Wednesday, November 15, 2023

பழமொழி - உப்புக் கடல் போல

பழமொழி - உப்புக் கடல் போல 


ஏன் தீயவர்கள் சகவாசம் கூடாது என்று சொல்லுகிறார்கள்?


தீயவர்களோடு சேர்ந்தால், ஒன்று அவர்கள் நல்லவர்களாக வேண்டும், அல்லது அவர்களோடு சேர்ந்து நாமும் தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு விடுவோம். 


எது நடக்க சாத்தியம் அதிகம்?


மலையின் மேல் உள்ள பனி உருகி, பளிங்கு போல நதி நீர் வரும். வரும் வழியில் உள்ள மூலிகைகள், பூக்களின் நறுமணம் எல்லாம் கொண்டுவரும். அத்தனை சுவையாக இருக்கும் அந்த நதி நீர். 


அதே நீர் கடலில் சேர்ந்து விட்டால், என்ன ஆகும்?


கடல் நீர் நல்ல நீராககுமா அல்லது நதி நீர் உப்புக் கரிக்குமா?


ஆயிரகணக்கான ஆண்டுகள் நதி நீர் கடலில் சேர்ந்த வண்ணமாக இருக்கிறது. இருந்தும், கடல் நீர் மாறவே இல்லை. மாறாக, நதி நீர்தான் உப்பு நீராகிறது. 


அது போல தீயவர்களோடு (கடல்) சேர்ந்த நல்லவர்களும் (நதி) அந்தக் கடல் நீர் போல் மாறிப் போவார்கள் என்கிறது இந்த நாலடியார். 


பாடல் 




 மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்

உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க

இனநலம் நன்குடைய வாயினும் என்றும்

மனநலம் ஆகாவாம் கீழ்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_15.html


(please click the above link to continue reading)


மிக்குப் = மிகுதியாக 


பெருகி = பெருகி வந்து 


மிகுபுனல் = அதிகமான நீர் 


பாய்ந்தாலும் = ஆற்றில் பாய்ந்தாலும் 


உப்பொழிதல் = உப்பு + ஒழிதல் = ஒருகாலும் உப்பை விடாத 


செல்லா ஒலிகடல்போல் = இருக்கின்ற கடல் போல 


மிக்க = நல்ல 


இனநலம் = சேரும் இனத்தின் குணம்  


 நன்குடைய வாயினும் = நல்லதாக இருந்தாலும்


என்றும் = எப்போதும் 



மனநலம் = நல்ல மனம் உடையவாக 


ஆகாவாம் = ஆகாது 


கீழ் = கீழான மனம் உடையவர்கள்.


நம்மைவிட உயர்ந்தவர்களைச் சார்ந்தால், நாமும் உயர்வோம்.


நம்மைவிட தாழ்ந்தவர்களைச் சார்ந்தால், நாமும் தாழ்வோம்.




No comments:

Post a Comment