Friday, March 12, 2021

திருக்குறள் - உரைப்பாயிரம் - ஒரு முன்னோடம்.

 திருக்குறள் - உரைப்பாயிரம் - ஒரு முன்னோடம். 


உலகிலே ஆயிரக்கணக்கான நூல்கள் இருக்கின்றன.  எவராலும் அனைத்து நூல்களையும் படித்து விட முடியாது. எனவே நூல்களை தெரிந்து எடுத்துப் படிக்க வேண்டும். 


இந்த நூல் எது பற்றியது, இதை எழுதியவர் யார், யாருக்காக எழுதப் பட்டது, எதைப் பற்றி எழுதப் பட்டது  என்றெல்லாம் தெரிந்து கொண்டு இது நமக்குச் சரியான நூல் தானா என்று அறிந்து கொண்டு பின் படிக்க வேண்டும். 


இருக்கும் காலம் கொஞ்சம். படிக்க வேண்டியதோ மலை [போல இருக்கிறது. நூல்களை தேர்வு செய்வதில் கவனம் இல்லை என்றால், தேவை இல்லாதவற்றை படிப்பது மட்டும் அல்ல, தேவையானவற்றை படிக்காப் பிழையும் நிகழ்ந்து விடும். 


சரி, நூலை பற்றிய இவ்வளவு செய்திகளை எங்கிருந்து தெரிந்து கொள்வது ? 


இதற்குத்தான் அந்தக் காலத்தில் பாயிரம் என்று ஒன்று வைத்தார்கள். 


பாயிரம் என்றால் முகவுரை என்று வைத்துக் கொள்ளலாம். பாயிரத்தில் மேலே சொன்ன அனைத்து விடயங்களும் இருக்கும். அதைப் படித்தாலே அந்த நூலின் தன்மை தெரிந்து விடும். 


பாயிரம் பொதுச் சிறப்பு என இரு பாற்றே (நன்னூல் 2)


அந்தப் பாயிரம் பொது, சிறப்பு என்று இருவகைப் படும். 


இதில் பொதுப் பாயிரம் என்றால் என்ன என்று நன்னூல் கூறுகிறது. 


நூலே நுவல்வோன் நுவலும் திறனே

கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும்

எல்லாநூற்கும் இவை பொதுப் பாயிரம்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_12.html

(click the above link to continue reading)


எப்படி சொற்களை சிக்கனம் பிடித்து எழுதி இருக்கிறார்கள் என்று பாருங்கள். 

முதல் அடியின் கடைசிச் சொல் "திறனே". திறனே என்றால் திறன், இயல்பு, பெருமை என்று வைத்துக் கொள்ளலாம். இப்போது பொருள் என்ன என்று சிந்திக்கலாம்.


நூலே  = நூலின் திறம். அந்தத் திறத்தை இங்கு வந்து பொருத்திக் கொள்ள வேண்டும். அதாவது நூலின் தன்மை. 

நுவல்வோன் = நுவல்வோன் திறம் = மீண்டும் அந்தத் திறன் என்ற வார்த்தையை இங்கே பொருத்த வேண்டும். அதாவது, நூல் ஆசிரியனின் தன்மை. 


நுவலும் திறனே = சொல்லும் திறன், இயல்பு, வழி. 


கொள்வோன் = கொள்வான் திறம். மீண்டும் அந்த திறம் என்ற வார்த்தையை இங்கே பொருத்த வேண்டும். கேட்கும் மாணவனின் தன்மை. முதலாம் வகுப்பு மாணவனா அல்லது முனைவர் பட்டம் படிப்பவனா என்று வாசகனின் இயல்பு 

கோடல் கூற்றாம் = மாணவன் நூல் பொருளை கேட்கும் இயல்பு 

ஐந்தும் = இந்த ஐந்தும் 

எல்லாநூற்கும் = எல்லா நூல்களுக்கும் 

இவை பொதுப் பாயிரம் = இது பொதுப் பாயிரமாக இருக்கும். 


அதாவது, நூலின் அடக்கம், அதில் என்ன சொல்லி இருக்கிறது, யார் எழுதினார்கள், யாருக்காக எழுதினார்கள், எப்படி படிக்க வேண்டும், என்ற ஐந்தும் எல்லா நூலுக்கும் பொதுவாக சொல்லப் பட வேண்டும். 

பரிமேலழகர் தன் நூலுக்கு உரைப்பாயிரம் செய்கிறார். 


அது என்ன என்பதை அடுத்த ப்ளாகில் காண இருக்கிறோம்.



3 comments:

  1. Trailor is quite Interesting. Waiting for the main.:)

    ReplyDelete
  2. வணக்கம் ...
    துவக்கம் அருமை ...
    தொடர்கிறோம் உங்கள் எழுத்தை ....
    மகிழ்ச்சி ஐயா

    ReplyDelete