Saturday, November 10, 2012

திருக்குறள் - பிறவிப் பெருங்கடல்


திருக்குறள் - பிறவிப் பெருங்கடல் 


பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா:    
ரிறைவ னடிசேரா தார்:                              .

பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

இந்த குறளுக்கு பொதுவாகப் பொருள் சொல்லும் போது பிறவியாகிய பெருங்கடலை நீந்துபவர்கள் இறைவனின் திருவடியை அடைவார்கள். மற்றவர்கள் அடைய மாட்டார்கள் என்று கூறுவார்கள்.

பரிமேல் அழகர் உரையும் அப்படித்தான் இருக்கிறது 

இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் = இறைவன் அடி என்னும் புணையைச்சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்;
சேராதார் நீந்தார் = அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்.

இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்திப்போமே.

ஒரு பரிட்ச்சை இருக்கிறது. அதை எழுதினால் தேர்ச்சி பெறலாம் என்று சொன்னால் அர்த்தம் இருக்கிறது. எழுதாவிட்டால் தேர்ச்சி பெற முடியாது என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும் ?

"நீந்தார் இறைவனடி சேராதார்" என்று சொல்லுவதன் மூலம் வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் ?

நீந்தாதவர்கள் கட்டாயம் இறைவனடி சேர முடியாது. அதாவது பரீட்ச்சை எழுதாவிட்டால் கட்டாயாம் தேர்ச்சி பெற முடியாது. அதில் ஒண்ணும் சந்தேகம் இல்லை.  

சரி பரிட்ச்சை எழுதியவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெறுவார்களா என்றால், அதுவும் இல்லை. நன்றாகப் படித்து, ஒழுங்காக எழுதினால் ஒரு வேலை தேர்ச்சி பெறலாம். 

இந்த பிறவியான பெருங்கடல் ஆழமானது, அகலமானது, ஆபத்து நிறைந்தது, நிற்க இடம் இல்லாதது, ஒதுங்க நிழல் கிடையாது....எந்நேரமும் நீந்திக்கொண்டே இருக்க வேண்டும். நிறுத்தினால் மூழ்கி விடுவோம். 

பிறவியை பெரிய மலை என்றோ, அடர்ந்த காடு என்றோ சொல்லி இருக்கலாம். நிலத்தில் நடந்து போனால், சற்று நேரம் நின்று இளைப்பாறிக் கொள்ளலாம். கடலில் இளைப்பாற முடியாது. 

எந்நேரமும் அவன் திருவடி நோக்கி நீந்திக் கொண்டே இருக்க வேண்டும். கை வலிக்கிறதே, கால் வலிக்கிறதே என்று நிறுத்தி விட்டால், உள்ளே போக வேண்டியதுதான். 

நீந்தார் இறைவனடி சேராதார். 

நீந்துங்கள்.

No comments:

Post a Comment