Wednesday, November 9, 2022

திருக்குறள் - திரு சேரும் திறனறிந்து

        

 திருக்குறள் - திரு சேரும் திறனறிந்து  




ஒரு பெரியவர், நல்லவர், உயர் அதிகாரி வீட்டுக்குப் போவது என்றால் காலம் நேரம் அறிந்து போவோம் அல்லவா ? அவருக்கு நேரம் இருக்குமா? நல்ல மூடில் இருப்பாரா, என்பதெல்லாம் அறிந்து கொண்டுதான் போக வேண்டும். 



அது ஒரு புறம் இருக்கட்டும். 



நாம் எல்லாம் செல்வததை சேர்க்க மிகுந்த முயற்சி செய்கிறோம்.  நாம் செல்வத்தை தேடி அலைகிறோம். அதற்குப் பதிலாக, செல்வம் நம்மைத் தேடி வரும் என்றால் எப்படி இருக்கும்? அதற்கு வள்ளுவர் வழி சொல்கிறார். 





"அறத்தினை அறிந்து, அதன் படி பிறர் பொருளை விரும்பாதவர்களை எப்படி சென்று அடைவது என்று திருமகள் காத்துக் கிடப்பாள்"



பாடல் 



அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு



பொருள் 




(please click the above link to continue reading)


அறன்அறிந்து = அறத்தினை அறிந்து 


வெஃகா = பிறன் பொருளை அடைய விரும்பாத 


அறிவுடையார்ச்  = அறிவுடையாரைச் 


சேரும் = சென்று அடையும் 


திறனறிந்து = எப்போது செல்லலாம், எப்படிச் செல்லலாம் என்று 


ஆங்கே திரு = அங்கே, திருமகள் 




சில சமயம் நமக்கு எதிர் பார்க்காமல் சில செல்வம் வந்து சேரும். நாம் முதலீடு செய்த செல்வம் விலை ஏறி பலன் தரும், பதவி உயர்வு, ,போனஸ் போன்றவை வரும். 



நாம் எதிர் பார்த்து இருக்க மாட்டோம். 



வள்ளுவர் சொல்கிறார், திருமகள் காத்துக் கொண்டு இருப்பாளாம். எப்படி இவனைப் போய்ச் சேர்வது என்று. சரியான காலம் பார்த்து நம் வீட்டுக்கு வந்து விடுவாளாம். 



எப்போது என்றால், நாம் மற்றவர் பொருளை விரும்பால் இருக்கும் பொழுது. 




எப்போது வருவாள் என்று தெரியாது. சரியான சமயத்தில் வந்து விடுவாள் 





[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


அகன்ற அறிவுஎன்னாம்




பொல்லாத சூழக் கெடும்




வேண்டற்க வெஃகியாம் 


No comments:

Post a Comment