Sunday, March 31, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - புலால் என்ற புண்

திருக்குறள் - புலால் மறுத்தல் - புலால் என்ற புண் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/03/blog-post_31.html


நம் உடம்பில் ஒரு வெட்டு காயம் ஏற்பட்டால், அல்லது கீழே விழுந்து அடி பட்டாலோ, ஒரு புண் வரும் அல்லவா. தோல் கிழிந்து, சதை கிழிந்து, இரத்தம் வரும். அந்த புண்ணை யாராவது தின்பார்களா?  


ஒரு விலங்கை கத்தியால் வெட்டினால், அதுவும் அதன் உடலில் வரும் புண்தானே. அந்தப் புண்ணை யாராவது தின்பார்களா?  எவ்வளவு அசிங்கம் அது. எவ்வளவு அருவெறுப்பு அது. அது தெரியாததால் தான் மக்கள் ஒரு விலங்கின் புண்ணை உண்கிறார்கள் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


உண்ணாமை வேண்டும் புலாலைப் பிறிதொன்றின்

புண்ண துணர்வார்ப் பெறின்.


பொருள் 


உண்ணாமை வேண்டும் = உண்ணாமல் இருப்பார்கள் (எப்போது என்றால்)


புலாலைப் = புலால் என்பது 


பிறிதொன்றின் = மற்றொரு உடம்பின் 


புண்ணது = புண் அது (என்று)  


உணர்வார்ப் பெறின் = உணரும் அறிவைப் பெற்றால் 


மாமிசம் என்பது ஒரு விலங்கின் புண். புண்ணை யாராவது தின்பார்களா? என்று ஒரு அருவெறுப்பை உண்டாக்குகிறார். 




1 comment:

  1. adutha pathivai podavum
    12days airuchuga iya

    ReplyDelete