Sunday, June 19, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 5 - விளியாது நிற்கும் பழி

  

திருக்குறள் - பிறனில் விழையாமை - 5 - விளியாது நிற்கும் பழி


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html


குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


)

எவனோருவனும் ஏன் தவறு செய்கிறான்? 


தவறு செய்வது தவறு என்று தெரியும். இருந்தும் ஏன் செய்கிறான்?


காரணம், அது எளிது என்று நினைக்கிறான். தவறு செய்வது எளிது, சுலபம் என்று நினைப்பதால் தவறுகளைச் செய்கிறான். ஒழுக்கமாக, நேர்மையாக் நடப்பது கடினம் என்று நினைக்கிறான். குறுக்கு வழியில் செல்வது எளிது என்று நினைக்கிறான். 


அது தவறு என்கிறார் வள்ளுவர். 


"நீ எளிது என்று நினைத்து இப்போது தவறு செய்து விடலாம். ஆனால், அது எந்தக் காலத்திலும் அழியாத இழிவைத் தரும்"


என்கிறார். 


அதாவது, தவறான வழியில் இன்பம் வரலாம். இல்லை என்று சொல்லுவதற்கு இல்லை. ஆனால், அந்த இன்பம் மறைந்து விடும். ஆனால், அதன் மூலம் வரும் பழி இருக்கிறதே, அது ஒரு காலத்திலும் அழியாது. 


சிறிது கால இன்பத்துக்காக நிரந்தர பழியை யாராவது சுமப்பார்களா? என்று கேட்கிறார். 



பாடல் 


எளிதென இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html


(pl click the above link to continue reading)


எளிதென = எளிமையானது, சுலபமானது என்று எண்ணி 


இல்இறப்பான் = மற்றவன் இல்லம் சென்று அவன் மனைவியிடம் தவறான வழியில் நடந்து கொள்பவன் 


எய்தும் = அடைவான் 


எஞ் ஞான்றும் = எல்லாக் காலத்திலும் 


விளியாது = முடிவு இல்லாத 


நிற்கும் பழி = நிலைத்து நிற்கும் பழி 


நன்கு படித்தவன் தவறு செய்ய மாட்டான்.  அதிகம் படிக்காதவனும், பழி பாவத்துக்கு அஞ்சி தவறு செய்ய மாட்டான். இந்த அரைகுறையாக படித்தவன் இருக்கிறானே, அவன் தவறு செய்வதற்கு வாய்ப்பு அதிகம். 


"எனக்குப் பிடித்து இருக்கிறது. அவளுக்கும் பிடித்து இருக்கிறது. இரண்டு பேர் மனம் ஒத்து போய்விட்டால், இடையில் கணவன் என்ன, கத்திரிக்காய் என்ன..." என்று வாதம் செய்வான். 


அவனைப் போன்றவர்களுக்கு அவன் வழியிலேயே போய் புத்தி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் வள்ளுவர். 


"நீ சொல்வதும் சரிதான். தவறான வழி என்றால் இன்பம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நினைத்துப் பார்...இந்த சிறிய இன்பத்தால் உனக்கும், அவளின் குடும்பத்துக்கும் எப்படி ஒரு தீராத பழியை நீ கொண்டு வரப் போகிறாய் என்று" என்று எச்சரிக்கிறார். 


இப்படி ஒரு பாட்டன் கிடைக்க நாம் எல்லாம் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். 


பூஜை அறையில், வள்ளுவர் படத்தையும் வைக்க வேண்டும். 









No comments:

Post a Comment