Showing posts with label mazhaikann. Show all posts
Showing posts with label mazhaikann. Show all posts

Monday, October 8, 2012

கம்பராமாயணம் - மழைகண்


கம்பராமாயணம் - மழைகண்


பெயர் சொற்கள் இரண்டு வகைப்படும். இடுகுறிப் பெயர், காரணப் பெயர்.

காரணப் பெயர் என்பது ஒரு காரணத்தால் வரும் பெயர். நாற்காலி என்பது காரணப் பெயர். நான்கு கால்கள் இருப்பதால் அது நாற்காலி.
அலைகடல், தோய்தயிர், என்பது எல்லாம் காரணப் பெயர்கள். 

ஒரு காரணமும் இல்லாமல், ஒரு பொருளுக்கு பெயர் இட்டு வழங்கினால், அதற்க்கு இடுகுறிப் பெயர். மரம், செடி என்பன உதாரணம். 

மழை கண் என்பது பொதுவாக ஒரு இடுகுறிப் பெயர்.

எப்போதும் மழை போல் பொழிந்து கொண்டு இருக்கும் கண் யாருக்கும் இருக்காது.

ஒரு உதாரணத்திற்கு சொல்வார்கள் மழை கண் என்று.

அழகுக்காக சொல்வதும் உண்டு.

எப்போதாவது சில பல நீர் துளிகள் வரலாம். அதனால் மழைக் கண் என்பதை காரணப் பெயராக கொள்ள முடியாது. 

ஆனால், ஒரே ஒரு ஆளுக்கு, மழை கண் என்பது காரணப் பெயராக இருந்ததாக கம்பன் சொல்கிறான்.

சீதை அசோக வனத்தில் இருக்கிறாள். கண்கள் நீர் பொழிந்த வண்ணம் இருக்கின்றன. நிற்காமல் அருவி போல் கொட்டிக் கொண்டே இருக்கிறது. ஏதோ அணைக் கட்டில் பெரிய ஓட்டை விழுந்தால் எப்படி தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டே இருக்குமோ, அது போல் அவள் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. 

பாடல்