கம்ப இராமாயணம் - கோப்பையில் விழுந்த நிலா
அவள் ஒரு இளம் பெண்.
ஒரு நாள், அவள் மதுவை ஒரு கோப்பையில் ஏந்தி வருகிறாள்.
பெண்கள் அந்த காலத்தில் தண்ணி அடித்திருக்கிறாள் !
அப்படி வரும் போது, அவளின் முகம் அந்த கோப்பையில் தெரிகிறது.
அதை நிலவு என்று நினைக்கிறாள். ஒரு புறம் நிலவு போன்ற அவளின் அழகு, மறு புறம் மது தந்த போதை.
அவள் அந்த நிலவிடம் சொல்கிறாள்...
"ஏய் நிலா, நான் என் காதலனோடு ஊடல் கொண்டு இருக்கும் போது நீ சுடாமல் குளிர்ச்சியாக இருந்தால் உனக்கு இந்த மதுவை தருவேன்" என்று போதையில் கூறுகிறாள்.