Monday, April 30, 2012

கம்ப இராமாயணம் - வஞ்ச மகள் வந்தாள்


கம்ப இராமாயணம் - வஞ்ச மகள் வந்தாள்



கம்பனின் வார்த்தை விளையாட்டுக்கு கீழ் வரும் பாடல் ஒரு உதாரணம்.

தன் அரக்கி வடிவத்தை மறைத்து கொண்டு, அழகான பெண் போல உருக் கொண்டு சூர்பனகை வருகிறாள்.

கம்பனின் பாட்டு கொஞ்சுகிறது.

Sunday, April 29, 2012

கம்ப இராமாயணம் - ஓடி ஒளிந்த எமன்


கம்ப இராமாயணம் - ஓடி ஒளிந்த எமன்


கரிய பெரிய அரக்கியான தாடகையை கம்பன் வர்ணிக்கும் அழகே தனி.

அவள் ஒரு பெண்.

மாதரையும், தூதரையும் கொல்லுவது பாவம்.

க்ஷத்ரிய தர்மம் அல்ல. இராமன் தாடகை என்ற பெண்ணைக் கொன்றான் என்ற பழிச் சொல் அவன் மேல் வரக்கூடாது எனபதில் கம்பன் மிகக் கவனமாய் கவி புனைகிறான்.

படிப்பவர்களுக்கு தாடகை ஒரு பெண்ணே அல்ல என்ற எண்ணம் வர வேண்டும்.

அப்படி ஒரு எண்ணம் வந்து விட்டால், இராமன் மேல் பழி வராது.

அதை எப்படி செய்வது என்று கம்பன் சிந்திக்கிறான்...

இந்தப் பாடலை பாருங்கள்...என்ன கற்பனை, என்ன சொல் வளம், அதன் பின்னணியில் இருக்கும் கம்பனின் இராமனைப் பழியில் இருந்து காக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் புரியும்.....

அற்புத திருவந்தாதி - காணாமலே காதல்


அற்புத திருவந்தாதி - காணாமலே காதல்


காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த அற்புத திருவந்தாதி.

நமக்கு வரப் போகும் துணை எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு யாருக்கும் இருக்கும். 

பார்பதற்கு முன்னாலேயே நாம் அவர்கள் வசம் காதல் வயப் படுகிறோம். 

ஒரு வேளை அவர்களை நேரில் பார்த்து விட்டால், "அட, இந்த பொண்ணுக்காகத்தான் / ஆணுக்காகத்தான் இத்தனை நாளாய் கனவு கண்டு கொண்டு இருந்தேன்" என்று சட்டென்று காதல் பூ மலரும்.

இங்கே அப்படி இறைவன் மேல் காதல் கொண்ட காரைக் கால் அம்மையார் சொல்கிறார்

கந்தர் அலங்காரம் - நல்ல கவிதை படியுங்கள்


கந்தர் அலங்காரம் - நல்ல கவிதை படியுங்கள்


இருக்கப் போறதே கொஞ்ச நாள். அதில் படிக்க ஒதுக்கும் நேரம் மிக மிக அற்பமான நேரம். அதிலும் கவிதை படிக்க கிடைக்கும் நேரம் அரிதிலும் அரிது. அந்த சிறிய நேரத்திலாவது நல்ல கவிதை படியுங்கள் என்கிறார் அருணகிரி நாதர்....போகும் வழிக்கு புண்ணியம் தேடுங்கள் என்கிறார் இந்தப் பாடலில்....

Saturday, April 28, 2012

அற்புத திருவந்தாதி - எதிலிருந்து எதற்கு அழகு


அற்புத திருவந்தாதி - எதிலிருந்து எதற்கு அழகு

நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மார் காரைக்கால் அம்மையார். இவர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.

இந்து மதம் பெண்களுக்கு துறவை அனுமதிக்கவில்லை. மணிமேகலை துறவு பூண்டாள், அவள் சமண சமயத்தை சார்ந்தவள்.

ஆண்டாள் கூட துறவறம் மேற்கொள்ளவில்லை. காரைக்கால் அம்மையார் திருமணம் செய்து கொண்டபின் இல்லறம் துறந்து துறவறம் மேற்கொண்டார்.

அவர் எழுதிய பாடல்கள் பதினொன்றாம் திருமுறையில் உள்ளது. அதில், அற்புத திருவந்தாதியில் இருந்து ஒரு பாடல்....

திருப் புகழ் - இவர் நம்ம ஆளு !

திருப் புகழ் - இவர் நம்ம ஆளு !

கடைசிக் காலத்தில் எமன் வந்து தன்னை இழுத்துக்கொண்டு போகும் போது, நம்முடைய அம்மா, அப்பா, மனைவி, மக்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் வந்து அழுவார்கள், அப்போது, முருகா, நீ எமனிடம் "பாத்துப்பா, இவர் நம்ம ஆளு, நமது அன்பன்" னு நீ வந்து சொல்லனும்னு அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டுகோள் வைக்கிறார் இந்தப் பாடலில்.....

குறுந்தொகை - அவன் பொய் சொல்ல மாட்டான்

குறுந்தொகை - அவன் பொய் சொல்ல மாட்டான்


சோலைகள் எல்லாம் பூத்து குலுங்குகின்றன. கார் காலம் வந்து விட்டதோ ? இருக்காது. அவன் போகும் போது என்ன சொல்லி விட்டுப் போனான் ? கார் காலத்தில் வந்து விடுவேன் அப்படினு தான சொன்னான் ? அவன் இன்னும் வரல...அதுனால இது கார்காலமா இருக்காது....

கம்ப இராமாயணம் - இராமனுக்கு எத்தனை உயிர் ?

கம்ப இராமாயணம் - இராமனுக்கு எத்தனை உயிர் ?


சீதையை பிரிந்து இராமன் இருக்கிறான். உடலும், உள்ளமும் சோர்ந்து போய் இருக்கிறான். அப்படி சோர்ந்து போன சமயம்,

இராமனைப் பார்த்தால் ஏதோ உயிர் இல்லாதாவன் மாதிரி தோன்றுகிறது.

அத்தனை அயர்ச்சி. சுக்ரீவன் இராமனை தேற்றுகிறான்.

கொஞ்சம் தேறுதல் அடைகிறான். உயிர் வந்த மாதிரி இருக்கிறது. சற்று நேரம் கழித்து மீண்டும் சோர்வு...ஏதோ இராமன் ஒவ்வொருமுறையும் உயிர் இழந்து மீண்டும் பெற்றது மாதிரி தோன்றுகிறது...

எத்தனை முறை தான் அவனுக்கு உயிர் போய் வருமோ ?

Friday, April 27, 2012

திருக்குறள் -ரொம்ப போரடிக்குதா ?

திருக்குறள் -ரொம்ப போரடிக்குதா ?


சில சமயம் நமக்கு வாழ்க்கை ரொம்ப போரடிக்கிற மாதிரி இருக்கும். என்னடா இது, யாருமே இல்லையா நமக்குன்னு ரொம்ப தனிமையா, வெறுப்பா கூட இருக்கும். 

இப்படி போரடிக்காம இருக்க வள்ளுவர் ஒரு வழி சொல்றார்....

Thursday, April 26, 2012

திரு வாசகம் - உண்மையையை தவிர வேறு இல்லை


திரு வாசகம் - உண்மையையை தவிர வேறு இல்லை

உண்மை என்பது ஒன்றானதா ? அல்லது பலவானதா ? இன்று நாம் உண்மை என்று நினைப்பது நாளை மாறலாம் இல்லையா ? என்றுமே மாறாத உண்மை என்று ஒன்று இருக்கிறதா ?

இருக்கிறது என்கிறார் மணி வாசகர் இந்தப் பாடலில்

குறுந்தொகை - அவர் எப்படி இருக்காரோ ?

குறுந்தொகை - அவர் எப்படி இருக்காரோ ?

கணவன் வெளியூர் போனால், மனைவி அவனைப் பற்றி கவலைப் படுவாள். சரியான நேரத்துக்கு சாபிட்டாரோ இல்லையோ, புது இடத்துல தூக்கம் வருமோ இல்லையோ, மாத்திரை எல்லாம் சரியான நேரத்துக்கு மறக்காம சாப்பிடணுமே, என்று ஆயிரம் கவலை இருக்கும்.

ஆனா ஊர் என்ன சொல்லும் ? "புருசன பிரிஞ்சு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலையோ ? அதுக்குள்ள  தேடிருச்சோ ?" என்று நையாண்டி செய்யும்.

பெண்ணின் மனதை யார் தான் புரிந்து கொள்ள முடியும் ?

இங்கே ஒரு கணவனை பிரிந்த குறுந்தொகை பெண் சொல்கிறாள்:

Tuesday, April 24, 2012

கம்ப இராமாயணம் - சீதை தீக் குளித்த பின்


கம்ப இராமாயணம் - சீதை தீக் குளித்த பின்

சீதை தீயில் இறங்கிய உடன், அவள் கற்பின் சூடு தாங்காமல் அக்னி தேவன் அவளை கொணர்ந்து இராமனிடம் தந்து, இவள் கற்பில் சிறந்தவள் என்று சொல்கிறான்.

அப்போது இராமன் சீதையிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. "தெரியாமல் உன் கற்பை சந்தேகப் பட்டேன்" என்றோ "உலகுக்கு உன் கற்பை நிரூபிக்க தான் அப்படி செய்தேன்" என்றோ ஒன்னும் சொல்லவில்லை.

அவள் அருகில் வருகிறான். அக்னி தேவனைப் பார்த்து சொல்கிறான்....

கம்ப இராமயாணம் - கும்ப கர்ணா, கெட் அவுட்

கம்ப இராமயாணம் - கும்ப கர்ணா, கெட் அவுட் 

கும்ப கர்ணன் எவ்வளவோ எடுத்து சொல்கிறான் சீதையை விட்டு விடும்படி. இராவண கேட்பதாய்  இல்லை. கடைசியாக சொல்கிறான்....

மானுடர் இருவரை வணங்கி மற்றும் அக்
கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு உய்தொழில்
ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன்யான் அது முடிக்கிலேன் எழுக போகென்றான்




மானுடர் இருவரை வணங்கி  = இராம லட்சுமணர்களை வணங்கி

மற்றும் அக் கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு = அனுமன் மற்றும் இதர கூனுடைய குரங்குகளை கும்பிட்டு

உய்தொழில் = உயிர் பிழைக்கும் தொழில்

உம்பிக்கும் உனக்குமே கடன் = உன் தம்பியான விபீஷனனுக்கும் உனக்குமே கடன்


யான் அது முடிக்கிலேன் = என்னால அது முடியாது




எழுக போகென்றான் = நீ எழுந்து போ என்றான்




ஒரு புறம் கும்ப கர்ணனின் தன் மான உணர்ச்சியை தூண்டி விடுகிறான் - மானிடர்களையும், குரங்குகளையும் உன்னால் வணங்க முடியுமா ? நீ செஞ்சாலும் செய்வ, நான் மாட்டேன் என்று அவனை சமாதானத்தில் இருந்து விலக்கி போருக்கு செல்ல தூண்டுகிறான்.

மறுபுறம், அவனின் சகோதர பாசத்தை தொடுகிறான். உன் தம்பி விபிஷணன் போய் விட்டான், நீயும் போய் விடு, நான் தனியாக இருப்பேன் என்று மறைமுகமாக சுட்டுகிறான்.


அதாவது கும்ப கர்ணன் சொன்ன வாதங்களை எல்லாம் விட்டு விட்டான்...அதற்க்கு அவனிடம் பதில் இல்லை. அவனை உசுப்பு ஏத்தி விட்டு, அவனை போருக்கு செல்ல வைக்க வேண்டி, இப்படி சொல்கிறான். கும்ப கர்ணன் provoke ஆனானா இல்லையா ? இதற்க்கு கும்ப கர்ணன் என்ன சொன்னான் ?




Monday, April 23, 2012

கம்ப இராமாயணம் - அக்னி பிரவேசம்


கம்ப இராமாயணம் - அக்னி பிரவேசம் 


இராமாயணத்தில், அக்னி பிரவேசம் ரொம்பவும் சங்கடமான இடம்...வாலி வதை போல.

சீதையை காணாமல் இராமன் தவிக்கிறான், அழுது புலம்புகிறான், தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறான். பின் சண்டையிட்டு வென்ற பின் சீதை வருகிறாள்.

நீண்ட நாள் பிரிந்த தவிப்பு இருக்கும் தானே?

அவளிடம் அன்பாக "நீ எப்படி இருக்க, ரொம்ப கஷ்டப் பட்டியா...ரொம்ப மெலிஞ்சு போய்டியே..." என்று எல்லாம் கேட்பதை விட்டு விட்டு, காதில் கேட்க முடியாத சொற்களை அவள் முன் வீசுகிறான்
 
'ஊண்திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட, மாண்டிலை;
முறைதிறம்பு அரக்கன் மாநகர் ஆண்டுறைந்து அடங்கினை;
அச்சம் தீர்த்து இவண் மீண்டது என்? நினைவு, :எனை 
விரும்பும்" என்பதோ?'

 
ஊண்திறம் உவந்தனை = நல்ல இரசிச்சு சாப்பிட்ட (இராவணன் அரண்மனையில்). (ஊண் = உணவு; உவத்தல் = சந்தோசப் படுதல் )
 
ஒழுக்கம் பாழ்பட, மாண்டிலை = உன் ஒழுக்கம் கெட்ட பின்னும், நீ இறக்கவில்லை
 
முறைதிறம்பு = முறை கெட்ட (திறம்புதல் = பிறழ்தல் )
 
அரக்கன் மாநகர் = அரக்கனின் பெரிய நகரமான (இலங்கையில் )
 
ஆண்டுறைந்து அடங்கினை = நீண்ட நாள் தங்கி settle ஆகிட்ட

(ஆண்டு = ரொம்ப நாள்; ஆண்ட்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வருவதில்லை )

அச்சம் தீர்த்து = (இப்ப ) ஒரு பயமும் இல்லாமல்
 
இவண் மீண்டது என்? = நீ எப்படி இங்கு வந்தாய் ?
 
நினைவு, எனை விரும்பும்" என்பதோ?' = நீ மனசுல நான் உன்னை இன்னமும் விரும்புவேன் என்று நினைத்துக் கொண்டாயா ?


பாவம் இல்ல சீதை ? பெண்ணுக்கு அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை சோதனைதான்.

திருப் புகழ் - முதுமையின் சோகம்

திருப் புகழ் - முதுமையின் சோகம்


இளமையாய் இருக்கும் போது எல்லாம் இனிமையாய் இருக்கும். முதுமை வரும் போது துன்பங்களும் கூட வரும்.


திருப் புகழ் சந்தக் கவியால் ஆனது. படிக்க சற்று கடினம். சீர் பிரித்தால் தான் அர்த்தம் புரியும்.


கீழ் கண்ட பாடலில், முதுமையின் கஷ்டத்தை கூறி, அந்த முதிய காலத்தில் நீ வந்து என்னை காக்க வேண்டும் என்கிறார் அருணகிரி பெருமான்....



கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் நகைச்சுவை


கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் நகைச்சுவை


கும்பகர்ணனுக்கு நகைச்சுவை உணர்வு இருக்குமா ? கிண்டலும் கேலிப் பேச்சும் அவனுக்கு வருமா ?
  
 வரும் என்று கம்பன் காட்டுகிறான். 

  
 யுத்தத்துக்கு போவதற்கு முன்னால் கும்பகர்ணன், இராவணனிடம் சொல்கிறான். 

  
  
 "இராவணா, நமக்கு என்ன குறை இருக்கிறது ? காலினால் கடலை கடந்த அனுமன் இருக்கிறான், சிறை விட்டு செல்லாத சீதை இருக்கிறாள், வாலியின் மார்பு துளைத்த இராமனின் அம்புகள் இருக்கின்றன ? அவற்றை வாங்க நாம் இருக்கிறோம் ...நமக்கு என்ன குறை?"

  
 ----------------------------------------------------------
 'காலினின் கருங் கடல் கடந்த காற்றது 

 போல்வன குரங்கு உள; சீதை போகிலள்; 

 வாலியை உரம் கிழித்து ஏக வல்லன 

 கோல் உள; யாம் உளேம்; குறை உண்டாகுமோ? 

 ----------------------------------------------------------
  
 காலினின் = காலால் உந்தி 

  
 கருங் கடல் = கரிய கடலை 

  
 கடந்த = கடந்த, தாண்டி வந்த 

  
 காற்றது போல்வன = காற்றைப் போன்ற 

  
 குரங்கு உள = குரங்கு (அனுமன்) உள்ளான் 

  
 சீதை போகிலள் = சிறை விட்டுப் போகாத சீதை நம்மிடம் இருக்கிறாள் 

  
 வாலியை = வாலியை 

  
 உரம் கிழித்து = வலிமையை கிழித்து 

  
 ஏக வல்லன = போக வல்ல 

  
 கோல் உள; = அம்புகள் உள்ளன (இராமனிடம்)

  
 யாம் உளேம்; = அவற்றை மார்பில் வாங்க நாம் இருக்கிறோம் 

  
 குறை உண்டாகுமோ? = நமக்கு வேறு குறை என்ன இருக்கிறது ? 

  
  
 கிண்டலு ?...

கம்ப இராமாயணம் - வலியைத் தாங்கலாம், வெட்கத்தை?


கம்ப இராமாயணம் - வலியைத் தாங்கலாம், வெட்கத்தை?


குழந்தைகள் கீழே விழுவதை பார்த்து இருக்கீர்களா ? விழுந்தவுடன் சுற்றும் முற்றும் பார்க்கும். யாரும் இல்லை என்றால் பேசாமல் எழுந்து போய்விடும்.

யாரவது பார்த்து விட்டால், "ஓ" என்று அழ ஆரம்பிக்கும்.

வலியை தாங்கிக் கொள்ள முடியும்? வெட்கத்தை ?


இராவணன் தோற்று இலங்கை திரும்புகிறான். இராவணனின் சோகத்தை கம்பன் பிழிந்து வைக்கிறான்.

வான் நகும், மண்ணும் எல்லாம் நகும், நெடு வயிரத் தோளான்
நான் நகும் பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்க்கு நாணான்
வேல் நகு நெடுங்கண், செவ்வாய், மெல் இயல் மிதிலை வந்த
சானகி நகுவாள் என்றே நாணத்தால் சாம்புகின்றான்





வான் நகும் = வானில் உள்ள தேர்வர்கள் எல்லாம் சிரிப்பார்களே




மண்ணும் எல்லாம் நகும் = மண்ணில் உள்ள மனிதர்கள் 


எல்லாம் சிரிப்பார்களே (மனிதர்கள், அரக்கர்கள், வானரங்கள் மற்றும் எல்லோரும் )

நெடு வயிரத் தோளான் = நெடிய வைரம் போன்ற தோள்களை உடைய

நான் நகும் பகைஞர் எல்லாம் நகுவர் = நான் (இராவணனாகிய 
நான் ) பார்த்து சிரித்த பகைவர்கள் எல்லாரும் இப்போ என்னை
பார்த்து சிரிப்பார்களே

என்று = என்று

அதற்க்கு நாணான் = அதற்க்கு எல்லாம் வெட்கப் பட மாட்டான்

வேல் நகு = வேலைப் பார்த்து சிரிக்கும் (நீ எல்லாம் ஒரு
கூர்மையா, என் கண்ணைப் பார் என்று அதை பார்த்து எள்ளி நகையாடும் )

நெடுங்கண் = நீண்ட கண்களை கொண்ட

செவ்வாய் = சிவந்த இதழ்களை கொண்ட

மெல் இயல் = மென்மையான இயல்பை கொண்டவளான

மிதிலை வந்த = மிதிலையில் இருந்து வந்த

சானகி = சீதை

நகுவாள் = சிரிப்பாளே

என்றே = என்று

நாணத்தால் சாம்புகின்றான் = வெட்கத்தால் கருகி உள்ளே ஒன்றும் இல்லாமல் போகிறான் (சாம்புதல் = வெம்புதல், உள்ளீடு அற்றுப் போதல், பதர் போல் ஆகுதல் )

அவள் முன்னால் எப்படி போய் நிற்ப்பேன் என்று வெட்கப் படுகிறான்.

ஒரு பாக்கம் போரில் தோல்வி. இன்னொரு புறம் சீதை தன்னை இனிமேல் மதிக்க மாட்டேளே என்ற வருத்தம்...சோகம் ததும்பும் பாடல்...அந்த கதா பாத்திரத்தின் மன நிலையை அப்படியே படம்    பிடித்து கட்டுகிறான் கம்பன்.

Sunday, April 22, 2012

கம்ப இராமாயணம் - ஐயோ ! என்னே இவன் அழகு !


கம்ப இராமாயணம் - ஐயோ ! என்னே இவன் அழகு !


இராமனின் அழகை வருணிக்க முடியாமல் திணறுகிறான் கம்பன். 

திருவாசகம் - சிவன் சுமந்த சுமைகள்


திருவாசகம் - சிவன் சுமந்த சுமைகள்


நாம் மட்டும் தானா சுமைகளை சுமக்கிறோம்? அந்த இறைவனையும் சுமக்க வைக்கிறோம்.

சிவன் சுமந்த சுமைகளை மாணிக்க வாசகர் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் இங்கே.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - தாயுமான நம்மாழ்வார்


நாலாயிர திவ்ய பிரபந்தம் - தாயுமான நம்மாழ்வார்


தாய்மை என்பது பெண்களுக்கு இயல்பாய் வருவது. ஒரு ஆண் எவ்வளவு தான் முயன்றாலும் தாய்மையின் ஒரு சிறு அளவை கூட எட்ட முடியாது என்பதுதான் உண்மை. 

சிவன் தாயக சென்று பிரசவம் பார்த்ததால் அவனுக்கு தாயுமானவன் (தாயும் ஆனவன்) என்று பெயர் உண்டு.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் தன்னை ஒரு தாயாக நினைத்து கண்ணனுக்கு ஒரு தாய் என்னவெல்லாம் செய்வாளோ, அல்லது ஒரு தாய் தன் குழந்தையிடம் எப்படி எல்லாம் இருப்பாளோ/அதன் செயல்களை எப்படியெல்லாம் அனுபவிப்பாளோ அதை பாடலாகத் தருகிறார்.

சில பாடல்கள் மிக மிக ஆச்சரியமானவை. ஒரு தாய் அமர்திருக்கும் போது, அவளின் குழந்தை பின்னால் வந்து "அம்மா" அவளின் முதுகை கட்டி கொள்ளும்...அது போன்ற நுணுக்கமான தருணங்களை படம் பிடிக்கிறார்...

கண்ணன் தொட்டிலில் கிடக்கிறான். அவனை தூங்கப் பண்ணவேண்டும்...நம்மாழ்வார் தாலாட்டுப் பாடுகிறார்....

Saturday, April 21, 2012

திரு மந்திரம் - ஒன்றே குலம். ஒருவனே தேவன்

திரு மந்திரம் - ஒன்றே குலம். ஒருவனே தேவன்


ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று முதலில் சொன்னவர் திரு மூலர். அவர் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு வாசகத்தை சொல்ல மிக பெரிய தைரியம் வேண்டும். 

சாதியும், மதமும், தீண்டாமையும் மலிந்து இருந்து காலத்தில் இப்படி ஒரு வரியை சிந்திப்பது கூட கடினமான காரியம். 

இப்படி சில புரட்சிகரமான கருத்துகளை சொன்னதால், திருமந்திரம் பல காலமாய் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருந்தது. 

சரி, முதல் வரி தெரியும், மற்ற வரிகள் ?


திரு அருட்பா - வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலார்


சக மனிதன் துன்பப் படுவதை கண்டும் கூட கண்டும் காணமல் போகும் காலம் இது. 

மனிதன் அல்ல, ஐந்தறிவு கொண்ட விலங்கு கூட அல்ல, தண்ணீர் இல்லாமல் வாடிய பயிரை கண்டு உள்ளம் வாடினார் வள்ளலார்.

மற்றவர்கள் துன்பத்தை கண்டு வருத்தப் படுவது எல்லோருக்கும் எளிதான ஒன்று தான்.

அந்த துன்பத்தை போக்க ஏதாவது செய்வது தான் கடினம்.

மனிதனுக்கு வரும் பெரிய துன்பம் பசி துன்பம் தான். அந்த துன்பத்தை போக்க வல்லாளர் அணையாத அடுப்பை கொண்ட உணவு சத்திரத்தை நிறுவினார்.

வடலூரில் அந்த உணவு சாலை இன்றும் இயங்கி கொண்டு இருக்கிறது. 

அவர் மறைந்த பின்னும் அவர் நிறுவிய அந்த சத்திரம் மக்களின் பசிப் பிணியை நீக்கிக் கொண்டு இருக்கிறது.

அவருடைய மனித நேயத்திற்கு இந்த பாடல் ஒரு சாட்சி.....

திரு மந்திரம் - உடம்பு அழிந்தால் உயிர் அழியும்

திரு மந்திரம் - உடம்பு அழிந்தால் உயிர் அழியும்

சித்தர்கள் பொதுவாக இந்த ஊண் உடம்பை பெரிதாக மதித்ததில்லை. திரு மூலர் மட்டும் இதற்க்கு விதி விலக்காக இருக்கிறார். 

உடம்பை போற்றி பாது காக்க சொல்கிறார். உடம்பை வளர்பதன் மூலம் உயிரை வளர்க்க முடியும் என்கிறார் இந்தப் பாடலில்....



திரு அருட்பா - கடவுளின் சுவை

திரு அருட்பா - கடவுளின் சுவை


கடவுள் எப்படி இருப்பாரு ? கறுப்பா ? சிவப்பா ? ஒல்லியா ? குண்டா ? உயரமா ? குள்ளமா ? 

கண்டவர் விண்டதில்லை 
விண்டவர் கண்டதில்லை

குழந்தைகள் எதையாவது எடுத்தால் உடனே வாயில் வைத்து சுவைத்துப் பார்க்கும். பார்த்து அறிவது, தொட்டு அறிவது. சுவைத்து அறிவது.

இங்கு வள்ளலார் இறைவனின் சுவை

கம்ப இராமாயணம் - திரிந்த பாற்கடல்


கம்ப இராமாயணம் - திரிந்த பாற்கடல்


நல்ல குணங்கள் எவ்வளவு இருந்தாலும், ஒரே ஒரு கெட்ட குணம் இருந்தால் அந்த கெட்ட குணம் எல்லா நல்ல குணங்களையும் அழித்து விடும்.

பால் எவ்வளவு இருந்தாலும், அதில் ஒரு துளி தயிரை விட்டால் அது திரிந்து போகும். 

அது போல, இராவணின் அளவற்ற வரங்கள் என்னும் பாற்க் கடலில், சீதை என்ற ஒரு துளி பட்டதும் அது திரிந்து போயிற்று என்று புலம்புகிறாள் மண்டோதரி இந்தப் பாடலில்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------
அரை கடை இட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும் முன் அறிஞர்க்கேயும்

உரை கடையிட்டு அளப்ப அரிய பேர் ஆற்றல், தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை;

திரை கடையிட்டு அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும்

பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ, தவப் பயனின் பெருமை பார்ப்பேன்?
-------------------------------------------------------------------------------------------------------------


அரை கடை இட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும் = இராவணன் அறிய பெரிய தவங்கள் செய்து சிவனிடம் மூன்றரை கோடி ஆயுள் பெற்றான். முக்கோடி என்றால் (1000000000000000000000 ). ஒண்ணு போட்டு அதற்கு பக்கத்தில் 21 பூஜியங்கள். இவ்வளவு ஆயுசு இருந்தால் இவன் எல்லோரையும் ரொம்ப படுத்துவான் என்று உணர்ந்த திருமால், முனிவன் வடிவில் சென்று "மூன்றரை கோடி என்பது கொஞ்சம் அரை குறையாய் இருக்கிறது. அது என்ன அரை கோடி? பேசாமல் இன்னொரு அரை கோடி கேட்டு வாங்கிக்கொள், மொத்தம் நாலு கோடியாய் இருக்கட்டும் என்றார். 'முன்னம் பெற்ற மூன்றரை கோடி ஒழிய அரை கோடி வேண்டும்" என கேட்டுப் பெற்றான். அவன் கேட்ட படியே, முதலில் பெற்ற மூன்றரை கோடி அழிந்து வெறும் அரைக் கோடி தான் நின்றது. 

அந்த அரைக் கோடி வாழ் நாளும் கடை பட்டு போனது சீதையால்.


முன் அறிஞர்க்கேயும் உரை கடையிட்டு = அறிஞர்கள் எல்லாம் கூடி அவன் ஆற்றலை சொல்லப் புகுந்தாலும் சொல்ல முடியாத அளவுக்கு (உரை கடை இட்டு). 

அளப்ப அரிய பேர் ஆற்றல் = அளக்க முடியாத அளவுக்கு பெரிய ஆற்றல்

தோள் ஆற்றற்கு = தோளின் ஆற்றலுக்கு 

உலப்போ இல்லை; = அழிவே இல்லை

திரை கடையிட்டு = திரை என்றால் அலை. அலையை எல்லையாகக் கொண்ட

அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் = அளக்க முடியாத நீ (இராவணன்) பெற்ற பாற்கடல் போன்ற வரங்களை

சீதை என்னும் = சீதை என்ற

பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ = பாலுக்கு பிரை குத்திய மாதிரி, அந்த பாற்கடல் போன்ற வாரங்களுக்கு சீதை என்ற பிரை இட்டதால் அழிந்து போவதனை அறிவேனோ? 

தவப் பயனின் பெருமை பார்ப்பேன்? = நீ செய்த தவங்களின் பெருமையை மட்டுமே எண்ணி இருந்து விட்டேன். உன் தவறும் குறையும் அதை அழிக்கும் என்பதை அறியவில்லை என்பது பொருள்.




Friday, April 20, 2012

திருவாசகம் - விக்கினேன் வினையேன்


திருவாசகம் - விக்கினேன் வினையேன்


கிடைப்பது எல்லாமா அனுபவிக்க முடிகிறது?

சில சமயம் கிடைத்ததின் அருமை தெரியாமல் போய்விடுகிறது.

சில சமயம் கிடைத்ததை அனுபவிக்க நேரம் இல்லாமல் போய் விடுகிறது.

உடல் உபாதை சில சமயம் நம்மை அனுபவிக்க விடாது.

இந்த பிரச்சனை நமக்கு மட்டுமல்ல, மாணிக்க வாசகருக்கும் இருந்திருக்கிறது. 

இறைவன் அவருக்கு அமுதத்தை வழங்கினார். ஆஹா அமுதம் கிடைத்து விட்டது என்று அள்ளி அள்ளி விழுங்கினார். அது போய் தொண்டையில் அடைத்து கொண்டது. விக்கல் வந்தது. என்ன செய்ய ? இப்ப அமுதத்தை பருக முடியாது. 

அப்பவும் இறைவனே அவர் மேல் இரக்கப் பட்டு, அந்த விக்கல் போக இனிய தண்ணீர் தந்ததாய் அவரே சொல்கிறார் இந்தப் பாடலில்...

கம்ப இராமாயணம் - மனச் சிறையில் கரந்த காதல்



கம்ப இராமாயணம் - மனச் சிறையில் கரந்த காதல்


இராமனின் அம்பு பட்டு இராவணன் இறந்து கிடக்கிறான். உடல் எல்லாம் அம்பு.எவ்வளவு பெரிய ஆள் இராவணன். கூற்றையும் ஆடல் கொண்டவன்.

மண்டோதரி அவன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

அந்த புலம்பலையும் இலக்கியச் சுவையோடு தருகிறான் கம்பன்....

Thursday, April 19, 2012

திரு மந்திரம் - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

திரு மந்திரம் - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்



நமக்கு ஒரு இன்பம் கிடைத்தால், அது நமக்கு மட்டும் வேண்டும் என்று நினைப்போம்.

ஆனால், பெரியவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். அவர்கள் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று நினைப்பார்கள்.


தாம் இன்புறுவது உலகு இன்புறுவது கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்


தனக்கு கிடைத்த மந்திரத்தை உலகுக்கு எல்லாம் வழங்கி இன்புற்றார் இராமானுஜர்.


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இந்தப் பாடலில் கூறுகிறார் திருமூலர்.



திரு அருட்பா - மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

திரு அருட்பா - மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே


'மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே ' இது ஏதோ வண்டிச் சக்கரம் படத்தில் பாலசுப்ரமணியம் பாடிய பாடல் மாதிரி இருக்கா ?

எழுதியவர் இராமலிங்க அடிகளார். படித்துப் பாருங்கள். எவ்வளவு அனுபவித்து எழுதி இருக்கிறார் என்று தெரியும்......

திரு அருட்பா - கல்லார்க்கும் கற்றவர்க்கும்

திரு அருட்பா - கல்லார்க்கும் கற்றவர்க்கும்

இறைவன் எல்லாவற்றிற்கும் பொதுவாக இருக்கிறான். படித்தவன், படிக்காதவன், வல்லவன், இளைத்தவன், தன்னை மதிப்பவன், தன்னை மதிக்காதவன் நல்லவன், பொல்லாதவன் என்று அனைத்திற்கும் சாட்சியாக நடுவில் நிற்கிறான்.

வள்ளலார் பாடுகிறார்....

Wednesday, April 18, 2012

கம்ப இராமாயணம் - இன்று போய் நாளை வா


கம்ப இராமாயணம் - இன்று போய் நாளை வா


யுத்தத்தில் நிராயுதபாணியாக நிற்கிறான் இராவணன்.

இராமன் நினைத்திருந்தால் அவனை கொன்றிருக்கலாம். அவனுக்கு அறிவுரை சொல்கிறான்.

அறத்தின் துணை இன்றி வெறும் படை பலத்தால் யாரும் வெல்ல முடியாது என்று பலப் பல அறிவுரைகள் கூறுகிறான்.

கடைசியில், "இதை எல்லாம் நீ கேட்கவில்லை என்றால், இன்று போய் போருக்கு நாளை வா" என்றான்...

Tuesday, April 17, 2012

தேவாரம் - கல்லைக் கட்டிக்கொண்டு கரை சேர

தேவாரம் - கல்லைக் கட்டிக்கொண்டு கரை சேர


திரு நாவுக்கரசர் சைவ சமயத்திற்கு மாறியதால், சமணர்கள் மிகுந்த சினம் கொண்டனர். அவர்கள், அரசனிடம் சொல்லி நாவுக்கரசருக்கு தாங்கொண்ணா துன்பங்களை தந்தனர்.

அதில் ஒன்று நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் தூக்கி எரியச் செய்தது.

அப்படி கடலில் போட்டவுடன், அவர் இறைவனை நினைத்து உள்ளம் உருகி நமச்சிவாயப் பதிகம் பாடினார். 

அவரை கட்டியிருந்த கல் தெப்பமாய் மிதந்தது. அதில் ஏறி கரை சேர்ந்தார். 

இது நடந்தது கடலூருக்கு அருகில் தேவனாம் பட்டினம் என்ற கடற்கரையில். 

இன்றும் அங்கு "கரையேற விட்ட குப்பம்" என்று ஒரு இடம் உண்டு. அப்பர் கரையேறிய இடம்.

நமச்சிவாய பதிகத்தில் முதல் பாடல்...


------------------------------------------------------------
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்நற்றுணை யாவது நமச்சி வாயவே.
---------------------------------------------------------------


பொருள்:




சொற்றுணை = சொல் + துணை = சொல்லுக்கு துணையான


வேதியன் = வேதங்களுக்கு தலைவனான 


சோதி = சோதி வடிவாய் உள்ளவன்


வானவன் = வானத்தில் உள்ளவன்


பொற்றுணைத் = பொன் போன்ற துணை உள்ள
திருந்தடி = திருவடி


பொருந்தக் கைதொழக் = மனமும், கையும் அவன் திருவடியில் பொருந்துமாறு கை தொழ

கற்றுணைப் பூட்டியோர் = கல்லைக் கட்டி


கடலிற் பாய்ச்சினும் = கடலில் தூக்கி போட்டாலும்

நற்றுணை யாவது = நல்ல துணையாவது


 நமச்சி வாயவே. = நமச்சிவாய என்ற அந்த நாமமே



கல்லை கட்டிப் போட்டாலும் அவன் நாமம் துணையாய் இருக்கும். அவ்வளவுதானா? எழுதியது நாவுக்கரசர்.

சற்று ஆழ்ந்து சிந்தித்தால் சில பொருள் விளங்கும்:

கடல் என்றால் இந்தப் பிறவி பெருங்கடல். 

இந்த பிறவி கடலை சும்மா நீந்தி கடப்பதே கடினம், இதில் கல்லை வேறு கட்டிக்கொண்டு எப்படி எப்படி நீந்துவது. 

கல்லுனா எது ? உறவுகள், பந்த பாசங்கள், ஆசைகள், கோபம், தாபம் போன்ற மன மாசுகள் ... இத்தனை கல்லை கட்டி கொண்டு இந்த பிறவிப் பெருங்கடலை எப்படி நீந்தி கரை சேருவது?

இறைவனின் திரு நாமம் இருந்தால், அந்த கற்கள் கூட தெப்பமாய் மாறி சுகமாக கரை சேர முடியும். 

எழுதியது நாவுக்கரசர் !