Saturday, May 7, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - பொய்யில் கிடந்து புரளாதே

திருவாசகம் - யாத்திரைப் பத்து - பொய்யில் கிடந்து புரளாதே 


இறைவன் திருவடிகளை அடைய வேண்டும் விரும்பாத பக்தர்கள் யார் இருக்கிறார்கள். ஆசை இருக்கிறது. எப்படி என்ற வழி தான் தெரியவில்லை. அவர் செய்தார், இவர் செய்தார் என்று அதையே செய்து பார்கிறார்கள். யாருக்கோ எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டுக்கு மருந்து வாங்கி சாப்பிட்டால் என் நோய் குணமாகுமா? அவருக்கு ஆனதே என்றால் அவர் உடல் நிலை வேறு, என் உடல் வேறு. .உடலே அப்படி இருக்கும் போது, ஆன்மாவின் பக்குவம் வேறு வேறாகத்தானே இருக்கும். எல்லோருக்கும் ஒரே வழி எப்படி சரியாக் இருக்க முடியும். 


மணிவாசகர் கூறுகிறார் 


"இறைவன் திருவடியை அடைய வேண்டுமா? நான் போகிற பாதையில் வாருங்கள் என்று சொல்லவில்லை. முதலில் உங்கள் சிந்தனைகளை முதலில் திருத்துங்கள். அதை சரி பண்ணுங்கள். அப்புறம், அவன் திருவடியையே எப்போதும் நினையுங்கள். எப்பவாவது, நேரம் கிடைக்கும் போது அல்ல. எப்போதும். இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க. இந்த பொய்யான விடயங்களை விட்டு விடுங்கள்" என்கிறார். 


பாடல் 




 சேரக் கருதி, சிந்தனையைத் திருந்த வைத்து, சிந்திமின்;

போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன், புயங்கன், அருள் அமுதம்

ஆரப் பருகி, ஆராத ஆர்வம் கூர அழுந்துவீர்!

போரப் புரிமின் சிவன் கழற்கே, பொய்யில் கிடந்து புரளாதே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_40.html


(Pl click the above link to continue reading)


சேரக் கருதி = [இறைவன் திருவடிகளை] சேரக் கருதி 


சிந்தனையைத் = சிந்தனையை 


திருந்த வைத்து = திருத்தமாக வைத்து 


சிந்திமின் = சிந்தியுங்கள். இது மிக முக்கியம். முன்னோர் சொன்ன வழியில் போங்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் சிந்தியுங்கள் என்கிறார். 


போரில் பொலியும் வேல் = போர்க் களத்தில் போராடி அதனால் கூரான வேல் போன்ற 



 கண்ணாள் = கண்களை உடைய உமா தேவியின் 


பங்கன் = பாதி இடமாகக் கொண்டவன் 


புயங்கன் = பாம்பை அணிந்தவன் 


அருள் அமுதம் = அவனுடைய அருளாகிய அமுதத்தை 


ஆரப் பருகி = நன்றாகப் பருகி 


ஆராத ஆர்வம் கூர = தீராத தாகம் கொண்டு ஆர்வத்துடன் 


அழுந்துவீர்! = அதிலேயே இலயித்து கிடப்பீர் 


போரப் புரிமின் = அடைய விரும்புங்கள் 


சிவன் கழற்கே = சிவன் திருவடிகளையே 


பொய்யில் கிடந்து புரளாதே. = பொய்யில் கிடந்து புரளாதே 


சிந்தி சிந்தி என்றால் எதைச் சிந்திப்பது?


உமை பங்கனை சிந்தியுங்கள் என்கிறார். 


ஏன் உமை பங்களை சிந்திக்க வேண்டும்?


நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், ஒரு போதும் முழுமையான ஒருவராக இருக்க முடியாது. நீங்கள் ஆணாக இருந்தால், பெண் குணங்கள் உங்களுக்குள் அழுத்தி வைக்கப் பட்டு இருக்கிறது. மறைந்து கிடக்கிறது. 


பெண்ணுக்குள் ஆணின் தன்மை அழுத்தி மூடி மறைக்கப் பட்டு இருக்கிறது. 


மறைந்த அந்தத் தன்மை வெளியில் வரும் வரை நீங்கள் முழு மனிதராக முடியாது. 


அழுத்தி வைக்கப் பட்டு இருப்பது வெளியே வர போராடும். வெளியே வர விடாமல் ஏதோ ஒன்று அதை அமுக்கி வைத்துக் கொண்டே இருக்கும். இந்தப் போராட்டம் நடந்து கொண்டே இருக்கும். ஓயாத போர் இது. 


இரண்டும் ஒன்றாகக் கலந்தால் தான் சிந்தனையில் அமைதி பிறக்கும். தெளிவு வரும். இறை அனுபவம் சாத்தியப் படும். 


எனவே தான் உமை ஒரு பங்கனை சிந்தியுங்கள் என்றார். 


சிந்திக்க சிந்திக்க உங்களுக்குள் மறைந்து கிடக்கும் உணர்வுகள் வெளி வரும். ஆண், ஆணாகவோ, அல்லது பெண், ஒரு பெண்ணாகவோ இருந்தது எல்லாம் பொய். வெளி வேடம். அது உண்மை அல்ல. அதிலேயே கிடந்து புரண்டு கொண்டு இருக்காதீர்கள். 


ஆணுக்குள் ஒளிந்து கிடக்கும் பெண் வெளியே வருகிறாளோ அன்று தான் அவன் முழு மனிதனாவான். 


பெண்ணுக்கும் அப்படியே. 


இறைவனை அடைவதில் முதல் படி அது. 


நீண்ட யாத்திரையின் முதல் அடி அது. 








1 comment:

  1. அற்புதம் !
    தங்களின் சிந்தனை திறன் அபாரம்.

    ReplyDelete