Sunday, April 18, 2021

திருக்குறள் - வான்சிறப்பு - அமிழ்தம் எனப்படும்

 திருக்குறள் - வான்சிறப்பு - அமிழ்தம் எனப்படும் 


திருக்குறளில், பால், இயல், அதிகாரம், குறள் என்ற அமைப்பு ஒரு புறம் இருக்க, இந்த அதிகாரங்களை எப்படி வகைப் படுத்தி இருக்கிறார் என்று நினைத்தாலே நமக்கு பிரமிப்பு வரும். 


வாழ்வின் நோக்கம், அதை அடையும் வழிகள் என்று ஒவ்வொரு படியாக நாம் எப்படி போக வேண்டும் என்று கை பிடித்து கூட்டிச் செல்லுவது போல அதிகார முறைமை இருக்கும். அது பற்றி பெரிய ஆராய்ச்சியே செய்யலாம். அவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்து அவற்றை அடுக்கி இருக்கிறார். 


கொஞ்சம், மேலோட்டமாக இங்கே பார்ப்போம். அந்தந்த அதிகாரங்கள் வரும் போது அதன் போக்கை ஆழ்ந்து சிந்திப்போம். 


முதலில் பாயிர இயல். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_18.html


(click the above link to continue reading )


அதில் நான்கு அதிகாரங்கள். 


கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறத்தல். 


இந்த நான்கு அதிகாரங்களும் ஏன் இந்த வரிசையில் இருக்க வேண்டும்? 


கடவுள் வாழ்த்து சரி. அதற்கு அடுத்தது நீத்தார் பெருமையோ அல்லது அறன் வலியுறுத்தலோ சொல்லி இருக்கலாம்தானே? 


மழை இல்லாவிட்டால், உலகில் எந்த அறமும் நிலைக்காது. இல்லறமும் சரி, துறவறமும் சரி நிற்காது. உணவு இல்லை, நீர் இல்லை என்றால் உயிர்கள் வாடும். பசியால் சாகும். இல்லறத்தானிடம் உணவு இல்லை என்றால், முற்றும் துறந்த முனிவருக்கு (நீத்தார்) அவன் எவ்வாறு உணவு அளிக்க முடியும். 


நீத்தார் இல்லை என்றால் இந்த உலகில் அறங்களை எடுத்துச் சொல்வது யார்?  முற்றும் துறந்த ஒருவனைத் தவிர வேறு யார் சொன்னாலும் உலகம் அவனை சந்தேகிக்கும். "அவவன் சொல்வதில் ஏதோ உள் நோக்கம் இருக்கும்" என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். எனவே,உலகுக்கு அறங்களை எடுத்துச் சொல்ல "நீத்தார்" வேண்டும். அவர்கள் சொல்லும் அறங்களின் வலிமையை பற்றிச் சொல்ல வந்த அதிகாரம் "அறன் வலியுறுத்தல்" 


எனவே, முதலில் மழை வேண்டும். மழை இருந்தால் உயிர்கள் தழைக்கும். உணவும், நீரும் கிடைக்கும். இல்லறம் சிறக்கும். இல்லறம் சிறந்தால் துறவறம் சிறக்கும். துறவு சிறந்தால், அறங்கள் வெளிப்படும். அதன் வலிமை புரியும். 


இந்த வரிசை தெரிந்து, இரண்டாவதாக வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வைக்கிறார். 


"இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்."


என்று அதிகார முறைமை பற்றிக் கூறுகிறார். 


இனி, அதிகாரத்துக்குள் நுழைவோம். 


1 comment: