Monday, July 27, 2020

கம்ப இராமாயணம் - பெண் எனும் மென்மை

கம்ப இராமாயணம் - பெண் எனும் மென்மை 


கார் காலம் முடிந்த பின் சீதையை தேட உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் அதை மறந்து போனான். அவனுக்கு, அதை நினைவு படுத்த இலக்குவனை இராமன் அனுப்புகிறான்.

கோபத்தோடு வருகிறான் இலக்குவன்.

என்ன செய்வது என்று அறியாமல் வானரங்கள் சிதறி ஓடுகின்றன.

அனுமன் ஒரு உபாயம் செய்து, இலக்குவன் முன் தாரையை அனுப்புகிறான்.

ஒரு ஆண் எவ்வளவு முரடனாக, வலிமையானவனாக இருந்தாலும், ஒரு பெண்ணின் முன் அவன் கோபம், வீரம், ஆத்திரம் எல்லாம் அடங்கி விடுகிறது.  அதுதான் பெண்ணின் பெருமை.

ஆனால் அதை எல்லாம் இப்போது எதிர் பார்க்க முடியாது.

உனக்கு கோபம் வந்தால் பொய் சுவற்றில் முட்டிக் கொள் என்கிறார்கள். உனக்கு மட்டும் தான் வலிமையா, என் biceps ஐ பார் என்று முட்டியை மடக்குகிறாரகள்.

தவறில்லை.

பெண் வடிவில் பிறந்து விட்டதற்காக பெண்மை குணம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

சில ஆண்கள், பெண் வடிவத்தில் அடை பட்டுப் போய் விடுகிறார்கள்.

சில பெண்கள், ஆண் வடிவத்தில் அடை பட்டுப் போய் விடுகிறார்கள்.

நானும் துப்பாக்கி சுடுவேன், மல் யுத்தம் செய்வேன், கயிறு கட்டி மரத்தில் ஏறுவேன்  என்று தங்கள் பெண்மையின் மென்மையை சிதைத்துக் கொண்டு ஒரு கூட்டம்  அலைகிறது.

பின் ஏன் ஓரினச் சேர்க்கை என்பது வராது?

இங்கே இரண்டு பால் எங்கே இருக்கிறது ?

ஆண்கள் இருக்கிறார்கள். ஆண்களாக வேண்டும் முயற்சி செய்யும் பெண்கள் இருக்கிறார்கள்.

பெண்ணாக இருப்பதில் பெண்ணுக்கு சந்தோஷம் இல்லை. தானும் ஒரு ஆண் போன்றவள் என்று நிலை நிறுத்த பல முயற்சிகள் நடக்கின்றன. அந்த எண்ணமே, முயற்சியே சொல்கிறது அந்தப் பெண் ,  ஆண் என்பவன் தன்னை  விட உயர்ந்தவன் என்று ஒப்புக் கொண்டு விட்டதை. இல்லை என்றா எதற்கு இத்தனை   பாடுபட வேண்டும்? தன்னை விட தாழ்ந்த ஒன்றாக மாற யார் விரும்புவார்கள்?

தாரை வந்து எதிரில் நிற்கிறாள்.

இலக்குவன் வெட்கப் படுகிறான். சங்கடப் படுகிறான். தலை கவிழ்ந்து நிற்கிறான்.  அவன் கால்கள் பலவீனமாகி விட்டன. கீழே விழுந்து விடமால் இருக்க கையில் உள்ள வில்லை தரையில் அழுத்தமாக ஊன்றி , அதைப் பற்றிக் கொண்டு நிற்கிறான். மாமியார் முன்னால் நிற்கும்  மருமகனைப் போல வெட்கி நிற்கிறான்.     அப்போது தோழிகள் மத்தியில் இருந்து வெளிப்பட்டு தாரை சொல்கிறாள் ....

பாடல்                       


தாமரை வதனம் சாய்த்து,
    தனுநெடுந் தரையின் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான்
    ஆம் என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம்
    பொது இடைப் புகுந்து, பொன்தோள்
தூமன நெடுங்கண் தாரை,
    நடுங்குவாள், இனைய சொன்னாள்.


பொருள்

(to continue reading, pleae click the link below)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_27.html

தாமரை = தாமரை போன்ற

வதனம்  = முகத்தை

சாய்த்து, = மெல்ல சாய்ந்து

தனு = வில்

நெடுந் தரையின் ஊன்றி, = நீண்ட பூமியில் ஊன்றி

மாமியர்  குழுவின் = மாமியார்கள் உள்ள குழுவின் முன்

வந்தான் = இலக்குவன் வந்தான். அந்தக் காலத்தில் மருமகன் முன் மாமியார்கள் வரமாட்டார்கள். இப்போதெல்லாம் மருமகன் கூட பைக்கில் மாமியார்கள் போகிறார்கள்.

ஆம் என = என்பதைப் போல

மைந்தன் நிற்ப, = இலக்குவன் நிற்க


பூமியில் = பூமியில்

அணங்கு அனார்தம் = தேவதைகளைப் போல உள்ள பெண்கள்

பொது இடைப் புகுந்து = மத்தியில் இருந்து புறப்பட்டு

பொன்தோள் = பொன்னைப் போன்ற தோள்களை உடைய

தூமன = தூய்மையான மனதைக் கொண்ட

நெடுங்கண் தாரை, = நீண்ட கண்களைக் கொண்ட

நடுங்குவாள் = நடுக்கம் கொண்டவளாக

, இனைய சொன்னாள். = இவற்றைச் சொன்னாள்

தாரையைக் கண்டவுடன் , இலக்குவனின் கோபம் மறைந்து விட்டது. அது தான் பெண்ணின் மகத்துவம். அதாவது பெண்ணாக இருக்கும் பெண்களின் மகத்துவம்.






1 comment:

  1. பெண்கள் ஆண்களைப்போல இருப்போம் என்று சொல்லவில்லை.

    பெண்கள் தங்கள் வேலையைத் தாங்களே நிம்மதியாகப் பார்த்துக்கொண்டு இருப்போம் என்று சொல்கிறார்கள்.

    ReplyDelete