Saturday, September 19, 2020

கம்ப இராமாயணம் - மதம் கொண்ட யானை புகுந்த வயல்

கம்ப இராமாயணம்  - மதம் கொண்ட யானை புகுந்த வயல் 


காதல், அன்பு, கோபம், சகோதர பாசம், பெற்றோர் பிள்ளை பாசம், இயற்கை வர்ணனை இவற்றை எல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியும். அது பற்றி கவிதை எழுதுவது என்பது வேறு விஷயம். நம்மால் அவற்றை கற்பனை செய்து பார்க்க முடியும். 


போர், போர் களம், அங்கு நடக்கும் போர் முறை, இவற்றை எப்படி கற்பனை செய்வது? 

பார்த்திருந்தால் கற்பனை செய்யலாம். அல்லது சண்டையிட்டு இருந்தால் அது பற்றி சிந்திக்க முடியும். 

கம்பனில் போர் களம் என்று ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதலாம். அவ்வளவு இருக்கிறது. 

இராவணினன் தம்பி கும்ப கர்ணன் இறந்து போகிறான். அடுத்து இராவணனின் மகன் அதிகாயன் போருக்கு வருகிறான். 

போர் களத்தைப் பார்த்து மனம் நொந்து போகிறான். 

ஒரு மதம் கொண்ட யானை நெல் வயலில் புகுந்து சென்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தாதாம். 

இராமன் என்ற மத யானை விளையாடிய போர்க் களம் பற்றிய கம்பனின் உவமை அது. 


பாடல் 


கண்டான் அ(வ்) இராமன் எனும் களிமா
உண்டாடிய வெங்களன்; ஊடுருவ
புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உறத்
திண்டாடினன் வந்த சினத் திறலோன்.


பொருள் 

(please click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_19.html


கண்டான் = அதிகாயன் கண்டான் 

அ(வ்) = அந்த 

இராமன் எனும் = இராமன் என்ற 

களிமா = மதம் கொண்ட யானை 

உண்டாடிய = உண்டு + ஆடிய = உயிர்களை உண்டு ஆடிய 

வெங்களன்; = போர்க்களம் 

ஊடுருவ = ஊடுருவிப் பார்த்தான் 

புண்தான் = மனதில் காயம் உண்டாக 

உறு நெஞ்சு புழுக்கம் உறத் = பெரிய மனம் புழுங்கி 

திண்டாடினன் = திண்டாடினான் 

வந்த சினத் திறலோன். = அங்கு வந்த சினமும், திறமையும் கொண்ட அதிகாயன் 

மதம் கொண்ட யானை, நெல் வயலில் புகுந்து, அங்குள்ள நெல்லை எல்லாம் பறித்து வீசி, உண்டால் அந்த நெல் வயல் எப்படி இருக்குமோ அப்படி இருந்ததாம்  போர்க்களம். 

இன்னும் கம்பன் வர்ணிப்பான். 

No comments:

Post a Comment