Thursday, October 12, 2023

திருக்குறள் - ஈகை - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - ஈகை - ஒரு முன்னோட்டம் 


தனி மனிதனுக்கு செய்யும் உதவி ஈகை எனப்படும். ஊருக்காக செய்யும் உதவி ஒப்புரவு எனப்படும். 


கேள்வி என்ன என்றால் ஒப்புரவு உயர்ந்ததா, ஈகை உயர்ந்ததா? 


ஒரு தனி மனிதனுக்கு செய்வதை விட ஊருக்கே செய்வது தானே உயர்ந்தது என்று நாம் நினைப்போம். ஆனால் வள்ளுவர் அப்படி நினைக்கவில்லை. 


ஊருக்காக செய்யும் எந்த உதவிக்கும், ஒரு விளம்பரம் கிடைக்கும். ஒரு பேருந்து நிலையம், ஒரு தண்ணீர் பந்தல், இலவச மருத்துவமனை என்று எது செய்தாலும் ஒரு புகழ் கிடைக்கும். அந்த உதவிக்கு பலன் கிடைக்கும். 


நாம் ஒன்று செய்தோம். பதிலுக்கு நமக்கு ஒன்று கிடைத்தது என்றால் அது வியாபாரம். இலாபம் நட்டம் அப்புறம். கொடுத்ததற்கு பலன் கிடைத்தது அல்லவா?


மாறாக, ஒரு பிச்சைகாரனுக்கு ஒரு பத்து உரூபாய் பிச்சை போடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நம் பெயர் கூட அவனுக்குத் தெரியாது. அந்த உதவியால் நமக்கு ஒரு பலனும் இல்லை. இப்படி பலன் எதிர்பாராமல் செய்யும் உதவி பலன் பெறும் உதவியை விட உயர்ந்தது அல்லவா?


எனவே, ஈகை என்ற அதிகாரத்தை ஒப்புரவு என்ற அதிகாரந்த்தின் பின் வைக்கிறார். 


சரி, ஈகை என்றால் என்ன என்று தெரிந்து விட்டது. 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_12.html


(please click the above link to continue reading)


ஈகை பற்றி ஒரு கட்டுரை எழுது என்றால் நாம் எப்படி எழுதுவோம்?


யோசித்துப் பார்ப்போம். 


வள்ளுவர் எப்படி எழுத்கிறார் என்று பாருங்கள். 


முதலில், ஈகை என்றால் என்ன, அதன் இலக்கணம் என்ன, பொருள் என்ன என்று வரையறை செய்கிறார். முதல் குறளில் இதை சொல்லி விடுகிறார். 


அடுத்த ஆறு குறள்களில் ஈகையின் சிறப்பு பற்றி கூறுகிறார். 


ஆறு ஒண்ணும் ஏழு குறள் ஆகி விட்டது. இன்னும் மூன்று குறள்கள் இருக்கின்றன. 


அடுத்த மூன்று குறள்களில் ஈயாமையின் குற்றம் பற்றி கூறுகிறார். ஈயாமல் என்ன ஆகும், யார் அப்படி இருப்பார்கள் என்று விளக்குகிறார். 


மிக மிக அருமையான ஆழமான அர்த்தம் கொண்ட அதிகாரம். 


ஒவ்வொன்றாக சிந்திப்போம். 


 



No comments:

Post a Comment