Sunday, June 30, 2013

திருவாசகம் - நான் யார் ?

திருவாசகம் - நான் யார் ?


திருவாசகத்தில் உள்ள மிக சிக்கலான பாடல்களில் ஒன்று

நானார்என் உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.

சீர் பிரித்த பின்

நான் யார் ? என் உள்ளம் யார் ? ஞானங்கள் யார் ? என்னை யார் அறிவார் ?
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி 
ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் 
தேனார் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ 

நான் என்பது என்ன ? என் ஞாபங்கள், என் அறிவு  இதைத்  தவிர வேறு என்ன ? நான் அறிந்த அனைத்தும் மறந்து போனால் நான் என்ற நான் யார் ? என் பெயர், என் மனைவி/கணவன், என் பிள்ளைகள், பெற்றோர், நண்பர்கள், நான் கற்ற கல்வி எல்லாம் மறந்து போனால் நான் , நானாக இருப்பேனா ?

மாணிக்க வாசகருக்கு இது நிகழ்ந்தது.

இறைவன் அவரை ஆட்கொண்டான்.

நான் என்பது மறைந்து விட்டது ? நான் என்பது போன பின் உள்ளம் என்பது எது ?

ஞானம் இரண்டு வகைப்படும் - கற்ற அறிவு, அனுபவ அறிவு. பர ஞானம், அபர ஞானம் என்று சொல்வார்கள். நானும் போன பின், என் உள்ளமும் போன பின் என் ஞானம் என்பது என்ன ?

நான் போய் விட்டேன். நான் என்பது இல்லை

என் உள்ளம் போய் விட்டது.

என் ஞானங்கள் இல்லாமல் போனது.

இவை அனைத்தும் போன பின் என்னை யார் அறிவார் ? 

அந்த இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லை என்றால் இதுவெல்லாம் என்னவாகி இருக்கும் ?

ஆட் கொண்டபின் என்ன ஆயிற்று ?



பொருள்





நான் யார் ? = நான் யார்

என் உள்ளம் யார் ? = என் உள்ளம் யார்

ஞானங்கள் யார் ? = ஞானங்கள் யார் அல்லது எது 

என்னை யார் அறிவார் ? = என்னை யார் அறிவார் ?

வானோர் பிரான் = வானில் உள்ள பிரான்

என்னை ஆண்டிலனேல் = என்னைஆட் கொள்ளவில்லை என்றால்

மதி மயங்கி = மதி மயங்கி

ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் = இறைச்சி இருந்த உடைந்த மண்டை ஓட்டில் பிச்சை எடுத்து உண்ணும் அம்பலத்தில் ஆடும் அவன்

தேனார் கமலமே = தேன் உள்ள தாமரை மலருக்கு

சென்று ஊதாய் கோத்தும்பீ = சென்று பாடுவாய் தும்பியே 




4 comments:

  1. மன்னிக்கவும். சரியாகப் புரியவில்லை.

    என்னை இறைவன் ஆட்கொள்ளவில்லை என்றால், "நான் யார்?" என்ற கேள்விக்கு பதில் இருக்காது என்று பொருளா?

    ReplyDelete
    Replies
    1. No. After being possessed by the God, he lost his identity. He changed so much that he lost his own identity, his knowledge etc. People around him think that he is the old Manikka vaasagar..but he knows he is not. It is like Siddhartha becoming Buddha. For ignorant people, the body remains the same. They do not know what has happened inside.....

      Delete
    2. மா.வாவின் தெய்வ பக்தி ஞானம்
      his identity all are recognised because SARVEHWARAN possessed him..(.he became one of 4 Nayanmars ).other wise who would hv known him ....

      Delete
    3. when Shivam nammai aatkondal , first Shivam will tell who he is then will tell who this Anma is( pathiyanavar mudhalil Thannai arivithu pinbu aanmavai arivikkindar) this is the meaning, we don’t know who we are first, esan thaan thiruvarulai tharuvar then the process happens

      Delete