Tuesday, March 29, 2022

நளவெண்பா - கடவுளை எங்கே காணலாம் ?

நளவெண்பா -  கடவுளை எங்கே காணலாம் ?


முந்தைய ப்ளாகில் திருமாலை எங்கு காணலாம் என்று புகழேந்திப் புலவர் கூறினார். 


அதாவது,


மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்

காலிக்குப் பின்னேயும் காணலாம் - மால்யானை

முந்தருளும் வேத முதலே எனஅழைப்ப

வந்தருளும் செந்தா மரை.


பழமையான வேதங்களுக்கு முன்னேயும் காணலாம். ஆநிரைகளுக்கு பின்னேயும் காணலாம், யாரைக் காணலாம் என்றால், "ஆதி மூலமே" என்று அலறிய யானைக்கு அன்று அருளிய திருவடிகளை என்றார். 


சரி, திருமாலை அங்கு காணலாம், சிவ பெருமானை எங்கு காணலாம் ?


அடுத்து சொல்கிறார், 


"நெறிகளின் உறைவிடமாக உள்ள, கையில் மானை ஏந்திய சிவனை எங்கு காணலாம் என்றால், திருநீறு அணிந்த அடியவர்களின் உள்ளத்தில்"


என்கிறார். 


பாடல் 


போதுவார் நீறணிந்து பொய்யாத ஐந்தெழுத்தை

ஓதுவார் உள்ளம் எனஉரைப்பார் - நீதியார்

பெம்மான் அமரர் பெருமான் ஒருமான்கை

அம்மான்நின் றாடும் அரங்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_29.html


(Pl click the above link to continue reading)



போதுவார் = எந்நேரமும் 


நீறணிந்து = திருநீற்றை தரித்து 


பொய்யாத ஐந்தெழுத்தை = பொய் இல்லாத 'நமச்சிவாய' என்ற ஐந்து எழுத்தை 


ஓதுவார் = தினம் பாராயணம் செய்வார் 


உள்ளம் எனஉரைப்பார்  = உள்ளத்தில் என்று சொல்லுவார்கள் 


நீதியார் = நெறிமுறைகள் நிறைந்த 


பெம்மான் = பெம்மான் 


அமரர் பெருமான் = தேவர்களின் தலைவன் 


ஒருமான்கை = ஒரு மானைக் கையில் கொண்ட 


அம்மான் = அந்த சிவன் 


நின் றாடும் அரங்கு. = நின்று ஆடும் அரங்கு 


கோவிலுக்கு எல்லாம் போக வேண்டாம். திருமாலும், சிவனும் கோவிலில் இல்லை என்கிறார். 


நாம் எங்கே கேட்கப் போகிறோம். அவர் பாட்டுக்கு சொல்லிவிட்டுப் போகட்டும். 




No comments:

Post a Comment