Monday, December 30, 2019

திருக்குறள் - பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு

திருக்குறள் - பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு



பாடல்


அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.



பொருள்

அற்றால் = முதலில் உண்ட உணவு முற்றுமாக சீரணம் ஆன பின். அற்றல் என்றால் விட்டுப் போதல். முதலில் உள்ள உணவு முற்றிலும் உடலை விட்டுப் போய் விட வேண்டும்.

அறவறிந்து உண்க  = அடுத்த  உணவை  அளவு அறிந்து உண்க

அஃதுடம்பு =  அப்படிச் செய்தால், அது உடம்பை

பெற்றான் = பெற்றவன்

நெடிதுய்க்கும் = நெடிது உய்க்கும்

ஆறு. = வழி

அற்றால்  என்ற ஒரு வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றும் அது என்ன சொல்ல வருகிறது என்றும் முந்தைய  பிளாகில் பார்த்தோம். 

"பெற்றான்" என்றால் என்ன?

யார் பெற்றான்? எதற்கு பெற்றான் ? என்ற கேள்வி வரும் அல்லவா?


முன்பு  உண்ட உணவு செரித்து விட்டதா இல்லையா என்று அறிந்து பின் அளவு அறிந்து உண்டால்  அது உடம்பைப் பெற்றவன் நீண்ட நாள் வாழும் வழி செய்யும் என்று பார்த்தோம்.

உடம்பைப் பெற்றவன் என்றால் அது உடம்பை குறிப்பது அல்ல என்று தெரிகிறது அல்லவா?  

பெறுவது என்றால் அதற்கு இரண்டு பேர் வேண்டும். ஒருவர் கொடுக்க வேண்டும், மற்றவர் பெற்றுக் கொள்ள வேண்டும் 

உடம்பை கொடுத்தது யார்? அந்தக் கேள்வியை இப்போதைக்கு விட்டு விடுவோம்.  

பெற்றது யார்?  நான் பெற்றேன் என்றால், நான் வேறு, இந்த உடம்பு வேறு என்று தெரிகிறது அல்லவா?  நான் ஒரு பரிசை பெற்றேன் என்றால், நான் வேறு அந்தப் பரிசுப் பொருள்  வேறு என்று அறியலாம் அல்லவா.

இந்த உடம்பைப் பெற்றவன் யாரோ, அவன் நெடிது உய்க்கும் வழி என்கிறார்.

இப்போதைக்கு, உடம்பைப் பெற்றவன் ஆத்மா, உயிர், ஏதோ ஒரு சக்தி என்று வைத்துக் கொள்வோம்.  அந்த உயிர் இந்த உடம்பை பெற்றுக் கொண்டது. அது  நெடிது உய்க்கும் வழி என்று சொல்கிறாரே, அப்படி என்றால் என்ன?

இந்த உடம்பை வைத்துக் கொண்டு அந்த உயிர் ஏதோ செய்கிறது..."நெடிது உய்கிறது "

அப்படினா என்ன?


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_30.html

No comments:

Post a Comment