Friday, October 20, 2023

கம்ப இராமாயணம் - உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ ?

கம்ப இராமாயணம் - உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ ?


வானர படைகளோடு தென் இந்தியாவின் கடற்கரையில் இராமன் வில்லோடு தனித்து நிற்கிறான். 


தனியனாய் - மனைவியைப் பிரிந்து.


யாரிடம் சொல்ல முடியும்?  சில சோகங்களை வெளியே சொல்ல முடியாது. உள்ளுக்குள் வைத்துக் கொண்டு மறுக வேண்டியதுதான் .


"கடற்கரையில் பவளக் கொடி படர்ந்து இருக்கிறது. அதில் பவளம் இருக்கிறது. பவளம் சிவப்பாக இருக்கும். அந்தப் பவளம் இராமனை பார்க்கிறது. மலை போல உயர்ந்த தோள்கள். மெலிந்த உருவம். பவளத்தை, இராமன் பார்க்கிறான். சீதையின் உதடு போல சிவந்து இருக்கிறது.  அதைப் பார்க்கும் போது இராமனுக்கு சீதையின் நினைவு மேலும் எழுகிறது. சோகம் அவனை கொல்கிறது. ஆனால், அந்த பவளத்துக்கு, நாம் இராமனை இப்படி வதைக்கிரோமே என்ற கவலை ஒன்றும் இல்லை..."


பாடல் 


சிலை மேற்கொண்ட திரு நெடுந் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப,

நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன் தன்முன், படி ஏழும்

தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் என்ன, தனித் தோன்றி,

கொலை மேற்கொண்டு, ஆர் உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ-கொடிப் பவளம்?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_20.html


(please click the above link to continue reading)


சிலை மேற்கொண்ட = கையில் வில்லை ஏந்தி நிற்கும் 


திரு = சிறந்த 


நெடுந் தோட்கு = நெடிது உயர்ந்து தோள்களுக்கு 


உவமை = உவமையாக 


மலையும்  = மலையை 


சிறிது ஏய்ப்ப = சிறிது உவமையாக சொல்லும்படி 


நிலை மேற்கொண்டு = நிலைத்து நின்ற, அசையாமல் நின்ற 


மெலிகின்ற = உடல் மெலிந்து 


நெடியோன் = உயர்ந்து நிற்கும் இராமன் 


தன்முன் = முன் 


படி ஏழும் = உலகம் ஏழும் 


தலை மேல் கொண்ட = தலையின் மேல் வைத்துக் கொண்டாடும் 


கற்பினாள் = கற்பினை உடைய 


மணி வாய் என்ன = சீதையின் ஒளி வீசும் அதரங்களைப் போல 


தனித் தோன்றி = தனித்துத் தோன்றி 


கொலை மேற்கொண்டு = கொலைத் தொழிலை கொண்டு 


ஆர் உயிர் குடிக்கும் = உயிரை குடிக்கும் 


கூற்றம் கொல்லோ = கூற்றம் (எமன்) போன்றதோ 


கொடிப் பவளம் = இந்த கொடி பவளம் 


அரசை இழந்து,  மனைவியை இழந்து, தனித்து நிற்கும் இராமன். 


அப்பா, அம்மாவின் கட்டளை, அதை செய்து முடிக்க வேண்டிய கடமை ஒரு புறம். 


மனைவியை இழந்த சோகம் மறு புறம். 


அரசனாக, ஒரு வீரனாக, எதிரியை வீழ்த்தி மனைவியை மீட்க வேண்டிய கடமை மறுபுறம். 


இதை எல்லாம் பகிர்ந்து கொள்ளக் கூட முடியாத சோகம் மறுபுறம். 


இராமனை அந்தப் புள்ளியில் காலம் நிறுத்தி இருக்கிறது. 


அவன் என்ன செய்யப் போகிறான்? 




 


No comments:

Post a Comment