Monday, January 20, 2020

திருக்குறள் - ஓரினச் சேர்க்கை

திருக்குறள் - ஓரினச் சேர்க்கை 


இன்று ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்வது, பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது என்பது சட்டப்படி அங்கீகாரம் பெற்ற ஒன்றாக ஆகிவிட்டது.

"ஏன், ஒரே பாலினத்தைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாதா? உனக்கு பிடிக்கவில்லை என்றால் செய்து கொள்ளாதே.  மற்றவர்களை தடுக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது? இது தனி மனித சுதந்திரம். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை " என்ற வாதம் முன் வைக்கப் படுகிறது.

என்ன பதில் சொல்வது?  சட்டம், தனி மனித உரிமை, தனி மனித சுதந்திரம் என்று வந்த பின், அதற்கு என்ன பதில் சொல்லுவது.

ஓரினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்ளாத இளைய தலை முறையினர் கூட, "எனக்கு ஏற்பு இல்லை. ஆனால், அதற்காக அது தவறு என்று எப்படி சொல்லுவது" என்று கேட்கிறார்கள்.

பெரியவர்களும் பதில் சொல்ல முடியாமல் விழிக்கிறார்கள்.

இது சரிதானா? எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என்று விட்டு விடுவதா?  இப்படியே போனால் எங்கு போய் முடியும் இது?  என்ற பயம் தலை தூக்காமல் இல்லை.

இதில் ஏதோ தவறு என்று மனம் சொல்கிறது. இருந்தும், என்ன தவறு என்று சொல்ல முடியவில்லை.  அது சரி என்று சொல்பவர்களின் வாதத்தை எதிர் கொள்ள முடியவில்லை.

ஒரு சமுதாயம் இப்படி தடுமாறி நிற்கும் போது, அந்த சமுதாயத்திற்கு யார் வழி காட்டுவது?  எது சரி, எது தவறு என்று யார் எடுத்துச் சொல்வது? அப்படியே சொன்னாலும்,  யார் ஏற்றுக் கொள்வார்கள்?

திருமணம் என்பது இரண்டு தனி மனிதர்கள் சம்பந்தப் பட்ட ஒன்றுதானா? அதற்கு மேல்  அதில் ஒன்றும் இல்லையா?

திருமணத்துக்கும் , சமுதாயத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா ?

இருக்கிறது என்றால், அது என்ன தொடர்பு?

ஏதோ பெரிய புரட்சிகரமான ஒன்றை கண்டு பிடித்துவிட்டது போல  சொல்கிறார்கள்.

ஏறக்குறை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், இவற்றைப் பற்றி மிக மிக தீவிரமாக,  ஆழமாக யோசித்து எழுதி வைத்து விட்டுப் போய் இருக்கிறார்கள்.

அவற்றை எல்லாம் படிக்காமல் விட்டதால், திக்கு திசை தெரியாமல்  தவிக்கிறோம்.


"உலகம் எங்கேயோ போய் கொண்டிருக்கிறது...நீங்க வேற திருக்குறள், ஆத்தி சூடி என்று பஞ்சாங்கம் வாசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்...அதை எல்லாம் தூக்கி மூட்டை கட்டி வைத்து விட்டு வாருங்கள்.." என்று சிலர் கூறலாம்.

திருக்குறளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவரே கூடச் சொல்லவில்லை.

நிற்க அதற்கு தக என்று தான் சொல்லி இருக்கிறார்.

அவர் என்ன தான் சொல்லி இருக்கிறார் என்று பார்ப்போம்.

ஏற்புடையதாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம். இல்லை என்றால் விட்டு விடுவோம்.

தெரிந்து கொள்வதால் என்ன பிழை வந்து விடப் போகிறது?

எந்த அளவுக்கு நம்மவர்களின் சிந்தனை சென்று இருக்கிறது என்று பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது.

இதற்கு மேலும் சிந்திக்க முடியுமா என்று தோன்றுகிறது.

இன்றைய மேற்கிந்திய சமுதாய மற்றும் உளவியல் கோட்பாடுகளை எல்லாம்  ஒரே அதிகாரத்தில் தூக்கிச் சாப்பிட்டுவிட்டுப் போகிறார் வள்ளுவர்.

Capitalism - socialism - communism - இவை அனைத்தையும் சொன்னது மட்டும் அல்ல,  அவற்றை தாண்டிச் செல்கிறது வள்ளுவரின் சிந்தனை.

அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார்? Build up கொஞ்சம் தூக்கலா இருக்கே  என்று நினைக்கிறீர்களா....

அதையும் தான் பார்த்து விடுவோமே...


interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_20.html

1 comment:

  1. ஆவலை கிளப்பி விட்டீரே! வள்ளுவர் என்ன தான் சொல்லி இருக்கிறார் என்பதை பார்க்கத்தான் போகிறோம்!

    ReplyDelete