Showing posts with label புறநானூறு. Show all posts
Showing posts with label புறநானூறு. Show all posts

Tuesday, April 30, 2013

புறநானூறு - இறப்பதன் முன், நினைத்ததை செய்


புறநானூறு - இறப்பதன் முன், நினைத்ததை செய் 


நிறைய நல்ல விஷயங்களை தள்ளிப் போட்டு கொண்டே போகிறோம். ரிடையர் ஆனபிறகு படிக்க, பார்க்க என்று பல விஷயங்களை வைத்திருக்கிறோம்.

அது வரை இருக்க வேண்டுமே ? இறப்பு என்பது நம் கையிலா இருக்கிறது ? அல்லது அது சொல்லிக் கொண்டு வருமா ?

எது செய்ய வேண்டும் என்று நினைகிறீர்களோ, அதை செய்யுங்கள். தள்ளிப் போடாதீர்கள்

பாடல்

இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம்                   

நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை; வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு  

வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பிலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று
நிலங்கல னாக விலங்குபலி மிசையும் 

இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.


பொருள் 

Friday, April 13, 2012

புறநானூறு - காதலும் வீரமும்




கணவனோ காதலனோ போரில் அடிபட்டு கிடக்கிறான்.

அவனை தேடி அந்தப் பெண் போகிறாள்.

நேரமோ இரவு நேரம்

அவன் அடிபட்டு கிடப்பதை பார்க்கிறாள்.

இறக்கவில்லை. ஆனால் அவனால் எழுந்து நடக்க முடியாது.

அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு துக்கம் பொங்கி பொங்கி வருகிறது. வாய் விட்டு அழ வேண்டும் போல இருக்கிறது. அழுதால் அந்த சத்தம் கேட்டு பக்கத்து காட்டில் இருந்து புலி ஏதும் வந்து விடுமோ
 என்று பயப் படுகிறாள். அவனிடம் சொல்கிறாள் "உன்னை தூக்கி செல்லலாம் என்றாள் நீயோ கனமான ஆளாய் இருக்கிறாய். என்னால் உன்னை தூக்க முடியாது. என் வளையல் அணிந்த கையை பிடித்துக் கொள், மெல்ல நடந்து அந்த மலை அடிவாரம் போய் விடலாம்" என்கிறாள்.

  காதலும் வீரமும் ததும்பும் அந்தப் பாடல்