Showing posts with label கந்தரனுபூதி. Show all posts
Showing posts with label கந்தரனுபூதி. Show all posts

Thursday, February 23, 2023

கந்தரனுபூதி - கருதா மறவா

                      

 கந்தரனுபூதி - கருதா மறவா 




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


நாம் வாழ்வை முழுவதுமாக ஏற்றுக் கொள்வது இல்லை. 


வாழ்வின் பெரும் பகுதியை நாம் வேண்டாம் என்று விலக்கி விடுகிறோம். நமது இன்னல்களுக்கு அதுதான் காரணம். 


இனிப்பு பிடிக்கும். நிறைய வேண்டும். கசப்பு பிடிக்காது. வேண்டவே வேண்டாம். 


இன்பம் வேண்டும். துன்பம் வேண்டாம். 


இப்படி வாழ்வை கூறு போட்டு, அது வேண்டும், அது விரும்பத் தக்கது, அது வேண்டாம், அது வெறுக்கத் தக்கது என்று நாம் விலக்கி வைக்கிறோம். 

இதனால் என்ன ஆகிறது?


விரும்பியது வேண்டும் என்ற ஆசை எழுகிறது. ஒன்று கிடைத்தால் அதை விட மேலே வேண்டும் ஆசை நிரந்தரமாக நம்மை தள்ளிக் கொண்டே இருக்கிறது. 


விரும்பியதை அடைய முடியாதோ என்ற பயம் வருகிறது. யாரும் தடுத்து விடுவார்களோ என்ற ஐயம் வருகிறது. விரும்பியது கிடைத்தாலும் அதை பாதுகாக்க வேண்டுமே என்ற கவலை வருகிறது. 

அது ஒரு புறம் இருக்க, 


விரும்பாதது வந்து விடுமோ என்ற கவலை. வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம். அதில் இருந்து எப்படி தப்புவது என்ற தவிப்பு. 


இப்படி வாழ்வை இரண்டாகப் பிரித்து வைத்துக் கொண்டு நாம் அன்றாடம் அல்லாடுகிறோம். 


சரி, அதுக்காக இன்பமும், துன்பமும் ஒன்றாக முடியுமா? பண வரவும், பணம் தொலைந்து போவதும் ஒன்றாக முடியுமா? என்று கேட்டால்....முடியாது. கடினம்தான். 


இறைவன் அருள் இல்லாவிட்டால் இந்த சம நோக்கு வராது. 


இதை "இருவினை ஒப்பு" என்பார்கள். 


அருணகிரிநாதருக்கு தெரிகிறது. இந்த இரு நிலை தான் துன்பத்துக்குக் காரணம் என்று. ஆனாலும், விட முடியவில்லை. தவிக்கிறார். 


முருகா, எனக்கு அருள் செய்ய மாட்டாயா? இந்த இரு வித நோக்கங்கள் போய், ஒன்றாகக் காணும் காட்சியை எனக்கு எப்போது அருள்வாய் என்று கேட்கிறார். 


பாடல் 


கருதா மறவா நெறிகாண வெனக் 

கிருதாள் வனசந்தர வென் றிசைவாய் 

வரதா முருகா மயில் வாகனனே 

விரதா சுரசூர விபாடணனே . 


பொருள் 




(pl click the above link to continue reading)



கருதா  = நினைப்பது 


மறவா  = மறப்பது 


நெறிகாண = இப்படி நினைப்பு, மறுப்பு என்ற இரு நிலை இல்லாத வழியை நான் காண 


வெனக்  = எனக்கு 


கிருதாள் = உன்னுடைய இரண்டு திருவடிகளை 


வனசந்தர வென் றிசைவாய்  = வனசம் தர என்று இசைவாய்? வனசம் என்றால் தாமரை மலர் என்று பொருள். உன் திருவடித் தாமரைகளை தர என்று இசைவாய்?


வரதா = வரம் தருபவனே, அல்லது வரை இல்லாமல் கொடுப்பவனே 


முருகா = முருகா 


மயில் வாகனனே  = மயிலை வாகனமாகக் கொண்டவனே 


விரதா = விரதங்களினால் அடையப் படுபவனே 

சுர = தேவர்களின் அதிபதி (சுர எதிர்மறை அசுர) 


சூர = சூரபத்மனின் 


 விபாடணனே . = பாடாணம் என்றால் கல், பாறை. ஆதியில் உயிர் பாடாண நிலையில் இருந்தது என்று சொல்லுவார்கள். அதாவது, கல் போலக் கிடந்தது என்று பொருள்.  பாறை போல் உறுதியான, ஈரம் இல்லாத சூர பத்மனை அழித்தவனே 


இன்ப துன்பங்களை ஒன்றாக ஏற்றுக் கொள்வது என்பது நீண்ட பயிற்சிக்குப் பின் வருவது. 


முதல் படியாக, துன்பமே வேண்டாம், துன்பம் வரவே கூடாது, வலியே கூடாது என்று விறைப்பாக இல்லாமல், வாழ்க்கை என்றால் இன்ப துன்பம் இரண்டும் கலந்ததுதான். வரட்டும் பார்ப்போம் என்று இருக்க வேண்டும். சரி, இன்று இந்தத் துன்பம் வந்து விட்டது. சரி, இதை ஏற்றுக் கொள்வோம் என்று பக்குவப் பட வேண்டும். அதற்காக துன்பத்தைக் கண்டு துவண்டு விடக் கூடாது. 


வரட்டுமே, வந்தால் என்ன. சமாளிப்போம் என்று இருக்க பழக வேண்டும். துன்பம் கட்டாயம் வரும். நாம் எவ்வளவுதான் வேண்டி விரும்பினாலும், அது நம்மை விடாது. எனவே, அதைக் கண்டு ஓடுவது ஒரு பயனும் தராது. 



துன்பமும் வாழ்வின் ஒரு பகுதி என்ற எண்ணம் வந்து விட்டால், வாழ்க்கை சமனப்படும். 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


 யாமோதிய கல்வியும் பாகம் 2


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


உதியா மரியா


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


உபதேசம் உணர்தியவா 


]




Saturday, February 18, 2023

கந்தரனுபூதி - உபதேசம் உணர்தியவா

                     

 கந்தரனுபூதி - உபதேசம் உணர்தியவா 




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


சமயப் பெரியவர்கள் இறைவன் பற்றியும், வாழ்க்கை, வினை என்பன பற்றியும் பல கருத்துகளை கூறுகிறார்கள். அதெல்லாம் சரியா? அவற்றை எப்படி ஏற்றுக் கொள்வது? அதற்கு என்ன அடிப்படை? சும்மா நம்பிக்கை என்று சொல்லிவிட்டால் போதுமா?  


அதுமட்டும் அல்ல, அந்த உண்மைகள் எல்லாம் என்றோ சொல்லப்பட்டவை. அவை இன்றைய நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்துமா? அவற்றை கடைபிடிக்க முடியுமா என்றெல்லாம் கேள்விகள் எழும். 


உண்மையை அறிந்து கொள்ள முக்கியமான மூன்று வழிகளை சொல்கிறார்கள்.


அவற்றிக்கு பிரமாணங்கள் என்று பெயர்.


அவை,  காட்சிப் பிரமாணம், அனுமானப் பிரமாணம், ஆகமப் பிரமாணம் என்பன. 


காட்சிப் பிரமாணம் என்றால் காண்பது மட்டும் அல்ல, கேட்பது, உணர்வர்து, முகர்வது, எல்லாம் அடங்கும். அதாவது புலன்கள் வழியே அனுபவ பூர்வமாக அறிவது. 


நேற்று நான் ஒரு வெள்ளை யானை பறந்து போவதைப் பார்த்தேன் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?  ஏன் நம்ப மாட்டார்கள்?  ஒரு நம்பிக்கைதான் என்று சொல்லி நம்பவேண்டியது தானே? 


இல்லை. எனக்குக் காட்டு. நான் பார்த்தால் நம்புகிறேன் என்று சொல்லுவார்கள். 


இது ஒருவிதத்தில் உண்மையை அறிய உதவும் ஒரு கருவி. எதையும் பார்த்து, அறிந்து கொள்வது. 


அடுத்தது, அனுமானம். சிந்தித்து அறிவது. காலையில் எழுந்து வெளியே பார்த்தால் சாலை எல்லாம் ஈரமாக இருக்கிறது. இரவு மழை பெய்திருக்கிறது என்று அனுமானிக்கிறோம். நாம் பார்க்கவில்லை. இருந்தும், இதுதான் நடந்திருக்கும் என்று அனுமானிக்கிறோம் அல்லவா. 


அது, உண்மையை அறியும் இரண்டாவது வழி. 


மூன்றாவவது, சற்று சிக்கலான வழி. ஆகமப் பிரமாணம். அதாவது, பெரியவர்கள் சொல்வதை கேட்டு, அவர்கள் பிழையாக சொல்ல மாட்டார்கள் என்று அதை ஏற்றுக் கொள்வது. 


அது எப்படி முடியும் என்று கேட்டால், உடம்பு சரியில்லை என்று மருதுவரிட்ம் செல்கிறோம். அவர் ஒரு மருந்து எழுதித் தருகிறார். அதை வாங்கி உண்கிறோம். அதெல்லாம் முடியாது, இந்த மருந்து என்னை குணப்படுத்தும் என்று நிரூபி என்று யாரும் மருத்துவரிடம் வாதம் செய்வது இல்லை. மருத்துவம் படித்து இருக்கிறார். அவர் சொல்வது சரியாகத் தான் இருக்கும் என்று நம்புகிறோம். 


அது ஆகமப் பிரமாணம். 


இதில், ஒரு மருத்துவர் ஒன்று சொல்கிறார், மற்றொரு மருத்துவர் வேறொன்றைச் சொல்கிறார். எதை நம்புவது என்ற குழப்பம் வரலாம். 


உள்ளதுக்குள் மிகவும் அறிவும், அனுபவமும் உள்ள ஒரு மருத்துவர் சொல்வதை கேட்பதுதானே சரியான ஒன்றாக இருக்க முடியும்?


நம் பெரியவர்கள், இறைவனிடம் இருந்து அவர்கள் பெற்றதை நமக்குச் சொல்கிறார்கள். அதைவிட பெரிய ஆள் யார் இருக்கிறார். எனவே, அவர்கள் சொல்வது, இறைவன் சொல்வது மாதிரித்தான்.


அருணகிரிநாதர் சொல்கிறார், 


"யாராலும் எளிதாக அறிய முடியாத உண்மைப் பொருளை எனக்கு நீ உபதேசம் செய்தாய்" என்று. 


அருணகிரிநாதர் முருகனிடம் இருந்து நேரடியாக உபதேசம் பெற்றார். பின் பெற்ற உபதேசத்தை நமக்குச் சொல்கிறார். அதில் தவறு இருக்குமா?


பாடல்  




அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் 

உரிதா வுபதேச முணர்த்தியவா 

விரிதாரண விக்ரம வேளியையோர் 

புரிதாரக நாக புரந்தரனே 





பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_18.html


(pl click the above link to continue reading)


அரிதாகிய = யாராலும் எளிதில் அறிய முடியாத 


மெய்ப்பொருளுக்கு = உண்மையான பொருளை, ஞானத்தை 


அடியேன் = அடியவனான எனக்கு 

 

உரிதா = உரிதானது, பெற்றுக் கொள்ள தகுதியானவன் என்று 


வுபதேச = உபதேசம் செய்து 


முணர்த்தியவா  = என்னை உணரச் செய்தவனே 


விரிதாரண = தாரணை என்றால் விடாமல் மேலிருந்து கீழே வருவது. எண்ணை தாரை என்பார்கள். விரிந்த உன் அருளை சமமாக் எல்லோருக்கும் விடாமல் அருள்பவனே 


விக்ரம = பலம் பொருந்தியவனே 


வேள்   = வேள் என்றால் மன்மதன். மன்மதனைப் போல் அழகானவனே 


இமையோர் = கண் இமைக்காமல் இருக்கும் தேவர்களின் 


புரிதாரக நாக = அதாரமானவனே 


புரந்தரனே = காப்பவனே 


எனக்கு முருகன் நேரடியாகச் சொன்னார் என்கிறார். 



 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 


]




Sunday, February 12, 2023

கந்தரனுபூதி - மிடியென் றொரு பாவி

                    

 கந்தரனுபூதி - மிடியென் றொரு பாவி




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


மதம் என்பது ஒரு ஆடம்பரம் என்பார்கள் (religion is a luxury).  அடுத்த வேளைக்கு உணவு இல்லாதவன் ஆத்மா, வீடு பேறு, பிரம்மம் என்று ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டான். அவன் கவலை எல்லாம் இன்னும் சிறிது நேரத்தில் பசிக்கும். உணவுக்கு என்ன செய்வது என்பது பற்றித்தான் அவன் கவலை எல்லாம் இருக்கும். அவனிடம் போய் அத்வைதம், துவைதம் என்று சொன்னால் அவன் கேட்க மாட்டான். 


இறைவனை நாடிச் செல்வது என்றாலும், பொருள் வேண்டும். 


உணவு, உடை, வீடு, எதிர்காலம் பற்றிய கவலை எல்லாம் இல்லாமல் இருந்தால்தான் தேவாரம், திருவாசகம் எல்லாம் படிக்க மனம் ஓடும். 


வறுமை வந்து விட்டால் படித்த படிப்பு, குலம், அழகு, குடிப்பிறப்பு எல்லாம் போய் விடும். 


எல்லாம் துறந்தால் தான் இறைவனை அடைய முடியும் என்பதெல்லாம் சரியான வாதம் அல்ல. எங்கே,இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்து பாருங்கள். பசி அழைக்கிறதா, பக்தி அழைக்கிறதா என்று தெரியும். 


இரண்டு நாள் முடியும் என்றால், இருப்பது நாள் இருந்து பாருங்கள். 


கடன்காரன் வருவான், வீட்டை காலி பண்ணச் சொல்லுவான், பிள்ளைகளோடு தெருவில் நிற்க வேண்டி வரும் என்ற பயம் இருந்தால், பக்தி வருமா?


சொல்லுவது அருணகிரிநாதர். 


பாடல் 


வடிவுந் தனமு மன முங் குணமுங் 

குடியுங் குலமுங் குடி போகியவா 

அடியந் தமிலா வயில் வேலரசே 

மிடியென் றொரு பாவி வெளிப்படி னே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


(pl click the above link to continue reading)



வடிவுந் = அழகான வடிவமும் 


தனமும் = செல்வங்களும் 


மனமுங் = மன வலிமையையும் 


குணமுங்  = நல்ல குணங்களும் 


குடியுங் = குடிப்பிறப்பும் 


குலமுங் = குலமும் 


குடி போகியவா  = முழுவதும் போய் விடும் 


அடி = தொடக்கம் 


அந் தமிலா = முடிவு இல்லாத 


வயில் வேலரசே  = கூறிய வேலை உடைய என் தலைவனே 


மிடி = வறுமை 


யென் றொரு பாவி = என்ற ஒரு பாவி 


வெளிப்படி னே  = நம்மைப் பிடித்துக் கொண்டால் 


வறுமை வந்துவிட்டால் எல்லாம் போய் விடும். 


பசி இருக்கும் இடத்தில் பக்தி இருக்காது. 


எனவேதான் வள்ளலார் அணையா அடுப்பு ஏற்றி பசி என்று வந்தவர்களுக்கு எல்லாம் உணவு அளித்தார். 


சரி, அருணகிரிநாதர் சொல்லிவிட்டார் என்பதற்காக பொருள் சம்பாதிப்பதே குறி என்று இருக்கக் கூடாது. 


அவர், செல்வத்தை சேர்க்கச் சொல்லவில்லை. 


வறுமை இல்லாமல் பார்த்துக் கொள் என்கிறார். 


இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.


துறவிக்கும் உணவு வேண்டும். 


எல்லாவற்றையும் விட்டு விட்டு காட்டுக்குப் போ என்று சொல்லவில்லை. அதற்காக வாழ்நாள் முழுவதும் பணம் சேர்த்துக் கொண்டே இரு என்றும் சொல்லவில்லை. 


பக்திப் பாடல்களுக்கு நடுவே இப்படி ஒரு ஆச்சரியமான பாடல். 





 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 


]




Monday, February 6, 2023

கந்தரனுபூதி - உதியா மரியா

                   

 கந்தரனுபூதி - உதியா மரியா




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


கடவுள் என்றால் என்ன?  


அது ஆணா, பெண்ணா, அலியா,உருவம் உள்ளதா, அருவமானதா? 


ஒன்றும் தெரியாது. இருந்தும் உருவ வழிபாடு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 


இப்படி சிந்தித்தால் என்ன?


உருவம் என்பதை விட்டு விட்டு,, தன்மை, குணம் என்று நினைத்தால் என்ன?


அப்படி நினைத்தால், எல்லா கடவுளுக்கும் உள்ள குணங்கள் ஒரே மாதிரித்தான் இருக்கும். 


சிவன், திருமால், முருகன், விநாயாகர் என்று பல்வேறு வடிவங்களில் வழிபட்டாலும், குணம் என்று பார்க்கும் போது அது ஒன்றாகவே இருக்கும் என்று அருணகிரிநாதர் சொல்கிறார். 


பாடல் 



உதியா மரியா உணரா மறவா 

விதிமா லறியா விமலன் புதல்வா ! 

அதிகா ! அநகா ! அபயா ! அமரா 

பதிகாவல ! சூர பயங்கரனே ! 


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


(pl click the above link to continue reading)


உதியா = உதிக்காமல் இருப்பவன். அதாவது இறைவனுக்கு தோற்றம் என்று ஒன்று கிடையாது. அது ஒரு குணம். 


மரியா  = மரித்தல் என்றால் இறத்தல். இறைவனுக்கு இறப்பு கிடையாது. முடிவு கிடையாது. பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை. 


உணரா =  உணர்தல் என்றால் நினைத்தல் 


மறவா  = மறவா என்றால் மறத்தல். நினைப்பும் இல்லை, மறப்பும் இல்லை. 


விதி = விதி, தலை எழுத்தை எழுதும் பிரமன் 


மால்  = மால் என்றால் திருமால் 


அறியா = அறியாதவன் 


விமலன் புதல்வா ! = வி என்றால் இல்லை. நாயகன் என்றால் தலைவன். வி-நாயகன் என்றால் தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன். மலம் (குற்றம்) உள்ளவன் மலன். குற்றமே இல்லாதவன் வி-மலன். குற்றமே இல்லாத சிவனின் புதல்வன். 



அதிகா ! = உயர்ந்தவன் 


அநகா  = பாவம் இல்லாதவன் 


அபயா ! = அபயம் அளிப்பவன் 


அமரா  = என்றும் இருப்பவன் 


பதிகாவல ! = தேவர் உலகை காப்பவன் 


சூர பயங்கரனே !  = சூரர்களுக்கு பயங்கரமானவன் 


இப்படி இறைவனின் குணங்களை மட்டும் அடுக்கிக் கொண்டே போகிறார். 


உருவம் இல்லாத ஒன்றை சிந்திக்க சிந்திக்க, இறை என்பது ஒன்றுதான் என்ற தெளிவு பிறக்கும். 


என் கடவுள் உயர்ந்தவர்.உன் கடவுள் தாழ்ந்தவர். என் மதம் சிறந்தது.உன் மதம் கீழானது என்ற பாகுபாடுகள் மறையும். 


பாகுபாடு மறைந்தால், மனதில் உள்ள விருப்பு வெறுப்பு குறையும். மனம் சலனப்படாது. 


சலனமற்ற மனதில் தான் உண்மை தெளிவு பிறக்கும். 


அடுத்த முறை உதயா மரியா என்று இந்தப் பாடலை பாடும் போது உருவம் அற்ற, குணங்கள் நிறைந்த அந்த ஒன்றை எண்ணிப் பாருங்கள். 





 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 


]




Sunday, January 29, 2023

கந்தரனுபூதி - யாமோதிய கல்வியும் பாகம் 2

                  

 கந்தரனுபூதி -  யாமோதிய கல்வியும் பாகம் 2




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 




பாடல் 



யாமோதிய கல்வியும் எம்மறிவுந்

 தாமேபெறவேலவர் தந்ததனாற்

 பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்

 நாமேல் நடவீர் நடவீர் இனியே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

(pl click the above link to continue reading)


யாமோதிய = யாம் ஓதிய. ஓதுதல் என்றால் திரும்பச் திரும்பச் சொல்லுதல். மனப்பாடம் செய்தல். 


கல்வியும் = கல்வியும் 


எம்மறிவுந் = கல்வியில் இருந்து வரும் அறிவும் 


 தாமே = நாமே 


பெற = பெற்றுக் கொள்ள 


வேலவர் = வேலைக் கொண்டவர் (முருகர்) 


தந்ததனாற் = தந்த அதனால் 


 பூமேல் = பூமியின் மேல். அதில் உள்ள உயிர்கள், பொருள்கள் மேலும் 


மயல்போய் = மையல் போய். ஆசை போய். 


அற = அறம் 


மெய்ப் = உண்மை 


புணர்வீர் = சென்று அடைவீர் 



 நாமேல் = நாவின் மேல் 


நடவீர் நடவீர் இனியே! = செல்லுங்கள், செல்லுங்கள் இனியே. அதாவது அவன் திருநாமத்தை சொல்லிக் கொண்டு செல்லுங்கள் 


" தாமேபெறவேலவர் தந்ததனாற்"


என்ற இந்த வரிக்கு என்ன அர்த்தம்? பல உரைகளில் "தாமே" என்பதை "நாமே" என்று எடுத்துக் கொண்டு உரை செய்கிறார்கள். அது நாமே என்றால் ஏன் அருணகிரிநாதர் அப்படியே சொல்லி இருக்கலாமே? தாமே என்பதற்கும் நாமே என்பதற்கும் ஒரு யாப்பிலக்கண வேறுபாடு ஒன்றும் இல்லையே?


எனவே, எனக்குத் தோன்றியதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். சரியா தவறா என்று தெரியாது. தவறென்றால், ஆன்றோர் பொறுக்க.


இதற்கு முந்தைய வரியில் 


"நாமோதிய கல்வியும் அறிவும்" என்று சொல்கிறார். 


கல்வி வேறு, அறிவு வேறு என்று தெரிகிறது அல்லவா?


கல்வி என்பது வெளியில் இருந்து உள்ளே செல்வது. அறிவு என்பது உள்ளே இருந்து வெளியில் வருவது. 


நாம் பிறக்கும் போதே ஏதோ ஒரு அறிவுடன் பிறக்கிறோம். நாம் கற்கும் கல்வி அந்த அறிவை வெளியே கொண்டு வரும். 


வயற்காட்டில் நீர் பாய்சுபவர்கள் முதலில் அந்த எந்திரதுகுள் ஒரு சொம்பு நீரை விட்டு அந்த அந்த எந்திரத்தை ஒரு சுற்று சுற்றி விடுவார்கள். அது டப் டப் என்று தொடங்கி கிணற்றில் உள்ள நீரை வெளியே கொண்டு வரும். 


ஆங்கிலத்தில் priming the pump என்று சொல்லுவார்கள். 


முதலில் கொஞ்சம் நீரை விட வேண்டும். பின் அது உள்ளுக்கு இருக்கும் நீரை வெளியே கொண்டு வரும். 


அது போல, நாம் கற்ற கல்வி, அறிவாக வெளியே வர வேண்டும். 


சரி, அந்த வரிக்கும்,இந்த வரிக்கும் என்ன சம்பந்தம். 


ஒரு வீட்டில் அப்பாவும், அம்மாவும் பெரிய படிப்பு படித்து இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து இருக்கும். அதற்கு ஒரு வயது ஆகும் போது, அவர்கள் அந்த குழந்தைக்கு அம்மா, அத்தை, அப்பா என்று சொல்லித் தருவார்கள். அந்தக் குழந்தையும், தட்டுத் தடுமாறி மழலை மொழியில் அம்மம்மா, அப்பப்பா என்று சொல்லும். 


பெற்றோர் பூரித்துப் போவார்கள். இன்னிக்கு என் பிள்ளை அம்மான்னு சொல்லுச்சு என்று போன் போட்டு அவர்கள் அம்மா அப்பாவிடம் சொல்லி மகிழ்வார்கள். 


அம்மா அப்பா என்று சொல்லுவது என்ன பெரிய கடினமான செயலா? அவர்களுக்குத் தெரியாதா? அவர்கள்தானே சொல்லித் தந்தார்கள். 


இருந்தும் பிள்ளை சொன்னால் அது பெரிய மகிழ்ச்சி. 


அது போல இறைவன் தந்த அறிவும், கல்வியும், அவனை நாம் போற்ற, அவனை நாம் அறிந்து கொள்ள, அவன் அருளியது.  அவனை அறிந்து, அவனை அடைய அவன் நமக்குத் தந்தது. 


நாமே அவனிடம் அடைக்கலம் ஆகும் போது, நம் கல்வியும், அறிவும் அவனை சேர்ந்து விடுகிறதுதானே. 


அவன் கொடுத்தான், அவனே பெற்றுக் கொண்டான். 


தாமே பெற வேலவர் தந்ததனால் 


அதாவது, அறிவும், கல்வியும் இறைவனை அடைய வழி செய்ய வேண்டும். 


இதையே வள்ளுவரும்


கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் 


என்பார்.


கல்வி, உயிர்களை இறைவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 


மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில்,


அம்மா, பிள்ளைக்கு அப்பாவை அறிமுகம் செய்கிறாள். 


அப்பா, பிள்ளைக்கு குருவை அறிமுகம் செய்கிறார். 


குரு, பிள்ளைக்கு இறைவனை அறிமுகம் செய்கிறார். 


குரு தரும் கல்வி இறைவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 


இது என் கருத்து. சரியோ, தவறோ தெரியாது. 


சரி என்றால் நல்லது. 


இல்லை என்றால் தள்ளி விடவும். 



 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 


]




Tuesday, January 24, 2023

கந்தரனுபூதி - பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

                 

 கந்தரனுபூதி -  பேராசை எனும் பிணியில் பிணிபட்டு




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


பெரிய வீடு வேண்டும், வங்கியில் பல கோடிக்கு பணம் வேண்டும், பெரிய கார் வேண்டும், வருடத்துக்கு நாலு அயல் நாடுகளை சுற்றிப் பார்க்க வேண்டும், போட்ட பணத்துக்கு ஒன்றுக்கு பத்து வட்டி வேண்டும், அந்த நடிகர்/நடிகை போல் அழகாக இருக்க வேண்டும்...இப்படி எல்லாம் ஆசைப்படாதவர் யார்?


அது ஒரு புறம் இருக்கட்டும். 


நம் புராணங்களில் அரக்கர்கள் என்று சிலர் வருவார்கள்.  அவர்களின் குணத்தை ஆராய்ந்தால் ஒன்று பொதுவான குணமாகப் படும். 


உலகை எல்லாம் கட்டி ஆள வேண்டும், எல்லோரும் தனக்கு அடிபணிய வேண்டும், சாகா வரம் இல்லாவிட்டாலும் மிக மிக நீண்ட நாள் வாழும் வரம் வேண்டும், தேவர்களும் தனக்கு அடி பணிய வேண்டும்....என்று அவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போகும். 


ஆசை. பேராசை. 


யார் உன்னை வணங்கினால் என்ன, வணங்காவிட்டால் என்ன? அதனால் உனக்கு என்ன பலன்?  


அவன் பலத்துக்கு அவன் பேராசை. நம் பலத்துக்கு நாம் ஆசைப் படுகிறோம். வேண்டுமானால் நம்மை குட்டி அரக்கர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். 


அந்த அரக்கர்கள் கொண்ட பேராசையால் விளைந்தது என்ன?  அவர்கள் கேட்டது எல்லாம் கிடைத்தது. அத்தனை உலகையும் ஆண்டார்கள். ஆனால், இறைவனை விட்டு வெகு தூரம் போய் விடுகிறார்கள். இறுதியில் வரம் தந்த இறைவனே அவர்களை அழிக்கிறான். அது நான் நிகழும். 


ஆசை, பேராசை இறைவனை விட்டு நம்மை வெகு தூரம் கொண்டு சென்று விடும். அதனால் வரும் துன்பங்கள், பின் அழிவு. 


அது வேண்டும், இது வேண்டும் என்று இறைவனை குறித்து தவம் இருந்து, வரங்களைப் பெற்று, அதனாலேயே அவர்கள் அழிந்தார்கள். 


இன்றும் அது நடக்கிறது. கோவிலுக்கு நடையாக நடக்கிறார்கள், வேண்டிக் கொள்கிறார்கள்...


இலக்கியம் கொஞ்சம் மிகைப் படுத்தித் தான் சொல்லும். அதன் உள்ளே உள்ள பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 


அருணகிரிநாதர் சொல்கிறார் 


"பேராசை என்ற பிணியால் கட்டப்பட்டு நான் துன்பத்தில் தவிப்பது சரியா? சூரனின் மலை அழிய வேலை விடுத்தவனே, தேவ லோக அதிபதியே, என்னை இந்த பேராசைப் பிணியில் இருந்து காத்தருள்வாய்" என்று. 



பாடல் 


பேராசை எனும் பிணியில் பிணிபட்டு , 

ஓரா வினையேன் உழலத் தகுமோ ? 

வீரா ! முதுசூர் படவேல் எறியும் 

சூரா ! சுரலோக துரந் தரனே . 




பொருள் 





(pl click the above link to continue reading)


பேராசை = பேராசை 


எனும் = என்ற 


பிணியில் = நோயில் 


பிணிபட்டு ,  = கட்டப்பட்டு 


ஓரா  = சிந்திக்கும் திறன் அற்ற 


வினையேன் = வினை உடையவனான நான் 


உழலத் தகுமோ ?  = துன்பப் படுவது தகுமோ ?


வீரா ! = வீரனே 


முதுசூர் = சூரர்களில் மூத்தவனான பத்மாசுரன் 


பட = மேலே படும் படி 


வேல் எறியும்  = வேலை எறிந்த 


சூரா ! = சூரனே 


சுரலோக  = தேவர் உலகை 


துரந் தரனே .  = காப்பவனே 


தமிழில் நோய், பிணி என்று இரண்டு சொற்கள் உண்டு. 


நோய் என்றால் மருந்து சாப்பிட்டால் குணமாகி விடும். 


பிணி என்றால் குணமாகாது. சர்க்கரை நோய், கான்சர் போல. குறையும், பின் வந்து விடும். போகாது. 


பசியைப் பிணி என்று சொல்லுவார்கள். காலையில் சாப்பிட்டால் பசி குறைந்த மாதிரி இருக்கும் மதியம் வந்து விடும். மதியம் சாப்பிட்டால் பசி குறைந்த மாதிரி இருக்கும், இரவு பசிக்கும். விடாது. 


பிறவிப் பிணி என்பார்கள். விடாது தொடரும். 


அருணகிரி நாதர் பேராசை எனும் பிணி என்கிறார். அது விடாது. ஒன்றைக் கொடுத்தால் அடுத்தைக் கேட்கும். நூற்றி எட்டு அண்டம் கொடுத்தால் ஆயிரத்து எட்டு அண்டத்தையும் கொடு என்று கேட்கும். 


நம் துன்பத்துக்கு எல்லாம் காரணம் இந்த பேராசைதான். 


அதை அறியாமல் எதை எதையோ நினைத்து புலம்புகிறோம். 


"ஓரா வினையேன்" என்றார். சிந்திக்கும் திறன் இல்லாதவன். நான் கொண்ட பேராசையால் எனக்கு துன்பம் வந்தது என்று அறியாமல் இருக்கிறேனே என்கிறார். 


முருகா, நீ சூரபத்மனின் கிரௌஞ்ச மலையை உன் வேலால் அழித்தவன். என் பேராசையை உன்னால் அழிக்க முடியும். எனவே,  என் ஆசைகளை அழித்து என்னையும் காப்பாற்று என்று வேண்டுகிறார். 


நாம் எல்லாம் நம் ஆசைகளை நிறைவேற்றி வை என்று ஆண்டவனை வேண்டுவோம். 


அருணகிரிநாதர், அவர் ஆசைகளை நீக்கி விடு என்று ஆண்டவனை வேண்டுகிறார். 






 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 




]




Friday, January 20, 2023

கந்தரனுபூதி - என்று அருள்வாய் ? பாகம் 1

                

 கந்தரனுபூதி -  என்று அருள்வாய் ?  பாகம் 1 




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


குகன் !


முன்பொரு காலத்தில் கங்கை கரை ஓரம் ஒரு முனிவர் தன்னுடைய மகனுடன் வசித்து வந்தார். ஒரு நாள், அந்த பையன் தன் தந்தையிடம் "தந்தையே, உலகில் பெரிய கடவுள் யார்" என்று கேட்டான். அவரும் முருகன் தான் தனிப் பெரும் கடவுள் என்றார். 


அப்படி இருக்கும் போது ஒரு நாள், அவர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் அந்நாட்டின் மன்னன் அந்த முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தான். முனிவர் இல்லாததைக் கண்டு வருந்தினான். அப்போது, முனிவரின் மகன், "மன்னா, வந்த காரியம் என்ன" என்று கேட்டான். 


"நான் வேட்டைக்கு வந்த இடத்தில், தவறுதலாக ஒரு முனிவர் மேல் அம்பை விட்டு விட்டேன். அவரும் இறந்ததால், ப்ரம்மஹத்தி தோஷம் என்னை துரத்துகிறது" என்றான். 


முனிவரின் மகனோ, "இதற்கா வருந்துகிறீர்கள். நான் பரிகாரம் சொல்கிறேன். இதோ இந்த கங்கையில் மூழ்கி, மூன்று முறை முருகா என்று சொல்லுங்கள், பிரம்மஹத்தி ஓடிவிடும்" என்றான். 


மன்னனும் அவ்வாறே செய்ய, ப்ரம்மஹத்தி விலகியது. 


முனிவர் திரும்பி வந்தார். நடந்ததை கேட்டு அறிந்து, மகன் மேல் மிகுந்த கோபம் கொண்டார். "முருகன் நாமத்தை ஒரு முறை சொன்னாலே ஓராயிரம் பிரம்மஹத்தி விலகுமே...நீ மூன்று முறை சொல்லச் சொல்லி இருக்கிறாய். முருக நாமத்தின் அருமை தெரியாத நீ கல்வி அறிவு இல்லாத வேடனாகப் போ" என்று சாபம் தந்தார். 


பின், கோபம் தணிந்து, சாப விமோசனமாக "நீ கங்கை கரையில் குகன் என்ற பெயரோடு வேடனாக பிறப்பாய். இராமன் வருவான். அவனுக்கு பணிவிடை செய்து உன் சாபம் விலகப் பெறுவாய்" என்று அருளினார். 


அந்த முனிவனின் மகன்தான் இராமாயணத்தில் குகனாக வந்தான் என்று ஒரு கதை உண்டு. 


குகன் என்றால் குகையில் வாழ்பவன். 


பக்தர்களின் மனம் என்ற குகையில் இருப்பவன் குகன். 


"அருள்வாய் குகனே" என்பார் அருணகிரிநாதர். 




உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.



முருகன் !


முருகு என்ற சொல்லுக்கு அழகு, இளமை என்று பொருள்.  என்றும் அழகோடு இருப்பவன், என்றும் இளமையோடு இருப்பவன் முருகன். 



குமரன் !


குமாரன் என்பதன் மரூஉ. இளையவன்.


"முருகன், குமரன், குகன் என்று உன் நாமத்தை கூறு உள்ளம் உருகும் படி என்று அருள்வாய்?  வானவரும், மண்ணில் உள்ளவரும் வணங்கும் குருவடிவாணவனே, எட்டு குணங்கள் நிறைந்தவனே" 


 என்று உருகுகிறார் அருணகிரியார். 


பாடல் 


முருகன் குமரன் குகன் என்று மொழிந்து 

உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய் ? 

பொரு புங்கவரும் புவியும் பரவும் 

குருபுங்கவ ! எண்குண பஞ்சரனே 


பொருள் 



(pl click the above link to continue reading)



முருகன் = முருகன் 


குமரன் = குமரன் 


குகன் = குகன் 


என்று மொழிந்து  = என்று கூறி 


உருகும் = மனம் உருகும் 


செயல் தந்து = செயலைத் தந்து 


உணர்வு என்று அருள்வாய் ?  = உணர்வை என்று அருள்வாய்? 


பொரு புங்கவரும் = உன்னுடன் போரிட்ட வானவர்களும் 


புவியும் = புவியில் உள்ளவர்களும் 


பரவும்  = போற்றி பரவும் 


குருபுங்கவ ! = குரு வடிவானவனே  


எண்குண பஞ்சரனே  = எட்டு விதமான குணங்களின் வடிவானவனே 






 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html





]




Saturday, January 14, 2023

கந்தரனுபூதி - முருகன் கழல் பெற்று உய்வாய்

               

 கந்தரனுபூதி -  முருகன் கழல் பெற்று உய்வாய்



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


மனம் அலைபாயும் தன்மை உடையது. ஒரு இடத்தில் இருக்காது. குரங்கு போல் தாவிக் கொண்டே இருக்கும். மனதை ஒரு முகப் படுத்தாவிட்டால் எதையும் செய்ய முடியாது.  ஒன்றைச் செய்யும் போதே வேறு சிந்தனை வந்தால் எதைச் செய்வது? 


சாப்பிடும்போது அலுவலகச் சிந்தனை, அலுவலகத்தில் இருக்கும் போது வீட்டு நினைப்பு, பிள்ளைகளை, மனைவியை கொஞ்சும்போது கூட மனம் வேறு எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. எதிலும் ஒரு முழு அனுபவம் கிடைப்பது இல்லை. 


வாழ்வில் ஏதோ ஒரு அதிருப்தி இருந்து கொண்டே இருக்கிறது. ஏதோ பறி கொடுத்த மாதிரி, ஒரு வெறுமை வருகிறது. காரணம், எதிலும் முழு மனத்தோடு ஈடு படுவது கிடையாது. 


புலன்கள் மனதை இழுத்துக் கொண்டு ஓடுகின்றன. வண்டியில் பூட்டிய குதிரைகள் ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு ஓடுகின்றன. வண்டி எந்த ஊர் போய்ச் சேரும்?


அப்படியெல்லாம் இல்லை. என் புலன்கள் என் வசம் இருக்கின்றன. அப்படி என்ன பெரிய தவறு செய்து விட்டேன் என்று நீங்கள் கேட்கலாம். 


எங்கே , முயன்று பாருங்கள், இன்று ஒரு நாள் Whatsapp பார்க்காமல் இருப்பேன் என்று. ஒரு நாள் என்ன ஒரு நாள். ஒரு மணி நேரம் இருக்க முடியாது. காரணம், மனம் இழுத்துக் கொண்டு ஓடுகிறது. என்னமோ வந்திருக்கும், யார் என்ன சொல்கிறார்கள் என்று பார் என்று நம்மை பிடித்து இழுத்துக் கொண்டு போகிறது. 


ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் WA, யூ டியூப், instagram, serial, என்று  மனதை அலைய விடுகிறோம். அந்த நேரத்தை எல்லாம் உருப்படியாக செலவழித்து இருந்தால் என்னென்ன சாதித்து இருக்கலாம்? 


மனம் ஏன் அலை பாய்கிறது? அதை எப்படி கட்டுப் படுத்துவது  என்று இங்கே அருணகிரிநாதர் சொல்கிறார். 


பாடல் 


கைவாய் கதிர்வேல்  முருகன் கழல் பெற்று 

உய்வாய் மனமே ஒழிவாய் ஒழிவாய் 

மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம் 

ஐவாய் வழி செல்லும் அவாவினையே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


(pl click the above link to continue reading)




கைவாய் = திருக்கையில் 


கதிர்வேல் = ஒளிக் கதிர் வீசும் வேலை 


முருகன் = கொண்ட முருகனின் 


கழல் பெற்று  = திருவடிகளை பெற்று 



உய்வாய் = கடைந்தேறுவாய் 


மனமே = என் மனமே 


ஒழிவாய் ஒழிவாய் = விடுவாய், விடுவாய் 


மெய் = உடல் 


வாய் = வாய், நாக்கு 


விழி = கண் 


நாசியொடுஞ் = மூக்கோடு 


செவியாம்  = செவி என்ற 


ஐவாய் = ஐந்து வாசல்  


வழி செல்லும் = வழியாகச் செல்லும் 


அவாவினையே = ஆசைகளை 


உய்வாய், உய்வாய் என்று இரண்டு தரம் ஏன் கூறினார்?


மெய், வாய், விழி, நாசி, கண் என்று ஐந்து புலன்கள் வழியாக நமக்கு ஆசைகள் தோன்றுகின்றன. 


சரி. அது நல்லது தானே. வாழ்க்கை அனுபவிக்கத் தானே. புலன்கள் வழி செல்லும் ஆசை தவறு என்றால் குருடாகவோ, செவிடாகவோ இருப்பது நல்லதா? எதை வாயில் போட்டாலும் ருசியே தெரியல என்றால் அது நல்லதா?


புலன்களின் வேலையே நமக்கு அனுபவத்தைத் தருவது தானே? அதை எப்படி நிறுத்துவது?


புலன்கள் அல்ல பிரச்சனை. புலன்கள், வெளி உலகில் இருந்து வரும் செய்திகளை உள்ளே அனுப்புகின்றன. 


கண் அல்ல அனுபவிப்பது. மனம் தான் அனுபவிக்கிறது. கண் சரியாகத் தெரியவில்லை என்றால் கண்ணாடி போட்டுக் கொள்கிறோம். கண்ணாடியா பார்க்கிறது? நம் கண்ணும் அந்தக் கண்ணாடி போலத்தான். அதற்கு என்று ஒரு அனுபவம் கிடையாது. 


அனுபவம் நிகழ்வது மனதில். ஆசை பிறப்பது மனதில். 


ஆனால், மனம் தானே உலகை அறிய முடியாது. புலன்கள் அந்த செய்திகளை அனுப்பினால் தான், மனம் அனுபவிவ்கும், நல்லது, கெட்டது என்று அறியும், மேலும் வேண்டும், அல்லது இது வேண்டாம் என்று தள்ளும்.


எனவே, மனமும், புலன்களும் ஒன்று சேர்ந்தால்தான் அனுபவம் நிகழ முடியும். 


எனவே இரண்டையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.


எனவே ஒழிவாய், ஒழிவாய் என்றார். 


முதலில் புலன்கள் செல்வதை தடுக்க வேண்டும். பின் மனம் செல்வதை தடுக்க வேண்டும். 


சரி, எப்படி தடுப்பது? 




 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html





]




Sunday, January 8, 2023

கந்தரனுபூதி - அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

              

 கந்தரனுபூதி - அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ 



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


இறைவனை அடைய பல மார்கங்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் என்று பல இருக்கின்றன. எது சிறந்தது, எது எளிதானது, எது யாருக்குச் ஏற்றது என்று அறிந்து கொள்வது சிக்கலாகவே இருக்கிறது. 


ஞான மார்க்கதின் உச்சம் தொட்ட மணிவாசகரும் 


"அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து 

சிந்தை மகிழ சிவா புராணம் தன்னை..."


என்பார். 


அது ஒருபுறம் இருக்கட்டும். 


இந்த உலகில் எவ்வளவோ துன்பங்கள் நிகழ்கின்றன. உயிருக்கு உயிரானவர்கள் அகாலத்தில் பிரிந்து போய் விடுகிறார்கள், நோய், வறுமை, வலி, பாலியல் வன் கொடுமைகள், போர், பெற்றோரை இழப்பது, பசி, உடல் ஊனம், ...இத்தனை துன்பதுக்கும் இறைவன்தானே பொறுப்பு ஏற்க வேண்டும்?  நல்லதுக்கும் மட்டும் அவன் அருள் என்று சொன்னால், துன்பதுக்கு யார் பொறுப்பு ஏற்பது?  துன்பதுக்கு அவன் பொறுப்பு இல்லை என்றால், இன்பதுக்கும் அவன் பொறுப்பு ஏற்க முடியாது அல்லவா? 


இதை எப்படி விளங்கிக் கொள்வது ?


இன்பம், துன்பம், 

பாவம், புண்ணியம்,

வறுமை, செல்வம்,

இரவு, பகல், 

என்ற இருமைகள் எல்லாம் நம் அறிவின் ஆக்கம். இறைவனுக்கு எல்லாம் ஒன்றுதான். 


நம்மிடம் பணம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் அவனுக்கு என்ன?


நம்மிடம் ஓரிரு பட்டங்கள் இருந்தால் என்ன, அல்லது நாம் கை நாட்டாக இருந்தால் அவனுக்கு என்ன? 


இந்தப் பிரிவுகள் எல்லாம் அவனை ஒன்றும் செய்வது இல்லை. 


இன்பமும், துன்பமும் நாம் செய்த வினையால் வருகிறது. அதில் இறைவனின் பங்கு ஒன்றும் இல்லை. 


இந்த இருவினை பிரிவுகள் கடந்த இடத்தில் அவன் இருக்கிறான். 


இறைவனை அறிந்தவர்கள், அவன் இந்த பிரிவுகளை கடந்தவன் என்று சொல்கிறார்கள். 


"தனிச் சிறப்பு கொண்ட வேலை  கையில் கொண்ட முருகன், முனிவன், நமது ஞான குரு, என்று அவன் அருள் அன்றி அவனை அறிய முடியுமா? (முடியாது). அவன் உருவம் உள்ளவன் அல்ல, உருவம் இல்லாமலும் இல்லை, இருப்பவன் அல்ல, இல்லாமல் இருப்பவன் அல்ல, அவன் இருள் அல்ல, ஒளி அல்ல, என்று இருப்பவன்"


பாடல் 


முருகன் தனி வேல் முனிநங் குருவென் 

றருள் கொண்டறியா ரறியும் தரமோ 

வுருவன் றருவன் றுளதன்று இலதன்று 

இருளன்று ஒளியன்று என நின்றதுவே . 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


(pl click the above link to continue reading)


முருகன் = முருகன் 


தனி = தனிச் சிறப்பு வாய்ந்த 


வேல் = வேலாயுதத்தை கொண்ட அவன் 


முனி = முனிவன் 


நங்  = நம், நமது 


குருவென் றருள்  = குரு வென்று அருள் 


கொண்டறியா ரறியும்  = கொண்டு  அறியார், அறியும் 


தரமோ  = தரமோ? முடியுமா? 


வுருவன் றருவன் றுளதன்று இலதன்று  = உருவன்று, அருவன்று, உளதன்று, இலதன்று 


இருளன்று = இருள் அன்று 


ஒளியன்று = ஒளியும் அன்று 


என நின்றதுவே .  = என்று நின்றதுவே 


நாம் இந்த உலகை நமது விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி பிரித்து வைத்துக் கொண்டு துன்பப்படுகிறோம்.


அழகானது (பிடிக்கும்), அழகற்றது (பிடிக்காது), அறிவு, அறிவீனம், செல்வம், ஏழ்மை, வெள்ளை, கறுப்பு, உயரம், குட்டை,பருமன், மெலிந்து இருப்பது, என்று உலகை பிரித்துப் போட்டுவிட்டு, அல்லாடுகிறோம். 


இந்த இருமைகள் மறையும் போது, இறை உணர்வு மேலிடும். 


"ஒன்றாக காண்பதுவே காட்சி"  என்பார் ஔவையார்.


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே

என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. 


என்பார் வள்ளல் பெருமான். 


சிந்திப்போம். 




 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html





]




Friday, December 30, 2022

கந்தரனுபூதி - சும்மா இரு

             

 கந்தரனுபூதி - சும்மா இரு 



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


கந்தரனுபூதியில் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட பாடல் என்று இன்று நாம் காண இருக்கும் பாடலைச் சொல்லலாம். 


அருணகிரிநாதர் அழகில், பெண்கள் பால் நாட்டம் உள்ளவர். பல பெண்களின் தொடர்பு இருந்தது. அதனால் உடலில் நோய் வந்து சேர்ந்தது. அழகு அழிந்தது. 

அழகும் போனதால், பெண்கள் அவரை வெறுக்கத் தொடங்கினார்கள். நோய் செய்யும் வருத்தம் ஒரு புறம். வாழ்க்கை வெறுத்துப் போய், தற்கொலை செய்ய நினைத்து, திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் ஏறி குதித்து விட்டார். 


விழும் போது, முருகன் அவரை கையில் ஏந்திக் கொண்டான்.


"முருகா, என்னை காத்தாய். எனக்கு உபதேசம் தந்தருள்வாய்" என்று வேண்டினார்.


முருகனும் உபதேசம் செய்தான். 


நாம் நினைப்போம், ஒரு நாலைந்து நாள் செய்திருப்பார் என்று. எவ்வளவு இருக்கிறது சொல்ல.


வேதம், இதிகாசம், புராணம், ஆகமம், என்று எவ்வளவு இருக்கிறது.


அதெல்லாம் இல்லை. 


முருகன் இரண்டே இரண்டு வரி உபதேசம் செய்தான். 


"சும்மா இரு"

"சொல் அற"


அவ்வளவுதான். 


மிக எளிதாக இருக்கிறதே என்று நினைப்போம். 


சும்மா இருக்கணும். அவ்வளவு தானே. இது என்ன பெரிய விடயமா என்று நினைப்போம். 


உடம்பு சும்மா இருந்தால் கூட, எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். என்னணம் என்றால் வார்த்தைகள். நம் சிந்தனை எல்லாம் வார்த்தைகள் தான். 


வார்தைகள் இல்லாமல் சிந்திக்க முடியுமா?


சும்மா இரு. சொல் அற என்றால் சொல்லை அறவே விட்டு விட வேண்டும். மனதில் கூட சொல் ஓடக் கூடாது.


தனக்கு தானேயும் பேசிக் கொள்ள கூடாது. 


நடக்கிற காரியமா?


ஒரு நாள் WA பார்க்காமல் இருக்க முடியுமா? அரட்டை அடிக்காமல் இருக்க முடியுமா? 


பாடல் 


செம்மான் மகளைத் திருடுந் திருடன் 

பெம்மான் முருகன் பிறவான் இறவான் 

சும்மா இரு சொல்லற வென்றலுமே 

அம்மா பொரு ளொன்று மறிந்திலனே


பொருள் 



(pl click the above link to continue reading)



செம்மான் மகளைத் = சிவந்த மானின் வயிற்றில் இருந்து பிறந்த மகளான வள்ளியை 


 திருடுந் திருடன்  = அவளுடைய தாய் தந்தைக்குத் தெரியாமல் திருடிய திருடன் 


பெம்மான் = பெரியவனான 


முருகன் = முருகன் 


பிறவான் இறவான்  = பிறப்பும், இறப்பும் இல்லாதவன். முருக ஜெயந்தி உண்டா? 


சும்மா இரு = சும்மா இரு 


சொல்லற = சொல் அற 


வென்றலுமே  = என்று சொன்னவுடன் 


அம்மா = வியப்பு. இது எப்படி முடியும் என்ற வியப்பு 


பொரு ளொன்று மறிந்திலனே = அதன் பொருள் ஒன்றும் அறியாமல் இருக்கிறேனே 


அம் + மா + பொருள் = அந்தப் பெரிய பொருள் என்று உரை செய்வாரும் உண்டு. 


ஆன்மீக பாதையின் முதல் அடி பேச்சைக் குறைப்பது. எதற்கு எடுத்தாலும் ஒரு தர்க்கம், மறு பேச்சு, எதிர்ப்பு, என்று மனம் சதா காலமும் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தால், அது எங்கே வளவது. 


சத்தத்தை, இரைச்சலை குறைக்க வேண்டும். 


செயல் மாண்டு அடங்க வேண்டும். 


பின்னால் ஒரு பாடலில் "செயல் மாண்டு அடங்க" என்று சொல்ல இருக்கிறார்: 


பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்

தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்

புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்

தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.


மனதை, வாக்கை சலனம் அற்று இருக்க பழக்குங்கள். 



"சித்த விருத நிரோதம்" - சித்ததில் வரும் சலனங்களை நிறுத்துவது தான் யோகாவின் நோக்கம் என்பார் பதஞ்சலி 









 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


]




Sunday, December 11, 2022

கந்தரனுபூதி - மெய்ப் பொருள் பேசியவா

            

 கந்தரனுபூதி - மெய்ப் பொருள் பேசியவா



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


பிறந்தான், இருந்தான், இறந்தான் என்று பெரும்பாலோனோர் வாழ்க்கை முடிந்து விடுகிறது. 


இறந்தான், எல்லோரும் ஓரிரு நாள் அழுவார்கள், பின் மறந்து போவார்கள். அவ்வளவுதானா வாழ்க்கை ?


மாறாக, பிறந்தான், இருந்தான், வாழ்வின் அர்த்தத்தை, உண்மைகளை அறிந்தான் என்று உலகம் போற்றும் வண்ணம் வாழ வேண்டாமா? அந்த உண்மைப் பொருளை எனக்கு உபதேசம் செய்த ஞான குருவே என்று முருகனை போற்றுகிறார். 



பாடல் 


கூகா வென வென் கிளை கூடியழப் 

போகா வகை மெய்ப் பொருள் பேசியவா 

நாகாசல வேலவ நாலுகவித் 

தியாகா சுரலோக சிகாமணியே . 


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


(pl click the above link to continue reading)


கூகா வென  = "கூ" என்றும் "கா" என்றும் (அய்யோ அம்மா என்று அரற்றுவதை)


வென் = என்னுடைய 


கிளை  = உறவினர்கள் 


கூடியழப் = ஒன்று கூடி அழது பின் 


போகா வகை = சென்று விடும் படி  செய்யாமல் 


மெய்ப் பொருள்  = வாழ்வின் உண்மையான பொருளை 


பேசியவா  = உபதேசம் செய்தவனே 


நாகாசல வேலவ = நாகாசாலம் என்ற தலத்தில் உறையும் வேலவரே 


 நாலுகவித் தியாகா = நாலு விதமான கவிதைகளை இயற்றும் ஆற்றலை அடியவர்களுக்கு அருளும் 


சுரலோக  = தேவர் உலகின் 


சிகாமணியே .  = தலைவனே 


பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்று இருக்காமல், உண்மையை அறிய வேண்டும் என்பது பொருள் 







 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html



]




Saturday, November 26, 2022

கந்தரனுபூதி - எதிரப் படுவாய்

           

 கந்தரனுபூதி - எதிரப் படுவாய்


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


ஆழ்ந்து சிந்தித்தால் நம் வாழ்க்கை முழுவதும் பயம் என்ற ஒரு பெரிய உணர்வால் உந்தப்பட்டே சென்று கொண்டு இருக்கிறது. 


பள்ளி நாட்களில் பள்ளிக் கூடம், ஆசிரியர், பாடம், பரீட்சை என்று பயம். 

பின், வேலை, மேலதிகாரி, செய்து முடிக்க வேண்டிய வேலைகள், வேலை போய் விடுமோ என்ற பயம்...


குடும்பம் என்று வந்துவிட்டால், நமக்கு ஏதாவது ஆகி விட்டால் நம் குடும்பம் என்ன ஆகும் என்ற பயம். 


இதற்கு நடுவில் நோய், விபத்து ,பிள்ளைகள் படிக்க வேண்டுமே, அவை நல்ல படியாக வளர வேண்டும் என்று ஆயிரம் கவலை, பயம். 


பயங்களில் பெரிய பயம் மரண பயம் . அனைத்து பயங்களுக்கும் மூல பயம் மரண பயம். 


சில பேருக்கு மரணம் என்று சொன்னாலே பிடிக்காது. முகம் சுளிப்பார்கள். அவ்வளவு பயம். 


மரண பயம் இருக்கும் வரை நம்மால் வாழ்கையை தெளிவாக அணுக முடியாது. எதை எடுத்தாலும் அந்த பயம் முன் வந்து நிற்கும். நேரடியாக, மறை முகமாக அது நம்மை பயப்படுதிக் கொண்டே இருக்கும். 


அதெல்லாம் ஒண்ணும் இல்லை என்று நினைத்தால், ஒரு நாள் கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ வீடு வர நேரம் ஆனால், போன் சுவிட்ச் ஆப் என்று வந்தால், அன்று தெரியும். 


அந்த பயத்தை நீக்கி விட்டால்? 


"என் இறுதிக் காலத்தில், நான் மரணப் படுக்கையில் இருக்கும் போது , மிகவும் பயந்து போய் இருப்பேன். அப்போது, முருகா, நீ மயில் மேல் வந்து என் பயத்தைப் போக்க வேண்டும்" என்று வேண்டுகிறார். 



பாடல் 


கார்மா மிசைகா லன்வரிற் கலபத்

தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்

தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்

சூர்மா மடியத் தொடுவே லவனே!


சீர் பிரித்த பின் 


கார் மாமிசை காலன் வரின் கலபத்து

ஏர் மாமிசை வந்து எதிரப் படுவாய்

 தார்மார்ப வலாரி தலாரி எனும்

சூர்மா மடியத் தொடு வேலவனே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


(pl click the above link to continue reading)



கார் = கரிய மேகம் போன்ற 


மாமிசை = (மா = விலங்கு, மாக்கள் = விலங்குகள்) = எருமை மேல் 


காலன் = எமன் 


வரின் = வரும் போது 


கலபத்து = கலபம் என்றால் தோகை.


ஏர் மாமிசை  = மயில் மேல் ஏறி 


வந்து = வந்து 


எதிரப் படுவாய் = என் எதிரில் வருவாய் 


தார்மார்ப = மாலை அணிந்த மார்பை உடையவனே 


வலாரி = வலன் என்ற அசுரனை கொன்ற இந்திரன் 


தலாரி = தலம் (இடம்) 


எனும் = என்ற தேவ லோகத்தை வென்ற 


சூர்மா = சூரன் என்ற அசுரன் 


மடியத் = அழியும் படி 


தொடு வேலவனே! = வேலை எடுத்தவனே 


மரண பயம் என்றால் என்ன? எதைப் பற்றி பயம்?  சிந்திப்போம். .


குடும்பத்தை தனியே விட்டு விட்டுப் போகிறோமே என்ற பயமா என்றால் இல்லை. அது கவலை. அது கூட கொஞ்ச வயது வரை. .என்பது வயதில் நம்மைச் சார்ந்து யாரும் இருப்பது இல்லை. 


சரி, அனுபவிக்காமல் விட்டு விட்டவைகள் காரணமாக இருக்குமா என்றால், என்பது தொண்ணுறு வயதில் எதை அனுபவிக்க முடியும்?


பின் எதுதான் மரண பயம் என்று கேட்டால் சரியான விடை கிடைத்தபாடில்லை. நசிகேதன் தொடங்கி இன்று வரை அந்தக் கேள்வி விடை வேண்டி நிற்கிறது. 


நாம் சேர்த்து வைத்த அனுபவங்களை விட்டு விட்டுப் போகிறோமே என்பதுதான் கவலை. தெரியாத ஒன்றை இழக்க முடியாது. அப்படியே இழந்தாலும் பயம் இருக்காது. இந்த தெரிந்த விடயங்கள்தான் கவலைக்குக் காரணம். பயத்தின் வித்து. 


அந்த பயத்தை போக்க வேண்டும் என்று வேண்டுகிறார். 





 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html


]




Monday, November 7, 2022

கந்தரனுபூதி - பரிசென் றொழிவேன்

          

 கந்தரனுபூதி -  பரிசென் றொழிவேன் 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


காமம் ஆண்களை  இறுதி வரை விடுவது இல்லை. பிடித்து ஆட்டிக் கொண்டே இருக்கிறது. உடல் தளர்ந்தாலும், உள்ளத்தில் காம உணர்வுகள் இருந்து கொண்டே இருக்கிறது. காமம் மிகும் போது அறிவு தன் நிலை இழக்கிறது. மனம் தடுமாறுகிறது. 


இந்த காமம் என்ற சிக்கல் எப்போது என்னை விட்டுப் போகும் என்று கேட்கிறார் அருணகிரி. அப்படி கேட்பது நம் பொருட்டு. நம் நிலையை அவர் தன் மேல் ஏற்றிக் கூறுகிறார் என்று கொள்ள வேண்டும். 


"முருகா, நீ பெரிய கிரௌஞ்ச மலையை உன் வேலால் உடைத்து எறிந்தவன். பயம் இல்லாதவன். என்னை இந்த காமம் படாத பாடு படுத்துகிறது. அதில் இருந்து மீள நீ தான் உதவி செய்ய வேண்டும்" என்று வேண்டுகிறார். 



பாடல் 



மட்டூர் குழன் மங்கையர் மையல் வலைப் 

பட்டூசல் படும் பரிசென் றொழிவேன் 

தட்டூடற வேல் சையிலத் தெறியும் 

நிட்டூர நிராகுல நிர்ப்பயனே



சீர் பிரித்த பின் 



மட்டு ஊறும் குழல்  மங்கையர் மையல் வலைப் 

பட்டு ஊசல்  படும் பரிசு என்று ஒழிவேன்  

தட்டு ஊடு அற  வேல் சையிலத்து எறியும்  

நிட்டூர நிராகுல நிர்ப்பயனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html


(pl click the above link to continue reading)



மட்டு = தேன், கள் 


ஊறும் = ஊறும், சுரக்கும் 


குழல் = குழல், சிகை கொண்ட 


மங்கையர் = பெண்களின் 


மையல் வலைப் = காம வலையில் 

 

பட்டு = அகப்பட்டு 


ஊசல்  படும்  = அங்கும் இங்கும் என்று ஊசலாடும் 


பரிசு = நிலையை 


என்று ஒழிவேன்   = விட்டு என்று விடுபடுவேன் 


தட்டு = அடுக்க அடுக்காக உள்ள மலை 


ஊடு அற =அவற்றின் ஊடே சென்று அவற்றை அறுத்த, பொடி செய்த 


வேல் = வேலை 


சையிலத்து எறியும்   = மலை மேல் எறியும் 


நிட்டூர = கோபம் கொண்ட 


நிராகுல = நிர் + ஆகுலம் = துன்பம் இல்லாத 


நிர்ப்பயனே = நிர் + பயம் = பயம் இல்லாதவனே 



விரிவுரை 


மட்டு என்றால் தேன்.


"ஊறு மட்டே" என்பார் மணிவாசகர். (நீத்தல் விண்ணப்பம்).இறைவன் உள்ளத்தில் ஊறும் தேன் போன்றவன். 


மாறுபட் டஞ்சென்னை வஞ்சிப்ப யான்உன் மணிமலர்த்தாள்

வேறுபட் டேனை விடுதிகண் டாய்வினை யேன்மனத்தே

ஊறுமட் டேமன்னும் உத்தர கோசமங்கைக்கரசே

நீறுபட் டேஒளி காட்டும்பொன் மேனி நெடுந்தகையே. 



தேன் சொரியும் பூக்கள் அணிந்த குழலை உடைய மங்கையர்கள் என்றாலும் சரி. 


வாயில் தேன் ஊறும் குழல் உள்ள பெண்கள் என்றாலும் சரி. 


இங்கே அவர் குறிப்பது, விலை மகளிரை. மனைவியை அல்ல என்று கொள்ள வேண்டும். "மையல் வலை" என்று குறிப்பிடுகிறார். 


காமம் மலை போல் பெரியது. அனுபவித்து எல்லாம் கடந்து விட முடியாது. இராஜ்யங்களை புரட்டிப் போட்டிருக்கிறது காமம். இரத்த ஆறு ஓட விட்டிருக்கிறது காமம். சரித்திரத்தின் போக்கை மாற்றி இருக்கிறது காமம். 


ஞானம் ஒன்று தான் காமத்தை அழிக்கும். முருகனின் வேல் ஞானத்தின் குறியீடு. அந்த வேல் கிரௌஞ்ச மலையை அழித்தது. ஞானம் தான் ஆணவம், கன்மம், மாயை , காமம், குரோதம், மதம் மாச்சரியம் போன்ற தீய குணங்களை அழிக்கும். 



 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html




]