Wednesday, July 24, 2024

திருக்குறள் - கூடாவொழுக்கம் - வானுயர் தோற்றம்

 திருக்குறள் - கூடாவொழுக்கம் - வானுயர் தோற்றம் 


சில பேர் ஊருக்கு பெரிய ஆள் போல் காட்டிக் கொள்வார்கள். உள்ளே ஒன்றும் இருக்காது. 


பெரிய துறவி போலவும், பக்திமான் போலவும், அனைத்தும் அறிந்த ஞானி போலவும் காட்டிக் கொள்வார்கள். செய்வது எல்லாம் வேறு விதமாக இருக்கும். 


அவர்கள் செய்வது வெளியே தெரியாது. 


ஆனால், அவர்கள் மனதுக்குத் தெரியும். 


வள்ளுவர் கேட்கிறார் 


"வானத்தைப் போல உயர்ந்த தோற்றம் இருந்து என்ன பயன்? ஒருவன் , அவனுடைய மனம் அறிய குற்றம் செய்து வாழ்வானேயானால்"


என்று 


பாடல் 



வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்

தான்அறி குற்றம் படின்


பொருள் 


வானுயர் = வானத்தைப் போல உயர்ந்த 


தோற்றம் = தோற்றம் 


எவன்செய்யும் = என்ன பலனைத் தரும்? (ஒன்றும் தராது) 


தன்னெஞ்சம் = ஒருவனுடைய மனம் 


தான் = அவன் 


அறி = அறிந்து 


குற்றம் படின் = குற்றம் செய்து வாழ்வானேயானால் 


சாமியார், குருஜி, யோகி, என்ற பெரிய பட்டங்களினால் ஒரு பலனும் அவனுக்கு இல்லை. ஊரை ஏமாற்றி காசு சம்பாதிக்க உதவலாம். அதைத் தவிர ஒரு பயனும் இருக்காது என்றவாறு. 




No comments:

Post a Comment