Friday, April 2, 2021

திருக்குறள் - நிலமிசை நீடு வாழ்வார் - பாகம் 1

 திருக்குறள் - நிலமிசை நீடு வாழ்வார்  - பாகம் 1 


பாடல் 

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (03)


சீர் பிரித்த பின் 


மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்

நிலம் மிசை நீடு வாழ்வார்.


பொருள் 


மலர் மிசை = மலரின் கண் 


ஏகினான் = சென்று அடைந்தவனது 


மாண் = மாட்சிமை பொருந்திய 


அடி சேர்ந்தார் = திருவடிகளை சேர்ந்தவனது 


நிலம் மிசை = நிலத்தின் கண் 


நீடு வாழ்வார்  = நீண்ட நாள் வாழ்வார் 


பரிமேல் அழகர் இல்லாமல் இந்த குறளின் உரையை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.


இதில் என்ன இருக்கிறது என்று நினைப்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/1.html


(click the above link to continue reading)



"மலர் மிசை "  = இதில் மிசை என்பது ஒரு அசைச் சொல். அதை விட்டு விடலாம். மலரின் கண்.  எந்த மலர்? தாமரை, அல்லி , மல்லிகை என்று ஏதாவது ஒரு மலரா என்றால் பரிமேல் அழகர் உரை எடுக்கிறார் பாருங்கள். பிரமிக்க வைக்கும் உரை.  


ஒரு கட்சித் தலைவர், ஒரு நிறுவனத்தின் மேலாளார் வருகிறார் என்றால் அவரை வரவேற்று ஒரு நல்ல இடத்தில் அவருக்கு வசதி செய்து கொடுப்பது தானே வழக்கம்.  ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர் ஒரு சின்ன ரூமில் போய் தங்குவாரா? ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் தானே தங்குவார். 


உலகம் அனைத்துக்கும் தலைவரரான இறைவவன் தங்குவது என்றால் எங்கே தங்குவான்?


"அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் " என்று பரிமேலழகர் உரை செய்கிறார். 


அதாவது, மலர் என்றால் சாதாரண மலர் அல்ல. உள்ளக் கமலம் என்கிறார். அதுவும் எல்லோர் உள்ளமும் அல்ல. அன்பால் ஆண்டவனை நினைப்பவரது உள்ளம் என்ற மலரின் கண் என்கிறார். 


நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா?


சரி. அன்பால் நினைக்கலாம். நாம் நினைக்கும்படி இறைவன் இருப்பானா?  அவன் எப்படி இருப்பான் என்று நமக்குத் தெரியாது. தெரியாத ஒன்றை எப்படி நினைப்பது?  நினைக்காத போது எப்படி இறைவன் நம் உள்ளக் கமலத்தில் வருவான்? நம்மால் நினைக்கும் படி இருந்தால் இறைவன் நம் அறிவுக்கு உட்பட்டவனாகி விடுவானே? 


என்ற கேள்விகளுக்கு அவர் உரை செய்கிறார். 


"அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு"


நமக்கு இறைவன் எப்படி இருப்பான் என்று தெரியாது.  நாம் எப்படி நினைத்தாலும் அவன் அப்படியே வருவான். 


பிள்ளையாராக நினைத்தால் பிள்ளையாராக. ஏசுவாக நினைத்தால் ஏசுவாக, ஜோதியாக நினைத்தால் ஜோதியாக, எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள். நினைத்த வடிவில் வருவான். 


கல்லாக நினைத்தால் கல்லாகவே வருவான். மரம், செடி, கொடி ,  பூ, பழம், என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். 


எழுத்து தெய்வம், இந்த எழுது கோலும் தெய்வம் என்பான் பாரதி. 


உலகம் முழுவதும் இறைவன் படைப்பு என்றால், அவனின் அம்சம் எல்லாவற்றிலும் இருக்கும் தானே. அதனால், அன்பர்கள் எந்த வடிவில் நினைக்கிறார்களோ அந்த வடிவில் வருவான். 


சரி, நான் இப்போது நினைக்கிறேன்.  அவன் எப்போது வருவான்? இன்றே வருவானா ? கொஞ்ச நாள் ஆகுமா? ஆகும் என்றால் எவ்வளவு நாள் ஆகும்?  


"அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின், "


விரைந்து வருவான் என்கிறார். 


"மலர் மிசை" என்ற ஒரு சொல்லுக்கு இவ்வளவு விவரம். 


இன்னும் இருக்கிறது. 

2 comments:

  1. நல்ல ஏற்புடை விளக்கம் ....
    படித்தது தான் ஆயினும் உங்கள் விளக்கம் எப்போது கிடைக்கும் என்ற ஆவல் தருகிறது . வணக்கம்

    ReplyDelete
  2. மலர்மிசை என்கிற ஒரு சிறு வார்த்தைக்கே நமக்இகு புரிய இவ்வளவு நீண்ட விளக்கம் தேவைப்படுகிறது.
    பிரமாதம்.

    ReplyDelete