Showing posts with label நல்வழி. Show all posts
Showing posts with label நல்வழி. Show all posts

Saturday, September 25, 2021

நல்வழி - எவ்வளவு காலம் படிக்க வேண்டும்?

 நல்வழி - எவ்வளவு காலம் படிக்க வேண்டும்?


படித்துக் கொண்டே இருக்கிறோம். 


இன்று புத்தகம், நாளை இன்னொன்று, நேற்று வேறு ஒன்று என்று படிக்க படிக்க புதிது புதிதாக ஏதேதோ தோன்றுகிறது. 


இதற்கு என்னதான் முடிவு? எவ்வளவு காலம்வரைதான் படிப்பது?


சரி, எவ்வளவு படித்தாலும், அதன் நோக்கம் என்ன? படித்து என்ன செய்யப் போகிறோம். 


"இது நன்றாக இருக்கிறது", "இது பரவாயில்லை" , "அது அப்படி ஒன்றும் சுவையானது இல்லை" "இதெல்லாம் நடை முறைக்கு சரிப்படாது" என்று ஏதோ நமக்குத் தோன்றிய விமரிசனத்தை முன் வைத்து விட்டு நம் வேலையை பார்க்கப் போவதற்கா இவ்வளவு நேரம் செலவழித்து படிப்பது?


ஔவையார் சொல்கிறார்,


"இளமை இருக்கும் போதே ஒரு பெண் தன் கணவனோடு இன்பங்களை அனுபவித்து விட  வேண்டும். அப்புறம் பார்க்கலாம், அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனால், முதுமை வந்து விடும்.  பின், அனுபவிக்க நினைத்ததாலும், முடியாது. கணவனுக்கும் வயது ஆகி விடும், உடலின் மேல் உள்ள ஈடுபாடு குறைந்து போகும்..


அது போல, முப்பது வயதுக்குள் படிக்க வேண்டியவற்றை படித்து, இறைவனை அனுபவத்தால் அறிந்து விட வேண்டும். படித்து கொண்டே இருப்பேன் என்றால் பின் அனுபவம் வாய்க்காது" என்கிறாள். 


பாடல் 



 முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்

 தப்பாமல் தன்னுள் பெறானாயின்-செப்புங்

 கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்

முலையளவே ஆகுமாம் மூப்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_25.html


(Please click the above link to continue reading)


முப்பதாம்  = முப்பது


ஆண்டளவில் = வயதில் 


மூன்றற்று  = காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்களை அறுத்து 


ஒருபொருளைத் = ஒரு என்றால் உயர்ந்த, தனித்த, சிறந்த என்று பொருள். உயர்ந்த, தனித்த சிறந்த பொருள் இறைவன். இறைவனை 


தப்பாமல் = தவறாமல் 


தன்னுள் = தனக்குள்ளே 


பெறானாயின் = அனுபவமாக ஒருவன் பெறவில்லை என்றால் 


செப்புங் = பேசுவதற்கு உதவும் 


கலையளவே ஆகுமாம் = அவன் படித்தவை 


காரிகையார் = பெண்கள் 


தங்கள் = அவர்களுடைய 


முலையளவே = மார்பின் அளவே 


ஆகுமாம் மூப்பு. = வைத்தே மூப்பு அறியப்படும் 


இதை ஒரு ஆண் புலவர் பாடியிருந்தால், பெண் விடுதலை சிந்தனையாளர்கள் கொடி பிடித்திருப்பார்கள் நல்ல வேளையாக பாடியது ஔவையார். 


கற்ற கலை இறை அனுபவத்தைத்  தரவில்லை என்றால், அது சும்மா பேசப் பயன்படுமே அல்லாமல் வேறு ஒன்றுக்கும் பயன் தராது. மேற்கோள் காட்டலாம். அந்த நூலில் அப்படிச் சொல்லி இருக்கிறது, இந்த நூலில் இப்படிச் சொல்லி இருக்கிறது என்று பேசப் பயன்படும்.


எல்லாக் கலையும் இறை அனுபவத்தைத் தர வேண்டும். 


ஔவையார் சொன்னது முப்பது வயது வரம்பு. 


அவருக்குப் பின், நம் வாழ்நாள் அளவு மிக நீண்டு விட்டது. ஒரு நாற்பது அல்லது ஐம்பது வைத்துக் கொள்ளலாம். 


நாளை என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? 


சாமாறே விரைகின்றேன்  என்றார் மணிவாசகர். ஒவ்வொரு நாளும் நாம் நமது இறப்பை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருக்கிறோம். 


எல்லா ஓட்டமும் இடுகாட்டுகுத் தான். 


உயரத்தில் ஒரு சினிமா படம் பிடிக்கும் புகைப் பட கருவியை (கேமரா) வைத்து அதில் வேகமாக படம் பிடித்தால் தெரியும், எல்லோரும் அன்னை வயிற்றில் இருந்து வந்து நேரே வேக வேகமாக ஓடிப் போய் சவக் குழியில் விழுவதைக் காணலாம். 


ஒருவரும் இதற்கு விதிவிலக்கல்ல. 


அதற்குள் அந்த அனுபவம் பெற வேண்டாமா?





Monday, May 10, 2021

நல்வழி - இரை தேடும் போது இறையும் தேடு

நல்வழி  - இரை தேடும் போது இறையும் தேடு 


அரிதற்கு அரிதான இந்த மானிடப் பிறவியை பெற்றும், அதை நல்ல வழியில் பயன் படுத்தாமல் செல்வம் சேர்பதிலேயே செலவிடுகிறோம். கடைசியில் சேர்த்த செல்வம் அனைத்தையும் அனுபவிப்பதும் கிடையாது. ஏதோ வங்கியில், ஏதோ ஒரு நிறுவனத்தின் பங்குகளில், ஏதோ வங்கி லாக்கரில் கிடக்கும். அருமையான வாழ்வை இதற்காகவா செலவிடுவது என்று கேட்கிறாள் ஔவை. 


பாடல் 


 சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும்

    பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்

    பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

    நாழி அரிசிக்கே நாம்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_10.html


(please click the above link to continue reading)


சேவித்துஞ்  = கும்பிடு போட்டு 

சென்றிரந்துந் = சென்று பிச்சை பெற்று.  பிச்சை என்றால் தெருவில்தான் எடுக்க வேண்டும் என்று அல்ல. பதவி உயர்வு வேண்டி, சம்பள உயர்வு வேண்டி நிற்பதும் பிச்சை தான். 


தெண்ணீர்க் கடல்கடந்தும் = நாடு விட்டு நாடு சென்றும் 


பாவித்தும் = ஒன்றும் இல்லாதவனை பெரிய ஆள் என பாவித்தும் 


பாராண்டும் = நாட்டை / நிறுவனத்தை  ஆண்டும் 


பாட்டிசைத்தும் = செல்வர்களை, உயர் அதிகாரிகளை புகழ்ந்து பாடியும் (இன்றைய மொழியில் சொல்வது என்றால் ஜால்ரா போட்டும்) 


போவிப்பம் = செலவழிக்கின்றோம் 


பாழின் உடம்பை = அழியும் இந்த உடம்பை 


வயிற்றின் கொடுமையால் = பசியின் கொடுமையால் 


நாழி அரிசிக்கே நாம் = ஒரு நாழி அரிசிக்கே நாம் 


அரிசி என்றால் அரிசியோடு முடிவது அல்ல. 


அரிசி, காய் கறி, பழம், பால் தயிர், மோர், அதை வைக்கும் பாத்திரம், அதை  வைக்கும் வீடு, வேண்டும் போது அவற்றை வாங்க செல்வம் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். வெண்பாவில் எல்லாவற்றையும் சொல்ல முடியாது. 


சாப்பாடு, பொருள் தேடல் இது மட்டும்தானா வாழ்க்கை. 


விலங்குகள் கூடத்தான் இரை தேடுகின்றன, கூடு கட்டிக் கொள்கின்றன, இன விருத்தி செய்கின்றன, எதிர் காலத்துக்கு சேமித்து வைக்கின்றன. 


இரையோடு கொஞ்சம் இறையும் தேடுவோம். 




Saturday, May 8, 2021

நல்வழி - இட்டு உண்டு இரும்

நல்வழி - இட்டு உண்டு இரும் 


கோவிட் வைரஸ் நாளும் வேகமாக பரவிக் கொண்டே இருக்கிறது.  இறப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. 


அங்கொன்றும் இங்கொன்றுமாக யாரோ இறந்தார்கள் என்று கேள்விப் பட்டது போக, அந்த துக்கச் செய்தி நமக்கு அருகில் வந்து கொண்டே இருக்கிறது. அங்கே ஒரு நண்பர், இங்கே ஒரு உறவினர் என்று நமக்கு அருகில் வருகிறது. 


நம்மைச் சார்ந்தவர்கள் நம்மை விட்டுப் போகும் போது, அது செய்தி அல்ல. துக்கம் நெஞ்சை அறுக்கிறது. 


என்ன ஆறுதல் சொல்ல முடியும்?  ஈடு செய்ய முடியாத இழப்புகள் அல்லவா அவை. 


உடல் தளர்ந்து, மனம் தளர்ந்து போய் இருக்கும் அந்த சமயத்தில் ஔவை வாழ்வின் உண்மையை சொல்லிவிட்டுப் போகிறாள். 


உண்மை மட்டும் தான் நம்மை துக்கத்தில் இருந்து காக்கும். 


சத்தியத்திற்கு ஒரு பலம் இருக்கிறது. 


"எத்தனை வருடம் அழுது புரண்டாலும், இறந்து போனவர்கள் திரும்பி வரப் போவது இல்லை.  நாம் துக்கப் படுவது, அழுவதும் ஏதோ நமக்கு அது வராது என்ற நினைப்பில். நமக்கும் அதே வழிதான்.  இருக்கும் வரை, இதுக்கும் நமக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை பசித்தவருக்கு கொஞ்சம் உணவு அளித்து, நீங்களும் உண்டு, அமைதியாக இருங்கள்"


என்கிறாள். 


பாடல் 




ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்

    மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா

    நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்

    எமக்கென்னென் றிட்டுண் டிரும்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_56.html


(please click the above link to continue reading)


ஆண்டாண்டு தோறும்  = பலப் பல ஆண்டுகளாக 

அழுது புரண்டாலும் = அழுது புரண்டாலும் 

மாண்டார் = இறந்தவர்கள் 

வருவரோ = திரும்பி உயிரோடு வருவார்களா?  மாட்டார்கள் 

மாநிலத்தீர் = இந்த பெரிய உலகில் உள்ளவர்களே 

வேண்டா = அழ வேண்டாம் 

நமக்கும் = நமக்கும் 

அதுவழியே = அது தான் வழி 

நாம்போம் அளவும் = நாம் போகிற வரை 


எமக்கென்னென் றிட்டுண் டிரும். = எமக்கு என்ன என்று இட்டு உண்டு இரும்.


நம்மால் ஆவது என்ன ? ஒன்றும் இல்லை என்று உணர்ந்து, நாலு பேருக்கு பசிக்கு அன்னம் இட்டு, நீங்களும் உண்டு, பேசாமல் அமைதியாக இருங்கள் என்கிறாள். 


துக்கத்தை போக்க, அதையே நினைத்துக் கொண்டு இருக்காமல், மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்கிறாள் ஔவை. 


இது என்ன புதுசா இருக்கே. நாமே துக்கத்தில் இருக்கிறோம். நாம் எங்கிருந்து மற்றவர்களுக்கு  உதவி செய்வது? என்று நம் மனதில் கேள்வி எழலாம். 


நாம் துக்கத்தில் இருக்கும் போது, நம்மை விட பெரிய துக்கத்தில் இருப்பவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்வதன் மூலம், நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு தைரியம் பிறக்கும். நம்மால் இந்த நிலையில் கூட மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்ற தைரியமும் தன்னம்பிக்கையும் துக்கத்தை விரட்டி அடிக்கும். 


மேலும், துக்கம் யாருக்குத்தான் இல்லை. எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் துக்கம் இருக்கிறது என்ற யதார்த்தம் மனதில் படும். ஏதோ நமக்கு மட்டும் வந்து விடவில்லை ...இது எல்லோருக்கும் வரும் ஒன்று தான் என்ற எண்ணம் மனதை கொஞ்சம் மென்மை படுத்தும். 


கிழவி சொல்கிறாள். தப்பாவா இருக்கும்?




Friday, May 7, 2021

நல்வழி - துஞ்சுவதே மாந்தர் தொழில்

 நல்வழி - துஞ்சுவதே மாந்தர் தொழில்


சில சமயம் நாம் எவ்வளவோ முயன்றாலும் நம் முயற்சி பயனற்று போய் விடுவது உண்டு. அதே சமயம் சிலபேரை பார்க்கிறோம். அவன் என்ன செய்தாலும் அதில் வெற்றி வருகிறது. 


குருட்டாம்போக்கில் ஏதோ செய்வான், பணம் அள்ளிக் கொண்டு வரும். ரொம்ப முயற்சி செய்யாமலேயே நல்ல இடத்தில் பிள்ளைகளுக்கு வரன் அமையும், வேலையில் பணி உயர்வு கிடைக்கும், நல்ல மதிப்பும் மரியாதையும் அவனுக்கு கிடைக்கும் .


நமக்கோ, கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் கூட ஏதோ ஒரு வழியில் தேவை இல்லாமல் விரயம் ஆகும். பிள்ளைக்கு ஒரு மதிப்பெண்ணில் நல்ல ஒரு கல்லூரியில் இடம் கிடைக்காமல் போய் விடும். 


இதற்கு என்ன செய்வது?


இதை எப்படி புரிந்து கொள்வது. 


நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போனது ஒரு பக்கம். தகுதி இல்லாதவனுக்கு எல்லாம் கிடைப்பது மறு பக்கம். 


கோபமும், எரிச்சலும், பொறாமையும், வெறுப்பும் வரும் அல்லவா?


இது என்ன வாழ்க்கை? இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் என்ற சலிப்பு வரும் அல்லவா?


இதுவரை இந்த பிரச்னைக்கு ஒரு தெளிவான, அறிவியல் பூர்வமான தீர்வு இல்லை. 


ஔவை, தன் அனுபவத்தில் கூறுகிறாள். 


"என்ன தான் வருந்தி முயற்சி செய்தாலும், எது நமக்கு இல்லையோ அது நம்மிடம் வராது. சரி, வேண்டாம், போதும், போ என்று சொன்னாலும் சில சமயம் போகாது. இது எல்லாம் விதிப்படி நடக்கும். அதை நம்பாமல் இவற்றை எல்லாம் நெடுக நினைத்து நெஞ்சம் புண்ணாகி இறுதியில் வருத்தத்தில் இறந்து போவதே இந்த மக்களின் தொழிலாக இருக்கிறது"


பாடல் 


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமினென்றாற் போகா-இருந்தேங்கி

நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_7.html

(please click the above link to continue reading)


வருந்தி = கஷ்டப்பட்டு 


அழைத்தாலும் = கூப்பிட்டாலும் 


வாராத = எது நமக்கென்று இல்லையோ 


வாரா = அவை நம்மிடம் வராது 


பொருந்துவன = எது நமக்கென்று விதித்து இருக்கிறதோ 


போமினென்றாற் = அவற்றை போ என்று சொன்னாலும் 


போகா = போகாது 


இருந்தேங்கி = இருந்து ஏங்கி 


நெஞ்சம் = நெஞ்சம் 


புண்ணாக  = புண் ஆகும் படி 


நெடுந்தூரந் தாம் நினைந்து = நீண்ட நாட்களாக அவற்றை எண்ணி 


துஞ்சுவதே = பின் அந்த வருத்தத்திலேயே இறந்து போவது தான் 


மாந்தர் தொழில். = மனிதர்களின் வேலையாக இருக்கிறது 


நல்லதோ, கெட்டதோ - நமக்கு எது விதித்து இருக்கிறதோ அது நம்மை வந்து அடைந்தே சேரும். எது நமக்கு இல்லையோ அவை என்ன பாடு பட்டாலும் நம்மை வந்து சேராது. 


சரியான துணை அமையவில்லை. விட்டு விடலாம் என்றாலும் முடியாது. போ என்றால் போகாது. நோய் வந்து விட்டது.  மருந்து மாத்திரை என்று என்ன செய்தாலும், போகின்ற காலம் அல்லது போகாது. இருந்து படுத்திவிட்டுத் தான் போகும். 


இனிமேலாவது நல்லது வேண்டும், துன்பம் வேண்டாம் என்றால், நல்லது செய்ய வேண்டும். 


விதைப்பதைத் தானே அறுக்க முடியும். 


வெண்டை விதைத்து விட்டு கத்தரி அறுக்க நினைக்கலாமா?




Saturday, May 1, 2021

நல்வழி - விண்டாரைக் கொண்டாடும் வீடு

 

நல்வழி - விண்டாரைக்  கொண்டாடும் வீடு 



தானம் செய்யுங்கள். இந்த உடம்பு நிரந்தரம் என்று எண்ணி அதற்காக எப்போதும் உங்கள் நேரத்தையும் செல்வத்தையும் செலவழிக்காதீர்கள்.

வாழ்வில் மிகப் பெரிய வலி எது தெரியுமா - மரண வலி. மரணம் வரும் நேரம் இந்த உடல் அனுபவிக்கும் வலி. மூச்சு திணறும். இதயம் துடிக்க தவிக்கும். நாக்கு குழறும். நினவு வந்து வந்து போகும். கண் மங்கும்.

அது எல்லாவற்றிலும் பெரிய வலி. 

அந்த வலியில் இருந்து நீங்கள் துன்பப் படாமல் இருக்க வேண்டுமா ?

இந்த பாடலை படியுங்கள். அதில் சொன்ன மாதிரி செய்யுங்கள்.

பாடல்
 

இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post.html

(pl click the above link to continue reading)



இடும்பைக்கு = துன்பத்திற்கு

இடும்பை = இட்டு  வைக்கும் பை. இந்த உடம்பு என்பது துன்பங்களால் நிறைந்த பை. 

இயலுடம்பி தன்றே = இயல்பான இந்த உடல் அல்லவா ?

இடும்பொய்யை = இந்த உடம்பில் நிறைய பொய்களை இட்டு வைத்து இருக்கிறோம். அவற்றை 

மெய்யென் றிராதே = மெய் என்று இருக்காதே

இடுங் = இடுங்கள். தானம் இடுங்கள்

கடுக = விரைந்து. உடனே

உண்டாயி னுண்டாகும் = அந்த தானம் செய்யும் குணம் உங்களுக்கு உண்டானால், உங்களுக்கு உண்டாகும். எது ?

ஊழிற் பெருவலிநோய் = விதியால் வரும் பெரிய வலியான நோய். அது என்ன நோய்?  மரணம் என்கின்ற நோய்.

விண்டாரைக் = வென்றவர்கள், அதை விட்டு விலகியவர்கள்

கொண்டாடும் வீடு = கொண்டாடும் வீடு பேறு உங்களுக்கு உண்டாகும்.

தமிழ் எப்படி விளையாடுகிறது என்று பாருங்கள்

இடும்பை = துன்பம்
இடும் பை = இட்டு வைக்கும் பை
இடும் பொய்யை = பொய்யை இட்டு வைக்கும் 
இடுங்கள் = தானம் இடுங்கள் 

உண்டாயின் உண்டாகும் = தானம் செய்யும் குணம் உண்டானால் வீடு பேறு  உண்டாகும் 

தானம் இடுங்கள். மரண வலியை வெல்லுங்கள். 


தானம் செய்தால் மரணம் வராதா?

வரும். மரணம் வரும்.  ஆனால், அந்த மரண தருணத்திலும் "இருந்த வரை நிறைய பேருக்கு நல்லது செய்தோம். நம்மால் நாலு பேர் மகிழ்ந்தார்கள். சில பேர் கண்ணீரையாவது துடைத்தேன்" என்ற திருப்தி இருக்கும், மனதில் ஒரு நிம்மதி இருக்கும், ஒரு சாந்தி பிறக்கும். 

இல்லை என்றால், "வாழ் நாள் எல்லாம் என்ன செய்தேன்? என்னால் யாருக்கு என்ன பயன். பணம் சேர்த்தேன், கொஞ்சம் செலவழித்தேன், மீதி எல்லாம் சொத்தாக அங்கங்கே இருக்கிறது...இதுக்கா இந்தப் பாடு பட்டேன்...காலம் எல்லாம் இப்படி வீணாகி விட்டதே " என்று மரண வலியோடு மன வலியும் சேர்ந்து கொள்ளும். 

சாகும் போதாவது சந்தோஷமாக இருக்க வேண்டாமா? 

தானம் செய்யுங்கள்...விண்டாரைக் கொண்டாடும் வீடு உங்களையும் கொண்டாடும். 

Friday, April 30, 2021

 நல்வழி - தீயவற்றை விடுத்து நல்லவற்றைச் செய்க 


நல்வழி என்பது ஔவையார் அருளிச் செய்த நூல். 


சில சமயம் வாழ்கை மிகவும் சிக்கலாகத் தோன்றும். என்ன இது வாழ்கை, ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது, நாம் ஒன்று நினைக்க வேறு ஒன்று நடக்கிறதே,இதுக்கெல்லாம் காரணம் என்ன, என்னதான் செய்வது என்று ஒரு வெறுப்பும் சலிப்பும் உண்டாகலாம். 



"இங்க வா, என் கிட்ட உக்காரு...உனக்கு என்ன குழப்பம், நான் சரி செய்து தருகிறேன்" ஆறுதலாக பேச யாராவது கிடைக்க மாட்டார்களா என்று ஏங்குவோம். 



அந்த ஏக்கத்தை போக்குவது இந்த நூல். சிக்கலான வாழ்கையை எளிமை படுத்தி காட்டுவது இந்த நூல். 



மிகப் பெரிய உண்மைகளை மிக மிக எளிய முறையில் அப்படி போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிற நூல். "அட இது இவ்வளவுதானா...இதுக்குத்தானா நான் இவ்வளவு குழம்பினேன் " என்று நம் குழப்பம் தீர்க்கும் நூல். 



அதில் இருந்து சில பாடல்கள். 



நமக்கு நாம் எதிர் பார்க்காத நேரத்தில் துன்பம் வருகிறது. எல்லாம் சரியாகச் செய்தாலும் எங்கோ தவறு நிகழ்ந்து விடுகிறது. என்ன செய்வது என்று குழம்பி என்ன செய்யலாம் என்று நூல்களைப் புரட்டினால் ஒவ்வொரு நூலும் ஒன்று சொல்கிறது. எதைப் படிப்பது, எதை விடுவது, எதை கடைப்பிடிப்பது என்று குழப்பம் இன்னும் கூடுகிறது. 



ஔவை மிக எளிதாக்கித் தருகிறாள் நமக்கு. 



"நாம் செய்யும் நன்மை தீமைகள் , புண்ணியமாகவும், பாவமாகவும் மாறி அடுத்த பிறவியில் நமக்கு இன்ப துன்பங்களாக வந்து சேரும். 


இப்போது துன்பம் வருகிறதா, அது முன் செய்த பாவம். 



இப்போது இன்பம் வருகிறதா, அது முன் செய்த புண்ணியம். 



இனி வரும் நாட்களில் இன்பம் வேண்டுமா, புண்ணியம் செயுங்கள. 


பாவம் செய்தால், இனி வரும் நாட்களில் துன்பம் வரும். 


உலகில் உள்ள அத்தனை சமய நூல்களும் சொல்வது இந்த ஒரு உண்மையைத்தான் "தீமையை விட்டு நல்லதை செய்யுங்கள்". அவ்வளவுதான். 


பாடல் 



புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை

மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்

ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்

தீதொழிய நன்மை செயல்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_49.html


please click the above link to continue reading



புண்ணியம்ஆம் = புண்ணியம் ஆகும் 


பாவம்போம் = பாவம் போகும் 


போனநாட் செய்தஅவை = முன்பு செய்த அவை 


மண்ணில் பிறந்தார்க்கு = மண்ணில் பிறந்தவர்களுக்கு 


வைத்தபொருள் = கிடைத்தவை எல்லாம் 


எண்ணுங்கால் = யோசித்துப் பார்த்தால் 


ஈதொழிய வேறில்லை = இதைத் தவிர வேறு இல்லை 


எச்சமயத் தோர் = எந்த சமயத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும் 


சொல்லுந் = சொல்லுவது 


தீதொழிய = தீய செயல்களை விடுத்து 


நன்மை செயல். = நன்மை தரும் செயல்களை செய்வது ஒன்றைத்தான் 




Saturday, November 16, 2013

நல் வழி - எங்கே தேடுவது ?

நல் வழி - எங்கே தேடுவது ?



நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே-நின்றநிலை
தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.

உண்மையை,  இறைவனை,மெய் பொருளை, ஆத்மாவை எங்கே தேடுவது ?

மக்கள் எங்கெல்லாமோ தேடித் தேடி அலைகிறார்கள்...கோவிலில், சாமியார் மடங்களில், காட்டில், குகையில், புத்தகங்களில் என்று எல்லா இடங்களிலும் தேடித் அலைகிறார்கள்.

அவர்கள் தேடிக் கொண்டிருக்கட்டும்....

காட்டில் மரம் சுள்ளி எல்லாம் வெட்டப் போவார்கள்.  ,வெட்டிய பின் அதை எப்படி கட்டுவார்கள் தெரியுமா ? அதற்கென்று தனியாக ஒரு கயறு தேடி போக மாட்டார்கள். அவர்கள் வெட்டி எடுத்த மர பட்டை அல்லது நீண்ட புல் இவற்றை எடுத்து கயறு போல திரித்து கட்டுவார்கள்.

அது போல நீங்கள் தேடிக் கொண்டிருப்பது உங்களிடமே இருக்கிறது.




நன்றென்றும் = நல்லதும்

தீதென்றும் = தீதும்

நானென்றும் = நான் என்பதும்

தானென்றும் = தான் என்பதும்

அன்றென்றும் = அன்று என்பதும் 

ஆமென்றும் = உள்ளது என்பதும் 

ஆகாதே = ஆகாதே

நின்ற நிலை = இருந்த நிலை

தானதாந் தத்துவமாஞ் = தான் அது ஆம் தத்துவமாம் 

சம்பறுத்தார் = சம்பு அறுத்தார் = சம்பு என்பது ஒரு வகை புல்

யாக்கைக்குப் = கட்டுவதற்கு. யாக்குதல் என்றால்  கட்டுதல். யாக்கை என்றால் உடல். எலும்பு, தோல், இவற்றால் கட்டப் பட்டதால் அது யாக்கை எனப் பட்டது. எழுத்து, சீர், தளை இவற்றால் கட்டப் படும்

போனவா தேடும் பொருள் = போனவர்கள் தேடும் பொருள்



Saturday, November 2, 2013

நல்வழி - உரைத்தாலும் தோன்றாது உணர்வு

நல்வழி - உரைத்தாலும் தோன்றாது உணர்வு


பூக்காமலே காய்க்கும் மரங்கள் உண்டு. அது போல சொல்லாமலேயே புரிந்து கொள்ளும் மனிதர்களும் இருக்கிறார்கள். சில சமயம் நல்ல விதையை விதைத்தாலும், விதைத்த இடம் பழுதாக இருந்தால் செடி முளைக்காது. அது போல முட்டால்களிடமும்,  தீயவர்களிடமும் நல்லததை சொன்னாலும் அவர்களுக்கு மண்டையில் ஏறாது. அவர்கள் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள்...நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று.


பாடல்

பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலுந் தோன்றா துணர்வு.


பொருள்


Thursday, August 1, 2013

நல்வழி - பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை

நல்வழி - பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை




பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்

யாருக்குப் பயம் வரும் ? யாரிடம் தேவை அதிகமாய் இருக்கிறதோ அவர்களுக்கு பயம் அதிகம் இருக்கும். 

தேவைகள் அதிகம் ஆகும்போது, அதற்கு நிறைய பணம் வேண்டும். பணம்  சம்பாதிக்க யார்  யாரை எல்லாமோ பார்த்து பல்லை காண்பிக்க வேண்டி இருக்கிறது, எல்லோரிடமும் பயப் பட வேண்டி இருக்கிறது, யார் என்ன செய்வானோ என்ற பயம் பிடித்து ஆட்டும். 

மனதிற்குள் வைத்தாலும் வெளியில் ஆசை ஆசையாகப் பேச வேண்டி இருக்கிறது. 

யாரிடம் என்ன உதவி கேட்கலாம் என்று மனம் கணக்கு போட்டுக் கொண்டே இருக்கிறது. 

அவ்வையார் சொன்னார்....

பிச்சை எடுப்பது கேவலம்.

அதை விட கேவலமான ஒன்று இருக்கிறது. 

அது தான், மற்றவர்களிடம் ஆசை வார்த்தை சொல்லி , அவர்களிடம் பலன் பெற்று உயிர் வாழ்வது.  அதை விட சாகலாம் என்கிறார் 

 பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்


பொருள் 

Thursday, June 6, 2013

நல்வழி - விண்டாரைக் கொண்டாடும் வீடு

நல்வழி - விண்டாரைக்  கொண்டாடும் வீடு 


அவ்வையார்.

தமிழ் இலக்கிய உலகை கலக்கிய பெண் புலவர்.

ஆணாதிக்க சமுதாயத்தில், அதிலும், ஆண் புலவர்க்கள் நிறைந்திருந்த அந்த காலத்தில் (ஏன் இந்தக் காலத்திலும் தான்) இலக்கிய உலகை தன் பாட்டால் கலக்கிய பெண்.

மிக மிக எளிமையான பாடல்கள். அர்த்த செறிவு நிறைந்த பாடல்கள். நீங்கள் உங்கள் பள்ளி நாட்களில் இதில் சிலவற்றை படித்தும்  இருக்கலாம்.

தானம் செய்யுங்கள். இந்த உடம்பு நிரந்தரம் என்று எண்ணி அதற்காக எப்போதும் உங்கள் நேரத்தையும் செல்வத்தையும் செலவழிக்காதீர்கள்.

வாழ்வில் மிகப் பெரிய வலி எது தெரியுமா - மரண வலி. மரணம் வரும் நேரம் இந்த உடல் அனுபவிக்கும் வலி. மூச்சு திணறும். இதயம் துடிக்க தவிக்கும். நாக்கு குழறும். நினவு வந்து வந்து போகும். கண் மங்கும்.

அது எல்லாவற்றிலும் பெரிய வலி. அந்த வலியில் இருந்து நீங்கள் துன்பப் படாமல் இருக்க வேண்டுமா ?

இந்த பாடலை படியுங்கள். அதில் சொன்ன மாதிரி செய்யுங்கள்.

பாடல்
 

இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

பொருள்

Monday, November 26, 2012

நல்வழி - இட்டு, உண்டு, இரும்


நல்வழி - இட்டு, உண்டு, இரும் 


அவ்வையார் எழுதிய இன்னொரு நூல் "நல் வழி". அதில் உள்ள பாடல்கள் பொதுவாக எல்லாம் விதிப்படி நடக்கும், நம்மால் ஆவது ஒன்றும் இல்லை, நடப்பது நடக்கட்டும் என்ற ரீதியில் இருக்கும். அதிலிருந்து சற்று வேறுபட்ட பாடல்களைப் பார்ப்போம்....

நாம் மிகுந்த அன்பு வைத்தவர்கள் யாரவது இறந்து விட்டால் நாம் மிக வருந்தி அழுவோம். எத்தனை வருடம் அழுது புரண்டாலும், இறந்தவர் திரும்பி வரப் போவது இல்லை. அது மட்டும் அல்ல, நாமும் ஒரு நாள் அந்த வழியே போகத்தான் போகிறோம். அந்த நாள் வரும் வரை, வேண்டியவர்களுக்கு உணவளித்து, நீங்களும் உண்டு, அமைதியாய் இருங்கள்.....

பாடல் 

Sunday, June 24, 2012

நல்வழி - எல்லோரும் போகும் வழி


நல்வழி - எல்லோரும் போகும் வழி


நல்வழி என்ற நூல் ஔவையாரால் எழுதப்பட்டது.

எல்லாம் விதி வழி நடக்கும். ரொம்ப அலட்டிகொள்ளாதீர்கள் என்ற ரீதியில் எழுதப்பட்ட நூல்.

வாழ்க்கையில் பிரச்சனைகளும் சங்கடங்களும் வரும்போது புரட்டி பார்க்க உகந்த நூல். மன ஆறுதல் தரும்.

எத்தனை வருடம் அழுது புரண்டாலும், இறந்தவர்கள் மீண்டும் வருவது இல்லை.

அது மட்டும் அல்ல, நாமும் ஒரு நாள் இந்த உலகை விட்டு சென்று விடுவோம்.

அதுவரை, பெரிதாக அலட்டி கொள்ளாமல், முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்து வாழுங்கள்.