Saturday, January 21, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - புன்மையால் காணப் படும்

    

 திருக்குறள் - புறங்கூறாமை -  புன்மையால் காணப் படும்


(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


சிலர் அறம் என்றால் என்ன, பாவ புண்ணியம் என்றால் என்ன, கடவுள், வேதம், கர்மா என்று மிக அழகாகப் பேசுவார்கள் / எழுதுவார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் அறம் அல்லாத பலவற்றை செய்வார்கள். 


"அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அவர் என்ன சொல்கிறார் என்பதுதானே முக்கியம். தனி வாழ்வில் அவன் எப்படியும் போகட்டும், அவன் சொல்லும் செய்தி நல்லதா கெட்டதா என்று பார்த்தால் போதாதா?" என்று சிலர் நினைக்கக் கூடும். 


அது சரியான வாதம்தான். இருந்தாலும், வள்ளுவர் சொல்கிறார், ஒருவன் மனதளவில் கெட்டவனாக இருந்தால், அவன் சொல்லும் சொல் மட்டும் எப்படி நல்லாதாக இருக்கும் என்று.  மனம் தானே மூல காரணம். அங்கிருந்துதானே சொல்லும் செயலும் பிறக்கிறது. மனமே கோணல் என்றால்? 


நிறைய பேர் நமக்கு நல்லது சொல்லுவது போல இனிக்க இனிக்கப் பேசுவார்கள். உள்ளுக்குள் இருப்பது எல்லாம் விடம். 


சரி, ஒருவன் மனதுக்குள் போய் நாம் பார்க்க முடியுமா? சொல்லுகிற சொல்லை நாம்  கேட்கிறோம். அவன் மனம் எப்படிப் பட்டது என்று எப்படி அறிந்து கொள்வது?


அதற்கு ஒரு வழி சொல்கிறார் வள்ளுவர். 


அவன் மற்றவர்களைப் பற்றி, அவர்கள் இல்லாத போது தவறாகப் பேசுகிறானா? அதாவது புறம் சொல்கிறானா ? அப்படி என்றால் அவனுக்கும் அறத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று எண்ணிக் கொள் என்கிறார். 


அவன் மனத்தில் களங்கம் இருக்கிறது என்று புரிந்து கொள் என்கிறார். 


அறம் பற்றி பேசுபவர்கள் மட்டும் அல்ல. நம் உறவு, நடப்பில் யாராக இருந்தாலும், எவன் ஒருவன் புறம் பேசுகிறானோ, அவன் சொல்லுவது எதையும் நம்பக் கூடாது.  புறம் சொல்லும் அவ்வளவு பெரிய தவறைச் செய்பவன் வேறு என்னவெல்லாம் செய்ய மாட்டான் என்பது குறிப்பு. 


பாடல் 



அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்

புன்மையால் காணப் படும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_21.html


(pl click the above link to continue reading)


அறம்சொல்லும் = அறத்தினை விரித்துச் சொல்லும் 


நெஞ்சத்தான்  = மனம் உடையவனது 


அன்மை  = தூரம். அவனுக்கும் அறத்துக்கும் உள்ள தூரம், தொடர்பு 


புறம்சொல்லும் = அவன் புறம் சொல்லும் 


புன்மையால் = தீய குணத்தால் 


காணப் படும் = அறிந்து கொள்ளலாம் 


ஒரு தலை சிறந்த வக்கீல் போல வள்ளுவர் சொல்கிறார். 


அவன் சொல்வதை கேள் என்றோ கேட்காதே என்றோ அவர் சொல்லவில்லை. 


அவன் நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ சொல்லவில்லை. 


புறம் சொல்கிறானா, அவனுக்கும் அறத்துக்கும் இடை வெளி என்ன என்று நீயே புரிந்து கொள் என்று கோடு போட்டு காட்டுகிறார். 


புறம் சொல்பவன் அறத்தை கேட்பதும் கேட்காததும் உன் விருப்பம். இடை வெளி இருக்கும் என்பதை புரிந்து கொள். 


இதற்கு உரை எழுதிய பரிமேல் அழகர் அப்படி விடத் தயாராக இல்லை. ஒரு படி மேலே போய், கேட்காதே என்று அடித்துச் சொல்கிறார். 


"மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்" 


என்பது அவர் உரை. 


புறம் சொல்லுவது மனக் குற்றம். ஒரு சமுதாய மனிதனாக வாழ விரும்புவன் அந்தக் குற்றத்தை களைய வேண்டும். 


நம்மிடமும் அந்தக் குற்றம் இருக்கலாம். 


ஒரு விடயம் பற்றி நமக்கு ஒரு அட்பிப்ப்ராயம் இருக்கும். 


அலுவலதத்திலோ, வீட்டிலோ நாம் ஒரு கருத்தைச் சொல்லுவோம். சில நேரம் அந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளப்படாமல் போகலாம். 


நம் கருத்தை மறுதலித்தது ஒரு உயர் அதிகாரியாக இருக்கலாம். 


அவர் இல்லாத போது "இவர் எல்லாம் ஒரு பெரிய அதிகாரி. இந்தச் சின்ன விடயம் கூடத் தெரியவில்லை. எப்படிதான் இந்த நிலைக்கு வந்தானோ"என்று அவர் இல்லாத போது அவர் பற்றி மற்றவர்களிடம் பேசுவதும் புறம் தான். 


மனவியைப் பற்றியோ, கணவனைப் பற்றியோ மற்றவர்களிடம் தரக் குறைவாகப் பேசுவதும் புறம் தான். 


மாமியாரைப் பற்றி, மருமகளைப் பற்றி, அவர்கள் இல்லாத போது தரக் குறைவாகப் பேசுவதும் புறம்தான். 


நம்மிடம் அந்தக் குற்றம் இருக்கிறதா? இல்லையா?


ஒவ்வொருமுறை மற்றவர்களைப் பற்றிப் பேசும் போது அவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்துப் பேச வேண்டும். இல்லை என்றால் பேசக் கூடாது. 


நாக்கைக் கடித்துக் கொள்ள வேண்டும். 


சரி, அப்படி முடியாது. இப்படி பேசி பேசிப் பழகிவிட்டது என்றால், அறம் பற்றி பேசாமலாவது இருக்கலாம். எது சரி, எது தவறு, என்றெல்லாம் பேசாமலவாது இருக்கலாம். 








(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


முன்இன்று பின்நோக்காச் சொல்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html




Friday, January 20, 2023

கந்தரனுபூதி - என்று அருள்வாய் ? பாகம் 1

                

 கந்தரனுபூதி -  என்று அருள்வாய் ?  பாகம் 1 




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


குகன் !


முன்பொரு காலத்தில் கங்கை கரை ஓரம் ஒரு முனிவர் தன்னுடைய மகனுடன் வசித்து வந்தார். ஒரு நாள், அந்த பையன் தன் தந்தையிடம் "தந்தையே, உலகில் பெரிய கடவுள் யார்" என்று கேட்டான். அவரும் முருகன் தான் தனிப் பெரும் கடவுள் என்றார். 


அப்படி இருக்கும் போது ஒரு நாள், அவர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் அந்நாட்டின் மன்னன் அந்த முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தான். முனிவர் இல்லாததைக் கண்டு வருந்தினான். அப்போது, முனிவரின் மகன், "மன்னா, வந்த காரியம் என்ன" என்று கேட்டான். 


"நான் வேட்டைக்கு வந்த இடத்தில், தவறுதலாக ஒரு முனிவர் மேல் அம்பை விட்டு விட்டேன். அவரும் இறந்ததால், ப்ரம்மஹத்தி தோஷம் என்னை துரத்துகிறது" என்றான். 


முனிவரின் மகனோ, "இதற்கா வருந்துகிறீர்கள். நான் பரிகாரம் சொல்கிறேன். இதோ இந்த கங்கையில் மூழ்கி, மூன்று முறை முருகா என்று சொல்லுங்கள், பிரம்மஹத்தி ஓடிவிடும்" என்றான். 


மன்னனும் அவ்வாறே செய்ய, ப்ரம்மஹத்தி விலகியது. 


முனிவர் திரும்பி வந்தார். நடந்ததை கேட்டு அறிந்து, மகன் மேல் மிகுந்த கோபம் கொண்டார். "முருகன் நாமத்தை ஒரு முறை சொன்னாலே ஓராயிரம் பிரம்மஹத்தி விலகுமே...நீ மூன்று முறை சொல்லச் சொல்லி இருக்கிறாய். முருக நாமத்தின் அருமை தெரியாத நீ கல்வி அறிவு இல்லாத வேடனாகப் போ" என்று சாபம் தந்தார். 


பின், கோபம் தணிந்து, சாப விமோசனமாக "நீ கங்கை கரையில் குகன் என்ற பெயரோடு வேடனாக பிறப்பாய். இராமன் வருவான். அவனுக்கு பணிவிடை செய்து உன் சாபம் விலகப் பெறுவாய்" என்று அருளினார். 


அந்த முனிவனின் மகன்தான் இராமாயணத்தில் குகனாக வந்தான் என்று ஒரு கதை உண்டு. 


குகன் என்றால் குகையில் வாழ்பவன். 


பக்தர்களின் மனம் என்ற குகையில் இருப்பவன் குகன். 


"அருள்வாய் குகனே" என்பார் அருணகிரிநாதர். 




உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.



முருகன் !


முருகு என்ற சொல்லுக்கு அழகு, இளமை என்று பொருள்.  என்றும் அழகோடு இருப்பவன், என்றும் இளமையோடு இருப்பவன் முருகன். 



குமரன் !


குமாரன் என்பதன் மரூஉ. இளையவன்.


"முருகன், குமரன், குகன் என்று உன் நாமத்தை கூறு உள்ளம் உருகும் படி என்று அருள்வாய்?  வானவரும், மண்ணில் உள்ளவரும் வணங்கும் குருவடிவாணவனே, எட்டு குணங்கள் நிறைந்தவனே" 


 என்று உருகுகிறார் அருணகிரியார். 


பாடல் 


முருகன் குமரன் குகன் என்று மொழிந்து 

உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய் ? 

பொரு புங்கவரும் புவியும் பரவும் 

குருபுங்கவ ! எண்குண பஞ்சரனே 


பொருள் 



(pl click the above link to continue reading)



முருகன் = முருகன் 


குமரன் = குமரன் 


குகன் = குகன் 


என்று மொழிந்து  = என்று கூறி 


உருகும் = மனம் உருகும் 


செயல் தந்து = செயலைத் தந்து 


உணர்வு என்று அருள்வாய் ?  = உணர்வை என்று அருள்வாய்? 


பொரு புங்கவரும் = உன்னுடன் போரிட்ட வானவர்களும் 


புவியும் = புவியில் உள்ளவர்களும் 


பரவும்  = போற்றி பரவும் 


குருபுங்கவ ! = குரு வடிவானவனே  


எண்குண பஞ்சரனே  = எட்டு விதமான குணங்களின் வடிவானவனே 






 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html





]




Tuesday, January 17, 2023

திருவாசகம் - திரு அம்மானை - மந்தார மாலையே

               

திருவாசகம் - திரு அம்மானை  -   மந்தார மாலையே 




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் )


கோவிலுக்குப் போனால் தேங்காய், பழம் என்று நிவேத்தியம் செய்கிறோம். 

இறைவனுக்கு சந்தனம், பால், பன்னீர் என்று அபிசேகம் செய்கிறோம். 


வீட்டில் விசேடம் என்றால் தீ வளர்த்து அதில் பால், நெய், பட்டு என்று பலவகை பொருள்களைப் போடுகிறோம். எல்லாம் எரிந்து போகிறது. 


ஆற்றில் பிண்டம் கரைக்கிறோம். 


இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? எல்லாம் வீணாகப் போகிறதே?  இங்கே தீயில் போட்டால் அது எங்கோ இருக்கிற கடவுளுக்கு போகுமா? என்னதான் நம்பிக்கை என்றாலும், கொஞ்சமாவது அறிவு சார்ந்து இருக்க வேண்டாமா? 



இப்படிப் பட்ட கேள்விகள் இவற்றை ஆழமாக நம்பும் பக்தர்கள் மனத்திலும் எழும். 


அறிவு கேள்வி கேட்கத்தான் செய்யும்.  வெளியே சொல்லாவிட்டாலும், உள்ளுக்குள் இந்த கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கும். 


இது என்ன முறை? இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? 


தேவுக்களுக்கும், மனிதர்களுக்கும் ஒரு இடையறா தொடர்பு இருப்பதாக நம் முன்னவர்கள் நினைத்தார்கள். 


தேவுக்கள் என்பது கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்றால் இயற்கை என்று வைத்துக் கொள்ளலாம். 



மழை, வெயில், காற்று, என்று நம்மைச் சுற்றியுள்ள இயற்கைக்கும் நமக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 



அது மட்டும் அல்ல, அவற்றை நாம் மதிக்க வேண்டும். இன்று சுற்றுப் புற சூழ்நிலையை மதிக்காமல் நாம் அரக்கத் தனமாக அவற்றை வேட்டையாடிக் கொண்டு இருக்கிறோம். 


இயற்கையின் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கிறது. அதைத் தாண்டும் போது அது நம்மை தண்டிக்கிறது. 


பனிப் பாறைகள் உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது.  நில அதிர்வுகள் தோன்றுகின்றன. மழை பொய்கிறது.  கால நிலை மாறுகிறது. நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே போய்க் கொண்டு இருக்கிறது.  ஒரு பக்கம் வெள்ளம். மறு பக்கம் வறட்சி. நிலம் அழுந்துகிறது. 


காரணம் என்ன?  இயற்கையின் மேல் மதிப்பும், மதிப்பும் மரியாதையும் இல்லை. நான் தான் எல்லாம், எனக்குத் தான் எல்லாம் என்று மனிதன் சுயநலமியாக மாரியதால் வந்த வினை. 


நம் கலாச்சாரம் என்ன சொல்லித் தந்தது?


மழையா - அதைப் போற்றுவோம். வணங்குவோம். மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என்று மழையை போற்றினார்கள்.



வெயிலா? - சூரியனைப் போற்றுவோம். 



காற்றா ? - வாயு பகவானைப் போற்றுவோம். 



இயற்கையை தெய்வமாக போற்ற கற்றுத் தந்தது நம் மரபு. 


இயற்கை நமக்குத் தருவது எல்லாம் ஒரு வரம். ஒரு அருள். ஒரு கொடை. அதற்கு நாம் காட்டும் நன்றிக் கடன் இந்த பிரசாதங்கள், வேள்வி, அவிர்பாகம் என்பதெல்லாம். 


அவை போகிறதோ இல்லையோ, நம் மனதில் அது ஒரு புனிதமான ஒன்று என்ற எண்ணத்தை இவை தோற்றுவிக்கின்றன. 


தக்கன் ஒரு வேள்வி செய்தான். அதில் சிவனுக்கு தர வேண்டிய அவிர் பாகத்தைத் தர மறுத்தான்.  சிவன் அந்த யாகத்தை அழித்தான் என்பது புராணம். 


இயற்கயை மதிக்காமல், சுயநலமாக காரியங்களை செய்து கொண்டு போனால், அந்த இயற்கையே நம்மை அழிக்கும் என்பது செய்தி. .



பாடல் 



சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வியினில்

இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்

தந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்

சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த

செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்

மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். 



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_17.html


(pl click the above link to continue reading)


சந்திரனைத் = சந்திரனை 


தேய்த்தருளித் = தேய்து 


தக்கன்றன் = தக்கன் தன் 


வேள்வியினில் = வேள்வியில் 


இந்திரனைத் = இந்திரனின் 


தோள்நெரித்திட்டு = தோள்களை நெரித்து  


எச்சன் தலையரிந் = எச்சன் என்ற தேவனின் தலையை அரிந்து 


அந்தரமே  = வானத்தில் 


செல்லும்  = செல்லும் 


அலர்கதிரோன் = பல கதிர்களை பரப்பும் சூரியனின் 


 பல்தகர்த்துச் = பற்கள் உதிரும் படி தண்டித்து 


சிந்தித்  திசைதிசையே = திசைகள் தோறும் சிந்தும் படி 


தேவர்களை ஓட்டுகந்த = தேவர்களை ஓட ஓட விரட்டி 


செந்தார்ப் = சிவந்த மாலைகள் போல 


பொழில்புடைசூழ் = சோலைகள் சூழ்ந்த 


தென்னன் பெருந்துறையான் = தென்னவன், திருபெருந்துறையில்  உறைபவன் 


மந்தார மாலையே = அணியும் மந்தார மாலையை 


பாடுதுங்காண் அம்மானாய்.  = பாடுவோம், அம்மானாய் 








[


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 


)


Monday, January 16, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - முன்இன்று பின்நோக்காச் சொல்

   

 திருக்குறள் - புறங்கூறாமை -  முன்இன்று பின்நோக்காச் சொல்



(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)



கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்இன்று பின்நோக்காச் சொல்


இந்தக் குறளை படித்தவுடன் நமக்கு என்ன தோன்றும்?


முகத்திற்கு முன் கடினமான சொற்களை சொன்னாலும் பரவாயில்லை ஆனால் ஒருவன் இல்லாதபோது  அவதூறாக அவனைப் பற்றி பேசாமல் இருப்பது நலம் என்றுதானே பொருள் சொல்வோம் ?


அது சரியும் கூட. 


ஆனால், பரிமேலழகர் மிக நுணுக்கமாக இதற்கு உரை எழுதுகிறார். அது என்ன என்று பார்ப்போம். 


பாடல் 


கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்இன்று பின்நோக்காச் சொல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html

(pl click the above link to continue reading)


கண்நின்று = கண் முன்னே நின்று 


கண்ணறச் = கண் + அற 


சொல்லினும் = சொன்னால் கூட பரவாயில்லை 


சொல்லற்க = சொல்லக் கூடாது 


முன்இன்று பின்நோக்காச் சொல் = முன்னால் இல்லாமல் அவனுக்கு பின்னால் சொல்லும் சொற்களை 


'கண்ணற' என்றால் என்ன?  கண் என்பது கருணையை, அன்பை, காதலை வெளிபடுத்தும் அவயம். கருணைக்கு கண்ணோட்டம் என்று பெயர். காதலர்களுக்குத் தெரியும் கண் எவ்வளவு காதலை வெளிப்படுத்தும் என்று. 


கண் அற என்றால், அந்த கருணை, அன்பு, பரிவு இல்லாத என்று பொருள். 


கண்ணறச் சொல் என்றால் அன்பு, பரிவு இல்லாத சுடு சொற்கள் என்று பொருள். 


"பின் நோக்கா" என்றால் என்ன?


ஒருவனுக்கு பின்னால் என்று நாம் பொருள் சொல்வோம். பரிமேலழகர் சொல்கிறார், பின்னால் வரும் பாவத்தை அறியாமல், பின்னால் வரும் துன்பத்தை அறியாமல் என்று பொருள் சொல்கிறார். 


பின் வரும் பாவம் தெரிகிறது. அது என்ன பின் வரும் துன்பம்?


அது பற்றி இனி வரும் குறள்களில் கூற இருக்கிறார். 


'பின்நோக்காச் சொல்' = இங்கே சொல் என்பது ஆகுபெயர் என்று குறிக்கிறார். 'சொல்'லுக்கு ஒரு பாவமும் இல்லை. சொல்லை சொல்பவனுக்குத் தான் அந்த பாவமும், துன்பமும் வந்து சேரும் என்பதால் சொல் என்ற சொல் , சொல்பவனைக் குறிந்து நின்றது என்பதால் அதை ஆகு பெயர். 


புறம் சொல்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஒன்றிருக்க ஒன்று சொல்லுவது ஒரு பொழுது போக்கு, இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி பொழுதை இனிதாகக் கழிக்க நினைக்கிறார்கள். 


அதன் விளைவுகளைப் பற்றி சிந்திப்பது இல்லை அல்லது அவர்கள் நினைக்கும் விளைவு மட்டுமே விளையும் என்று நினைக்கிறார்கள். 


அது தவறு. அவர்கள் நினைத்து பார்க்க முடியாத விளைவுகள் நிகழும் என்று எச்சரிக்கிறார். அவை என்னென்ன என்று பின்னால் கூற இருக்கிறார். 














(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html




Saturday, January 14, 2023

கந்தரனுபூதி - முருகன் கழல் பெற்று உய்வாய்

               

 கந்தரனுபூதி -  முருகன் கழல் பெற்று உய்வாய்



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


மனம் அலைபாயும் தன்மை உடையது. ஒரு இடத்தில் இருக்காது. குரங்கு போல் தாவிக் கொண்டே இருக்கும். மனதை ஒரு முகப் படுத்தாவிட்டால் எதையும் செய்ய முடியாது.  ஒன்றைச் செய்யும் போதே வேறு சிந்தனை வந்தால் எதைச் செய்வது? 


சாப்பிடும்போது அலுவலகச் சிந்தனை, அலுவலகத்தில் இருக்கும் போது வீட்டு நினைப்பு, பிள்ளைகளை, மனைவியை கொஞ்சும்போது கூட மனம் வேறு எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. எதிலும் ஒரு முழு அனுபவம் கிடைப்பது இல்லை. 


வாழ்வில் ஏதோ ஒரு அதிருப்தி இருந்து கொண்டே இருக்கிறது. ஏதோ பறி கொடுத்த மாதிரி, ஒரு வெறுமை வருகிறது. காரணம், எதிலும் முழு மனத்தோடு ஈடு படுவது கிடையாது. 


புலன்கள் மனதை இழுத்துக் கொண்டு ஓடுகின்றன. வண்டியில் பூட்டிய குதிரைகள் ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு ஓடுகின்றன. வண்டி எந்த ஊர் போய்ச் சேரும்?


அப்படியெல்லாம் இல்லை. என் புலன்கள் என் வசம் இருக்கின்றன. அப்படி என்ன பெரிய தவறு செய்து விட்டேன் என்று நீங்கள் கேட்கலாம். 


எங்கே , முயன்று பாருங்கள், இன்று ஒரு நாள் Whatsapp பார்க்காமல் இருப்பேன் என்று. ஒரு நாள் என்ன ஒரு நாள். ஒரு மணி நேரம் இருக்க முடியாது. காரணம், மனம் இழுத்துக் கொண்டு ஓடுகிறது. என்னமோ வந்திருக்கும், யார் என்ன சொல்கிறார்கள் என்று பார் என்று நம்மை பிடித்து இழுத்துக் கொண்டு போகிறது. 


ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் WA, யூ டியூப், instagram, serial, என்று  மனதை அலைய விடுகிறோம். அந்த நேரத்தை எல்லாம் உருப்படியாக செலவழித்து இருந்தால் என்னென்ன சாதித்து இருக்கலாம்? 


மனம் ஏன் அலை பாய்கிறது? அதை எப்படி கட்டுப் படுத்துவது  என்று இங்கே அருணகிரிநாதர் சொல்கிறார். 


பாடல் 


கைவாய் கதிர்வேல்  முருகன் கழல் பெற்று 

உய்வாய் மனமே ஒழிவாய் ஒழிவாய் 

மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம் 

ஐவாய் வழி செல்லும் அவாவினையே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


(pl click the above link to continue reading)




கைவாய் = திருக்கையில் 


கதிர்வேல் = ஒளிக் கதிர் வீசும் வேலை 


முருகன் = கொண்ட முருகனின் 


கழல் பெற்று  = திருவடிகளை பெற்று 



உய்வாய் = கடைந்தேறுவாய் 


மனமே = என் மனமே 


ஒழிவாய் ஒழிவாய் = விடுவாய், விடுவாய் 


மெய் = உடல் 


வாய் = வாய், நாக்கு 


விழி = கண் 


நாசியொடுஞ் = மூக்கோடு 


செவியாம்  = செவி என்ற 


ஐவாய் = ஐந்து வாசல்  


வழி செல்லும் = வழியாகச் செல்லும் 


அவாவினையே = ஆசைகளை 


உய்வாய், உய்வாய் என்று இரண்டு தரம் ஏன் கூறினார்?


மெய், வாய், விழி, நாசி, கண் என்று ஐந்து புலன்கள் வழியாக நமக்கு ஆசைகள் தோன்றுகின்றன. 


சரி. அது நல்லது தானே. வாழ்க்கை அனுபவிக்கத் தானே. புலன்கள் வழி செல்லும் ஆசை தவறு என்றால் குருடாகவோ, செவிடாகவோ இருப்பது நல்லதா? எதை வாயில் போட்டாலும் ருசியே தெரியல என்றால் அது நல்லதா?


புலன்களின் வேலையே நமக்கு அனுபவத்தைத் தருவது தானே? அதை எப்படி நிறுத்துவது?


புலன்கள் அல்ல பிரச்சனை. புலன்கள், வெளி உலகில் இருந்து வரும் செய்திகளை உள்ளே அனுப்புகின்றன. 


கண் அல்ல அனுபவிப்பது. மனம் தான் அனுபவிக்கிறது. கண் சரியாகத் தெரியவில்லை என்றால் கண்ணாடி போட்டுக் கொள்கிறோம். கண்ணாடியா பார்க்கிறது? நம் கண்ணும் அந்தக் கண்ணாடி போலத்தான். அதற்கு என்று ஒரு அனுபவம் கிடையாது. 


அனுபவம் நிகழ்வது மனதில். ஆசை பிறப்பது மனதில். 


ஆனால், மனம் தானே உலகை அறிய முடியாது. புலன்கள் அந்த செய்திகளை அனுப்பினால் தான், மனம் அனுபவிவ்கும், நல்லது, கெட்டது என்று அறியும், மேலும் வேண்டும், அல்லது இது வேண்டாம் என்று தள்ளும்.


எனவே, மனமும், புலன்களும் ஒன்று சேர்ந்தால்தான் அனுபவம் நிகழ முடியும். 


எனவே இரண்டையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.


எனவே ஒழிவாய், ஒழிவாய் என்றார். 


முதலில் புலன்கள் செல்வதை தடுக்க வேண்டும். பின் மனம் செல்வதை தடுக்க வேண்டும். 


சரி, எப்படி தடுப்பது? 




 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html





]




Thursday, January 12, 2023

ஆதிபுராணத் திருக்குறுந்தொகை - சிவன்பெருந் தன்மையே

ஆதிபுராணத் திருக்குறுந்தொகை  - சிவன்பெருந் தன்மையே


நீங்கள் ஏதோ ஒரு வெளிநாடு சென்று அங்கு உள்ள ஒரு நல்ல இனிப்புப் பண்டத்தை சுவைத்து மகிழ்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதுவரை கண்டும், கேட்டும் இராத ஒரு சுவை. மிக அருமையாக இருக்கிறது. 


திரும்பி ஊருக்கு வருகிறீர்கள். உங்கள் நண்பரிடம் அந்த பண்டம் பற்றி கூறுகிறீர்கள். அவர் "அது என்ன நம்ம ஊர் இலட்டு போல இருக்குமா" என்கிறார். நீங்கள், "இல்ல இல்ல ..இலட்டு மாதிரி இருக்காது...அது வேற மாதிரி சுவை" என்கிறீர்கள். அவரோ "இலட்டு மாதிரி இல்லை என்றால் பாதுஷா மாதிரி இருக்குமா?" என்று கேட்கிறார். 


அவருக்கு எப்படிச்  சொல்லி விளங்கச் செய்வது? 


அது போலத் தான் ஆன்மீக அனுபவங்களும். 


ஆன்மீக அனுபவம் பெற்ற ஒருவர், முன் பின் தெரியாத ஒருவருக்கு எப்படி அதை விளங்கச் செய்வது?


ஒரு ஊரில் ஒரு நரி இருந்ததாம். அது அந்த ஊரை விட்டு வெளியே போனதே இல்லை. அந்த ஊருக்கு வெளியூரில் இருந்து ஒரு நரி வந்தது. அந்த புது நரி கடற்கரை ஓரம் உள்ள ஒரு இடத்தில் இருந்து வந்தது. புதிய நரி, உள்ளூர் நரியிடம் கடலைப் பற்றி கூறியது. "கடல் ரொம்ப பெரிசா இருக்கும். ரொம்ப ஆழமா இருக்கும். எந்நேரமும் அலை அடித்துக் கொண்டே இருக்கும் " என்றெல்லாம் சொன்னது. 


உள்ளூர் நரி "சரி சரி நிறுத்து உன் கடல் புராணத்தை...இங்க பார்...இந்த கிணற்றைப் பார்" என்று சொல்லிவிட்டு, தன் வாலை கொஞ்சம் அதில் விட்டது. "இவ்வளவு ஆழம் இருக்குமா உன் கடல்" என்று கேட்டது. 


அதற்கு அந்த வெளியூர் நரி சிரித்துக் கொண்டே சொன்னது "இல்லப்பா...அதை விட ரொம்ப ஆழம்" என்றது. 


உள்ளூர் நரி, இன்னும் கொஞ்சம் வாலை உள்ளே விட்டது. "இவ்வளவு ஆழம்?" என்று கேட்டது. 


உள்ளூர் நரிக்கு தெரிந்தது எல்லாம் கிணறும், தன் வாலின் அளவும் தான். 


அது போல இன்னொரு கதை. கடல் அமையும், கிணற்று அமையும். கிணற்று ஆமை, கிணற்றுக்குள் கொஞ்சம் தூரம் நீந்தி காட்டி "கடல் இவ்வளவு பெரிசா இருக்குமா" என்று கேட்டதாம். 


அறியாத ஒன்றை நேரடியாக அனுபவம் இருந்தால் தான் அறிய முடியும். யார் எவ்வளவு சொன்னாலும் புரியாது. 


எவ்வாளவு புத்தகங்கள் படித்தாலும், எத்தனை உபன்யாசம் கேட்டாலும், எத்தனை ப்ளாக் படித்தாலும் தன் அனுபவம் இல்லாமல் நரி வாலால் கடல் அழ்ந்த கதையாகத்தான் முடியும். 


பாடல் 



கூவ லாமை குரைகட லாமையைக்

கூவ லோடொக்கு மோகட லென்றல்போல்

பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்

தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_12.html


(pl click the above link to continue reading)


கூவ லாமை  = கூவல் + ஆமை = கிணற்று ஆமை 


குரைகட லாமையைக் = குரை கடல் ஆமையை = கடல் ஆமையை 


கூவ லோடொக்கு மோ  = கூவலோடு ஒக்குமோ = கிணறு போல பெரிசா இருக்குமா 


கட லென்றல்போல் = கடல் என்று கேட்டது போல 


பாவ காரிகள் = பாவம் செய்தவர்கள், அறியாதவர்கள் 


பார்ப்பரி தென்பரால் = பார்ப்பது அரிது என்பரால். சிவனை காண்பது அரிது என்பார்கள் 


தேவ தேவன் = தேவர்களுக்கு தேவன் ஆன 


சிவன்பெருந் தன்மையே.= சிவனின் பெருந்தன்மையை 


அதாவது, சிவன் , தன் பெருந்தன்மையால் எளியவர்களுக்கும் அருள் புரிவான். அதை அறியாத பாவிகள், சிவன் அருளை பெறுவது கடினம் என்று சொல்லித் திரிகிறார்கள். அவர்கள் கிணற்று ஆமை போன்றவர்கள் என்கிறது இந்த சிறு குறுந்தாண்டகம். 





Wednesday, January 11, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - அறம்கூறும் ஆக்கம்

  

 திருக்குறள் - புறங்கூறாமை -  அறம்கூறும் ஆக்கம்


(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


புறம் கூறி வாழ்வதை விட சாவது நல்லது என்கிறார் வள்ளுவர். 


புறம் கூறுவது அவ்வளவு மோசமானது என்பது ஒரு புறம் இருக்கட்டும், அது எப்படி சாவதை விட சிறந்ததாக முடியும்? இறந்த பின் ஒன்றும் இல்லையே. அதை விட சிறப்பு என்றால் அது எப்படி முடியும்?



பாடல்  



புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறம்கூறும் ஆக்கம் தரும்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


(pl click the above link to continue reading)



புறம்கூறிப் பொய்த்து  = ஒருவன் இல்லாத போது அவனை பழித்துக் கூறி நேரில் கண்ட போது புகழ்ந்து, அப்படி ஒரு பொய்யாக  


உ யிர் வாழ்தலின் = உயிர் வாழ்வதை விட 


சாதல் = இறப்பது 


அறம்கூறும் ஆக்கம் தரும் = அற நூல்கள் சொன்ன ஆக்கத்தைத் தரும் 


இறப்பது எப்படி ஆக்கம் தரும் என்ற கேள்விக்கு பரிமேலழகர் உரை செய்கிறார். 


ஒருவன் புறம் சொல்லி உயிர் வாழ்ந்து கொண்டிருந்தால், அவன் மேலும் மேலும் பாவத்தைச் செய்து கொண்டே இருப்பான். அந்தப் பாவங்கள் அவனுடைய பின் பிறவிகளில் அவனை வாட்டும்.


மாறாக,


அவன் இறந்து போனால், மேற் கொண்டு பாவம் செய்ய முடியாது. அவன் பாவச் சுமை குறையும். இனி வரும் பிறவிகள் நல்ல பிறவிகளாக அமையும். 


எனவே தான், புறம் சொல்லி பொய்த்து உயிர் வாழ்வதை விட சாவது அறம் கூறும் ஆக்கம் தரும் என்றார். 


எப்படி எழுதி இருக்கிறார்கள். எப்படி படித்து இருக்கிறார்கள். 





(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html