Monday, January 20, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - 5 - கடதட யானை என

வில்லி பாரதம் - சிகண்டி - 5 - கடதட யானை என 


திருமணம் செய்து கொள்ள ஆவலோடு வந்திருந்த அனைத்து நாட்டின் அரசர்களில், தங்களுக்கு பிடித்த அரசரை தேர்ந்து எடுக்க ஆசையோடு வந்த காசி இராஜாவின் பெண்கள் மூவரும், அங்கே பீஷ்மரை கண்டு கொஞ்சம் ஆச்சரியப் பட்டார்கள். இந்தக் கிழவன் இங்கே என்ன செய்கிறான் என்று.

பீஷ்மர் அதை எல்லாம் பற்றி கவலைப் படவில்லை. அந்த மூன்று பெண்களையும் கவர்ந்து, தன் தேரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.

மதம் கொண்ட யானை போல சென்றார் என்கிறார் வில்லியார்.

பாடல்

ஏனைவேந்த ரெதிரிவரைப்பெருந்
தானைசூழ்மணிச் சந்தனத்தேற்றியே
சோனைமாமதஞ் சோருங்கடதட
யானையென்ன விளவலொடேகினான்.

பொருள்

ஏனை = மற்ற

வேந்தர் = அரசர்கள்

எதிர் = எதிரில்

இவரை = இந்த மூன்று பெண்களையும்

பெருந் = பெரிய

தானை = படை

சூழ் = சூழ்ந்த

மணிச்  = மணிகள் கட்டிய

சந்தனத்தேற்றியே = தேரில் ஏற்றி

சோனை =அடை மழை போல

மாமதஞ் சோருங் = மதன நீர் சொரியும்

கடதட = பெரிய தலையை உடைய (கடம் = மதம், தடம் = இடம், மதம் பிறக்கும் இடம்)

யானையென்ன = யானை போல

விளவலொடேகினான். = இளவரசனோடு சென்றான்



அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.

என்பது கந்தர் அலங்காரம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/5.html

1 comment:

  1. இது சுயம்வரம் போல இல்லையே. அடாவடியாக அபகரித்து (kidnapping) செல்வதாக உள்ளதே!

    ReplyDelete