Thursday, October 8, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - ஒரு முன்னுரை

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - ஒரு முன்னுரை 


வாழ்கிற காலம் எல்லாம் வாழ்ந்து விட்டு, நன்றாக அனுபவித்து விட்டு, போர் என்று வந்த போது, இராவணனை விட்டு விட்டு இராமன் பால் வீடணன் போனது சரியா?  தவறோ சரியோ, இறுதி வரை கூட இருந்திருக்க வேண்டாமா?


என்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு என்று வள்ளுவம் பேசுகிறதே. 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_8.html

Pl click the above link to continue reading


ஊருக்கு ஒரு ஞாயம், இராமன் அடியார்களுக்கு ஒரு ஞாயமா? என்ற கேள்வி பிறக்காமல் இல்லை. 

கும்பகர்ணனும், இந்திரஜித்தும் இராவணனுடன் போரிட்டு உயிர் விட்டார்கள். வீடணன் மட்டும் இராவணனை விட்டு விட்டு இராமன் பக்கம் போய் விட்ட்டான்.


போனது மட்டும் இல்லை, இராவணனைப் பற்றிய இரகசியங்களை எல்லாம் இராமானுக்குச் சொல்லித் தந்தான். இது எந்த ஞாயத்தில் சேர்ந்தது? 


இது துரோகம் இல்லையா? உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த வேலை இல்லையா?


இப்படி ஒரு நிகழ்வு ஏன் நிகழ்ந்தது? இதன் மூலம் காப்பியம் நமக்குச் சொல்ல வரும்  செய்திதான் என்ன?


வாருங்கள், ஆராய்வோம்.



No comments:

Post a Comment