Friday, October 13, 2023

கம்ப இராமாயணம் - காமன் பூங்கணைக்கும்

கம்ப இராமாயணம் - காமன் பூங்கணைக்கும்


வானர சேனைகளோடு தென் கடற்கரையில் நிற்கிறான் இராமன். ஒரு புறம் மனைவியைத் துறந்த வருத்தம். இன்னொரு புறம் இந்த சேனையை நடத்திச் சென்று இராவணனை போரிட்டு வெல்ல வேண்டிய வேலை. இரண்டுக்கும் நடுவில் நிற்கிறான் இராமன். 


அந்தக் கடல் நீர், எப்படி வந்தது என்றால், இராமனைப் பிரிந்த சீதை அழுத கண்ணீர் கடல் நீராக மாறி இராமனை நோக்கி வந்ததாம். அல்லது அவனுக்கு அப்படித் தெரிகிறது. 


இன்னொரு புறம் மன்மதன் வீசும் கணைகள். 


இரண்டுக்கும் இலக்காகி நின்றான் இராமன். 


பாடல்  


வழிக்கும் கண்ணீர் அழுவத்து  வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த

பழிக்கும், காமன் பூங்கணைக்கும்  பற்றாநின்றான் பொன் தோளைச்

சுழிக்கும் கொல்லன் ஒல் உலையில்  துள்ளும் பொறியின் சுடும் அன்னே!

கொழிக்கும் கடலின் நெடும் திரைவாய்த்  தென்றல் தூற்றும் குறுந்து திவலை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_13.html


(please click the above link to continue reading)



வழிக்கும் கண்ணீர் = வழியும் கண்ணீர் 


அழுவத்து = கடலில் (அழுவம் = கடல்) 


வஞ்சி  = பெண், சீதை 


அழுங்க = வருந்தி 


வந்து அடர்ந்த = வந்து சேர்ந்த (கடல் நீர்)  


பழிக்கும் = அந்த பழிக்கும் 


காமன் பூங்கணைக்கும் = மன்மதனின் பூங் கணைகளுக்கும் 


பற்றாநின்றான் = பற்றி நின்றான் 


பொன் தோளைச் = அழகிய தோள்களை 


சுழிக்கும் = சுழித்து எழும் 


கொல்லன் = கொல்லனுடைய (நகை செய்பவன்) 


ஒல் உலையில் = கொதிக்கும் உலையில் 


துள்ளும்  = துள்ளி வெடித்து தெறிக்கும் 


பொறியின் = தீப் பொறியை போல 


சுடும் அன்னே! = சுட்டது 


கொழிக்கும் கடலின் = ஆராவரிக்கும் கடலின்


நெடும் திரைவாய்த்  = நீண்ட பெரிய கரையில் 


தென்றல் = தென்றல் 


தூற்றும் = மேலே அள்ளி வீசும் 


குறுந்து திவலை = சிறு சிறு நீர் துளிகள் 


கையை நீரில் நனைத்து மற்றொருவர் மேல் தெளித்தால் எப்படி இருக்கும்? அது போல, தென்றல் , கடலில் தன் கையை முக்கி இராமன் மேல் தெளித்தது போல இருந்ததாம்.


மனைவியை பிரிந்ததில் இரண்டு விடயங்களை கம்பன் காட்டுகிறான்.. 


ஒன்று, வருத்தம். 


இன்னொன்று, காமன் கணைகள். அன்பை செலுத்த, பகிர்ந்து கொள்ள, கொஞ்ச, அவள் இல்லையே என்ற ஏக்கம். 


எவ்வளவு துல்லியமாக கம்பன் உணர்சிகளை படம் பிடிக்கிறான் !






No comments:

Post a Comment