Wednesday, March 23, 2022

சிவ ஞான போதம் - முதல் சூத்திரம்

 சிவ ஞான போதம் - முதல் சூத்திரம் 


என்ன முதல் சூத்திரம் இன்னும் முடியவில்லையா என்று கேட்கிறீர்களா? 


எவ்வளவோ இருக்கிறது அதற்குள். 


இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். ரொம்ப போர் அடித்தால் சொல்லுங்கள். நிறுத்திவிட்டு அடுத்த சூத்திரத்துக்கு போவோம். 


இந்த உலகம் எப்படி படைக்கப்பட்டது, யார் படைத்தார்கள், ஏன் படைக்கப் பட்டது அல்லது படைக்கப் படவே இல்லை, அதுவே அப்படித்தான் இருந்ததா என்றெல்லாம் நம் முன்னவர்கள் மிக மிக ஆழமாக யோசித்து இருக்கிறார்கள். 


பல்வேறு கொள்கைகள், சிந்தாந்தங்கள், வாதங்கள் எல்லாம் இருக்கின்றன.  அவற்றின் சாரம் என்ன என்று மட்டும் பார்ப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_23.html


(click the above link to continue reading)


முதல் வாதம். மண்ணில் இருந்து பானை வருகிறது. பானை தானே வருமா? யாரோ ஒருவர் அந்த மண்ணை எடுத்து குழைத்து, சக்கரத்தில் இட்டு சுழற்றி, அழகான பானை செய்ய வேண்டும் அல்லவா?  பானை செய்ய மண் வேண்டும். மண் இல்லாமல் குயவன் என்ன முயன்றாலும் பானை செய்ய முடியாது. வெறும் மண் மட்டும் பானையாக முடியாது.  ஒரு பொருள் உண்டாவதற்கு இரண்டு காரணம் வேண்டும் என்று சொல்கிறார்கள். 


முதலாவது உபாதான கரணம். மற்றொன்று நிமித்த காரணம். 


பானை உண்டாவதற்கு மண் உபாதான காரணம். குயவன் நிமித்த காரணம். இரண்டும் இல்லாமல் பானை உண்டாகாது. 


அது போல, இந்த உலகம் உண்டாக அணுக்கள் அல்லது அடிப்படையான பொருள் ஒன்று வேண்டும். அதைக் கொண்டு இந்த உலகை ஒருவர் (குயவன் மாதிரி) செய்ய வேண்டும்.  


இதற்கு ஆரம்ப வாதம் என்று பெயர். இதைஅசத் காரிய வாதம் என்றும் சொல்லுவார்கள். 


சத் என்றால் பொருள். அசத் என்றால் பொருள் இல்லாதது. மண்ணுக்குள் பானை இல்லை. இல்லாத பானையை மண்ணில் இருந்து குயவனார் கொண்டு வருவதைப் போல இல்லாத உலகை, இறைவன் அணுக்களைக் கொண்டு செய்தான் என்று ஒரு வாதம் இருக்கிறது. 


இது சரியல்ல என்று மற்றொரு வாதம் இருக்கிறது. 


அது என்ன என்பதை நாளை பார்ப்போம்.

2 comments:

  1. Very Interesting. Presented very well.

    Looking forward to the next part.

    Thanks.

    Chittanandam

    ReplyDelete
  2. Very interesting. Look forward to hearing more.

    ReplyDelete