Showing posts with label மூவருலா. Show all posts
Showing posts with label மூவருலா. Show all posts

Wednesday, July 11, 2012

மூவருலா - என்னையே நான் அறியேன்


மூவருலா - என்னையே நான் அறியேன்

காதலித்துப் பாருங்கள். மேலும் அழகாக ஆவீர்கள்.

கன்னம் மெருகேறும்.

கண்ணில் ஒளி தோன்றும். உதட்டோரம் ஓயாத புன்னகை மலரும்.

கலையும் முடிகள் காற்றோடு கதை பேசும்.

வானம் தேன் சிந்தும். தென்றல் கவரி வீசும்.

உங்களையே உங்களுக்கு அடையாளம் தெரியாமல் போகும்.

நானே நானா? யாரோ தானா என்று மெட்டு உதட்டோரம் மொட்டுவிடும்

மூவருலா என்ற இலக்கியத்தில், இங்கே ஒரு பெண், தன்னை தானே பார்த்து வியக்கிறாள்.


"ஐயோ, நான் எப்படி மாறிவிட்டேன்...எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லையே, என் காதலன் எப்படி என்னை அடையாளம் கண்டுகொள்வான்" என்று கவலைப் படுகிறாள்

காதலித்ததால் என்னவெல்லாம் கவலை...!

பாடல்