறார்கள். 


கர்மா கொள்கையை படிப்பவர்கள், ஒவ்வொரு காரியமும் ஏதோ ஒரு காரணத்தால் தோன்றுகிறது என்றால் முதன் முதலில் தோன்றிய கர்மம் எதனால் தோன்றியது என்று கேட்பார்கள். அதற்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு, மூல கன்மம் என்பது உயிர்களின் ஆசை. அறியாமையில் இருந்து வெளிப்பட்டு அறிவை அடைய வேண்டும் என்ற ஆசை. அதில் இருந்து வந்ததுதான் எல்லாம். அது ஏன் வந்தது என்று பார்த்தோம். 


சரி, உயிர்களுக்கு ஆசை வந்துவிட்டது. ஆசை மட்டும் போதுமா? எப்படி அதை அடைவது?


அவை தானே வெளிவர முடியாது. 


உயிர்களின் துன்பத்தைக் கண்டு இறைவன் அவற்றின் மேல் இரக்கம் கொண்டு உதவி செய்ய நினைக்கறான். 


அவன் அப்படி செய்ய நினைத்த உதவியின் வெளிப்பாடுதான் இந்த 36 தத்துவங்களும். 


நான் முன்பே சொன்னது போல, இது எல்லாம் நான் அறிந்து, புரிந்து, அனுபவத்தில் தெளிந்து சொல்லவில்லை.இது என்ன என்ற ஆர்வத்தில், நான் வாசித்ததை, ,கேட்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான். இவை நான் கண்டு பிடித்ததோ அல்லது நான் புரிந்து கொண்டதோ அல்ல. 



உங்களுக்கு பல சந்தேகங்கள் வரலாம். உங்கள் தேடலை தொடங்குங்கள். அதுதான் உண்மையான ஞானத்தின் அடிப்படை. 


[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


]


Wednesday, September 7, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 1

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 1 


நவீன அறிவியல் எது அனைத்துக்கும் அடிப்படை என்று தேடத் தொடங்கியது. பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனது என்று கண்டு கொண்டது. அணுக்கள் எதனால் ஆனது என்று ஆராய்ந்தபோது அவை ப்ரோடான் , நியுட்ரான், எலெக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனது என்று அறிந்து கொண்டது. சரி, இந்த துகள்கள் எதனால் ஆனது என்று தேடிய போது பாசிட்றான், போசான், quark போன்ற துகள்களால் ஆனது என்று கண்டு கொண்டது. 


இப்போது நமக்கு இருக்கும் கருவிகளின் துணை கொண்டு இந்த அளவுக்குத்தான் போக முடிந்தது. இன்னும் பெரிய கருவிகள் வந்தால், இந்த தேடல் இன்னும் தொடரும். 


அறிவியல் எது அடிப்படை என்று ஆராய்ந்த போது, மெய்யியல் எது நிரந்தரமானது, அழிவற்றது என்று ஆராய முற்பட்டது. 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

(pl click the above link to continue reading)



பொருள்கள், உயிர்கள் எல்லாம் தோன்றுகின்றன, இருக்கின்றன, பின் மறைந்து விடுகின்றன.இப்படி அல்லாமல்,ஏதாவது ஒன்று தோன்றாமலும், அழியாமலும் இருக்குமா என்று கேள்வி கேட்டுக் கொண்டு அதைக் காண புறப்பட்டது. 


தோன்றியது எல்லாம் அழியும். அப்படி என்றால்,ஒன்று அழியாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் அது தோன்றவும் கூடாது. தோற்றம் இருந்தால் அழிவு இருக்கும். தோன்றாமல் எப்போதும் இருப்பது எது என்று ஆராய்ச்சியை தொடங்கியது. 


அப்படி ஆராய்ந்ததில் தோற்றம் இல்லாத பொருள்கள் மூன்று என்று கண்டு சொன்னது. 


அவற்றிற்கு தோற்றம் இல்லாததால், அவற்றிற்கு அழிவும் இல்லை என்று தெரிந்து கொண்டது. 


அவை எவை?


பதி, பசு, பாசம்.


இந்த மூன்றும் ஆதி அற்றவை.அ-ஆதி= அநாதி.


என்றும் உள்ள பொருள்கள் இந்த மூன்றும்.


அது என்ன பதி, பசு, பாசம் ? 


அவற்றிற்கு உள்ள தொடர்பு என்ன? இவை எப்படி செயல் படுகின்றன என்பதை எல்லாம் ஆராய்ந்து மொத்தம் 36 தத்துவங்களில் அவற்றை தொகுத்தார்கள். 


இதில் சிலவற்றை நாம் சோதித்து அறிந்து கொள்ள முடியும்.  சில தத்துவங்கள் சிந்தனைக்கும், சோதனைக்கும் அப்பாற்பட்டவை. 


இவை எல்லாம் சரி என்று நான் சொல்ல வரவில்லை. 


சரியோ, தவறோ, உண்மையோ, பொய்யோ, நம்புவதோ அல்லது நம்பாமல் விடுவதோ உங்கள் விருப்பம். 


அவை என்ன என்று சொல்லி விடுகிறேன்.  பின் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 


மேலும் 


இந்த மெய்யியல் என்பது மிக பரந்துபட்டது. ஒரு சில பதிவுகளில் அனைத்தையும் சொல்லி விட முடியாது. ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் தேடலை தொடரலாம்.


மூன்றாவது, இவற்றைச் சொல்வதன் மூலம், ஏதோ எனக்கு இதெல்லாம் தெரியும் என்று நான் சொல்லவரவில்லை. படித்ததை, கேட்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இவை நான் கண்டு பிடித்தவை அல்ல. எனக்கு இவை முழுவதுமாக புரியவும் இல்லை. 


ஒவ்வொரு தத்துவத்தையும் நீங்கள் வலை தளங்களில் மேலும் விரிவாக ஆராயலாம். படிக்கப் படிக்க விரிந்து கொண்டே போகும். அவ்வளவு ஆழமும், அகலும், நுண்மையும் கொண்டவை. 


இனி இந்த மெய்யியலின் ஒரு பகுதியான 3 6 தத்துவங்களுள் நுழைவோம். 



Sunday, September 4, 2022

கந்தரனுபூதி - மெய்யியல்

        

 கந்தரனுபூதி -  மெய்யியல்


பக்தி இலக்கியம் என்றால் பொதுவாக இறை நம்பிக்கை, இறைவன் எப்படி இருப்பான், அவனுடைய தோற்றம் எப்படி இருக்கும், அவனுடைய ஆற்றல், அவன் செயல்பாடுகள், அவனை துதிப்பது, அவன் பக்தர்களோடு சேர்ந்து இருப்பது என்றுதான் பெரும்பாலும் அறியப் படுகிறது. 

இவற்றால் என்ன பயன்? கடவுள் என்ன மாதிரி உடை உடுப்பார், என்ன ஆயுதம் வைத்து இருப்பார், எதன் மேல் ஏறிப் போவார், அவரின் குடும்ப நிலை இதெல்லாம் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? அவை எல்லாம் முதலில் உண்மையா என்றே கூடத் தெரியாது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


இதைத் தவிர சமயத்தில், பக்தி இலக்கியத்தில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது. 



மெய்யியல் என்ற மிகப் பெரிய பிரிவு இருக்கிறது. 



நாம் இன்று படிக்கும் அறிவியலுக்கு முந்தைய நிலை அது. 



மெய்யியல் என்பது உண்மைகள் கண்டு அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படி விளக்கி , அதை நிரூபணம் செய்வது. 



இறைவன் யார், உயிர்கள் எப்படி வந்தன, இறைவனுக்கும் உயிர்களுக்கும் என்ன சம்பந்தம், இந்த உலகம் எப்படி வந்தது, அது எதனால் ஆனது, அதை யார் உருவாக்கினார்கள், எப்படி உருவாக்கினார்கள், ஏன் இத்தனை கடவுள்கள், இதில் யார் உயர்ந்தவர், வாழ்வின் நோக்கம் என்ன, அறிவு என்றால் என்ன, நாம் எப்படி சிந்திக்கிறோம், நான் என்றால் என்ன, என்பது பற்றி மிக மிக ஆழமாக விவரிக்கும் இயல், மெய்யியல்.



(Pl click the above link to continue reading) 





மெய்யியலின் வெளிப்பாடு தத்துவங்கள் எனப்படும். தத்துவங்கள்  எல்லோருக்கும் பொதுவானவை. எல்லா காலத்துக்கும் பொதுவானது. 


நம் பக்தி இலக்கியத்தின் அடிப்படை இந்த மெய்யியல். மெய்யியலைப் படித்தால் அதன் வெளிப்பாடு நம் பக்தி இலக்கியத்தில் இருப்பதைக் காணலாம். 


பாவம், புண்ணியம், மறு பிறவி, வீடு பேறு, முக்தி என்பதெல்லாம் இந்த மெய்யியலில் இருந்து வருபவை. 


சரி, அதற்கும், கந்தரனுபூதிக்கும் என்ன சம்பந்தம்? 


இருக்கிறதே. 


அடுத்த பாடலில், அருணகிரிநாதர் போகிற போக்கில் இரண்டு வார்த்தைகளை சொல்லி விட்டுப் போய் விட்டார். அது புரிய வேண்டும் என்றால், அடிப்படை மெய்யியல் தெரிந்து கொள்ள வேண்டும். 


இனி வரும் பாடல்களிலும் இந்த மெய்யியல் தத்துவங்கள் அடிக்கடி வரும். 


எனவே, இந்த இடத்தில் நிறுத்தி அதைப் புரிந்து கொள்வோம். 


மொத்தம் 36 தத்துவங்கள் இருக்கின்றன. 


எனக்கு என்ன சங்கடம் என்றால், இதை சொல்ல நினைத்தால் மிக நீண்டு விடுமோ என்ற பயம். யாரும் படிக்க மாட்டார்களோ என்ற  ஐயம் உண்டு. 


சும்மா, அப்படியே மேலோட்டமாக சொல்லுக்கு அர்த்தம் சொல்லிவிட்டுப் போய் விடலாமா என்றும் தோன்றுகிறது. 


இன்னொரு பக்கம், மெய்யியல் பற்றி ஒரு முன்னுரை தந்தால் ஆர்வம் உள்ளவர்கள் மேலும் தேடி படித்து பயன் பெறுவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. 


என்ன செய்யலாம்?



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


)


 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


4. வளை பட்ட கை - பாகம் 1, 2, & 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_24.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/3.html



)


Monday, August 29, 2022

கந்தரனுபூதி - வளை பட்ட கை - பாகம் 3

       

 கந்தரனுபூதி -  வளை பட்ட கை - பாகம் 3


பாடல் 


வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,

தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/3.html


(Pl click the above link to continue reading) 


வளைபட்ட கைம் = வளையல் அணிந்த கைகள் 


மாதொடு = கொண்ட பெண்கள் 


மக்கள் = மக்கள் 


எனும் = என்ற 


தளைபட்டு  = விலங்கில் அகப்பட்டு 


அழியத் = அழிவது 


தகுமோ? தகுமோ? = சரியா, சரியா ?


கிளைபட்டு எழு = கிளை கிளையாக கிளம்பும் 


சூர் உரமும் = சூர பத்மனின் உறுதியும் 


கிரியும், = (மாயா) மலையும் 


தொளைபட்டு = துளைத்து 


உருவத் = உருவிக் கொண்டு வெளியில் செல்லும் 


தொடு வேலவனே. = வேலைத் தொடுத்தவனே 


அதாவது மனைவி மக்கள் என்ற பந்தத்தில் அகப்பட்டு அழிவது சரியா என்று முருகனைக் கேட்கிறார். 


இந்தப் பாடலில் உள்ள "தளைபட்டு அழிய" என்ற வார்த்தைகளை எடுத்துக் கொள்வோம். 


தளை படுதல், அழிதல் என்று இரண்டு இருக்கிறது. 


பெரிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், தலைவர்கள் போன்றோரை சிறையில் அடைத்தால் அவர்கள் என்ன செய்வார்கள். 


சிறையில் இருந்து கொண்டு படிப்பார்கள், எழுதுவார்கள். எத்தனையோ பெரிய பெரிய புத்தகங்கள், சிந்தனைகள் சிறைச் சாலையில் பிறந்ததுதான். 


சிறை என்று நினைத்தால், அது சிறை. .


எழுதக் கிடைத்த வாய்ப்பு என்று நினைத்தால், அது வாய்ப்பு. 


நான்கு சுவர்களும், சில பல கம்பிகளும், சில காவல்காரர்களும் சிறையை உண்டாக்கி விடாது. 


வீட்டிற்குள் இருந்து கொண்டே சிறையில் இருப்பது போல தனிமையில் வாடுபவர்கள் பலர்.


குடும்பம் சிறை அல்ல. அது ஆன்மீக வளர்சிக்கு ஒரு படிக்கல். அது புரியாவிட்டால் அது சிறைதான்.


எப்படி என்று பார்ப்போம். 


ஒரு சிறுவன் இருக்கிறான். வீட்டில் அம்மா ஏதோ பலகாரம் செய்கிறாள்.  அவனுக்கு அது பிடிக்கும். எடுத்து உண்கிறான். தம்பி தங்கைகளுக்கு வேண்டுமே என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. எல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைக்கிறான். 


சிறு பிள்ளை அப்படித்தான் நினைக்கும். 


வளர்ந்து பெரியவன் ஆகிறான். திருமணம் ஆகிறது. 


அதே பலகாரம் ஒரு உணவு விடுதியில் சாப்பிடுகிறான். "நல்லா இருக்கே...அவளுக்கு கொஞ்சம் வாங்கிக் கொண்டு போவோம்" என்று நினைக்கிறான். 


தன் மேல் மட்டும் இருந்த அன்பு, சற்று விரிந்து மனைவி மேலும் செல்கிறது. அவளுக்கு இந்த சேலை நன்றாக இருக்கும், அவளுக்கு இந்த உணவு பிடிக்கும் என்று அவளைப் பற்றி நினைக்கிறான். 


பின் சிறிது நாளில் பிள்ளை வருகிறது. 


பிள்ளை வளர்கிறது. 


அதே பலகாரம். ஒரே ஒரு துண்டுதான் இருக்கிறது. பிள்ளை ஓடி வருகிறான். "இங்க வாடா...இந்தா இதைச் சாப்பிட்டு பாரு" என்று தனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று பிள்ளைக்குக் கொடுக்கிறான். பிள்ளையின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியைக் கண்டு அவன் மகிழ்கிறான். 


அன்பு இன்னும் விரிகிறது. 


மனைவி, பிள்ளை, பேரப் பிள்ளை என்று அன்பு விரிந்து கொண்டே போகும். ஒரு காலகட்டத்தில், எந்தப் பிள்ளையைப் பார்த்தாலும் தன் பிள்ளையை பார்ப்பது போலவே இருக்கும். எந்த சின்னப் பிள்ளையைப் பார்த்தாலும் தன் பேரப் பிள்ளையை பார்ப்பது போல இருக்கும்.  தெருவில் ஒரு பிள்ளை கீழே விழுந்துவிட்டால் தன் பிள்ளை விழுந்தது போல ஒரு பதற்றம் வரும். 


அன்பு மேலும் விரிந்து குடும்பத்தைத் தாண்டி சமுதாயம் வரையில் பரவும். 


தனக்கு என்று இருந்ததை மனைவிக்கு, பிள்ளைக்கு, பேரப் பிள்ளைக்கு, மற்ற பிள்ளைகளுக்கு என்று கொடுக்கத் தோன்றும். அதில் இன்பமும் இருக்கும். 


துறவு என்றால் வேறு என்ன? துறப்பதில் இன்பம் காண முடியும். 


மனைவி மக்கள் மேல் அன்பு செலுத்தத் தொடங்கினால் அது மேலும் மேலும் விரிந்து துறவு, வீடு பேறு, இறைவன் வரை கொண்டு சேர்க்கும். 


அன்பு இல்லாவிட்டால் அது தளை தான். விலங்குதான். சுமைதான். 


இந்த மனைவி மக்கள் என்பது எப்போது தளை ஆகும்? அன்பு இல்லாவிட்டால். அன்பு இல்லாவிட்டால் அருள் பிறக்காது. அருள் இல்லாவிட்ட்டால் துறவு நிகழாது. பற்று விடாவிட்டால் இறை அனுபவம் நிகழாது. 


இப்படியே நான் கிடந்து அழியத் தகுமோ என்று அருணகிரிநாதர் கேட்பது, அன்பில்லாமல் கிடந்து அழிவது சரியா என்று கேட்கிறார். 


தளைதான். ஆனால், அதனால் அழிய வேண்டியது இல்லை. அந்த அன்பு பெருக அவனருள் வேண்டும் என்று முருகனை வேண்டுகிறார். 



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


)


 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


4. வளை பட்ட கை - பாகம் 1 & 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_24.html


)


Wednesday, August 24, 2022

கந்தரனுபூதி - வளை பட்ட கை - பாகம் 2

      

 கந்தரனுபூதி -  வளை பட்ட கை - பாகம் 2 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html

 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


4. வளை பட்ட கை - 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html





)


பாடல் 


வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,

தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_24.html


(Pl click the above link to continue reading) 


வளைபட்ட கைம் = வளையல் அணிந்த கைகள் 


மாதொடு = கொண்ட பெண்கள் 


மக்கள் = மக்கள் 


எனும் = என்ற 


தளைபட்டு  = விலங்கில் அகப்பட்டு 


அழியத் = அழிவது 


தகுமோ? தகுமோ? = சரியா, சரியா ?


கிளைபட்டு எழு = கிளை கிளையாக கிளம்பும் 


சூர் உரமும் = சூர பத்மனின் உறுதியும் 


கிரியும், = (மாயா) மலையும் 


தொளைபட்டு = துளைத்து 


உருவத் = உருவிக் கொண்டு வெளியில் செல்லும் 


தொடு வேலவனே. = வேலைத் தொடுத்தவனே 


அதாவது மனைவி மக்கள் என்ற பந்தத்தில் அகப்பட்டு அழிவது சரியா என்று முருகனைக் கேட்கிறார். 


நான் வாசித்தவரை, என் சிற்றறிவுக்கு எட்டிய வரை, உரை எழுதிய பெரியவர்கள் எல்லோரும் மேலே சொன்ன கருத்தை ஒட்டித்தான் எழுதி இருக்கிறார்கள். வேற்று கருத்துகள் இருப்பின் வாசகர்கள் பகிர்ந்து கொள்ளலாம். 


அருணகிரிநாதர் அனுபூதி பெற்ற மகான். 


மனைவி மற்றும் மக்களை ஒரு தளை (விலங்கு) என்று  சொல்லுவாரா? அப்படி பொருள் கொண்டால் என்ன செய்ய வேண்டும் ?ஒன்று திருமணம் செய்து கொள்ளக் கூடாது அல்லது திருமணம் ஏற்கனவே செய்திருந்தால் அதை விட்டு தப்பிக்க வேண்டும். 


திருமணம் ஆன ஆண்கள் எல்லோரும் அதை பின் பற்ற நினைத்தால் என்ன ஆகும்? 


அருணகிரியார் அப்படிச் சொல்லி இருப்பாரா? அதற்கு வேறு அர்த்தம் இருக்குமா என்று சிந்தித்தேன். 


முதலாவது, வளை பட்ட கை மாதொடு மக்கள் என்பது ஒரு ஆணின் பார்வையில் சொல்லப் பட்டது. அதையே ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து பார்த்தால் "கழல் பட்ட காலொடு மக்கள்" என்று சொல்லலாம். பெண்கள் தங்கள் கணவன்மாரை பிள்ளைகளை தளையாக நினைக்கலாம். அப்படி நினைத்து எல்லா பெண்களும் சன்யாசிகளாகி விட்டால் என்ன செய்வது? 


இரண்டாவது, பெண்கள் வேலைக்குப் போவது, பொருள் ஈட்டுவது என்பதெல்லாம் ஒரு நூற்றாண்டு கால சங்கதி. அதற்கு முன்னால் பெரும்பாலும் பெண்கள் வேலைக்குப் போவதில்லை. எனவே, அவர்கள் ஏதோ பாரம் போல ஒரு சித்திரம் தீட்டப் பட்டு இருக்கிறது. ஆண் தான் உழைக்கிறான், கஷ்டப்படுகிறான், பெண் சுகமாக வீட்டில் இருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்ற ஒரு தோற்றம் உருவாகிவிட்டது.   


அது சரி அல்ல. 


பெண் வேலைக்குப் போகவில்லை, யுத்தங்களில் ஈடு படவில்லை என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அவர்களின் இழப்பு மிக அதிகமானது. காதோரம் முதன் முதலில் ஒரு நரை முடி தோன்றியவுடன் பதறாத ஆண்கள் யார்? ஒரு முடிதான். அதை வெட்டி தூரப் போட்டுவிட்டாலும் மனம் கிடந்து குழம்பியதா இல்லையா?  பின் வெட்டி முடிக்க முடியவில்லை என்றால் சாயம் பூசுவது. தலை முடி கொட்டி வழுக்கை விழும் போது எவ்வளவு சங்கடம் வருகிறது. 


அதுவும் ஐம்பது வயதுக்கு மேல். 


இருபது வயதில் இளநரை வந்த வாலிபனைக் கேளுங்கள். வாழ்வே முடிந்துவிட்டது என்று சொல்லுவான். 


ஆனால், பெண்கள், மிக இளம் வயதில், பிள்ளை பெறும் பொழுது உடலின் கட்டுக் கோப்பை, இளமையை எவ்வளவு இழக்கிறார்கள். உடம்பில் அத்தனை பிடிமானங்களும் தளரும். தோல் தன் தன்மையை இழக்கும். இடுப்பு எலும்பு பிடி தளரும். மார்பகங்கள் கட்டு குலையும். 


ஒரு நரை முடிக்கே அந்தப் பதற்றம் என்றால், பெண்ணின் இழப்பை என்னென்று சொல்லுவது? சரி, ஒரு குழந்தையோடு முடியுமா என்றால் இல்லை. குடும்பக் கட்டுப்பாடு எல்லாம் இப்போதுதானே. காலம் காலமாக பிள்ளை பெற்றுக் கொண்டே இருந்தார்கள். எவ்வளவு இழக்க வேண்டி இருந்திருக்கும்? 


பிள்ளைகள் ஒரு தளை (விலங்கு) என்று சொல்வதானால் ஆண்களை விட பெண்கள்தான் அதை சொல்ல அருகதை உள்ளவர்கள். 


ஒரு புறம் பிள்ளைகளை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். இன்னொரு புறம் ஆணின் நாட்டம் அவள் பால் குறைய அவளுக்கு மன அழுத்தம் மேலும் அதிகமாகும். 


படிக்க முடியாது. 

வேலை பார்த்து சம்பாதிக்க முடியாது.

சாதித்து பேர் வாங்க முடியாது.

உடலை பேணி பாதுக்காக முடியாது.

செய்த வேலையையே வாழ்நாள் பூராவும் செய்து கொண்டிருக்க வேண்டும்



அவ்வளவு தியாகம் செய்யும் பெண்களை "வளை பட்ட கை மாதொடு மக்கள் எனும் தளை " என்று சொல்லுவது சரிதானா?


எப்படிப் பார்த்தாலும், அது சரியாக வரவில்லை. பின் அருணகிரியார் என்னதான் சொல்லி இருப்பார்?






இன்றைய பாடல் சற்று சிக்கலான பாடல். 


"மனைவி மக்கள் என்ற தளையில் (கை விலங்கு) பட்டு நான் அழிவது சரியா சரியா "


என்று அருணகிரிநாதர் கேட்கிறார். 


அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்ற பெரியவர்கள் பெண்களைப் பற்றி மிகக் கடுமையாக பாடியிருக்கிறார்கள். பெண்கள் ஏதோ பேய், பிசாசு போலவும், பிடித்தால் விடாது, மோக வலை, என்றெல்லம் பயமுறுத்தி இருக்கிறார்கள். 


எனக்கு இதில் மிக நீண்ட நாட்களாக ஒரு சங்கடம் உண்டு. 



பெண் என்பவள் மோசமானவளா? ஒரு ஆணின் ஆன்மீக முன்னேறத்திற்கு அவள் ஒரு தடையா?  அப்படி என்றால் பெண்ணின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒரு ஆண் தடையா? அப்படி யாரும் சொல்லி இருப்பதாகத் தெரியவில்லை. 


சரி, பெண் ஆன்மிக முன்னேறத்திற்கு ஒரு தடை என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். எந்தப் பெண்ணும் ஒரு ஆணை வலுக் கட்டாயாமாக திருமணம் செய்து கொள்வதில்லை. விலை மகளிர் கூட அவர்களே வலியச் சென்று எந்த ஆணையும் மயக்குவது இல்லை. ஆண்களே போய் அவர்கள் வலையில் விழுகிறார்கள்.  இன்பம் அனுபவிக்கிறார்கள்.பின் அந்தப் பெண்களை குறை கூறுகிறார்கள். இது எப்படிச் சரியாகும் ?


இன்னும் ஒரு ப் படி மேலே போவோம். பெண் என்பவள் ஆணை சம்சார பந்தத்துக்குள் இழுப்பவள் என்று வைத்துக் கொண்டால், பெண்ணை தவிர்த்து விட முடியுமா? தவிர்த்து விட்டால் உலகம் இயங்குவது எப்படி ? எல்லா ஆண்களும் நான் பட்டினத்தார், அருணகிரிநாதர் சொன்னபடி நடக்கப் போகிறேன். பெண் என்பவள் நம்மை இந்த பிறவிப் பெருங்கடலுள் அழுத்தும் ஒரு சக்தி. அதில் இருந்து விட பட வேண்டும் என்று ஓடி விட்டால், இந்த உலகம் நின்று விடாதா? நானும் நீங்களும் பிறப்பது எப்படி? வினைகள் தீர்வது எப்படி? 


சரி, பெண்ணாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்ளலாம். பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களையும் சேர்த்து தளை , விலங்கு என்று எப்படிச் சொல்வது? 


பெண்டாட்டி பிள்ளை வேண்டாம் என்றால், இல்லறமே கூடாது என்று ஆகி விடும். 


இல்லறமல்லது நல்லறம் அன்று சொன்னது தவறா? 


மாதொரு பாகனாய் ஈசன் நின்றது தவறா? 


"பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே" என்ற தேவாரம் பிழையா? 



என் தாயும், தாரமும், தமக்கையும், மகளும் பெண். அவர்கள் எல்லோரும் மோசமானவர்களா? 


பெண் என்பவள் எவ்வளவு இனிமையானவள். 


பத்து மாதம் சுமந்து பெறுகிறாள்.


பாலூட்டி, சீராட்டி வளர்கிறாள். 


மனைவியாக எவ்வளவு இன்பம். ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் இவளைப் போல வேறு ஒன்று இல்லை என்று வள்ளுவர் ஜொள்ளு விட வைக்கிறார். 


மகளாக, எவ்வளவு இன்பம். பெண் பிள்ளையை பெற்றவர்களுக்குத் தான் தெரியும் அந்த சுகம். 


தமக்கையாக. 


நண்பியாக. 


ஒரு ஆணின் எல்லா காலத்திலும் பின்னி பிணைந்து இருக்கும் பெண்ணை எப்படி வெறுத்து ஒதுக்க முடியும்? 


அப்படியே ஒதுக்கினாலும் அது செய்நன்றி மறந்த குற்றமாகாதா? 


ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே. எந்த வழியில் செல்வது?


ஒன்று அருணகிரிநாதர் சொல்வது சரி என்று ஏற்றுக் கொண்டு, பெண்கள் வலையில் விழாமல் அல்லது விழுந்து விட்டால் தப்பிவிட முயற்சிக்கலாம். 


அல்லது, அவர் சொல்வது சரி அல்ல என்று மேலே போய் விடலாம். 


எது சரி? அல்லது இதற்கு வேறு விளக்கம் ஏதாவது இருக்குமா?  


சிந்திக்க வேண்டிய விடயம் தானே?


சிந்திப்போம்.....

Tuesday, August 23, 2022

கந்தரனுபூதி - வளை பட்ட கை

     

 கந்தரனுபூதி -  வளை பட்ட கை 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html

 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html



)



வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,

தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.



இன்றைய பாடல் சற்று சிக்கலான பாடல். 


"மனைவி மக்கள் என்ற தளையில் (கை விலங்கு) பட்டு நான் அழிவது சரியா சரியா "


என்று அருணகிரிநாதர் கேட்கிறார். 


அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்ற பெரியவர்கள் பெண்களைப் பற்றி மிகக் கடுமையாக பாடியிருக்கிறார்கள். பெண்கள் ஏதோ பேய், பிசாசு போலவும், பிடித்தால் விடாது, மோக வலை, என்றெல்லம் பயமுறுத்தி இருக்கிறார்கள். 


எனக்கு இதில் மிக நீண்ட நாட்களாக ஒரு சங்கடம் உண்டு. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html


(Pl click the above link to continue reading) 



பெண் என்பவள் மோசமானவளா? ஒரு ஆணின் ஆன்மீக முன்னேறத்திற்கு அவள் ஒரு தடையா?  அப்படி என்றால் பெண்ணின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒரு ஆண் தடையா? அப்படி யாரும் சொல்லி இருப்பதாகத் தெரியவில்லை. 


சரி, பெண் ஆன்மிக முன்னேறத்திற்கு ஒரு தடை என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். எந்தப் பெண்ணும் ஒரு ஆணை வலுக் கட்டாயாமாக திருமணம் செய்து கொள்வதில்லை. விலை மகளிர் கூட அவர்களே வலியச் சென்று எந்த ஆணையும் மயக்குவது இல்லை. ஆண்களே போய் அவர்கள் வலையில் விழுகிறார்கள்.  இன்பம் அனுபவிக்கிறார்கள்.பின் அந்தப் பெண்களை குறை கூறுகிறார்கள். இது எப்படிச் சரியாகும் ?


இன்னும் ஒரு ப் படி மேலே போவோம். பெண் என்பவள் ஆணை சம்சார பந்தத்துக்குள் இழுப்பவள் என்று வைத்துக் கொண்டால், பெண்ணை தவிர்த்து விட முடியுமா? தவிர்த்து விட்டால் உலகம் இயங்குவது எப்படி ? எல்லா ஆண்களும் நான் பட்டினத்தார், அருணகிரிநாதர் சொன்னபடி நடக்கப் போகிறேன். பெண் என்பவள் நம்மை இந்த பிறவிப் பெருங்கடலுள் அழுத்தும் ஒரு சக்தி. அதில் இருந்து விட பட வேண்டும் என்று ஓடி விட்டால், இந்த உலகம் நின்று விடாதா? நானும் நீங்களும் பிறப்பது எப்படி? வினைகள் தீர்வது எப்படி? 


சரி, பெண்ணாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்ளலாம். பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களையும் சேர்த்து தளை , விலங்கு என்று எப்படிச் சொல்வது? 


பெண்டாட்டி பிள்ளை வேண்டாம் என்றால், இல்லறமே கூடாது என்று ஆகி விடும். 


இல்லறமல்லது நல்லறம் அன்று சொன்னது தவறா? 


மாதொரு பாகனாய் ஈசன் நின்றது தவறா? 


"பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே" என்ற தேவாரம் பிழையா? 



என் தாயும், தாரமும், தமக்கையும், மகளும் பெண். அவர்கள் எல்லோரும் மோசமானவர்களா? 


பெண் என்பவள் எவ்வளவு இனிமையானவள். 


பத்து மாதம் சுமந்து பெறுகிறாள்.


பாலூட்டி, சீராட்டி வளர்கிறாள். 


மனைவியாக எவ்வளவு இன்பம். ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் இவளைப் போல வேறு ஒன்று இல்லை என்று வள்ளுவர் ஜொள்ளு விட வைக்கிறார். 


மகளாக, எவ்வளவு இன்பம். பெண் பிள்ளையை பெற்றவர்களுக்குத் தான் தெரியும் அந்த சுகம். 


தமக்கையாக. 


நண்பியாக. 


ஒரு ஆணின் எல்லா காலத்திலும் பின்னி பிணைந்து இருக்கும் பெண்ணை எப்படி வெறுத்து ஒதுக்க முடியும்? 


அப்படியே ஒதுக்கினாலும் அது செய்நன்றி மறந்த குற்றமாகாதா? 


ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே. எந்த வழியில் செல்வது?


ஒன்று அருணகிரிநாதர் சொல்வது சரி என்று ஏற்றுக் கொண்டு, பெண்கள் வலையில் விழாமல் அல்லது விழுந்து விட்டால் தப்பிவிட முயற்சிக்கலாம். 


அல்லது, அவர் சொல்வது சரி அல்ல என்று மேலே போய் விடலாம். 


எது சரி? அல்லது இதற்கு வேறு விளக்கம் ஏதாவது இருக்குமா?  


சிந்திக்க வேண்டிய விடயம் தானே?


சிந்திப்போம்.....

Wednesday, August 17, 2022

கந்தரனுபூதி - எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 2

    

 கந்தரனுபூதி -  எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 2


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html




)


எது நிரந்தரமானது, எது அடிப்படையானது எதில் இருந்து இந்த உலகம் தோன்றியது என்ற கேள்விகளுக்கு இங்கு விடை சொல்கிறார் அருணகிரிநாதர். 


இது தான் என்று விடை சொல்லிவிடலாம். இதைத் தவிர வேறு விடைகளும் இருக்கிறதா? இது பற்றி மற்றவர்கள் சிந்தித்து இருக்கிறார்களா? அவர்கள் சொன்ன முடிவு என்ன? என்பதையும் இங்கே கூறுகிறார்.


சமயவாதிகள் பலரைக் ஏதாவது கேட்டால் "அது எல்லாம் ஒரு நம்பிக்கைதான்...அதை எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது...அதெல்லாம் உனக்குப் புரியாது" என்று சொல்லிவிடுவார்கள். 


ஆனால், இந்து சமயத்தை உற்று நோக்கினால் புரியும். இந்த சமயம் முழுவதுமே கேள்வி கேட்பதுதான். தேடல்தான். 


கீதையை கண்ணனே சொல்கிறான். இருந்தும் விடாமல் அர்ஜுனன் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு இடத்தில் கூட கண்ணன் "நான் சொல்கிறேன்...வாயைக் மூடிக் கொண்டு கேள்" என்று சொல்லவில்லை. கடைசி அத்யாயம் வரை கேள்வி தொடர்கிறது. 


உபநிடதங்களும் அப்படியே. குருவின் அருகில் இருந்து கேள்வி கேட்டு தெளிவு பெறுவது. கேள்வி கேட்காமல், கண் மூடித்தனமாக நம்ப வேண்டும் என்று இந்து சமயம் ஒரு இடத்திலும் கூறவில்லை.


இந்தப் பாடலில் எத்தனை கேள்விகள் என்று பார்ப்போம். 


பாடல் 


வானோ? புனல் பார் கனல் மாருதமோ?

ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?

யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்

தானோ? பொருளாவது சண்முகனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


(Pl click the above link to continue reading) 


ஏழு கேள்விகள் கேட்கிறார் அருணகிரியார். 


நாலு வரிக்குள் ஏழு கேள்விகள். கேள்வி கேட்காமல் "நம்பிக்கை நம்பிக்கை" என்று சொல்பவர்கள் கேள்வி கேட்கப் பழக வேண்டும். கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பழக வேண்டும். 


எது பொருள் அதாவது நிரந்தரமான பொருள் எது என்ற கேள்வியை எழுப்புகிறார் அவர்.


இதுவா, அதுவா என்று அவரே சந்தேகத்தை எழுப்புகிறார். 


வானோ?  = வானமா? இந்த ஆகயமா? 


புனல் = நீரா ?


பார் = நிலமா? 


கனல் = நெருப்பா? 


மாருதமோ? = காற்றா? 


ஞானோ தயமோ? = ஞானம் உதயம் ஆன இடமா? 


நவில் நான் மறையோ? = பேசப்படும் நான்கு வேதங்களா? 


யானோ? = நானா? 


மனமோ? = என் மனமா ?


எனை ஆண்ட இடம் தானோ?  = எனை ஆண்ட இடம் தானோ? 


பொருளாவது சண்முகனே = ((நிரந்தர) பொருளாவது சண்முகனே. 


முருகா, நீயே சொல்.


இந்த பஞ்ச பூதங்களா?  வேதங்களா? ஞானமா? நானா? என் மனமா? என்னை ஆட்கொண்ட இடமா? எது பொருள் ? சொல் முருகா என்று முருகனை கேள்வி கேட்கிறார். 


சரி, அவர் கேள்வி கேட்டார். முருகன் பதில் சொன்னானா? என்ன பதில் என்று கேட்டால், இந்தப் பாட்டிலேயே அதையும் சொல்லி விட்டார் அருணகிரியார். 


இதில் எத்தனை தத்துவங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம். 


"வானோ" - வானமா? என்று கேட்கிறார்.  சூனியத்துவம் என்று ஒரு தத்துவம் உண்டு. அந்தத் தத்துவத்தின் படி இந்த உலகிற்கு ஆதாரம் இந்த வெளிதான். எல்லாம் அதில் தோன்றி அதிலே முடிவடைத்து விடும் என்பது இந்த தத்துவத்தின் கொள்கை. இந்த பிரபஞ்சம் முழுவதும், எண்ணில் அடங்கா சூரியன்கள், சந்திரன்கள், கோள்கள், விண்மீன்கள், பால்வெளி, எல்லாம் இந்த சூன்யத்தில் இருந்து தோன்றி, அதில் ஒடுங்கும், எனவே அதுதான் நிரந்தரமானது என்று கூறும் தத்துவம். அப்படியானால் அதுதான் உண்மையா?   அல்லது...


"புனல் பார் கனல் மாருதமோ?


ஏனைய பஞ்ச பூதங்கள்தான் அடிப்படையா? சில சமய தத்துவங்கள் இந்த பிரபஞ்சம் நீரில் தொடங்கி நீரில் முடியும் என்று கூறும். ஊழிக் காலத்தில் இந்த உலகம் முழுவதும் நீரால் சூழப்படும், எங்கள் இறைவன் ஆல் இலை மேல் மிதந்து வருவான் என்று சில சமய பிரிவுகள் கூறும். 


வேறு சில பிரிவுகள், இந்த உலகம் நெருப்பில் தோன்றி , நெருப்பில் மறையும். ஊழிப் பெரு நெருப்பு இந்த உலகம் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கி விடும். அந்த சாம்பலை எங்கள் இறைவர் உடல் முழுவதும் பூசிக் கொள்வார். அந்த நெருப்பு வடிவானவர் எங்கள் கடவுள் என்று சில பிரிவுகள் கூறும். ஜோதி வடிவானவன் என்று பேசும். 


இப்படி ஐம்பெரும் பூதங்களும்தான் உலகின் தொடக்கம், நடு, முடிவு என்று வெவ்வேறு தத்துவங்கள் கூறுகின்றன. 


இதில் எது உண்மை? 


அருணகிரியார் மேலும் தொடர்கிறார் 



ஞானோ தயமோ?  =  இந்த உலகமே ஒரு மாயை. இது உண்மை அல்ல. ஆணவம், கன்மம், மதம், மாச்சரியம் போன்ற மலங்கள் நம்மை உண்மையான உலகை அறிய விடாமல் தடுக்கின்றன. மாயை விலகி ஞானம் பிறந்தால் உண்மை விளங்கும். எனவே, இந்த ஞானமா நிரந்தரமான பொருள்? 


நவில் நான் மறையோ? = அதெல்லாம் இல்லை. என்றும் நிரந்தரமானது உண்மை ஒன்றுதான். அந்த உண்மை வேதங்களில் பொதிந்து கிடக்கிறது. வேதம் என்று தோன்றியது என்று தெரியாது. உண்மையை உள்ளடக்கிய அந்த வேதமா நிரந்தரமான பொருள்?



யானோ?  = பொருள் என்று ஒன்று தனியே கிடையாது. பார்பவரின் புலன்களைப் பொறுத்துத் தான் உலகம். கண் பார்வை இல்லாதவருக்கு நிறம் என்ற ஒன்று இல்லை. அவரைப் பொறுத்தவரை இந்த உலகம் நிறம் என்ற ஒன்று இல்லாதது. அவருக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். எனக்கு நிறம் தெரிகிறதே என்று நாம் கூறலாம். நமக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன. அவருக்கு நான்கு புலன்கள் மட்டும்தான் இருக்கிறது. ஒரு வேளை ஆறாவது அல்லது ஏழாவது புலன் என்று ஒன்று இருந்தால்? நம்மிடம் இல்லை. நமக்கு அது புரியவே புரியாது. கண் இல்லாதவர்க்கு நிறம் புரியாதது போல ஐந்துக்கு மேல் உள்ள புலன்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதற்காக அவை இல்லை என்று நாம் எப்படி கூற முடியும் ? அப்படி என்றால் இங்கே நிரந்தரமான ஒன்று என்பது "நான்" என்று சொல்லப் படும் பொருளா?


மனமோ?  = நான் இருந்தால் மட்டும் போதாது. என் மனம் வேலை செய்ய வேண்டும். சிந்தனை ஓட வேண்டும். ஞாபகம் வேண்டும். புலன்கள் சொல்லும் செய்தியை நாம் அறிய வேண்டும். எனவே, இந்த மனமா நிரந்தரமானது? 


 எனை ஆண்ட இடம் தானோ?  = இதெல்லாம் இல்லை. நீ என்னை ஆட்கொண்டாய் அல்லவா அந்த நிகழ்வுதான் நிரந்தரமான ஒன்று என்கிறார். 


நம் நண்பர் நம்மிடம் கேட்கிறார் "நான் நேற்று ஒரு விழாவுக்குப் போயிருந்தேன். அங்க யாரைப் பார்த்தேன் சொல்லு பார்க்கலாம்" என்று நம்மைக் கேட்கிறார். 


நாமும் 


"இராமனா?"  என்கிறோம். 


"இல்லை" என்கிறான். 


"கிருஷ்ணனா" என்று கேட்கிறோம்.


"ம்ஹும்ம்" என்று தலையாட்டி மறுக்கிறான். 


இப்படி ஒவ்வொரு பேராக சொல்லிக் கொண்டே போகிறோம். இல்லை, இல்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். 


கடைசியில் 


"கண்டு பிடிச்சுட்டேன்...நம்ம பழைய நண்பன் முருகன் தான " என்கிறோம். 


ஆம் என்று தலை அசைக்கிறான். 


அதற்குப் பிறகு நாம் மேலும் பேர் சொல்லிக் கொண்டே இருப்போமா? எப்போது சரியான விடை வந்து விட்டதோ, அதற்குப் பிறகு பேச்சு இல்லை. 


வானோ, புனலோ என்று கேட்டுக் கொண்டே வந்த அருணகிரியார் 


"எனை ஆண்ட இடம் தானோ/" என்று இறுதியாக கேட்டு நிறுத்துகிறார். 


அதற்கு பின்  ஒன்றும் கேட்கவில்லை. அப்படி என்றால் என்ன அர்த்தம்? அதுதான் விடை என்று அர்த்தம். 


இந்த உயிர் இறைவனோடு கலப்பது ஒன்றுதான் நிரந்தரமான ஒன்று. 


பசு, பாசம் என்ற கயிறை அறுத்துக் கொண்டுபதியோடு இணைவதுதான் இறுதியான ஒன்று. 


இந்த ஆன்மா உலகில் பிறந்து, பல அனுபவங்களைப் பெற்று, மீண்டும் இறைவனோடு இணைவது ...இதுதான் எப்போதும் விடாமல் நிகழ்ந்து கொண்டிருப்பது. 


அலை, கடலோடு சேர்வது போல. 


மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பாடலின் ஆழம் விளங்கும். 


இப்படி ஐம்பது பாடல்கள் இருக்கின்றன.  என்று அனைத்தையும் படித்து தெளிவது? 


பொருளாவது சண்முகனே.


Sunday, August 14, 2022

கந்தரனுபூதி - எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1

   

 கந்தரனுபூதி -  எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html

)


இந்த உலகம் ஒரு கலவை. 


எதை எடுத்துக் கொண்டாலும் சில அடிப்படையான விடயங்களைக் கொண்டுதான் அவை படைக்கப் படுகின்றன. 


எப்படி என்று சில உதாரணங்கள் மூலம் காண்போம். 


எத்தனையோ விதமான உணவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு சுவை. அத்தனை சுவைகள் இருக்கின்றனவா என்றால் இல்லை. மொத்தமே ஆறு சுவைதான் உண்டு. இனிப்பு, புளிப்பு, உரைப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு. மொத்தம் அவ்வளவுதான். இவற்றை எந்த விகிதத்தில் கலக்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் சுவை இருக்கும். இந்த ஆறு சுவையைத் தாண்டி இன்னொரு சுவை கிடையாது.


எத்தனையோ விதமான இசை இருக்கிறது. எவ்வளவு பாடல்கள், எத்தனை மொழிகளில். அத்தனைக்கும் அடி நாதம் ஏழு ஸ்வரங்கள்தான். அதை மாற்றி மாற்றிப் போட்டு புதுப் புது இராகங்கள் உண்டாகின்றன. உலகில் உள்ள அத்தனை இசைக்கும் அடிப்படை ஏழு ஸ்வரங்கள்தான். 


எத்தனை விதமான மனிதர்கள். எல்லோருக்கும் அடிப்படை செல் தான். செல்களின் தொகுப்பு திசுக்கள் (tissues ), திசுக்களின் தொகுப்பு உறுப்புகள் (organs ), உறுப்புகளின் தொகுப்பு, உருவம். 


உலகில் உள்ள அத்தனை பொருள்களுக்கும் அடிப்படை அணுக்கள். அதற்கு உள்ளேயும் போகலாம். பொதுவாக அணுக்கள் என்று கொள்வோம். 


வெளித் தோற்றம் உண்மை அல்ல. அடிப்படையில் ஏதோ ஒன்று இருக்கிறது. அது புரிந்து விட்டால் அத்தனை தோற்றமும் புரிந்து விடும். ஒவ்வொன்றாக படிக்க வேண்டும் என்று அல்ல. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html


(Pl click the above link to continue reading) 



எனவே, நாம் எப்போதும் எது அடிப்படையானது என்று தேடிக் கொண்டிருக்கிறோம். அதை தத்துவவாதிகள் நிரந்தர வஸ்து என்பார்கள். சாஸ்வதமானது. அடி நாதமானது எது என்று தேடத் துவங்கினார்கள். 


உலகத் தோற்றம், அதில் உள்ள பொருள்கள், மனிதர்கள், உயிர்கள் எல்லாம் அடிப்படையானது அல்ல என்று புரிந்து கொண்டார்கள். 


இவை எல்லாமே பஞ்ச பூதங்களின் ஒரு விதமான தொகுப்பு என்று புரிந்து கொண்டார்கள். 


பஞ்ச பூதங்கள் அடிப்படையானவையா? அவற்றிற்கு உள்ளே வேறு எதுவும் இருக்கிறதா என்று ஆராயத் தலைப்பட்டார்கள். 


தோற்றம் என்பது என்ன? 


பொருள்களுக்கு என்று தனிக் குணம் இருக்கிறதா? அல்லது அது பார்பவரை பொறுத்து அமைகிறதா?


ஒருவன் ஒரு உணவை உண்டுவிட்டு ஐயோ, அம்மா என்ன காரம் என்று கண்ணீர் விட்டுக் கொண்டு நீரைத்தேடி ஓடுகிறான். அதே உணவை இன்னொருவன் உண்டுவிட்டு "என்ன இது ஒரு உப்பு உரைப்பு இல்லாமல் சப் என்று இருக்கிறது" என்கிறான். எது உண்மை? உணவு காரமாக இருக்கிறதா, இல்லையா? 


காரம் என்பது உணவில் இருக்கிறதா அல்லது உண்பவனின் நாக்கில் இருக்கிறதா? 


இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு போகலாம். 


பொருள் என்பது குணங்களின் தொகுதி என்றால், குணம் என்பது அதை உணர்பவனை பொறுத்து மாறும் அல்லவா? அப்படி என்றால் பொருளுக்கு என்று ஒரு தன்மை கிடையாதா? 


ஆராய்ச்சி தொடர்கிறது. 


அடுத்த பாடலில் அந்த ஆராய்ச்சிகளையும், அதில் யார் யார் என்னென்ன சொன்னார்கள் என்பதையும், தான் கண்டது என்ன என்பதையும் அருணகிரிநாதர் கூறுகிறார்.


அது என்ன என்று நாளை சிந்திப்போம். 



Wednesday, August 10, 2022

கந்தரனுபூதி - எல்லாமற என்னை இழந்த நலம்

  

 கந்தரனுபூதி -  எல்லாமற என்னை இழந்த நலம் 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html



)


காய்ச்சல், கொரோனா போன்ற உடல் வருத்தங்களை தவிர்த்துப் பார்த்தால், நமது துன்பங்களுக்கு எல்லாம் காரணம் மனம் தான். 


படியில் இறங்கும் போது கால் தடுக்கி விழுந்து விடுகிறோம். கால் சுளுக்கிக் கொள்கிறது. அல்லது எலும்பு முறிந்து போய் விடுகிறது. அதனால் வரும் துன்பம் ஒரு புறம். 


ஆனால், அது போன்ற உடல் சார்ந்த துன்பங்கள் மிக மிக குறைவானவையே. மேலும், அந்தத் துன்பங்கள் பெரும்பாலும் மருந்து மற்றும் சிகிச்சையில் சரியாய்விடும். இல்லை என்றால் உடல் பழகிக் கொள்ளும். 


ஆனால் இந்த மனக் கவலை இருக்கிறதே..ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டே இருக்கும். ஒன்று முடிவதற்குள் இன்னொன்று வந்து வரிசையில் நிற்கும். 


அதை சரி செய்ய மருந்தோ, சிகிச்சையோ கிடையாது. 


கோபம், காமம், பயம், கவலை, பொறாமை இதற்கெல்லாம் எங்கே மருந்து இருக்கிறது?


இந்தக் கவலைகளுக்கு என்ன அடிப்படை காரணம். 


பற்று. 


உடல் மேல் உள்ள பற்று.


செல்வத்தின் மேல் உள்ள பற்று. 


உறவுகள் மேல் உள்ள பற்று


அடுக்கிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு பற்றும் கொஞ்சம் இன்பத்தையும்,அதைப் போல் பல மடங்கு துன்பத்தையும் கொண்டு வரும். இன்பம் இல்லாமல் இல்லை. 


காப்பி குடித்தால், அந்த நேரத்துக்கு கொஞ்சம் இன்பம் இருக்கத்தானே செய்கிறது. 


புகை பிடிப்பது.  காதலிப்பது. கல்யாணம். பிள்ளைகள். பணம். செல்வாக்கு என்று எதை எடுத்துக் கொண்டாலும், கொஞ்சம் இன்பம், நிறைய துன்பம். இதுதான் இயற்கை. 


ரொம்ப ஏன் போக வேண்டும். 


நம் உடம்பு நமக்குப் பிடிக்கும் தானே? அதற்கு ஒரு துன்பம் வராமல் பார்த்துக் கொள்கிறோம். கொஞ்சம் முடியவில்லை என்றாலும் மருத்துவரிடம் ஓடுகிறோம். சோப்பு, எண்ணெய் , வாசனை பொருட்கள், ஆடை, அணிகலன், என்று எவ்வளவு மெனக்கிடுகிறோம்.


அதே உடம்பு கொஞ்சம் காலத்துக்குப் பின், முடி நரைத்தால் கவலை,கண் பார்வை மங்கினால் கவலை, காது சரியாக கேட்கவில்லை என்றால் கவலை, ஞாபக சக்தி குறைந்தால் கவலை, பல் வலி வந்தால் கவலை என்று எவ்வளவு கவலைகளை கொண்டு வருகிறது?


இந்தக் கவலைகளில் இருந்து விடுபட அருணகிரிநாதர் வழி சொல்கிறார் 


பாடல் 


உல்லாச நிராகுல யோகவிதச் 

சல்லாப வினோதனு நீயலையோ 

எல்லாமற என்னை இழந்த நலம் 

சொல்லாய் முருகா சுரபூபதியே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


(Pl click the above link to continue reading) 



உல்லாச = மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் 


நிராகுல = நிர் + ஆகுலம். ஆகுலம் என்றால் கவலை, துன்பம். நிர் என்றால் எதிர் மறை. துன்பமே இல்லாத 


யோகவிதச்  = யோகத்தின் மூலம் 

+  

சல்லாப = பக்தர்களோடு நெருங்கி பழகி 


வினோதனு  = வினோதன், லீலைகள் புரிபவன் 


நீயலையோ = நீ தானே, உன்னைத் தவிர வேறு யார் 


எல்லாமற = எல்லாம் + அற = அனைத்தும் அற்றுப் போகும் படி 


என்னை இழந்த நலம்  = என்னையும் இழந்த நன்மையை 


சொல்லாய் = நீயே சொல்வாய் 


முருகா  = முருகா 


சுரபூபதியே  = தேவர்களின் பதியே 


என்ன சொல்ல வருகிறார் அருணகிரியார்?


"எல்லாம் அற" இதுதான் இந்தப் பாடலின் இதயம். எல்லாம் அற்றுப் போன பின் என்ன இருக்கும்? 


நம்மிடம் இரண்டு விதமான பற்றுகள் இருக்கின்றன. 


நான் என்ற அகப் பற்று. நான் பெரிய ஆள், நான் நல்லவன், வல்லவன். உலகிலேயே பெரிய பற்று அதுதான். 


அடுத்தது "எனது" என்ற புறப் பற்று. என் மனைவி, என் பிள்ளைகள், என் வீடு, என் படிப்பு, என் வேலை, என் அதிகாரம் என்ற புறப் பொருள்கள் மேல் உள்ளப் பற்று. 


இதனை அகங்காரம், மமகாரம் என்று சொல்லுவார்கள் 



வரும் போது முதலில்அகப் பற்று வரும், பின் புறப் பற்று வரும். 


விடும் போது முதலில் புறப்பற்று விடும், பின் அகப் பற்று. 


அருணகிரியார் சொல்கிறார் - எல்லாம் அற - வெளியில் உள்ள பற்றுகள எல்லாம் விட்டாச்சு.  அதன் பின் 


"என்னை இழந்த" என்று நான் என்ற அகப் பற்றும் விட்டு விட்டது. 


இரண்டு பற்றும் விட்டு விட்டால் பேரின்பம் வந்தது என்கிறார். யாருக்கு? "நான்" என்ற ஒரு பொருளே இல்லையே. பின் "நலம்" எப்படி வரும்? அதை அனுபவிப்பது யார்?


அதை எப்படிச் சொல்லுவது என்று தெரியவில்லை, முருகா! நீயே சொல் என்று முருகனிடம் விட்டு விடுகிறார். 


"சொல்லாய் முருகா"  என்று முருகனைச் சொல்லச் சொல்கிறார். 


அது மனித அறிவுக்குள் அகப்படாது. 


மற்ற மதக் கடவுள்களுக்கும், இந்து மதக் கடவுளுக்கும் ஒரு வேறுபாடு உண்டு.


மற்ற மதங்களில் கடவுளர்கள் ரொம்பவும் சீரியஸ் ஆக இருப்பார்கள். 


இந்து மதக் கடவுள்கள் எப்போதும் சிரித்து, பேசி, விளையாடி, மிக இன்பமாக இருப்பவர்கள். 


"உல்லாச" - உல்லாசமாக இருப்பவன்

"சல்லாப" - பேசி, கூடி மகிழ்பவன் 

"வினோத" - லீலைகள் புரிபவன். விளையாட்டு. 


கம்பர் சொல்லுவார் 


"அலகிலா விளையாட்டு உடையார் அவர், தலைவர், அன்னவர்க்கே சரணாங்களே" என்று. 


இந்த அளவு என்று கிடையாது. ஒரே விளையாட்டு. 


"அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்" என்பார் சேக்கிழார்.  ஒரே ஆட்டம் தான். 


வாழ்கையை ரொம்பவும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக் கூடாது. 


வந்தால் இன்பம்.


போனால் இன்பம்.


வராவிட்டால் இன்பம்.


ஐயோ வரவில்லையே, ஐயோ போய் விட்டதே என்று வருந்தக் கூடாது. 


வாழ்க்கை என்பது ஆனந்தமாக கழிக்க வேண்டிய ஒன்று. 


சத் + சித் = ஆனந்தம் = சச்சிதானந்தம்


"ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்" என்பார் பட்டர். 


"பரமானந்த சாகரத்தே " என்பார் அருணகிரி. 


எல்லாவற்றையும் பிடித்துக் கொண்டு, அது விட மாட்டேன் என்கிறது, இது விட மாட்டேன் என்கிறது என்று கவலைப் படாதே. 


பற்றுகளை விட்டு ஆனந்தமாய் இரு என்கிறார். 




Saturday, July 30, 2022

கந்தரனுபூதி - ஒரு முன்னுரை

 கந்தரனுபூதி -  ஒரு முன்னுரை 


 கந்தரனுபூதி என்ற நூல் அருணகிரிநாதர் அருளிச் செய்தது. 


அருணகிரினாதற்கே உரிய சந்த நடையில், மிக மிக ஆழமான தத்துவ உண்மைகளை உள்ளடக்கிய நூல். சைவ சமயத்தின் ஆழ்ந்த தத்துவங்களை பிழிந்து எடுத்து தரும் நூல். 


சைவ சித்தாந்தம் என்றவுடனே சிலருக்கு சற்றே சங்கடம் வரும். 


இறை நம்பிக்கை இல்லாதவர்கள் "கடவுளே இல்லை என்கிறேன், இதில் சைவம் எங்கிருந்து வந்தது...இதை ஏன் நான் படிக்க வேண்டும்" என்று கேட்கலாம். 


இந்து சமயத்தில் மற்ற பிரிவுகளைச் சார்ந்தவர்கள் "என் பிரிவுக்கு வேறு கடவுள், வேறு தத்துவங்கள் இருக்கின்றன. நான் ஏன் இதைப் படிக்க வேண்டும்" என்று கேட்கலாம். 


மற்ற சமயத்தைச் சார்ந்தவர்கள், "இந்து மதமும், சைவமும் உயர்வா? என் மதம் அதை விட உயர்ந்தது. எங்களுக்குத் தனிக் கடவுள் உண்டு, தத்துவம் உண்டு...நான் ஏன் இதைப் படிக்க வேண்டும்" என்றும் கேட்கலாம். 


அவர்கள் கேள்வியில் நியாயம் இருக்கிறது. 



https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


(Pl click the above link to continue reading) 


தத்துவம் என்பது உண்மையை விளக்குவது. ஏதோ ஒரு தத்துவத்தைப் படித்தால் போதும். அதில் இருந்து இன்னொரு தத்துவத்தை எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். 


இந்தத் தத்துவங்களை படிப்பதன் மூலம் உங்கள் தத்துவங்களின் ஆழம் மேலும் உங்களுக்குப் புரிய வரும். 


இறுதியில்,உண்மை என்பது ஒன்றுதான். 


போய்ச் சேரும் இடம் ஒன்றுதான். வழிகள்தான் வேறு வேறு. இன்னொரு வழியைத் தெரிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. அதை ஏற்றுக் கொல்வதும், ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம். 


ஒரு அறிவுத் தேடலுடன் இதை அணுகுவோம்.  ஏதேனும் புது விடயங்கள் கிடைக்கலாம்.


நம் அறிவை அது விரிவாக்கும். 


நமது பக்தி இலக்கியங்களில் பக்தி இருக்கும், இந்த உலகம் பற்றிய அறிவியல் சிந்தனை இருக்கும்,வாழ்கைக்குத் தேவையான தத்துவங்கள் இருக்கும், இசை, சந்தம், இனிமை இருக்கும். 


அவற்றில் ஒரு அறிவுத் தேடல் இருக்கும். இந்த உலகம் எப்படி வந்தது, ஏன் வந்தது, நாம் எப்படி வந்தோம், ஏன் வந்தோம், எது நிரந்தரம், ,எது தற்காலிகமானது, எது இன்பம், எது துன்பம், ஏன் இந்த இன்ப துன்பங்கள் வருகின்றன, அவற்றை எப்படி கையாள்வது, இது போன்ற பல விடயங்களில் அவை தங்கள் முடிவுகளைத் தெரிவிக்கும். 


ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் அவரவர் விருப்பம். 


அவர்கள் தேடி இருக்கிறார்கள். தேடிக் கண்டு பிடித்தத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். என்னதான் கண்டு பிடித்தார்கள் என்று அறிந்து கொள்ள முயல்வோம். 


இனி நூலுக்குள் நுழைவோம். 

Sunday, October 10, 2021

கந்தர் அநுபூதி - பாடும் பணியே

கந்தர் அநுபூதி - பாடும் பணியே 


ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். நீண்ட நாளாக அந்த ஊரில் பிச்சை எடுத்து வந்தான். அவன் மேல் பரிதாபப்பட்ட அந்த ஊர் பணக்காரர் ஒருவர், "சரி, இனி மீதி இருக்கும் நாட்களிலாவது அவன் சந்தோஷமாக இருக்கட்டும்" என்று எண்ணி, அவனுக்கு நிறைய பணம் கொடுத்தார்.  நிறைய என்றால் நிறைய. வாழ் நாள் முழுவதும் இருந்து சாப்பிடும் அளவுக்கு. 



சில நாள் கழித்து அவன் எப்படி இருக்கிறான் என்று வந்து பார்த்தார். 


அவர் கொடுத்த பணத்தில் ஒரு நல்ல நாற்காலி, ஒரு குடை, ஒரு செருப்பு, நல்ல பிச்சை பாத்திரம் எல்லாம் வாங்கி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். 


 அப்படி சிலர் இருக்கிறார்கள். 


என்ன உயர்ந்த நூல்களைப் படித்தாலும், என்ன சொற்பொழிவு கேட்டாலும், மீண்டும் மனம் பழைய வேலைக்குத்தான் போகும். 


கோடி கொடுத்தாலும், பிச்சைக்காரன் புத்தி பிச்சையில்தான் இருக்கும். 


அது கூடப் பரவாயில்லை. இன்னும் சிலர் இருக்கிறார்கள். வேலை மெனக்கெட்டு, நேரம் செலவழித்துப் படிப்பார்கள். தங்களை முன்னேற்றிக் கொள்ள அல்ல, அந்த நூலில் என்ன தவறு கண்டு பிடிக்கலாம்? அதில் என்ன பிழை இருக்கிறது என்று கண்டு சொல்ல. 


அதைக் கண்டு பிடித்து சொல்வதால் அவனுக்கு என்ன பயன்? ஒரு பயனும் இல்லை. அதில் ஒரு சந்தோஷம். 



சில அரக்கர்கள் இருந்திருக்கார்கள். நல்லவர்களை, முனிவர்களை, யோகிகளை தேடி கண்டு பிடிப்பார்ர்கள். எதற்கு? அவர்களிடம் இருந்து அறிவைப் பெற அல்ல. அவர்களை கொன்று தின்ன. எங்கே வேள்வி நடக்கிறது, எங்கே நல்ல காரியம் நடக்கிறது என்று தேடிப் போய், அதில் குழப்பம் விழைவிப்பது. 



வேள்வியில் மாமிசம், இரத்தம் இவற்றை கொட்டுவதுதான் வேள்வியை தடை செய்வது என்று நினைக்காதீர்கள். ஒரு நல்ல புத்தகத்தை படித்துவிட்டு அதை பற்றி தவறாக புரிந்து கொள்வதோ, தவறாக பேசுவதோ அதற்கு சமமானதுதான். 



அருணகிரிநாதர் சொல்கிறார் 


" தேடும் கயமா முகனைச் செருவிற் சாடும்"


கயமுகன் என்று ஒரு அரக்கன் இருந்தான். அவன் முனிவர்களை தேடி கண்டு பிடித்து அவர்களை கொன்று தின்று விடுவான். அந்த அரக்கனை விநாயகப் பெருமான் கொன்றார். 


பாடல் 


ஆடும் பரிவே லணிசே வலெனப்

 பாடும் பணியே பணியா வருள்வாய்

 தேடும் கயமா முகனைச் செருவிற்

 சாடுந் தனியானை சகோதரனே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_62.html


(please click the above link to continue reading)



ஆடும் பரி = ஆடி ஆடி நடக்கும் குதிரை 


வேல் = வேல் 


அணி சே வலெனப் = சேவல் என்று அணி வகுத்து நிற்கும் உன்னை 


 பாடும் பணியே = பாடி துதிக்கும் வேலையையே 


 பணியா வருள்வாய் = நான் எப்போதும் செய்யும் பணியாக அருள்வாய் 


 தேடும்= கொன்று தின்பதற்காக முனிவர்களை தேடும் 


கயமா முகனைச் = கயமாமுகன் என்ற அரக்கனை 


செருவிற் =போரில் 


 சாடுந் = சண்டையிட்டு வென்ற 


தனியானை சகோதரனே! = தனித்துவம் மிக்க யானை முகம் கொண்ட விநாயகனின் சகோதரனே, முருகனே 


முருகனுக்கு மயில் தானே வாகனம். குதிரை எங்கிருந்து வந்தது?


குதிரை போல நடக்கும் மயில் என்று பொருள்.


ஆடும் என்ற வார்த்தைக்கு கி.வா.ஜா அற்புதமான விளக்கம் எழுதி இருக்கிறார். 


ஓம் என்பது பிரணவ மந்திரம்.


அது அகர, உகர, மகர சம்மேளனம் என்று சொல்லுவார்கள். 


அதாவது அ + உ + ம் சேர்ந்தால் ஓம் என்ற சப்தம் வரும். 


அ உ ம் என்று திருப்பி திருப்பி வேகமாக சொல்லிக் கொண்டிருந்தால் அது ஓம் என்ற ஒலியைத் தரும்.


ஒலி பிறக்கும் இடம் அ 


பிறந்த ஒலியை நிலை நிறுத்த வேண்டும் என்றால் உ என்று கூற வேண்டும். 


அ என்றால் அதோடு நின்று விடும். 


உ என்றால் நீட்டிக் கொண்டே போகலாம். 


ம் என்றால் முடிந்து விடும்.


அதாவது பிறப்பு, நிலைத்தல், மறைதல் என்ற முத்தொழிலையும் உள்ளடக்கியது பிரணவ மந்திரம் என்று கூறுவார்கள். 


ஆடும் என்ற சொல்லைப் பிரித்துப்  பார்ப்போம். 


அ (ஆ என நீண்டது) + 

ட் + உ = டு  +

ம் 


அகர உகர மகர சம்மேளனம் வந்து விட்டது அல்லவா? 


அதை மறை பொருளாகக் கூறினார் என்கிறார் கி. வா. ஜா 


எழுத்து எண்ணிப் படித்தவர்கள். 







Friday, June 5, 2020

கந்தர் அநுபூதி - பேசா அநுபூதி

கந்தர் அநுபூதி - பேசா அநுபூதி 


நாம் ஒன்று நினைத்து சொல்கிறோம். எழுதுகிறோம்.

ஆனால் கேட்பவர்கள், படிப்பவர்கள் அவர்களுக்கு தோன்றிய விதத்தில் அதை எடுத்துக் கொள்கிறார்கள்.  நாம் சொன்னது ஒன்றாகவும், அவர்கள் அதில் இருந்து அறிந்து கொண்டது வேறாகவும் இருக்கும்.

இது ஏதோ, எப்போதோ நிகழ்வது அல்ல. எப்பவுமே அப்படித்தான் நிகழ்கிறது.

ஒன்று சரியாக கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும், சரியாக புரிந்து கொள்வதில்லை. மாறாக தவறாக புரிந்து கொள்கிறார்கள். அல்லது, ஏதாவது வாதம் பண்ணுகிறார்கள், தங்கள் மேதா விலாசத்தைக் காட்ட. அப்படியே சரியாக  புரிந்து கொண்டாலும், அதன் படி நடப்பதும் இல்லை.

ஏன் இத்தனை முயற்சி? நாம் சொல்லி ஒன்றும் நடக்கப் போவது இல்லை என்ற உணர்வு வரும் போது, மெளனமாக இருந்து விடுவதே நல்லது என்று தோன்றும் - ஞானியர்களுக்கு.

அதைத்தான் அநுபூதி என்கிறார்கள்.

அந்த பேசா நிலை எப்போதும் நிகழும்?

ஆசைகள் விட்டு விட்டால், மௌனம் வரும் என்கிறார் அருணகிரிநாதர்.

ஆசைகள் எப்படி வருகின்றன?

ஆசைகள் சங்கிலித் தொடர் போல், ஒன்றைப் பற்றிக் கொண்டு இன்னொன்று வரும்  என்கிறார்.

பெண்ணாசை - அதில் இருந்து திருமணம் - அதில் இருந்து பிள்ளைகள் - இந்த அவர்களின்  தேவைகள் ஆசைகள் - அவற்றை பூர்த்தி செய்ய ஆசை - எனவே மேலும் பணம் சம்பாதிக்க ஆசை ...இப்படி ஒன்றில் இருந்து மற்றொன்று.

வீடு வாங்க ஆசை - பின் அதில் நல்ல பீரோ, கட்டில்,  மின் விளக்கு, குளிர் சாதனை பெட்டி,  தொலைக் காட்சி, கார் என்று ஒன்றில் இருந்து ஒன்றாக ஆசைகள்  முளைத்து எழுகின்றன.

இந்த சங்கிலித் தொடரை வெட்ட வேண்டும். அப்போது தான் அது வளர்வது நிற்கும்.

ஏதோ ஒரு ஆசை வரும் போது, "போதும், அது வேண்டாம்" என்று நிறுத்தினால், அந்த ஒரு ஆசை மட்டும் அல்ல, அதைத் தொடர்ந்து வரும் அத்தனை  ஆசைகளும்  அற்றுப் போய் விடும்.

ஆசை குறையும் போது, மனம் அடங்கும். அலை பாயாது.

சலனம் இல்லாத மனதில் மௌனம் பிறக்கும். அலை அடித்தால் அல்லவா சத்தம் வரும்.

பாடல்

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.


பொருள்

தூசா மணியும் = தூய்மையான மணியும்

துகிலும் = நல்ல உடைகளும்

புனைவாள் = புனைபவள். வள்ளியோ, தெய்வ யானையோ

நேசா = அவள் மேல் நேசம் கொண்ட

முருகா =முருகா

நினது = உன்னுடைய

அன்பு = அன்பு

அருளால் = அருளால்

ஆசா  = ஆசை என்ற

நிகளம் = சங்கிலி

துகளாயின பின் = தூள் தூளான பின்

பேசா  = பேசாமல் இருக்கும், மெளனமாக இருக்கும்

அநுபூதி பிறந்ததுவே. = அநுபூதி நிலை தோன்றியது

சிறு வயதில் என் தாத்தா, பாட்டி ஆகியோர் இந்தப் பாடலை மனப்பாடமாக  ஒப்பிப்பதை  கேட்டு இருக்கிறேன்.

அதற்கு என்ன அர்த்தம் என்று தேடும் ஆவல் இருந்தது இல்லை.

இப்போது தோன்றுகிறது.


என் அனுபவத்தில் இன்னொன்றும் தோன்றுகிறது. சரியா தவறா என்று தெரியவில்லை.

ஆசை சங்கிலி அறுந்து போனால் மௌனம் பிறக்கும் என்கிறார் அருணகிரி.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், மௌனம் பிறந்தால் ஆசை அடங்கும் என்று.

மௌன விரதம் இருந்தால் ஆசை அடங்கும் என்று தோன்றுகிறது.

பேசுவதால், மற்றவர்களிடம் மட்டும் அல்ல, நமக்கு நாமே பேசிக் கொள்வதால், நாம் ஆசைக்கு தீனி போடுகிறோம்.

"அந்த கார் இருந்தால்   எப்படி இருக்கும், அது எவ்வளவு விலை இருக்கும், அதை விட   மற்ற கார் நல்லதா, வாங்கினால் நம்ம வீட்டில் நிறுத்தி வைக்க முடியுமா "

என்றெல்லாம் நாம் நமக்குள்ளேயே பேசிக் கொண்டிருக்கிறோம்.

பேச்சை நிறுத்தினால், ஆசை அறும்.

எப்படி உண்ணா விரதம் இருந்தால் உடல் சலனம் அடங்குகிறதோ, அது போல  பேசா விரதம் இருந்தால் மனச் சலனம் அடங்கும் என்று நினைக்கிறேன்.

பேசா அனுபூதி

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_5.html


Sunday, October 27, 2019

கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும்


கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும் 




குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

இந்தப்  பாடலை  சில நாட்களுக்கு முன்னால் பதிவிட்டிருந்தேன்.

அது என்ன அறிவு அற்று, அறியாமையும் அற்று என்று சில அன்பர்கள் கேள்வி கேட்டு இருந்தார்கள்.

அறியாமை அற்றது சரி. அறிவு ஏன் அற்றுப் போக வேண்டும். அறிவு போய் விட்டால் அறியாமை வந்து விடாதா என்பது அவர்கள் கேள்வி.

சிந்திப்போம்.


நிறைய வாசிக்கிறோம். சொற்பொழிவுகள் கேட்கிறோம். கோவில்களுக்குப் போகிறோம். பூஜை, விரதம் போன்றவற்றை மேற்கொள்கிறோம்.

எதற்கு ?

வாசிக்க வாசிக்க, வந்து கொண்டே இருக்கும்.  படிக்க வேண்டியது கடல் போல இருக்கிறது.  அனைத்தையும் வாசித்து விட முடியுமா ? அப்படியே வாசித்து விட்டாலும், எல்லாம் புரிந்து விடுமா? அப்படியே புரிந்தாலும், நமக்கு புரிந்துதான் சரி என்று நாம் எப்படி அறிந்து கொள்வது?

சிலர் கூறுவார்கள் , தினமும் காலையில் எழுந்தவுடன் அந்த ஒரு குறிப்பிட்ட பாடல்களை, முழுவதும் சொல்லிவிட்டுத் தான் காப்பியே குடிப்பேன் என்று.

மூன்று வேளை அதை செய்வேன், ஆறு வேளை இதைச் செய்வேன், மாதம் இருமுறை அதைச் செய்வேன் என்று.

இப்படி செய்து கொண்டே இருந்தால், நேரே சுவர்க்கம், இறைவன் திருவடி என்று எதையோ அடைந்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

அது சரி அல்ல.

மாடிக்கு செல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு படியாக எறிச் செல்ல வேண்டும். நான் தினமும் பத்து படி ஏறி இறங்குவேன், ஒரு நாளைக்கு இருப்பது முறை  ஏறி இறங்குவேன், இப்படி இருப்பது வருடம் செய்து கொண்டு இருக்கிறேன்.  வாழ் நாள் பூராவும் இப்படி செய்து கொண்டே இருந்தால், ஒரு நாள் முழு மாடியும் ஏறி விடுவேன் என்று யாராவது சொன்னால் இப்படி இருக்கும்.

ஒரு படியை அடைந்து விட்டால், அடுத்த படிக்கு செல்ல வேண்டும். ஏறிய படி எவ்வளவு  நன்றாக இருந்தாலும், அதை தாண்டி மேலே செல்ல வேண்டும்.

அந்த பாசுரம் எவ்வளவு நல்லா இருக்கு, இந்த பாடல் எவ்வளவு அர்த்தம் செறிந்ததாக இருக்கிறது   என்று அதிலேயே நின்று விடக் கூடாது.

பள்ளிக் கூடம் போனால்,  ஒவ்வொரு வகுப்பாக மேலே செல்ல வேண்டும்.

இரண்டாம் வகுப்பு பிடித்து இருக்கிறது என்று ஒரு 30 வருடம் இரண்டாம் வகுப்புக்கே போய் கொண்டு இருக்க முடியுமா ?

அவ்வளவு ஏன் ?

வீடு குப்பையாக இருக்கிறது. விளக்குமாறு கொண்டு சுத்தம் செய்கிறோம். குப்பை எல்லாம் ஒரு   ஓரத்தில் தள்ளி விட்டோம். வீடு சுத்தமாகி விட்டது.

வீடு சுத்தமானபின் விளக்குமாறை என்ன செய்வது?

"அடடா, என் அருமை விளக்குமாறே , நீ அல்லவா இந்த வீட்டை சுத்தம் செய்தாய். எனவே உன்னை நான் நடு வீட்டில் வைக்கிறேன் " என்று யாராவது சொல்வார்களா?

குப்பையை கூட்டியபின் பின் விளக்குமாறை குப்பையோடு சேர்த்து ஓரமாக  வைத்து விட வேண்டும்.

அறியாமை என்ற குப்பை நீங்கியபின், அறிவு என்ற விளக்குமாறு எதற்கு?

படித்துக் கொண்டே இருக்கக் கூடாது. படித்ததை வைத்து மேலே செல்ல வேண்டும்.  வாழ்நாள் எல்லாம் படித்துக் கொண்டே இருப்பேன் என்பது, விளக்குமாறை தலையில் வைத்துக் கொண்டு  அலைவது போலத்தான்.



பாடல்

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.


பொருள்

குறியைக் குறியாது = குறிப்புகளை மனதால் குறித்துக் கொள்ளாமல்

குறித்து அறியும் = அந்தக் குறிகள் எவற்றை குறிக்கின்றனவோ அவற்றை அறியும்

நெறியைத் = வழியை

தனிவேலை நிகழ்த்திடலும் = தனித்துவம் வாய்ந்த வேலை உடைய முருகன் நிகழ்த்திடவும்

செறிவு அற்று, உலகோடு =உலகோடு நெருங்கிய பந்தம் விட்டு

உரை = பேச்சு

சிந்தையும் = சிந்தனை

அற்று = விட்டு

அறிவு அற்று = அறிவு அற்று

அறியாமையும் அற்றதுவே = அறியாமையும் விட்டது

அறிவு என்பது இறைவனை அல்லது உண்மையை அறிய பெரிய தடை. 

சொல்வது, அருணகிரி நாதர் மட்டும் அல்ல. மணிவாசகரும் சொல்கிறார். 

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலம் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ.  

செல்வம் சேர்த்து வைத்து வைத்தால், அதை விட்டுப் போக மனம் வராது. இன்னும் அனுபவிக்க வேண்டும்  என்றே மனம் பற்றும். 

அன்பான மனைவி கிடைத்தால், அவளை விட்டு பிரிய மனம் வராது.  ஆசை மேலும் மேலும் வளரும். 

பிள்ளைகள், கேட்கவே வேண்டாம். பிள்ளைகளை விட்டு விட்டு எப்படி போவது. 

இதெல்லாம் நமக்குத் தெரிகிறது. 

அடுத்து ஒன்றைச் சொல்கிறார் மணிவாசகர் - "கல்வி" 

கல்வியும்  சித்தத்தைக் குழப்பும் என்கிறார். 

இறைவனை அடைய செல்வம், மனைவி, பிள்ளைகள் எப்படித் தடையோ அப்படி கல்வியும். 

காரணம், கல்வியில் இறங்கியவர்கள் அதில் போய் கொண்டே இருப்பார்கள். அதுவே குறிக்கோள் என்பது  போல .

"கற்பனவும் இனி அமையும்" என்பார் மணிவாசகர். 

படியுங்கள். பூஜை செய்யுங்கள். விரதம் இருங்கள். ஸ்லோகங்கள், பஜனைப் பாடல்கள்  எல்லாம்  சொல்லுங்கள்  

ஆனால், அதுவே முடிவானாது என்று எண்ணிக் கொள்ளாதீர்கள்.  

அதைத் தாண்டி போக வேண்டும். 

அறியாமை அற்று, அறிவும் அற்றுப் போக வேண்டும். 

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_27.html

Thursday, August 29, 2019

கந்தரநுபூதி - ஆறாறையும் நீத்து

கந்தரநுபூதி - ஆறாறையும் நீத்து 


இந்த  உலகம் எப்படி வந்தது ? யார் இதைப் படைத்தது? உயிர்களை இறைவன் படைத்தானா? முக்தி என்றால் என்ன? ஏன் உயிர்கள் வினையில் சிக்கித்  தவிக்கின்றன?  இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?  உயிர்களைப் பற்றும் ஆணவம் , கன்மம், மாயை போன்ற மலங்கள் எப்படி உயிரைப் பற்றுகின்றன ?

ஒரு வினையில் இருந்து மற்றொரு வினை வருகிறது என்றால், முதல் வினை எங்கிருந்து வருகிறது?

இப்படி ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. இவற்றிற்கு எல்லாம் பதில் இருக்கிறதா என்றால் இருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் இருக்கிறது.

அந்த பதில்கள் சைவ சித்தாந்தின் 36 தத்துவங்களுக்குள் அடங்கி இருக்கிறது.

எப்படி கேள்வியை மடக்கி மடக்கி கேட்டாலும், அதில் பதில் இருக்கிறது.

It is a manum opus. Great frame work of philosophy.

அதை விளக்குவது அல்ல இந்த ப்ளாக்கின் நோக்கம்.

அருணகிரிநாதர் சொல்கிறார், இந்த 36 தத்துவங்களையும் தாண்டி நான் செல்ல எனக்கு வழி சொல்ல மாட்டாயா என்று முருகளை வேண்டுகிறார்.

பாடல்


ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே!

சீர் பிரித்தபின்

ஆறு ஆறையும்  நீத்து அதன் மேல் நிலையை 
பேறா அடியேன் பெறுமாறு உளதோ 
சீறா வரு சூர் சிதைவித்து இமையோர் 
கூறா உலகம் குளிர் வித்தவனே 

பொருள்

ஆறு ஆறையும்  = 6 x 6 = 36 தத்துவங்கள்

 நீத்து = தாண்டி

அதன் = அந்த தத்துவங்களின்

மேல் நிலையை  = மேல் நிலையை

பேறா அடியேன் = பெறாத அடியேன்

பெறுமாறு உளதோ  = பெறுவதற்கு ஒரு வழி உள்ளதா

சீறா = சீறி

வரு = வரும்

சூர் = சூரர்களின் உடலை, உலகை

சிதைவித்து = அழித்து

இமையோர்  = வானவர்கள்

கூறா = முறையிட்டு, வேண்டி வந்த

உலகம் = உலகம்

குளிர் வித்தவனே  = குளிர்வித்தவனே

"முருகா , நீ எவ்வளவு பெரிய ஆளு. சூரபத்மனை அழித்து, அவனது படைகள், உலகங்கள் அனைத்தையும் அழித்து, தேவர்களுக்கு அவர்கள் உலகை தந்தவன். அவ்வளவு பெரிய ஆள். நான் ஒரு சின்ன ஆள். எனக்கு அந்த தத்துவங்களை தாண்டி  உள்ள இடத்துக்கு கொண்டு போவது உனக்கு என்ன பெரிய  காரியமா ? உன்னால் முடியும். "

என்கிறார்.

ஆர்வம் உள்ளவர்கள் 36 தத்துவங்களை தேடி கண்டு கொள்வார்களாக !

ஒன்றைப் படிக்கும் போது, அதில் இருந்து வேறு எதை அறிந்து கொள்ளலாம் என்று தேட  வேண்டும். 

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_29.html

Saturday, January 25, 2014

கந்தர் அநுபூதி - ஆசையை விட வழி

கந்தர் அநுபூதி - ஆசையை விட வழி 


எல்லா அற நூல்களும் ஏறக் குறைய ஆசையே துன்பத்திற்கு காரணம், ஆசையை விட்டால் துன்பம் இல்லை என்று கூறுகின்றன.

ஆனால் ஆசையை எப்படி விடுவது ?

அதற்கு முன்னால், ஆசை எப்படி வருகிறது என்று தெரிய வேண்டாமா ?

ஆசை இல்லாத வாழக்கை ஒரு வாழ்க்கையா ? மரக் கட்டை போல, ஒரு கல்லைப் போல வாழும் வாழக்கை ஒரு வாழ்க்கையா ?

எல்லாவற்றிற்கும் நாலு வரியில் பதில் சொல்கிறார் அருணகிரிநாதர்.

ஆசை புலன்கள் வழியாக வருகிறது.

புலன்கள் இருக்கும் வரை ஆசை இருக்கும். ஆசையை ஒழிக்க முடியாது. ஆசை, மனித இயற்கை.

ஆனால், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று அலையும் மனதை வேறொரு  ஆசை மேல் திருப்பலாம்.

அது, இறைவன் மேல் கொள்ளும் ஆசை. அப்படி இறைவன் மேல் ஆசை கொண்டால், மனம் உலக ஆசைகளை விட்டு விடும்.

பாடல்

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்

ஐவாய் வழி செல்லும் அவாவினையே.

பொருள் 

கைவாய் = கையில் உள்ள

கதிர் வேல் = ஒளி வீசும் வேல்

முருகன் = முருகன்

கழல் பெற்று = திருவடிகளைப் பெற்று

உய்வாய் = வழி காண்பாய்

மனனே = மனமே

ஒழிவாய் ஒழிவாய் = விலகுவாய் விலகுவாய்

மெய் = உடல்

வாய் = வாய் (நாக்கு)

விழி = கண்

நாசியொடும் = மூக்கோடு

செவி ஆம் = காது என்ற


ஐவாய் =  ஐந்து புலன்கள்

வழி செல்லும் அவாவினையே = வழியாக செல்லும் ஆசைகளையே


Sunday, January 19, 2014

கந்தர் அநுபூதி - தணியாத மோகம்

கந்தர் அநுபூதி - தணியாத மோகம் 


திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
பணியா? என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.

முருகனுக்கு வள்ளி மேல் அவ்வளவு மோகம்.

மோகம் எப்போதும் தணிந்து போகும். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பார்களே அது போல. நாள் ஆக நாள் ஆக மனம் சலிக்கும், உடல் சலிக்கும்.

ஆனால் முருகனுக்கு வள்ளி மேல் "தணியாத மோகம்"

அதுவும் எப்படி பட்ட மோகம் ? அதி மோகம். அளவுக்கு அதிகமான தீராத மோகம்.

அந்த மோகத்தில் அவன் என்ன செய்கிறான் ?

வள்ளியின் பாதத்தை பிடித்துக் கொள்கிறான். பிடித்துக் கொள்வது மட்டும் அல்ல, அவள் பாதங்களை பணிகிறான்.

பணிந்து, "சொல்லு, நான் என்ன செய்ய வேண்டும்" என்று  கெஞ்சுகிறான்.

 "நீ என்ன சொன்னாலும் செய்கிறேன், எனக்கு இட்ட கட்டளை என்ன " என்று அவள் பாதங்களை  பணிந்து வேண்டுகிறான்.

அவன் கொண்டது காதல் மட்டும் அல்ல...மோகம் மட்டும் அல்ல...கருணையும் கூட.  "தயாபரனே" என்கிறார் அருணகிரி.

காதலும் கருணையும் கலந்தது அவன் மனம்.

ஒரு புறம் அவள் மேல் மோகம்.

இன்னொரு புறம் அவள் மேல் கருணை. பாவம், இந்த பொண்ணு என்னை நம்பி வந்து  இருக்கிறாள். இவளை நான் காக்க வில்லை என்றால் வேறு யார் காப்பார்கள் என்று  அவள் மேல் கருணை.

அவ்வளவு கருணை உள்ள நீ, உன் பாதத் தாமரையை கல் போன்ற என் மனத்திலும்  பூக்க வைக்க மாட்டாயா என்று உருகுகிறார் அருணகிரி.

"திணியான மனோ சிலை"

திணி என்றால் கடினமான என்று பொருள்.

மனோ என்றால் மனம்
சிலை என்றால் கல்

கல்லு போல கடினமான மனம்.

கல்லில் எங்காவது பூ பூக்குமா ?

பூக்காது, அதற்கு என்ன செய்ய முடியும். அவன் திருவடிகள் தாமரை போல மென்மையாக  இருக்கிறது. என் மனமோ கல்லு போல கடினமாக இருக்கிறது.

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி பிறிதோர் இடத்தில்

நான் என் மனதை மாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், அவன்  நினைத்தால் அவன் திருவடித் தாமரை என் மனத்திலும் பூக்கும்.

ஏன் என்றால் அவன் கருணை உள்ளவன்.

வள்ளிக்காக அவள் பாதத்தை பிடித்தவன்.

எனக்காக இதைச் செய்யக் கூடாதா என்று கேட்கிறார் அருணகிரி.


பொருள்

திணியான = கடினமான
மனோ = மனம்
சிலை மீது = கல் மீது
உனதாள் = உனது தாள் = உனது பாதங்கள்
அணியார் = அழகான
அரவிந்தம்  = தாமரை
அரும்பு  மதோ = மொட்டு மலருமா ?
பணியா?  = எனக்கு இட்ட பணி  எது
என = என
வள்ளி பதம் பணியும் = வள்ளியின் பாதங்களை பணியும்
தணியா = தணியாத, எப்போதும் உள்ள
அதிமோக = அதிக மோகத்தை கொண்ட
 தயா பரனே.= கருணை கொண்டவனே


Tuesday, November 5, 2013

கந்தர் அநுபூதி - இன்னும் ஒருவற்கு இசைவிப்பதுவோ?

கந்தர் அநுபூதி - இன்னும் ஒருவற்கு இசைவிப்பதுவோ?


மனைவியுடனோ, காதலியிடமோ பத்து பேர் முன்னிலையில் இருந்து பேசினால் இனிமை இருக்குமா ? தனிமையில் அவளோடு பேசினால் இனிமை இருக்குமா ? 

தனிமையில் பேசுவதில் தான்  சுகம்.

மனைவி மற்றும் காதலிக்கே அப்படி என்றால் இறைவனுக்கு எப்படி ?

இலட்சம் பேருக்கு நடுவில், கோவிலில், கும்பலுக்கு , கோஷத்துக்கு நடுவில் இறைவனோடு ஒன்ற முடியுமா ?

தனிமையில் இருந்து சிந்திக்க வேண்டும். அப்போதுதான் அது என்ன என்று தெரிய வரும். நண்பர்களிடம் விவாதித்து அறிய முடியாது. 

இறை அனுபவம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். 

பாடல் 

தன்னந் தனிநின் றதுதா னறிய
இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே

சீர் பிரித்த பின் 

தன்னந் தனி நின்று  அது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.

பொருள் 

தன்னந் தனி நின்று = தனியாக நின்று, தனியாக இருந்து 

அது = அதனை 

தான் அறிய = தான் அறிந்து கொள்ள, அறிந்து கொண்டதை  

இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ? = மற்றவர்களிடம் சொல்லித் தெரிய வைக்க முடியுமா 

மின்னும் கதிர் வேல் = மின்னல் ஒளி வீசும் 

விகிர்தா =  உருவம் மாறுபவன்  

நினைவார் = நினைப்பவர்கள் 

கின்னம் = இன்னல்கள் 

களையும் = களையும் 

க்ருபை = அன்பு 

சூழ் சுடரே = சூழும் சுடரே