Tuesday, September 3, 2019

கம்ப இராமாயணம் - இரு மாதரை

கம்ப இராமாயணம் - இரு மாதரை 


சீதையின் கற்பை இராமன் சந்தேகித்தான். அதை அறிந்த சீதை தீயில் இறங்கி தன் கற்பை நிரூபித்தாள்.

இராமனுக்கு சீதையின் மேல் சந்தேகம் வந்தது போல சீதைக்கும் இராமன் மேல் சந்தேகம் வந்தால் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளுமா என்று பெண்ணிய வாதிகள் கொந்தளிக்கலாம்.

ஒரு வேளை சீதையும் சந்தேகப் பட்டாளோ என்று சிந்திக்க வைக்கும் பாடல் உள்ளது.

அசோகவனத்தில் சிறை இருந்த சீதையை கண்ட அனுமன், இராமனிடம் கூற சேதி ஏதாவது உள்ளதா என்று கேட்கிறான்.

சீதைக்கும் இராமனுக்கும் இடையில் ஆயிரம் அந்தரங்க செய்தி பரிமாற்றம் இருந்திருக்கலாம்.  கணவன் மனைவி இடையில் அந்தரங்க செய்திக்கு பஞ்சமா?

இருந்தும், சீதை குறிப்பாக ஒரு செய்தியை கூறுகிறாள்.

"என்னை வந்து திருமணம் செய்து கொண்ட நேரத்தில், உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனதாலும் நினைக்க மாட்டேன்  எனக்கு ஒரு வரம் தந்தார். அதை அவர் காதில உரக்கச் சொல்லு " என்று கூறுகிறாள்.


பாடல்

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
‘இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் ‘என்ற செவ் வரம்
தந்தவாறு திருச்செவி சாற்றுவாய்!

பொருள் 

வந்து = மிதிலைக்கு வந்து

எனைக்  = என்னை

கரம் பற்றிய  = கைகளை பற்றிய அந்த

வைகல்வாய் = நேரத்தில்

‘இந்த இப் பிறவிக்கு = இந்தப் பிறவியில்

இரு மாதரைச் = இரண்டு பெண்களை

சிந்தையாலும் தொடேன்  = மனதாலும்  தொட மாட்டேன்

‘என்ற = என்று கூறிய

செவ் வரம் = சிறந்த வரத்தை

தந்தவாறு = தந்ததை

திருச்செவி சாற்றுவாய்! = அவருடைய செவிகளில் சாற்றுவாய்

சாற்றுதல் என்றால் உரக்கச் சொல்லுதல், விளம்பரப் படுத்தல் என்ற பொருளில் வரும்.

இதை ஏன், மூன்றாம் மனிதனான, திருமணம் ஆகாத அனுமனிடம் கூற வேண்டும்?

இன்னொரு பெண்ணை தொட மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்திருக்கிறார். அதை அவருக்கு நினைவு படுத்து என்றால் என்ன அர்த்தம்?

சீதை அப்படி எல்லாம் நினைக்க மாட்டாள். அவள் அந்த அர்த்தத்தில் சொல்லி இருக்க  மாட்டாள் என்று யாரேனும் நினைக்கலாம் என்று நினைத்து, கம்பன் இன்னும் சில பாடலைகளை சேர்த்து இருக்கிறான். அவை பற்றி பின் ஒரு  நாள் சிந்திக்க இருக்கிறோம்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

சந்தகேம் பொது.

இராமன் சேந்தேகப் பட்டான், அக்கினி, ப்ரம்மா, சிவன் எல்லாம் வந்து சொல்லிப் பார்த்தார்கள்.

ஒன்றும் நடக்கவில்லை.

சிவன், வேறு வழியில்லை என்று தசரதனை அழைத்து வரச்சொன்னான்.

தயாரதனும் வந்தான்.

தயாரதனுக்கும் , இராமனுக்கும் இடையே நடத்த பேச்சு மிக சுவாரசியமானது.

அதை இல்லம் விட்டு விடுவோம். மேலே போவோம்.

தயரதன் சீதையிடம் என்ன சொன்னான்?

அதற்கு சீதை என்ன மறு மொழி சொன்னாள் என்று நாளை சிந்திக்க இருக்கிறோம்.

மறக்காம வந்திருங்க....

interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_3.html

No comments:

Post a Comment