Friday, December 29, 2023

கம்ப இராமாயணம் - வலியானே, வலி காண வாராயோ

கம்ப இராமாயணம் - வலியானே, வலி காண வாராயோ 



உடல் உறுப்புகள் அறுபட்ட சூர்பனகை புலம்புகிறாள். தன் உறவினர்கள் ஒவ்வொருவராக அழைக்கிறாள். 


கோழிக் குஞ்சை பருந்து தூக்க வந்தால், தாய்க் கோழி தன் சிறகால் மூடி குஞ்சுகளை பாதுக்காக்கும். குட்டி போட்ட நாய், தன் குட்டியின் பக்கத்தில் யாராவது அன்பாக வந்தால் கூட எங்கே குட்டிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அப்படி நெருங்கி வருபவர்கள் மேல் பாய்ந்து, குரைத்து, விரட்டி விடும். 


அப்படி சாதாரண விலங்குகளே தன் குட்டியை பாதுக்காக்கும் போது, புலிக் குட்டிக்கு ஏதாவது ஆபத்து வர தாய்ப் புலி விடுமா?  அப்படி, இராவணா, நீ இருக்கும் போது, எனக்கு இப்படி ஒரு துன்பம் வந்து விட்டதே என்று சூர்பனகை புலம்புகிறாள். 


ஊழிக் காலத்தில் எல்லாம் அழிந்தாலும், தாங்கள் அழியாத மும்மூர்த்திகளுக்கும், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அஞ்சாத வலிமை கொண்ட இராவணனே, என் வலியைப் பார்க்க வரமாட்டாயா என்று அழுகிறாள். 


பாடல் 


"தாய்ப் புலி அருகில் இருக்கும் போது  "புலிதானே புறத்து ஆக, குட்டி

 கோட்படாது" என்ன, ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை      பொய்யோ? ஊழியினும்

சலி யாத மூவர்க்கும்,      தானவர்க்கும், வானவர்க்கும்,

வலியானே! யான் பட்ட வலி      காண வாராயோ?


பொருள் 


"புலிதானே புறத்து ஆக = தாய்ப் புலி அருகில் இருக்கும் போது 


குட்டி கோட்படாது = புலிக் குட்டியை யாரும் பிடிக்க முடியாது 


என்ன = என்ற 


ஒலி  = ஆர்பரித்து சப்தம் உண்டாக்கும்  


ஆழி = கடல் சூழ்ந்த 


உலகு = உலகம் 


உரைக்கும் உரை = சொல்லும் உண்மை 


பொய்யோ? = பொய்யா? 


ஊழியினும் = ஊழிக் காலத்திலும் 


சலி யாத மூவர்க்கும் = அழியாத மும்மூர்த்திகளுக்கும் 

,

தானவர்க்கும் = அசுரர்களுக்கும் 


வானவர்க்கும் = தேவர்களுக்கும் 


வலியானே!  = மிக்க வலிமை உடையவனே 


யான் பட்ட வலி = நான் கொண்ட வலியை 


காண வாராயோ? = காண வரமாட்டாயா ?


நமக்கு உடல் நிலை அல்லது மன நிலை சரி இல்லை என்றால் யாராவது நம்மை வந்து பார்த்து, பேசி, ஆறுதலாக நாலு வார்த்தை சொன்னால் கவலை கொஞ்சம் குறைந்தது மாதிரி இருக்கும் அல்லவா?




2 comments:

  1. Aaruthal solvatharku kooda ippo ellaam aallkal illai....🥺

    ReplyDelete
  2. ஆறுதல் & மனிதர்கள் தேவை🙏

    ReplyDelete