Showing posts with label மடலேறுதல். Show all posts
Showing posts with label மடலேறுதல். Show all posts

Wednesday, May 9, 2012

குறுந்தொகை - ஆணுக்கு வெட்கம் வருமா ?


குறுந்தொகை - ஆணுக்கு வெட்கம் வருமா ?


அந்த காலத்தில் ஒரு ஆண் மகன் ஒரு பெண்ணை விரும்பி அவர்கள் திருமணத்திற்கு தடை வந்தால் ஆண்மகன் மடலேறுவது என்று ஒரு வழக்கம் உண்டு.

மடலேறுதல் என்றால் என்ன ?

பனை ஓலையில் ஒரு குதிரை செய்து, அதில் ஏறி உட்கார்ந்து கொண்டு, தன் படத்தையும், அந்த பெண்ணின் படத்தையும் வரைந்து அந்த படத்தை எடுத்துகொண்டு 
அந்த பொம்மை குதிரையின் மேல் ஏறிக் கொண்டு, அந்த பெண்ணின் வீட்டுக்கு முன்னால் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டியது.

ஊரில் எல்லாருக்கும் இந்த பையன் அந்த பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்து விடும். 

அந்த பெண்ணை வேறு யார் கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள் அந்த ஊரில் ?

எப்படி நம்ம ஆளு technique ? 

வேற வழி இல்லாமல் பெண்ணை பெற்றவர்கள் அந்த பையனுக்கே கல்யாணம் செய்து கொடுத்து விடுவார்கள். 

நம்ம ஆளுங்க கில்லாடிங்க.

இங்க குறுந்தொகையில் இவர் என்ன நினைக்கிறார் பாருங்கள்...

அப்படி எல்லாம் செஞ்சு இந்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால், 
நாளைக்கு ஊருக்குள்ள என்ன பேசுவாங்க ?

"இந்தா போறான்ல, அந்த தங்கமான பொண்ணோட புருஷன் இவன் தான், அவளை கட்டிக்க, அந்த காலத்ல என்ன கூத்து அடிச்சான் தெரியுமா" 
என்று சொல்வார்கள், அதை கேட்கும் போது எனக்கு வெட்கம் வரும் என்று தலைவர் இப்பவே வெட்கப் படுகிறார்...

அந்த ரௌசு விடும் பாடல்...


அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப்
பெறுகதில் லம்ம யானே பெற்றாங்
கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவ னிவனெனப்
பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே   

அந்த காலத்ல இப்ப உள்ள மாதிரி பேப்பர் பேனா எல்லாம் கிடையாது. 

ஓலை சுவடியில எழுதணும். 

ஓலை சுவடி ரொம்ப கிடைக்காது. 

எனவே சொல்ல வேண்டியத சுருக்கமா சொல்ல வேண்டிய நிர்பந்தம். 

நம்ம, கொஞ்சம் பாடலை தளர்த்தி பதம் பிரித்தால் எளிதாகப் புரியும்