Sunday, April 22, 2012

திருவாசகம் - சிவன் சுமந்த சுமைகள்


திருவாசகம் - சிவன் சுமந்த சுமைகள்


நாம் மட்டும் தானா சுமைகளை சுமக்கிறோம்? அந்த இறைவனையும் சுமக்க வைக்கிறோம்.

சிவன் சுமந்த சுமைகளை மாணிக்க வாசகர் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் இங்கே.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - தாயுமான நம்மாழ்வார்


நாலாயிர திவ்ய பிரபந்தம் - தாயுமான நம்மாழ்வார்


தாய்மை என்பது பெண்களுக்கு இயல்பாய் வருவது. ஒரு ஆண் எவ்வளவு தான் முயன்றாலும் தாய்மையின் ஒரு சிறு அளவை கூட எட்ட முடியாது என்பதுதான் உண்மை. 

சிவன் தாயக சென்று பிரசவம் பார்த்ததால் அவனுக்கு தாயுமானவன் (தாயும் ஆனவன்) என்று பெயர் உண்டு.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் தன்னை ஒரு தாயாக நினைத்து கண்ணனுக்கு ஒரு தாய் என்னவெல்லாம் செய்வாளோ, அல்லது ஒரு தாய் தன் குழந்தையிடம் எப்படி எல்லாம் இருப்பாளோ/அதன் செயல்களை எப்படியெல்லாம் அனுபவிப்பாளோ அதை பாடலாகத் தருகிறார்.

சில பாடல்கள் மிக மிக ஆச்சரியமானவை. ஒரு தாய் அமர்திருக்கும் போது, அவளின் குழந்தை பின்னால் வந்து "அம்மா" அவளின் முதுகை கட்டி கொள்ளும்...அது போன்ற நுணுக்கமான தருணங்களை படம் பிடிக்கிறார்...

கண்ணன் தொட்டிலில் கிடக்கிறான். அவனை தூங்கப் பண்ணவேண்டும்...நம்மாழ்வார் தாலாட்டுப் பாடுகிறார்....

Saturday, April 21, 2012

திரு மந்திரம் - ஒன்றே குலம். ஒருவனே தேவன்

திரு மந்திரம் - ஒன்றே குலம். ஒருவனே தேவன்


ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று முதலில் சொன்னவர் திரு மூலர். அவர் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு வாசகத்தை சொல்ல மிக பெரிய தைரியம் வேண்டும். 

சாதியும், மதமும், தீண்டாமையும் மலிந்து இருந்து காலத்தில் இப்படி ஒரு வரியை சிந்திப்பது கூட கடினமான காரியம். 

இப்படி சில புரட்சிகரமான கருத்துகளை சொன்னதால், திருமந்திரம் பல காலமாய் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருந்தது. 

சரி, முதல் வரி தெரியும், மற்ற வரிகள் ?


திரு அருட்பா - வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலார்


சக மனிதன் துன்பப் படுவதை கண்டும் கூட கண்டும் காணமல் போகும் காலம் இது. 

மனிதன் அல்ல, ஐந்தறிவு கொண்ட விலங்கு கூட அல்ல, தண்ணீர் இல்லாமல் வாடிய பயிரை கண்டு உள்ளம் வாடினார் வள்ளலார்.

மற்றவர்கள் துன்பத்தை கண்டு வருத்தப் படுவது எல்லோருக்கும் எளிதான ஒன்று தான்.

அந்த துன்பத்தை போக்க ஏதாவது செய்வது தான் கடினம்.

மனிதனுக்கு வரும் பெரிய துன்பம் பசி துன்பம் தான். அந்த துன்பத்தை போக்க வல்லாளர் அணையாத அடுப்பை கொண்ட உணவு சத்திரத்தை நிறுவினார்.

வடலூரில் அந்த உணவு சாலை இன்றும் இயங்கி கொண்டு இருக்கிறது. 

அவர் மறைந்த பின்னும் அவர் நிறுவிய அந்த சத்திரம் மக்களின் பசிப் பிணியை நீக்கிக் கொண்டு இருக்கிறது.

அவருடைய மனித நேயத்திற்கு இந்த பாடல் ஒரு சாட்சி.....

திரு மந்திரம் - உடம்பு அழிந்தால் உயிர் அழியும்

திரு மந்திரம் - உடம்பு அழிந்தால் உயிர் அழியும்

சித்தர்கள் பொதுவாக இந்த ஊண் உடம்பை பெரிதாக மதித்ததில்லை. திரு மூலர் மட்டும் இதற்க்கு விதி விலக்காக இருக்கிறார். 

உடம்பை போற்றி பாது காக்க சொல்கிறார். உடம்பை வளர்பதன் மூலம் உயிரை வளர்க்க முடியும் என்கிறார் இந்தப் பாடலில்....



திரு அருட்பா - கடவுளின் சுவை

திரு அருட்பா - கடவுளின் சுவை


கடவுள் எப்படி இருப்பாரு ? கறுப்பா ? சிவப்பா ? ஒல்லியா ? குண்டா ? உயரமா ? குள்ளமா ? 

கண்டவர் விண்டதில்லை 
விண்டவர் கண்டதில்லை

குழந்தைகள் எதையாவது எடுத்தால் உடனே வாயில் வைத்து சுவைத்துப் பார்க்கும். பார்த்து அறிவது, தொட்டு அறிவது. சுவைத்து அறிவது.

இங்கு வள்ளலார் இறைவனின் சுவை

கம்ப இராமாயணம் - திரிந்த பாற்கடல்


கம்ப இராமாயணம் - திரிந்த பாற்கடல்


நல்ல குணங்கள் எவ்வளவு இருந்தாலும், ஒரே ஒரு கெட்ட குணம் இருந்தால் அந்த கெட்ட குணம் எல்லா நல்ல குணங்களையும் அழித்து விடும்.

பால் எவ்வளவு இருந்தாலும், அதில் ஒரு துளி தயிரை விட்டால் அது திரிந்து போகும். 

அது போல, இராவணின் அளவற்ற வரங்கள் என்னும் பாற்க் கடலில், சீதை என்ற ஒரு துளி பட்டதும் அது திரிந்து போயிற்று என்று புலம்புகிறாள் மண்டோதரி இந்தப் பாடலில்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------
அரை கடை இட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும் முன் அறிஞர்க்கேயும்

உரை கடையிட்டு அளப்ப அரிய பேர் ஆற்றல், தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை;

திரை கடையிட்டு அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும்

பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ, தவப் பயனின் பெருமை பார்ப்பேன்?
-------------------------------------------------------------------------------------------------------------


அரை கடை இட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும் = இராவணன் அறிய பெரிய தவங்கள் செய்து சிவனிடம் மூன்றரை கோடி ஆயுள் பெற்றான். முக்கோடி என்றால் (1000000000000000000000 ). ஒண்ணு போட்டு அதற்கு பக்கத்தில் 21 பூஜியங்கள். இவ்வளவு ஆயுசு இருந்தால் இவன் எல்லோரையும் ரொம்ப படுத்துவான் என்று உணர்ந்த திருமால், முனிவன் வடிவில் சென்று "மூன்றரை கோடி என்பது கொஞ்சம் அரை குறையாய் இருக்கிறது. அது என்ன அரை கோடி? பேசாமல் இன்னொரு அரை கோடி கேட்டு வாங்கிக்கொள், மொத்தம் நாலு கோடியாய் இருக்கட்டும் என்றார். 'முன்னம் பெற்ற மூன்றரை கோடி ஒழிய அரை கோடி வேண்டும்" என கேட்டுப் பெற்றான். அவன் கேட்ட படியே, முதலில் பெற்ற மூன்றரை கோடி அழிந்து வெறும் அரைக் கோடி தான் நின்றது. 

அந்த அரைக் கோடி வாழ் நாளும் கடை பட்டு போனது சீதையால்.


முன் அறிஞர்க்கேயும் உரை கடையிட்டு = அறிஞர்கள் எல்லாம் கூடி அவன் ஆற்றலை சொல்லப் புகுந்தாலும் சொல்ல முடியாத அளவுக்கு (உரை கடை இட்டு). 

அளப்ப அரிய பேர் ஆற்றல் = அளக்க முடியாத அளவுக்கு பெரிய ஆற்றல்

தோள் ஆற்றற்கு = தோளின் ஆற்றலுக்கு 

உலப்போ இல்லை; = அழிவே இல்லை

திரை கடையிட்டு = திரை என்றால் அலை. அலையை எல்லையாகக் கொண்ட

அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் = அளக்க முடியாத நீ (இராவணன்) பெற்ற பாற்கடல் போன்ற வரங்களை

சீதை என்னும் = சீதை என்ற

பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ = பாலுக்கு பிரை குத்திய மாதிரி, அந்த பாற்கடல் போன்ற வாரங்களுக்கு சீதை என்ற பிரை இட்டதால் அழிந்து போவதனை அறிவேனோ? 

தவப் பயனின் பெருமை பார்ப்பேன்? = நீ செய்த தவங்களின் பெருமையை மட்டுமே எண்ணி இருந்து விட்டேன். உன் தவறும் குறையும் அதை அழிக்கும் என்பதை அறியவில்லை என்பது பொருள்.