Tuesday, August 20, 2024

கம்ப இராமாயணம் - இராமன் என்றோர் மானுடன்

கம்ப இராமாயணம் - இராமன் என்றோர் மானுடன் 



இராமன் பரம்பொருளின் அவதாரம் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. 

கம்ப இராமாயணத்தில், கம்பன் இராமனை தெய்வம் என்றே கொண்டாடுகிறான். ஒவ்வொரு காண்டத்திலும், அவனை முழு முதற் கடவுளாகவே துதிக்கிறான். 

இருந்தும், காப்பியம் முழுக்க அவனை ஒரு மாநிடனாகக் காட்டுகிறான். 

குடிகளின் நலம் விசாரிக்கும் அன்பான அரசனாக, தந்தை சொல் கேட்கும் மகனாக, தாயாரை வணங்கும் பிள்ளையாக, சீதையைக் கண்டவுடன் மனதைப் பறி கொடுக்கும் ஒரு இளைஞனாக,  ஜடாயுவுக்கு ஈமக் கடன் செய்கையில் கண்ணீர் விட்டு அழும் ஒரு உறவினனாக, குகன், வீடனனிடம் உடன் பிறவா சகோதரனாக, சீதையைப் பிரிந்து நின்று கலங்கும் ஒரு அன்பான கணவனாக, கோபம் கொள்ளும் அரசனாக, எதிரியையும் பாராட்டும் ஒரு வீரனாக இப்படி பல கோணங்களில் இராமன் இந்த அவதாரத்தில் எப்படி ஒரு மனிதனாக வாழ்ந்தான் என்று கம்பன் காட்டுகிறான். 

இராமன் கடவுள் என்று சொல்லி விட்டால், கடவுள் செய்வதை எல்லாம் நாம் செய்ய முடியுமா என்று இராமன் வாழ்ந்து காட்டிய வழியை யாரும் பின் பற்ற மாட்டார்கள். 

கிருஷ்ணன் காட்டிய வழியில் போக யாரும் விரும்ப மாட்டார்கள். அது முடியாது. அவன் சக்ராயுதம் கொண்டு சூரியனை மறைக்கிறான், விஸ்வரூப தரிசனம் தருகிறான்...இதெல்லாம் நம்மால் ஆகுமா?  இறைவனின் லீலை என்று இரசிக்கலாமே தவிர செய்ய முடியாது. 

மாறாக இராமன், அழுகிறான், தற்கொலைக்கு முயல்கிறான், தளர்ந்து விடுகிறான், தான் செய்த செயலை எண்ணி நோகிறான்....

மானுடம் வென்றதம்மா என்பான் கம்பன். 


எப்படி மனிதனாக அவதரித்த இராமன், மனிதனாக வாழ்ந்து காட்டினான் என்று கம்பன் வாயிலாக பார்ப்போம். 

இது எனது சிறு முயற்சி. உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன். 


 

1 comment:

  1. நல்ல முயற்சி அண்ணா

    ReplyDelete