Friday, June 7, 2019

கம்ப இராமாயணம் - பெண் மேல் அம்பு எய்த ஆடவர்கள்

கம்ப இராமாயணம் - பெண் மேல் அம்பு எய்த ஆடவர்கள் 


தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்திய சூர்பனகையை பார்த்து அது முடியாது என்று சொல்லி விட்டு இராமன், சீதையுடன் குடிலுக்குள் போய் விட்டான்.

தனித்து விடப்பட்ட சூர்ப்பனகை தவிக்கிறாள்.

இராமன் கொஞ்சம் ஆசை வார்த்தைகள் பேசிவிட்டு, பின் அவளை தவிக்க விட்டு போய் விட்டான்.

காமத்தில் தவிக்கிறாள் சூர்ப்பனகை.

தாடகை மேல் இராமன் மேல் விட்ட அம்பு போல, மன்மதன் விட்ட அம்பால் நலிந்து மெலிகிறாள்.

பாடல்


தாடகைக் கொடி யாள் 
     தட மார்பிடை, 
ஆடவர்க்கு அரசன் அயில் 
     அம்பு போல், 
பாடவத் தொழில் மன்மதன் 
     பாய் கணை 
ஓட, உட்கி, உயிர் 
     உளைந்தாள் அரோ!

பொருள்

தாடகைக்  = தாடகை

கொடி யாள்  = என்ற கொடியவன்

தட மார்பிடை,  - பரந்த வலிமையான

ஆடவர்க்கு = ஆடவர்களுக்கு

அரசன் = அரசனான

அயில்  = கூரிய

அம்பு போல்,  = அம்பைப் போல

பாடவத் = வல்லமை

தொழில் = தொழில் செய்யும்

மன்மதன்  = மன்மதன்

பாய் = பாய்ந்த

கணை  = கணையைப் போல

ஓட = ஓடும்படி

 உட்கி = அஞ்சி

 உயிர்  உளைந்தாள் அரோ! = உயிர் வருந்தினாள்


இராமன் , தாடகை மேல் அம்பு எய்தான்.

இங்கே, மன்மதன் அம்பு எய்கிறான். 

இரண்டு ஆடவர்கள், பெண்கள் மேல் அம்பு எய்ததை கம்பன் காட்டுகிறான். 

காமம் படுத்திய பாடு. காப்பியத்தை எங்கெல்லாம் கொண்டு சென்றது என்று நாம் பார்ப்போம். 

No comments:

Post a Comment