Wednesday, March 6, 2019

கம்ப இராமாயணம் - சடாயு, இராமன், இலக்குவன்

கம்ப இராமாயணம் - சடாயு, இராமன், இலக்குவன் 


இரண்டு பையன்களோ, அல்லது இரண்டு பெண்களோ இள வயது முதல் நட்பாக பழகி வந்திருப்பார்கள். அவர்களுக்கு இடையே மிக ஆழ்ந்த நட்பு இருக்கலாம்.  வளர்ந்த பின், அவரவர்கள் திருமணம் முடித்து அவர்கள் வழியில் போய் இருக்கலாம். அவர்களில் ஒருவரின் பிள்ளை தங்களுடைய தாய் அல்லது தந்தையின் நண்பரை பார்த்தால் எப்படி பழகுவார்கள் ?

எனது நண்பனின் மகன் என்னிடம் எப்படி பழகுவான் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

எனக்கும் அந்த நன்பனின் மகனுக்கும் பெரிய பாசப் பிணைப்பு இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை தன் தந்தையின் அல்லது தாயின் நண்பர் அல்லது நண்பி என்று மரியாதை இருக்கலாம். சின்ன ஆச்சரியம் இருக்கலாம்.


ஆனால், எனக்கு அந்தப் பிள்ளையை பார்க்கும் போது என் பிள்ளையை பார்ப்பது போன்ற ஒரு வாஞ்சை, அன்பு வரத்தான் செய்யும்.

இது ஒரு சிக்கலான இடம். அன்போடு அந்தப் பிள்ளையை அரவணைத்தால், அந்தப் பிள்ளை சங்கடத்தில் நெளியக் கூடும்.

இராமாயணத்தில் அப்படி ஒரு இடத்தை கம்பர் காட்டுகிறார்.

தயரதனும் , சடாயுவும் நெருங்கிய நண்பர்கள். தயரதன் இறந்த பின், இராம இலக்குவர்கள்  காட்டுக்குப் போகிறார்கள். காட்டில் ஜடாயுவை சந்திக்கிறார்கள். தங்கள் தந்தையின் நண்பர்.

என்ன நிகழ்கிறது, அவர்களுக்குள் என்ன பேசிக் கொண்டார்கள். எப்படி அறிமுகம் செய்து கொண்டார்கள். சடாயு தயரதனைப் பற்றி என்ன சொன்னார்....இராம இலக்குவன்கள் அவரோடு எப்படி பழகினார்கள் ?

சிந்தித்துப் பாருங்கள்....

இராமாயணம் காட்டும் அந்த உறவு கோலத்தை நாம் காண இருக்கிறோம் வரும் நாட்களில்...

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_6.html


1 comment:

  1. ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete