Monday, March 21, 2022

சிவ ஞான போதம் - முதல் சூத்திரம்

 சிவ ஞான போதம் - முதல் சூத்திரம்


உலகம் மூவகை பொருள்களால் ஆனது (அவன், அவள், அது) என்று பார்த்தோம். 


அந்த மூன்றும் மூன்று தொழில்களைச் செய்கின்றன என்று பார்த்தோம் (தோன்றுதல், இருந்தல், அழிதல்). 


இப்போது சூத்திரத்துக்குள் நுழைவோம். 


பாடல் 


அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையின்

தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்

அந்தம் ஆதி என்மனார் புலவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_21.html


(pl click the above link to continue reading)



அவன் அவள் அது  = அவன், அவள், அது 


எனும் அவை  = என்ற அந்த மூன்றும் 


மூ வினைமையின் = பிறத்தல், இருத்தல், அழிதல் என்ற மூன்று வினைகளில் இருக்கின்றன 


தோற்றிய = எப்படி தோற்றிவிக்கப்பட்டதோ 


திதியே = நிலைத்து நின்று 


ஒடுங்கி = பின் மறைந்து 


மலத்து உளதாம் = முதிவர்டையாத காரணத்தால் 


அந்தம் = முடிவே 


 ஆதி = தொடக்கம் 


என்மனார் புலவர் = என்று அறிஞர்கள் சொல்லுவார்கள் 


நாம் பிறந்தோம். அதில் சந்தேகம் இல்லை. 


நாமே பிறந்தோமா அல்லது ஒரு பெற்றோர் மூலம் பிறந்தோமா? 


ஒரு தாயின் வயிற்றில் இருந்து பிறக்கிறோம். எதுவும் தானே தோன்றி விட முடியாது. 


ஒன்று தோன்றுகிறது என்றால், அது தோன்ற மற்றொன்று வேண்டும். 


இந்த உலகம் தோன்றி இருக்கிறது என்றால், அதை தோற்றுவித்த ஒருவன் வேண்டும். இந்த உலகம் தன்னைத் தானே தோற்றுவித்துக் கொள்ள முடியாது. 


"தோற்றிய திதியே" என்கிறது சிவ ஞான போதம். 


தோன்றிய அல்ல, தோற்றிய. 


இது பெரிய தத்துவ சிக்கல். 


ஒரு பானை இருக்கிறது என்றால், அதை செய்த குயவன் இருக்க வேண்டும் என்று நாம் அறிந்து கொள்கிறோம். 


பானை என்றால் குயவன், குயவன் என்றால் அவனுடைய பெற்றோர், ப் பின் அவர்களின் பெற்றோர் என்று போய்க் கொண்டே இருக்கும். 


எல்லாவற்றிற்கும் ஒரு மூல காரணம் இருக்க வேண்டுமே என்கிறார்.


அது தான் கடவுள் என்கிறது நம் பக்தி இலக்கியங்கள். 


அதற்கு எதிர் வாதம் செய்பவர்கள், எல்லாவற்றிற்கும் ஒரு கர்த்தா வேண்டும் என்றால், இறைவனைப் படைத்தவர் யார் என்ற கேள்வி வரும். 


அது வந்து, அப்படி அல்ல...இறைவன் தானே தோன்றினான் என்றால் பின் உலகமும் ஏன் தானே தோன்றி இருக்க முடியாது என்ற கேள்வி வரும். 


இந்தவாதத்திற்கு முடிவு இல்லை. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சரி, தோற்றிவித்தவன் ஒருவன் வேண்டும் என்றே வைத்துக் கொள்வோம்.


எதில் இருந்து தோற்றி வைத்தான்? 


பானை செய்ய குயவன் வேண்டும். சரி. மண்ணும் வேண்டுமே. 


இந்த உலகை தோற்றுவிக்க மூலப் பொருள் வேண்டுமே (raw material) 


ஒன்றும் இல்லாத ஒன்றில் இருந்து எதுவும் தோன்ற முடியாது. 


எனவே எதில் இருந்தோ இவை தோன்றி இருக்கின்றன.


சரி, அதையும் ஏற்றுக் கொள்வோம். 


இறந்த பின், இவை எங்கே போகின்றன? எங்காவது போக வேண்டுமே. 


உள்ளது மறையாது, இல்லாதது தோன்றாது என்ற விதிப் படி இந்த உலகம் ஏதோ ஒன்றில் இருந்து தொடங்கி ஏதோ ஒன்றில் முடிகிறது. 


இந்த தோற்றம், இருத்தல், மறைதல் என்ற மூன்றையும் செய்பவர் யார் என்ற கேள்வி வருகிறது அல்லவா?  


"அந்தம் ஆதி என்மனார் புலவர்"


எது முடிவோ, அதுவே தொடக்கம் என்று புலவர்கள் கூறுவார்கள் என்கிறது சிவ ஞான போதம். 


அது என்ன அர்த்தம்?


உரை எழுதிய பெரியவர்கள் எல்லோரும் கூறுவது என்ன என்றால் "அழிக்கும் கடவுளே எல்லாவற்றிற்கும் காரணம்" என்று கூறுகிறார்கள்.


அதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியது இல்லை. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சூத்திரம் என்ன சொல்கிறது 


"அந்தம் ஆதி".


எது முடிவோ, அதுவே தொடக்கம். 


இது ஒரு சுழற்ச்சி. மாறி மாறி வரும். 


அப்படி இல்லாமல் தோன்றுவது போலவும், இருப்பது போலவும், இறப்பது போலவும் தனித் தனியாகத் தெரிகிறதே என்றால் அதன் காரணம் "மலதுளாதம்" என்கிறது சூத்திரம். 


மலம் என்றால் குற்றம், மயக்கம், குழப்பம். 


அப்படித் தோன்ற காரணம் நம் அறிவின் குறை. சரியாக பார்காத பிழை என்கிறது சூத்திரம். 


இது இன்னும் விரியும். 




No comments:

Post a Comment