திருக்குறள் - பயனில சொல்லாமை - அரும்பயன் ஆயும் அறிவினார்
(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை இந்த பதிவின் முடிவில் காணலாம்)
பயனற்ற சொற்களை பேசுவதை எப்படி விடுவது?
பேசாதே பேசாதே என்று சொன்னால் போதாது. எப்படி அப்படி பேசாமல் இருக்க வேண்டும் என்ற வழியைச் சொல்ல வேண்டாமா?
வள்ளுவர் சொல்கிறார்.
நாம் எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோமோ அதைப் பற்றித்தான் பேசுவோம். இல்லையா?
மனதில், சிந்தனையில் எது ஓடிக் கொண்டிருக்கிறதோ அது தான் சொல்லில் வரும்.
நம் சிந்தனை எல்லாம் சில்லறை விடயங்களில் போய் கொண்டிருக்கிறது.
அரசியல், சினிமா, டிவி யில் வரும் தொடர்கள், நாள் வார இதழ்களில் வரும் உணர்வுகளை தூண்டும் செய்திகள், என்று இருக்கிறது.
whatsapp போன்ற சமூக வலை தளங்களில் யாராவது ஒன்றைச் சொன்னால் அதைப் பிடித்துக் கொண்டு மாறி மாறி கருத்துப் பரிமாற்றம் செய்வது. காலணாவுக்கு பிரயோஜனம் இல்லாத விடயமாக இருக்கும்.
எனவே, நம் சிந்தனையை மாற்றினால், நம் பேச்சு மாறும்.
சிந்தனையை எதன் மேல் செலுத்துவது என்ற கே கேள்வி வரும்.
சமையல் குறிப்பு, அழகுக் குறிப்பு இதெல்லாம் முக்கியமில்லையா என்ற கேள்வி வரும்.
அதற்கும் பதில் சொல்கிறார் வள்ளுவர்.
பாடல்
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
(
ஒரு முன்னுரை
https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html
எல்லாரும் எள்ளப் படும்
https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html
சொல்லும் செயலும்
https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html
பாரித்து உரைக்கும் உரை
https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html
நயன்சாரா நன்மையின் நீக்கும்
https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html
சீர்மை சிறப்பொடு நீங்கும்
https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html
பதடி எனல்