Friday, October 9, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - கோட்டிய சிந்தையான்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - கோட்டிய சிந்தையான் 

இலக்கியம் படிக்க பொறுமை வேண்டும். அவசரம் அவசரமாக வாசித்து விட்டுப் போவதற்கு அல்ல இலக்கியங்கள். 

நேரம் ஒதுக்கி, நிதானமாக, ஆழ்ந்து, இரசித்துப் படிக்க வேண்டும். 

மொபைல் screen இல் மேலும் கீழும் இரண்டு இழுப்பு இழுத்து விட்டு, "ஹா இதுதானா " என்று சொல்லி விட்டுப் போக அல்ல இலக்கியங்கள். 


அதில் அழகு உண்டு, உண்மை உண்டு, மனித மனத்தின் பிரதி பலிப்பு உண்டு, அறம் உண்டு, மொழியின் சிறப்பு உண்டு, வாழ்க்கைப் பாடம் உண்டு...

முதல் வாசிப்பில் சில சமயம் இவை பிடி படமால் போகலாம். படிக்க படிக்கப் புதுப் புது அர்த்தங்கள் வரும். 


வீடணன் அடைக்கலம் அடைந்தால் என்ன, அடையாவிட்டால் நமக்கு என்ன. அது தெரிந்து என்ன ஆகப் போகிறது நமக்கு...என்று நினைக்கக் கூடாது. 


அறிவு வளர ஆயிரம் வழிக்கள் இருக்கிறது.  மனம் வளர இலக்கியமும், மதமும் மட்டும் தான் இருக்கின்றன.  அதிலும் மதம் இப்போது பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு இருக்கிறது.  எனவே, நமக்கு கிடைத்தது எல்லாம், இலக்கியம் மட்டும் தான். 


மன வளர்ச்சி பெற, கற்பனை விரிய, எண்ணங்கள் பக்குவப் பட...இலக்கியத்தை  ஆழ்ந்து படிக்க வேண்டும். அனுபவித்து படிக்க வேண்டும். 


அப்படி படிக்க நேரம் இல்லை என்றால், நேரம் கிடைக்கும் போது படிப்பது நலம்.  


கதைக்கு வருவோம்....


இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் கூறுகிறான் வீடணன். பிரகலாதன் கதை பூராவும் சொல்கிறான். (பிரகலாதன் மற்றும் நரசிம்ம அவதாரம் பற்றி தனியே blog எழுதி இருக்கிறேன்.).

அதை எல்லாம் கேட்ட இராவணன் கோபம் கொள்கிறான். 

வரலாற்றில் இருந்து பாடம் படிக்க மறுக்கிறான் இராவணன். எனக்கு அது நிகழாது என்ற இறுமாப்பு. 

குப் பென்று தீ பிடித்தால் எப்படி இருக்குமோ அப்படி கோபம் கொள்கிறான். உருகிய அரக்கு போல அவன் கண்கள் சிவக்கின்றன. சிந்தை எல்லாம் சீதை மட்டுமே. ஒன்றும் அறிவில்  ஏற மறுக்கிறது. 


பாடல் 


கேட்டனன் இருந்தும், அக் கேள்வி தேர்கலாக்

கோட்டிய சிந்தையான், உறுதி கொண்டிலன், -

மூட்டிய தீ என முடுகிப் பொங்கினான் -

ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண் கணான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_9.html


click the above link to continue reading

கேட்டனன் = வீடணன் கூறிய அறிவுரைகளை கேட்டான் இராவவனன் 

இருந்தும் = இருந்தாலும் 

அக் கேள்வி தேர்கலாக் = கேட்டதின் பொருள் ஒன்றும் புரியவில்லை. 

கோட்டிய சிந்தையான் = கோட்டம் என்றால் வளைவு. சிந்தனை நேராக இல்லை அவனுக்கு 


உறுதி கொண்டிலன் = வீடணன் கூறியவை எல்லாம் தனக்கு நல்லது என்று உறுதியாக  அவன் நினைக்கவில்லை 


மூட்டிய தீ என = மூட்டப்பட்ட தீ போல 

முடுகிப் பொங்கினான் = சுழன்று எழுந்தான் 


ஊட்டு அரக்கு  = உருகிய அரக்கு  

ஊட்டிய அனைய  ஒண் கணான். = கண்ணில் விட்டது போல சிவந்த கண்களை உடையவன் 


என்னென்ன பாடங்கள்...


முதலாவது, நல்லவர்கள் சொன்ன அறிவுரைகளை மனம் ஏற்காமல் இருப்பது. 

இரண்டாவது, நடந்தவற்றில் இருந்து பாடம் படிக்காமல் இருப்பது 

மூன்றாவது, சிந்தை நேர்மையாக இல்லாமல் இருப்பது 

நான்காவது, கோபம் கொள்வது 


அழிவுக்கு வேறு என்ன வேண்டும்? 


காமம் ஒரு புறம். கோபம் மறு புறம். மூளை வேலை செய்யுமா? 


சரி, அது போகட்டும், அதுக்கும் வீடணன் அடைக்கலத்துக்கும் என்ன சம்பந்தம்? 


இருக்கே...அது என்னன்னா ....


1 comment:

  1. செஞ்சோற்று கடன் என்பது பலவீனமான வாதம்.அதர்மம் இருக்க கூடிய இடத்தில் இம்மாதிரி வாதம் பொறுந்தாது.விபீடணன் ராமனிடம் அடைக்கலம் செய்யாமல் இருந்தால் ,ராவணனின் பாவம் அவனையும் சற்றாவது சாரும். நீங்கள் என்ன கூறப் போகிறீர்கள் என்பதை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete