Wednesday, November 8, 2023

கம்ப இராமாயணம் - அவையை எப்படி நடத்த வேண்டும் - பாகம் 1

 கம்ப இராமாயணம் - அவையை எப்படி நடத்த வேண்டும் - பாகம் 1 


இதுவரை இராமன் தென் கரையில் நின்று கொண்டிருந்ததை படம் படித்த கம்பன், இப்போது காமிராவை தூகிக் கொண்டு இலங்கைப் போகிறான். அங்கே என்ன நடக்கிறது என்று படம் பிடிக்கிறான். 


ஒரு தேர்ந்த இயக்குனரைப் போல, ஒரு காட்சியை cut பண்ணி வேறு ஒரு காட்சியை கொண்டு வருகிறான். வாசிப்பவர்களுக்கு ஒரு சலிப்பு இருக்காது. 


காமிரா இலங்கை போனாலும், வாசகன் நினைப்பு இராமன் மேலும் இருக்கும். அங்கே என்ன ஆச்சோ என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருக்கும்.


இலங்கையில், இராவணன் அவையை கூட்டி இருக்கிறான். ஆலோசனை செய்ய.


ஒரு சந்திப்பு (மீட்டிங்) எப்படி நடக்க வேண்டும் என்று கம்பன் காட்டுகிறான். 


மிக மிக ஆச்சரியமான நுணுக்கமான விவரிப்பு. ஒரு அவைக் கூட்டம் எப்படி நடத்த வேண்டும், எப்படி நடந்தது என்று இன்றைய மேலாண்மை (management) யில் கூறுவதற்கு ஒரு படி மேலே போய் காட்டுகிறான். 


இதை எல்லாம் படித்து இருந்தால் நம் பிள்ளைகளும் நாமும் எவ்வளவு அறிவில் சிறந்தவர்களாக சிறு வயதிலேயே ஆகி இருப்போம் என்று எண்ணத் தோன்றுகிறது. 


முதலில், சபையில் ஆலோசனைக்கு தேவை இல்லாத ஆட்களை வெளியே அனுப்புகிறான். 


பாடல் 


'முனைவரும், தேவரும், மற்றும் உற்றுளோர

எனைவரும், தவிர்க!' என ஏய ஆணையான்,

புனை குழல் மகளிரோடு இளைஞர்ப் போக்கினான்-

நினைவுறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/1.html



(pl click the above link to continue reading)


'முனைவரும் = முனிவர்களும் 


தேவரும் = தேவர்களும் 


மற்றும் = மேலும் 


உற்றுளோர எனைவரும் = அவர்களைப் போன்ற அனைவரையும் 


, தவிர்க!' = வெளியில் செல்லுங்கள் 


என = என்று 


ஏய ஆணையான் = ஆணையிட்டான் 


புனை குழல் = அழகு செய்யப்பட்ட கூந்தலை கொண்ட 


மகளிரோடு = பெண்களோடு 


 இளைஞர்ப் போக்கினான் = அறிவில் முதிராத இளையவர்களையும் நீக்கினான் 


நினைவுறு காரியம் = மனதில் நினைத்த காரியத்தை 


 நிகழ்த்தும் நெஞ்சினான் = நிகழ்த்திக் காட்டும் மனம் கொண்ட இராவணன் 


தேவர்கள் அரக்கர்களுக்கு எதிரிகள். அவர்களை நீக்கினான். 


முனிவர்கள் - விருப்பு வெறுப்பு இல்லாதவர்கள். அவர்களிடம் அரசாங்க யோசனை கேட்டு பலன் இல்லை. எனவே அவர்களையும் நீக்கினான். 


பெண்கள் - அங்கே பணி செய்யும் பணிப்பெண்கள். பெண்களிடம் இரகசியம் தங்காது என்பது ஒரு பொதுவான சிந்தனை. அதைக் கருத்தில் கொண்டு பெண்களை நீக்கினான். 


இளையவர் - கத்து குட்டிகள் இருப்பார்கள். அவர்களுக்கு யோசனை சொல்லும் அளவுக்கு அறிவு இருக்காது. எனவே அவர்களையும் நீக்கினான். 


தேவை இல்லாதவர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டான். 


நினைத்ததை முடிப்பவனான இராவணன். நினைத்ததை சாதித்து முடிப்பவர்கள், இப்படித்தான் இருப்பார்கள் என்று கம்பன் பாடம் நடத்துகிறான். 





அடுத்து என்ன செய்தான்?




No comments:

Post a Comment