Sunday, December 11, 2022

கந்தரனுபூதி - மெய்ப் பொருள் பேசியவா

            

 கந்தரனுபூதி - மெய்ப் பொருள் பேசியவா



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


பிறந்தான், இருந்தான், இறந்தான் என்று பெரும்பாலோனோர் வாழ்க்கை முடிந்து விடுகிறது. 


இறந்தான், எல்லோரும் ஓரிரு நாள் அழுவார்கள், பின் மறந்து போவார்கள். அவ்வளவுதானா வாழ்க்கை ?


மாறாக, பிறந்தான், இருந்தான், வாழ்வின் அர்த்தத்தை, உண்மைகளை அறிந்தான் என்று உலகம் போற்றும் வண்ணம் வாழ வேண்டாமா? அந்த உண்மைப் பொருளை எனக்கு உபதேசம் செய்த ஞான குருவே என்று முருகனை போற்றுகிறார். 



பாடல் 


கூகா வென வென் கிளை கூடியழப் 

போகா வகை மெய்ப் பொருள் பேசியவா 

நாகாசல வேலவ நாலுகவித் 

தியாகா சுரலோக சிகாமணியே . 


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


(pl click the above link to continue reading)


கூகா வென  = "கூ" என்றும் "கா" என்றும் (அய்யோ அம்மா என்று அரற்றுவதை)


வென் = என்னுடைய 


கிளை  = உறவினர்கள் 


கூடியழப் = ஒன்று கூடி அழது பின் 


போகா வகை = சென்று விடும் படி  செய்யாமல் 


மெய்ப் பொருள்  = வாழ்வின் உண்மையான பொருளை 


பேசியவா  = உபதேசம் செய்தவனே 


நாகாசல வேலவ = நாகாசாலம் என்ற தலத்தில் உறையும் வேலவரே 


 நாலுகவித் தியாகா = நாலு விதமான கவிதைகளை இயற்றும் ஆற்றலை அடியவர்களுக்கு அருளும் 


சுரலோக  = தேவர் உலகின் 


சிகாமணியே .  = தலைவனே 


பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்று இருக்காமல், உண்மையை அறிய வேண்டும் என்பது பொருள் 







 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html



]




Friday, December 9, 2022

திருக்குறள் - புறங்கூறாமை - முன்னுரை

திருக்குறள் - புறங்கூறாமை - முன்னுரை 



தனி மனிதன், ஒரு குடும்ப மனிதனாகிறான். பின், ஒரு சமுதாய மனிதனாகிறான். ஒவ்வொரு கட்டத்திலும், அவன் சிறந்த மனிதனாக வேண்டும் என்றால் குற்றங்களை களைந்து, குணங்களைப் பெருக்க வேண்டும். 



குற்றங்கள் மன, மொழி, மெய்யில் நிகழ்கிறது. 



முந்தைய அதிகாரம் மனதால் ஏற்படும் குற்றமான வெக்காமை பற்றி கூறியது. 



அடுத்து மொழியால், சொல்லால் ஏற்படும் குற்றம் பற்றிக் கூற இருக்கிறது.



சொல்லில் ஏற்படும் குற்றங்கள் பல வகைப்படும். 


முதலில் புறங்கூறாமை என்ற குற்றத்தைக் எடுதுக் கொள்கிறார். 



வள்ளுவர் சொல்லும் இந்த குற்றங்களை விலக்கினாலே போதும். நாம் மிகச் சிறந்தவர்கள் ஆவோம் என்பதி, சந்தேகம் இல்லை. 


வள்ளுவர் , இந்த அதிகாரத்தை ஐந்து பிரிவாக பிரித்துக் கொள்கிறார்.  அவையாவன 




(please click the above link to continue reading)







புறங்கூறாமையின் நன்மை 


புறங் கூறுதலின் கொடுமை 


புறம் கூறுவார் அடையும் குற்றங்கள் 


புறம் கூறுவதை எப்படி விடுவது 


இனி, இவை என்னென்ன என்று அறிவோம். 




Tuesday, November 29, 2022

திருக்குறள் - விறல்ஈனும்

         

 திருக்குறள் - விறல்ஈனும்


நமக்கு ஒரு பொருளோ அல்லது உதவியோ மற்றொருவரிடம் இருந்து வேண்டி இருந்தால், அவர் மனம் கோணாதபடி நடந்து கொள்ள வேண்டும். அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். அவருக்கு பணிந்து போக வேண்டும். அவர் முட்டாள்தனமாக ஏதாவது சொன்னால் கூட, சரி சரி என்று போக வேண்டும். மாறாக, "இது சரியான முட்டாள்தனம்" என்று சொல்ல முடியாது. எல்லாவற்றையும் உள்ளுக்குள் வைத்து பூட்டி வைத்து விட வேண்டும்.


நேரடியாக ஒரு உதவி வேண்டி நின்றாலே இந்தக் கதி. அவருக்குத் தெரியாமல் அவர் பொருளை கவர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தால் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டி வரும்?



மாறாக, அவரிடம் இருந்து நமக்கு ஒன்றும் வேண்டாம் என்றால், நாம், நம் மனதில் பட்டதை சொல்லலாம், செய்யலாம். தைரியமாக நெஞ்சு நிமிர்த்தி நடக்கலாம். 


"யாமார்க்கும் குடி அல்லோம்" என்று நாவுக்கரசர் முழங்கியது மாதிரி முழங்கலாம்.


அதைத்தான் இன்றைய குறளில் கூறுகிறார். 



"இறுதியில் வரப் போகும்  துன்பத்தை அறியாமல், பிறன் பொருளை விரும்பினால் அது துன்பத்தைத் தரும். மாறாக, , வெற்றியை, பெருமையைத் தரும் அப்படி வேண்டாம் என்று சொல்லும் பெருமை"



பாடல் 


இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு


பொருள் 




(please click the above link to continue reading)


இறல் = கெடுதல், துன்பம் 


ஈனும்  = தரும். (என்பதை) 


எண்ணாது  = நினைத்துப் பார்க்காமால் 


வெஃகின் = பிறன் பொருளை விரும்பினால் .
 

விறல்ஈனும்  = வெற்றியைத் தரும் 


வேண்டாமை = பிறன் பொருள் வேண்டாம் 


என்னுஞ்  = என்று சொல்லும் 


செருக்கு = செல்வம், பெருமை 




பயந்து, பயந்து, சகித்து, பணிந்து வாழ வேண்டுமா ?

அல்லது 

தலை நிமிர்ந்து, நெஞ்சு நிமிர்த்தி, தன்னம்பிக்கையோடு வாழ வேண்டுமா?


[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


அகன்ற அறிவுஎன்னாம்




பொல்லாத சூழக் கெடும்




வேண்டற்க வெஃகியாம் 


அஃகாமை செல்வத்திற்கு யாதெனின்


திரு சேரும் திறனறிந்து  



]


Saturday, November 26, 2022

கந்தரனுபூதி - எதிரப் படுவாய்

           

 கந்தரனுபூதி - எதிரப் படுவாய்


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


ஆழ்ந்து சிந்தித்தால் நம் வாழ்க்கை முழுவதும் பயம் என்ற ஒரு பெரிய உணர்வால் உந்தப்பட்டே சென்று கொண்டு இருக்கிறது. 


பள்ளி நாட்களில் பள்ளிக் கூடம், ஆசிரியர், பாடம், பரீட்சை என்று பயம். 

பின், வேலை, மேலதிகாரி, செய்து முடிக்க வேண்டிய வேலைகள், வேலை போய் விடுமோ என்ற பயம்...


குடும்பம் என்று வந்துவிட்டால், நமக்கு ஏதாவது ஆகி விட்டால் நம் குடும்பம் என்ன ஆகும் என்ற பயம். 


இதற்கு நடுவில் நோய், விபத்து ,பிள்ளைகள் படிக்க வேண்டுமே, அவை நல்ல படியாக வளர வேண்டும் என்று ஆயிரம் கவலை, பயம். 


பயங்களில் பெரிய பயம் மரண பயம் . அனைத்து பயங்களுக்கும் மூல பயம் மரண பயம். 


சில பேருக்கு மரணம் என்று சொன்னாலே பிடிக்காது. முகம் சுளிப்பார்கள். அவ்வளவு பயம். 


மரண பயம் இருக்கும் வரை நம்மால் வாழ்கையை தெளிவாக அணுக முடியாது. எதை எடுத்தாலும் அந்த பயம் முன் வந்து நிற்கும். நேரடியாக, மறை முகமாக அது நம்மை பயப்படுதிக் கொண்டே இருக்கும். 


அதெல்லாம் ஒண்ணும் இல்லை என்று நினைத்தால், ஒரு நாள் கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ வீடு வர நேரம் ஆனால், போன் சுவிட்ச் ஆப் என்று வந்தால், அன்று தெரியும். 


அந்த பயத்தை நீக்கி விட்டால்? 


"என் இறுதிக் காலத்தில், நான் மரணப் படுக்கையில் இருக்கும் போது , மிகவும் பயந்து போய் இருப்பேன். அப்போது, முருகா, நீ மயில் மேல் வந்து என் பயத்தைப் போக்க வேண்டும்" என்று வேண்டுகிறார். 



பாடல் 


கார்மா மிசைகா லன்வரிற் கலபத்

தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்

தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்

சூர்மா மடியத் தொடுவே லவனே!


சீர் பிரித்த பின் 


கார் மாமிசை காலன் வரின் கலபத்து

ஏர் மாமிசை வந்து எதிரப் படுவாய்

 தார்மார்ப வலாரி தலாரி எனும்

சூர்மா மடியத் தொடு வேலவனே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


(pl click the above link to continue reading)



கார் = கரிய மேகம் போன்ற 


மாமிசை = (மா = விலங்கு, மாக்கள் = விலங்குகள்) = எருமை மேல் 


காலன் = எமன் 


வரின் = வரும் போது 


கலபத்து = கலபம் என்றால் தோகை.


ஏர் மாமிசை  = மயில் மேல் ஏறி 


வந்து = வந்து 


எதிரப் படுவாய் = என் எதிரில் வருவாய் 


தார்மார்ப = மாலை அணிந்த மார்பை உடையவனே 


வலாரி = வலன் என்ற அசுரனை கொன்ற இந்திரன் 


தலாரி = தலம் (இடம்) 


எனும் = என்ற தேவ லோகத்தை வென்ற 


சூர்மா = சூரன் என்ற அசுரன் 


மடியத் = அழியும் படி 


தொடு வேலவனே! = வேலை எடுத்தவனே 


மரண பயம் என்றால் என்ன? எதைப் பற்றி பயம்?  சிந்திப்போம். .


குடும்பத்தை தனியே விட்டு விட்டுப் போகிறோமே என்ற பயமா என்றால் இல்லை. அது கவலை. அது கூட கொஞ்ச வயது வரை. .என்பது வயதில் நம்மைச் சார்ந்து யாரும் இருப்பது இல்லை. 


சரி, அனுபவிக்காமல் விட்டு விட்டவைகள் காரணமாக இருக்குமா என்றால், என்பது தொண்ணுறு வயதில் எதை அனுபவிக்க முடியும்?


பின் எதுதான் மரண பயம் என்று கேட்டால் சரியான விடை கிடைத்தபாடில்லை. நசிகேதன் தொடங்கி இன்று வரை அந்தக் கேள்வி விடை வேண்டி நிற்கிறது. 


நாம் சேர்த்து வைத்த அனுபவங்களை விட்டு விட்டுப் போகிறோமே என்பதுதான் கவலை. தெரியாத ஒன்றை இழக்க முடியாது. அப்படியே இழந்தாலும் பயம் இருக்காது. இந்த தெரிந்த விடயங்கள்தான் கவலைக்குக் காரணம். பயத்தின் வித்து. 


அந்த பயத்தை போக்க வேண்டும் என்று வேண்டுகிறார். 





 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html


]




Wednesday, November 9, 2022

திருக்குறள் - திரு சேரும் திறனறிந்து

        

 திருக்குறள் - திரு சேரும் திறனறிந்து  




ஒரு பெரியவர், நல்லவர், உயர் அதிகாரி வீட்டுக்குப் போவது என்றால் காலம் நேரம் அறிந்து போவோம் அல்லவா ? அவருக்கு நேரம் இருக்குமா? நல்ல மூடில் இருப்பாரா, என்பதெல்லாம் அறிந்து கொண்டுதான் போக வேண்டும். 



அது ஒரு புறம் இருக்கட்டும். 



நாம் எல்லாம் செல்வததை சேர்க்க மிகுந்த முயற்சி செய்கிறோம்.  நாம் செல்வத்தை தேடி அலைகிறோம். அதற்குப் பதிலாக, செல்வம் நம்மைத் தேடி வரும் என்றால் எப்படி இருக்கும்? அதற்கு வள்ளுவர் வழி சொல்கிறார். 





"அறத்தினை அறிந்து, அதன் படி பிறர் பொருளை விரும்பாதவர்களை எப்படி சென்று அடைவது என்று திருமகள் காத்துக் கிடப்பாள்"



பாடல் 



அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு



பொருள் 




(please click the above link to continue reading)


அறன்அறிந்து = அறத்தினை அறிந்து 


வெஃகா = பிறன் பொருளை அடைய விரும்பாத 


அறிவுடையார்ச்  = அறிவுடையாரைச் 


சேரும் = சென்று அடையும் 


திறனறிந்து = எப்போது செல்லலாம், எப்படிச் செல்லலாம் என்று 


ஆங்கே திரு = அங்கே, திருமகள் 




சில சமயம் நமக்கு எதிர் பார்க்காமல் சில செல்வம் வந்து சேரும். நாம் முதலீடு செய்த செல்வம் விலை ஏறி பலன் தரும், பதவி உயர்வு, ,போனஸ் போன்றவை வரும். 



நாம் எதிர் பார்த்து இருக்க மாட்டோம். 



வள்ளுவர் சொல்கிறார், திருமகள் காத்துக் கொண்டு இருப்பாளாம். எப்படி இவனைப் போய்ச் சேர்வது என்று. சரியான காலம் பார்த்து நம் வீட்டுக்கு வந்து விடுவாளாம். 



எப்போது என்றால், நாம் மற்றவர் பொருளை விரும்பால் இருக்கும் பொழுது. 




எப்போது வருவாள் என்று தெரியாது. சரியான சமயத்தில் வந்து விடுவாள் 





[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


அகன்ற அறிவுஎன்னாம்




பொல்லாத சூழக் கெடும்




வேண்டற்க வெஃகியாம் 


Monday, November 7, 2022

கந்தரனுபூதி - பரிசென் றொழிவேன்

          

 கந்தரனுபூதி -  பரிசென் றொழிவேன் 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


காமம் ஆண்களை  இறுதி வரை விடுவது இல்லை. பிடித்து ஆட்டிக் கொண்டே இருக்கிறது. உடல் தளர்ந்தாலும், உள்ளத்தில் காம உணர்வுகள் இருந்து கொண்டே இருக்கிறது. காமம் மிகும் போது அறிவு தன் நிலை இழக்கிறது. மனம் தடுமாறுகிறது. 


இந்த காமம் என்ற சிக்கல் எப்போது என்னை விட்டுப் போகும் என்று கேட்கிறார் அருணகிரி. அப்படி கேட்பது நம் பொருட்டு. நம் நிலையை அவர் தன் மேல் ஏற்றிக் கூறுகிறார் என்று கொள்ள வேண்டும். 


"முருகா, நீ பெரிய கிரௌஞ்ச மலையை உன் வேலால் உடைத்து எறிந்தவன். பயம் இல்லாதவன். என்னை இந்த காமம் படாத பாடு படுத்துகிறது. அதில் இருந்து மீள நீ தான் உதவி செய்ய வேண்டும்" என்று வேண்டுகிறார். 



பாடல் 



மட்டூர் குழன் மங்கையர் மையல் வலைப் 

பட்டூசல் படும் பரிசென் றொழிவேன் 

தட்டூடற வேல் சையிலத் தெறியும் 

நிட்டூர நிராகுல நிர்ப்பயனே



சீர் பிரித்த பின் 



மட்டு ஊறும் குழல்  மங்கையர் மையல் வலைப் 

பட்டு ஊசல்  படும் பரிசு என்று ஒழிவேன்  

தட்டு ஊடு அற  வேல் சையிலத்து எறியும்  

நிட்டூர நிராகுல நிர்ப்பயனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html


(pl click the above link to continue reading)



மட்டு = தேன், கள் 


ஊறும் = ஊறும், சுரக்கும் 


குழல் = குழல், சிகை கொண்ட 


மங்கையர் = பெண்களின் 


மையல் வலைப் = காம வலையில் 

 

பட்டு = அகப்பட்டு 


ஊசல்  படும்  = அங்கும் இங்கும் என்று ஊசலாடும் 


பரிசு = நிலையை 


என்று ஒழிவேன்   = விட்டு என்று விடுபடுவேன் 


தட்டு = அடுக்க அடுக்காக உள்ள மலை 


ஊடு அற =அவற்றின் ஊடே சென்று அவற்றை அறுத்த, பொடி செய்த 


வேல் = வேலை 


சையிலத்து எறியும்   = மலை மேல் எறியும் 


நிட்டூர = கோபம் கொண்ட 


நிராகுல = நிர் + ஆகுலம் = துன்பம் இல்லாத 


நிர்ப்பயனே = நிர் + பயம் = பயம் இல்லாதவனே 



விரிவுரை 


மட்டு என்றால் தேன்.


"ஊறு மட்டே" என்பார் மணிவாசகர். (நீத்தல் விண்ணப்பம்).இறைவன் உள்ளத்தில் ஊறும் தேன் போன்றவன். 


மாறுபட் டஞ்சென்னை வஞ்சிப்ப யான்உன் மணிமலர்த்தாள்

வேறுபட் டேனை விடுதிகண் டாய்வினை யேன்மனத்தே

ஊறுமட் டேமன்னும் உத்தர கோசமங்கைக்கரசே

நீறுபட் டேஒளி காட்டும்பொன் மேனி நெடுந்தகையே. 



தேன் சொரியும் பூக்கள் அணிந்த குழலை உடைய மங்கையர்கள் என்றாலும் சரி. 


வாயில் தேன் ஊறும் குழல் உள்ள பெண்கள் என்றாலும் சரி. 


இங்கே அவர் குறிப்பது, விலை மகளிரை. மனைவியை அல்ல என்று கொள்ள வேண்டும். "மையல் வலை" என்று குறிப்பிடுகிறார். 


காமம் மலை போல் பெரியது. அனுபவித்து எல்லாம் கடந்து விட முடியாது. இராஜ்யங்களை புரட்டிப் போட்டிருக்கிறது காமம். இரத்த ஆறு ஓட விட்டிருக்கிறது காமம். சரித்திரத்தின் போக்கை மாற்றி இருக்கிறது காமம். 


ஞானம் ஒன்று தான் காமத்தை அழிக்கும். முருகனின் வேல் ஞானத்தின் குறியீடு. அந்த வேல் கிரௌஞ்ச மலையை அழித்தது. ஞானம் தான் ஆணவம், கன்மம், மாயை , காமம், குரோதம், மதம் மாச்சரியம் போன்ற தீய குணங்களை அழிக்கும். 



 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html




]




Sunday, November 6, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் -2௦33 - குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே

 

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் -2௦33 - குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே


(இதன் முந்தைய பதிவுகளை இந்த வலை தளத்தின் இறுதியில் காணலாம்) 


நாம் ஒருவரை நினைக்கிறோம்  என்றால் எதை நினைப்போம்? அவருடைய உடை, உருவம் ஒரு புறம் நினைவு வந்தாலும், பெரும்பாலும் அவருடைய குணங்களே நம் நினைவில் நிற்கும். நல்லவர், பொல்லாதவர், கோபக்காரர், சிரிக்க சிரிக்க பேசுவார், அறிவாளி என்றெலாம் அவரின் குண நலன்களே பெரும்பாலும் நம் மனதில் வந்து போகும். 


உடல் தோற்றம் மாறக் கூடியது. நம் இள வயது புகைப் படத்தை பார்த்தால் நமக்கே சில சமயம் ஆச்சரியமாக இருக்கும். "நானா அது, அப்படியா இருந்தேன்"  என்ற எண்ணம் வரும். உடல் மாறும். குறுகிய காலத்தில் பெரிய அளவில் மாறும். 


குணம் மாறுவது இல்லை. 


நாம் இறைவன் என்று நினைப்பது அவரின் அவதாரங்களையே. நீல வண்ணம், ,கறுப்பு வண்ணம், குள்ள உருவம், சிங்கத் தலை, என்றெல்லாம் நினைக்கிறோம். 


இறை என்பது நம் சிந்தனையில் சிக்காத ஒன்று என்பது சமயக் கருத்து. 


உருவம்

அரு உருவம் 

அருவம்

பின் அதையும் தாண்டிய ஒன்று. அது என்ன என்று நம் சிற்றறிவு அறியாது. 


"சிந்தையும் செல்லா சேச்சியன் காண்க" என்பார் மணிவாசகர். 


இங்கே, ஆழ்வார் சொல்கிறார், 


"நீ அவனை எப்படி எல்லாம் நினைக்கிறாயோ நினை. ஒரு தவறும் இல்லை. உருவங்களைத் தாண்டி, அவன் குணம் ஒன்று இருக்கிறது. அதையும் நினை" என்கிறார். 


பாடல் 


காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதி ளிலங்கை செற்ற


ஏற்றினை, இமயம் மேய எழில்மணித் திரளை, இன்ப


ஆற்றினை அமுதந் தன்னை அவுணனா ருயிரை யுண்ட


கூற்றினை, குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே.


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/11/233.html


(Please click the above link to continue reading)



காற்றினைப் = காற்றினை 


புனலைத் = நதியை, நீரை 


தீயைக் = தீயை 


கடிமதி ளிலங்கை  = காவல் பொருந்திய மதில்களை உடைய 


இலங்கைசெற்ற = இலங்கையை போரில் வென்ற 



ஏற்றினை = ஏறு போன்றவனை 


இமயம் மேய = இமயம் போல் 


எழில்மணித் திரளை = அழகிய மணி போன்றவனை 


இன்ப ஆற்றினை = பேரின்ப வெள்ளத்தினை 


அமுதந் தன்னை = அமுதத்தை 


அவுணனா ருயிரை யுண்ட = அரக்கர்களின் அருமையான உயிரை மாய்த்த 


கூற்றினை = கூற்றுவனை 


குணங்கொண் டு  = குணங்களைக் கொண்டு 


உள்ளம் = உள்ளமே 


கூறுநீ  = நீ சொல் 


கூறு மாறே. = கூறும் + ஆறு = கூறுகின்ற வழி அதுதான் 


வழிபடும், நினைக்கும் ஒரு வழி இருக்கிறது. அந்த வழியில் வழிபடு என்கிறார். 


இந்த பாசுரத்தை விரித்து பொருள் சொல்லுவார்கள்.


சீதை என்ற ஜீவ ஆத்மா பிறவி என்ற பெருங்கடலால் சூழப் பட்டு ஞானேந்த்ரியங்கள், கன்மேந்த்ரியங்கள் என்ற பத்துத் தலை அரக்கனால் சிறை வைக்கப் பட்டு இருந்தது. இராம நாமத்தின் மூலம் அது விடுபட்டு இறைவனை அடைந்தது என்று விரித்தும் பொருள் சொல்லுவார்கள். 



ஆத்மா எவ்வளவுதான் முயன்றாலும், குரு/ஆச்சாரியன் (அனுமன்) அருள் இன்றியும், இறை நாமம் இன்றியும், அவன் அருள் இன்றியும் கடைந்தேற முடியாது என்றும் விரித்துச் சொல்லலாம். 


நம் அறிவும், அனுபவமும் விரிய விரிய இவற்றின் உட் பொருளும் விரிந்து கொண்டே போகும். 





 








2032 - நெறிமையால் நினைய வல்லார்



https://interestingtamilpoems.blogspot.com/2022/11/232.html