Friday, March 6, 2020

கம்ப இராமாயணம் - கொன்று இறந்த பின் கூடுதியோ?

சீதையிடம் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி இராவணன் வேண்டுகிறான்.

அந்த அநாகரீகமான வேண்டுகோளை கூட இராவணன் வாயிலாக கம்பன் எவ்வளவு அழகாகச் சொல்கிறான்.



பாடல்


இன்று இறந்தன நாளை இறந்தன
என் திறம் தரும் தன்மை இதால்; எனைக்
கொன்று இறந்தபின் கூடுதியோ? குழை
சென்று இறங்கி மறம் தரு செங்கணாய்!

பொருள்


இன்று இறந்தன = இன்றைய நாள் இறந்து போனது

நாளை இறந்தன = நாளையும் இப்படி இறந்து போகும்

என் திறம் = எனக்கு

தரும் தன்மை இதால் (நீ) தரும் தன்மை இது என்றால்

எனைக் = என்னை

கொன்று = கொன்று

இறந்தபின் கூடுதியோ? = நான் இறந்த பின் என்னிடம் கூடுவாயா ?

குழை = காதில் அணிந்த அணிகலன்

சென்று இறங்கி = சென்று திரும்பி

மறம் தரு = அதோடு சண்டை செய்யும்

செங்கணாய்! =  சிவந்த கண்களை உடையவளே



சீதையின் கண்கள் காது வரை செல்லுமாம். 

அது போகட்டும். 

அவன் பேசுகின்ற பேச்சிலும் ஒரு அவலச் சுவை தொனிப்பதை நாம் காண முடிகிறது அல்லவா?

இன்று போய், நாளை போய் என்று சொல்லவில்ல. 

இன்று இறந்து, நாளை இறந்து என்று சொல்லிக் கொண்டு போனவன்...

நான் இறந்த பின்பு தான் என் காதலை ஏற்றுக் கொள்வாயா ?

என்று கேட்கிறான். 



1 comment: