Sunday, March 13, 2022

சிவ ஞான போதம் - ஒரு அறிமுகம்

 சிவ ஞான போதம் - ஒரு அறிமுகம் 


சிவஞான போதம் என்ற நூல் மிக மிக சிறிய நூல். 


பன்னிரெண்டே சூத்திரங்கள் கொண்ட நூல். 


எழுதியவர் மெய்கண்ட தேவர். 


அந்த பன்னிரண்டு சூத்திரத்துக்குள் சைவ சமயத்தின் அத்தனை சாரத்தையும் அடக்கி விட்டார். 


படிக்கப் படிக்க விரிந்து கொண்டே போகும். இவ்வளவு இருக்கா என்ற பிரமிப்பு வரும். 


இந்த நூலுக்கு எவ்வளவோ பேர் உரைகள், விரிவுரைகள், பொழிப்புரைகள் என்று எழுதி இருக்கிறார்கள். எழுதி முடியவில்லை. அவ்வளவு ஆழம் கொண்ட நூல். .


கடல் போல் விரிந்த சைவ சமய கோட்பாடுகளை பன்னிரண்டு சூத்திரத்துக்குள் அடக்குவது என்பது முடிகிற காரியமா? 



https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_0.html


(click the above link to continue reading)


நான் வாசித்தவரை, எனக்குத் தெரிதவரை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


எனக்கு சைவ சமயம் பற்றி ஒன்றும் தெரியாது.  நான் செய்வது எல்லாம் இருக்கும் உரைகளை தொகுத்து, எளிமைப் படுத்துவது மட்டும் தான். 


ஆன்மீகத்துக்கும் எனக்கும் ஒரு துளியும் சம்மந்தம் கிடையாது. 


இது பற்றி மேலும் உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பின், சைவ சமய பெரியவர் யாரையாவது அணுகி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். 


நூலை எளிமையாக அறிமுகப் படுத்துவது ஒன்றுமட்டும் தான் என் வேலை. 


மெய்கண்டர் பற்றி பல சுவையான தகல்வகள் உள்ளன. அவற்றை நடுநடுவே பார்ப்போம்.


இனி, நேரே நூலுக்குள் நுழைவோம். 


முதல் சூத்திரம்.....





2 comments:

  1. Welcome.It is happy to know more about saivam.

    ReplyDelete
  2. ஆரம்பமே வாசகர்களை சுண்டி இழுப்பது போல் உள்ளது.

    ஆவலுடன் காத்திருக்கிறோம்

    ReplyDelete