Monday, October 2, 2023

திருக்குறள் - மருந்து மரம்

 திருக்குறள் - மருந்து மரம் 


ஊருக்கு நல்லது செய்கிறேன் என்று இருக்கிற செல்வத்தை எல்லாம் செலவழித்து விட்டால், பின் நமக்கு ஒரு தேவை என்றால் யார் தருவார்கள்? நமக்குப் பின் நம் பிள்ளைகளுக்கு ஒரு அவசரம், அவசியம் என்றால் யார் வந்து உதவுவார்கள்?  


அதெல்லாம் இந்த வள்ளுவர் யோசித்து இருக்க மாட்டாரா?


ஒப்புரவு செய்பவன் கையில் உள்ள செல்வம், நல்ல மருந்து தரும் மரம் போன்றது என்கிறார். 


பாடல் 


மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post.html


(please click the above link to continue reading)



மருந்தாகித் = நோய் தீர்க்கும் மருந்தாகி 


தப்பா  = தவறாமல் உதவி செய்யும் 


மரத்தற்றால் = மரம் போன்றது 


செல்வம் = செல்வம் 


பெருந்தகை  யான்கண்  = பெரிய தகைமை உடையவன் இடத்தில்  


படின் = இருக்குமானால் 


அது என்ன தவறாத மரம்?


பரிமேலழகர் சொல்கிறார்...


"சில மரங்கள் பலன் தரும், ஆனால், எங்கோ காட்டில் இருக்கும். அதை தேடி கண்டு பிடிக்கவே முடியாது அல்லது நாள் ஆகும். அவசரத்துக்கு உதவாது. 


சில மரங்கள், கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும். ஆனால், அதன் பழமோ, பூவோ எப்போதும் இருக்காது. ஒரு சில பருவத்தில் மட்டும் தான் பூக்கும், காய்க்கும். நம்ம அவசரத்துக்கு உதவாது.


சில மரங்கள், ஊரின் நடுவில் இருக்கும், எப்போதும் பூக்கும், காய்க்கும் ஆனால் பலன் ஒன்றும் இருக்காது."


இப்படி எவ்வளவோ விதங்களில் பலன் தர தவறி விடலாம். 


அப்படி இல்லாமல், தன்னுடைய எல்லா பாகங்களையும் மருந்தாக பயன்படும்படி, எப்போதும் தந்து நிற்கும் மரம் போன்றது, ஒப்புரவு செய்பவன் கையில் உள்ள செல்வம். 


மீண்டும் அந்த கேள்விக்கு வருவோம். 


ஒப்புரவு செய்து கொண்டே போனால் நம் கதி என்ன ஆவது?


ஒரு காலத்தில் மக்கள், அதிலும் பணம் படைத்தவர்கள், சமுதாயத்துக்கு உதவுவதை கடமையாக கொண்டு இருந்தார்கள். 


நாளடைவில் சுயநலம் பெருகி, கொடுப்பது குறைந்து விட்டது. 


இப்போது, அதிக இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் பொது சேவைக்கு பணம் செலவழிக்க வேண்டும் என்பது சட்டம். 


Corporate Social Responsibility 


என்று அதற்குப் பெயர். 


நிறுவனங்கள்தானே செலவழிக்கிறார்கள். நான் இல்லையே என்று நினைக்கலாம். 


அப்படி செலவு செய்யும் நிறுவனங்கள் அந்த செலவை அவர்கள் விற்கும் பொருள்கள் மேல் ஏற்றி விடுவார்கள். அந்தப் பொருள்களை வாங்கும் நீங்களும் நானும் மறைமுகமாக ஒப்புரவு செய்து கொண்டுதான் இருக்கிறோம். 




1 comment: